என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collector inspects"

    • தேனி மாவட்டத்தில் வருகிற 13-ந்தேதி வரை கனமழை எச்சரிக்கையும், 14-ந்தேதி மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    • நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் வருகிற 13-ந்தேதி வரை கனமழை எச்சரிக்கையும், 14-ந்தேதி மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனைதொடர்ந்து மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் தெரிவிக்கையில்,

    மாவட்டத்தில் மழை பாதிப்பு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து துணை ஆட்சியர் தலைைமையில் அமைக்கப்பட்டுள்ள மண்டல குழுக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில் மக்களை பாதுகாப்பாக தங்கவைக்க சமுதாய கூடங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    அங்கு சுத்தம் செய்யப்பட்டு அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். தண்ணீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து உடனுக்குடன் அதனை வெளியேற்றும் பணியை மேற்கொள்ள வேண்டும். உயிரிழப்பு, வீடுகள் சேதம், பயிர்சேதம் ஆகிய விபரங்களை உடனுக்குடன் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

    பொதுமக்கள் தங்கள் புகார்களை எந்தநேரமும் தெரிவிக்கும் வகையில் அலுவலர்கள் தொடர்பில் இருக்க வேண்டும்.

    கனமழை சமயங்களில் அடிக்கடி மண்சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து அங்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகளில் ஒலிபெருக்கி மூலமாக மக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்பை தெரிவிக்க வேண்டும்.

    ஆஸ்பத்திரிகளில் ஜெனரேட்டர், மருத்துவ உபகரணங்கள், தேவையான மருந்து இருப்பு ஆகியவற்றை போதுமான அளவில் வைத்திருக்க வேண்டும் என்றார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • ஊராட்சிப் பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • மாணவ, மாணவியர்களுக்கு மதிய உணவு தயாரிக்கப்படும் சமையல் கூடத்தினை பார்வையிட்டு தினசரி வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார்.

    தேனி:

    தேனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொடுவிலார்பட்டி, ஊஞ்சாம்பட்டி மற்றும் நாகலாபுரம் ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் நாகலாபுரம் ஊராட்சியில் ரூ.6.90 லட்சம் மதிப்பீட்டில் நீர் செறிவூட்டு குழி அமைத்தல் மற்றும் வரத்து வாய்க்கால் சீரமைத்தல் பணியினையும், கொடுவிலார்பட்டி ஊராட்சியில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் மண் வரப்பு அமைத்தல் பணியினையும்,

    ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் ரூ.4.40 லட்சம் மதிப்பீட்டில் மெட்டல் சாலை அமைத்தல், ரூ.7.20 லட்சம் மதிப்பீட்டில் ஜெயம் நகர் 4வது தெருவில் சிமிண்ட் சாலை அமைத்தல், ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ஏ.டி.கே மில் அருகில் சிமிண்ட் தடுப்பணை அமைத்தல் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    அதனைத்தொடர்ந்து, பாலகிருஷ்ணாபுரம் ரேசன் கடையில் விற்பனை முனைய எந்திரத்தில் நடப்பு மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை, வழங்கப்பட வேண்டிய குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை, மீதமுள்ள பொருட்களின் இருப்பு, அரிசி மற்றும் பொருட்களின் தரம்,

    எடை அளவு மற்றும் செயல்பாடுகள் ஆகியன குறித்து ஆய்வு செய்தார். கொடுவிலார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு மதிய உணவு தயாரிக்கப்படும் சமையல் கூடத்தினை பார்வையிட்டு தினசரி வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார். முன்னதாக தாடிச்சேரி ஊராட்சியில் உள்ள கால்நடை மருந்தகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • தேனி-அல்லிநகரம் ரேசன் கடைகளில் பல்வேறு பணிகள் குறித்து கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • தேனி நகர்சாலை ரெயில்வே மேம்பாலம் அமையவுள்ள இடங்களையும் ஆய்வு செய்தார்.

    தேனி :

    தேனி-அல்லிநகரம் ரேசன் கடைகளில் பொருட்களின் இருப்பு, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய குடிமைப் பொருட்களின் அளவு, புகார் அளிக்கப்பட வேண்டிய அலுவலர்களின் கைபேசி எண்கள் குறித்து முறையாக தகவல் பலகையில் பதியப்படுள்ளதா, விற்பனை முனைய எந்திரங்களில் நடப்பு மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டதா என கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை, மீதமுள்ள பொருட்களின் இருப்பு, அரிசி மற்றும் பொருட்களின் தரம், எடை அளவு மற்றும் செயல்பாடுகள் ஆகியன குறித்தும் ஆய்வு செய்தார்.

