search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பாக பணியாற்றிய தாசில்தார்களுக்கு பரிசு
    X

    விருதுநகர் மாவட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருவாய் துறையில் சிறப்பாக பணியாற்றிய சாத்தூர் தாசில்தார் வெங்கடேஷ், வெம்பக்கோட்டை தாசில்தார் ரங்கநாதன், ராஜபாளையம் தாசில்தார் ராமச்சந்திரன் ஆகியோருக்கு 2-ம் பரிசினை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

    சிறப்பாக பணியாற்றிய தாசில்தார்களுக்கு பரிசு

    • சிறப்பாக பணியாற்றிய தாசில்தார்களுக்கு பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.
    • வருவாய்த் துறை அலுவலர்களுடனான பணி ஆய்வுக்கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று வருவாய்த் துறை அலுவலர்களுடனான பணி ஆய்வுக்கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய சிறந்த வருவாய் வட்டாட்சி யர்களில் சிவகாசி வருவாய் வட்டாட்சியர் ராஜகுமார் முதல் பரிசும், சாத்தூர் வருவாய் வட்டா ட்சியர் வெங்கடேஷ், வெம்பக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் ரங்கநாதன், ராஜபாளையம் வருவாய் வட்டாட்சியர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு 2-ம் பரிசும், திருச்சுழி வருவாய் வட்டாட்சியர் சிவக்குமார் 3-ம் பரிசும் பெற்றனர்.

    சிறப்பாக பணியாற்றிய தனி வட்டாட்சியர்களில் (ச.பா.தி) சிவகாசி தனி வட்டாட்சியர் (ச.பா.தி) ஆனந்தராஜ் முதல் பரிசும், சாத்தூர் தனி வட்டாட்சியர் (ச.பா.தி) சீதாலட்சுமி 2-ம் பரிசும், ஸ்ரீவில்லிபுத்தூர் தனி வட்டாட்சியர் (ச.பா.தி) ராம்தாஸ், திருச்சுழி தனி வட்டாட்சியர் (ச.பா.தி) சிவக்குமார், விருதுநகர் தனி வட்டாட்சியர் (ச.பா.தி) ரமணன் ஆகியோருக்கு 3-ம் பரிசும் பெற்றனர்.

    முழுப்புலம் பட்டா மாறுதல் மனுக்களை அதிகளவில் ஏற்பளிப்பு செய்த மண்டல துணை வட்டாட்சியர்களில் திருச்சுழி மண்டல துணை வட்டாட்சியர் சரவ ணக்குமார் முதல் பரிசும், சாத்தூர் மண்டல துணை வட்டாட்சியர் முத்துலட்சுமி 2-ம் பரிசும், காரியாபட்டி மண்டல துணை வட்டாட்சியர் கருப்பசாமி 3-ம் பரிசும் பெற்றனர்.

    உட்பிரிவு பட்டா மாறுதல் மனுக்களை அதிகளவில் ஏற்பளிப்பு செய்த வட்ட துணை ஆய்வாளர்களில் விருதுநகர் வட்ட துணை ஆய்வாளர் சங்கரக்குமார் முதல்பரிசும், காரியாபட்டி வட்ட துணை ஆய்வாளர் ரைகான் 2-ம் பரிசும், சாத்தூர் வட்டத்துணை ஆய்வாளர் தங்கபாண்டியன் 3-ம் பரிசும் பெற்றனர்.

    அதிக எண்ணிக்கையில் கள ஆய்வு செய்து உட்பிரிவு மனுக்களை முடிவு செய்த சிறந்த வட்ட சார் ஆய்வாளர்களில் விருதுநகர் நில அளவர் வாசிமலை முதல் பரிசும், சாத்தூர் சார் ஆய்வாளர் நாகவித்யா 2-ம் பரிசும், வெம்பக்கோட்டை சார் ஆய்வாளர் முனியராஜ் 3-ம் பரிசும் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராம சுப்ரம ணியன், சார் ஆட்சியர் (சிவகாசி) பிருத்திவிராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காளிமுத்து, கோட்டாட்சியர்கள், வருவாய் வட்டாட்சியர்கள், வருவாய்த்துறை அலுவ லர்கள் மற்றும் அரசு அலு வலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×