    மேலும் தேனி நகர்ப்பகுதியில் தேனி நெடுஞ்சாலை கட்டுமானம்மற்றும்பராமரிப்பு கோட்டத்தின் மூல ம் கொச்சின்- தொண்டி தேசிய நெடுஞ்சாலையி ல்கொட்டகுடி ஆற்றுப்பாலம்முதல்மதுரை நோக்கி செல்லும்சாலையில்நேரு சிலை சந்திப்பில்ஏற்படும்போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஓர் பிரிவகை மேம்பாலம்மற்றும் நேருசிலை சந்திப்பு முதல்பெரியகுளம்செல்லும்சாலையில்இரயில்வே சந்திப்பில்ஏற்படும்போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தேனி நகர்சாலை ெரயில்வே மேம்பாலமும்அமையவுள்ள இடங்களையும் ஆய்வு செய்தார்.

    • ஓடைப்பட்டி பேரூராட்சியில் பல்வேறு செயல்பாடு கள் குறித்து கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • காலதாமத மின்றி உரிய விசாரணை மேற்கொண்டு, பயன்கள் வழங்கிட நட வடிக்கைகள் மேற்கொள்ள வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகி யோரை அறிவுறுத்தினார்.

    தேனி:

    தேனி மாவட்டம், உத்தம பாளையம் வட்டத்திற்கு ட்பட்ட ஓடைப்பட்டி பேரூராட்சி அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் ஆகியவற்றின் செயல்பாடு கள் குறித்து கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஓடைப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பணி யாளர்களின் எண்ணிக்கை, வருகை பதிவேடு, நகர்புற மேம்பட்டு திட்டம், பொதி நிதி திட்டம், நகர்ப்புற வேலைவாய்ப்புத்திட்டம், மூலதன மானியத்திட்டம், நமக்கு நாமே திட்டம், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் மேற்கொள்ள ப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட ப்பணிகள், முடிவுற்ற பணி கள், அதற்கான பதிவேடுகள் குறித்து பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை அலுவ லர்களுக்கு உத்தரவிட்டார்.

    மேலும், ஓடைப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட சமத்துவபுரத்தில் பொது கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் சமத்துவபுரத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் எண்ணிக்கை, விளையாட்டு பொருட்களின் எண்ணி க்கை, உணவு வகைகள் அரசின் அட்டவணைப்படி முறையாக வழங்கப்படு கிறதா என்பது குறித்தும், உணவின் தரம், உணவு பொருட்களின் இருப்பு அதற்கான பதிவேடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

    அதனைத்தொடர்ந்து, ஓடைப்பட்டி பேரூராட்சி க்குட்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகத்தில், பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற மனுக்கள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட மனுக்கள், நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்த பதிவேடுகள் மற்றும் அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு ள்ள மனுக்கள் நிலை குறித்தும் கலெக்டர் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொ ண்டார்.

    பொதுமக்களிட மிருந்து நேரடியாக மற்றும் அரசு இணையதளத்தின் வாயிலாக பெறப்படும் மனுக்கள் மீது காலதாமத மின்றி உரிய விசாரணை மேற்கொண்டு, பயன்கள் வழங்கிட நட வடிக்கைகள் மேற்கொள்ள வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகி யோரை அறிவுறுத்தினார்.

    • தேனி மாவட்டத்தில் அரண்மனைப்புதூர் ஊராட்சியில் கணக்கெடுப்பு பணியினை கலெக்டர் முரளிதரன் தொடங்கி வைத்தார்.
    • ஊராட்சி தலைவர்கள் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் முழு ஒத்துைழப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் கேட்டுக்கொண்டார்.

    தேனி:

    தமிழக அரசு அனைவருக்கும் வீடு என்ற இலக்கினை அடைந்திட வேண்டும் என்ற நோக்கத்தோடு செயலாற்றி வருகிறது. அதன்படி ஊரகப்பகுதிகளில் வீடு இல்லாத தகுதியான குடும்பங்களை கண்டறிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் கணக்கெடுப்பு பணி நடத்த உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி தேனி மாவட்டத்தில் அரண்மனைப்புதூர் ஊராட்சியில் கணக்கெடுப்பு பணியினை கலெக்டர் முரளிதரன் தொடங்கி வைத்தார். தமிழக அரசின் அனைவருக்கும் வீடு என்ற இலக்கினை அடைந்திட குடிசைகளில் வாழும் குடும்பங்கள் மட்டுமின்றி நிலைத்த தன்மையற்ற வாழத்தகுதியற்ற குடும்பங்களில் வாழும் குடும்பங்களையும் கணக்கெடுத்தல் அவசியமாகிறது.

    பகுதி 1 கணக்கெடுப்பில் 1-க்கும் மேற்பட்ட பட்டியல்களில் இடம்பெற்றிருக்கும் குடும்பங்களை ஒரு பட்டியலில் மட்டும் நீடிக்கசெய்து மற்ற பட்டியல்களில் இருந்து நீக்கம் செய்யப்படும். பகுதி 2 கணக்கெடுப்பில் சமூகபொருளாதார சாதி வாரி கணக்கெடுப்பு வீடு வழங்கும் திட்டம் மறு கணக்கெடுப்பு மற்றும் புதிய குடிசைகள் கணக்கெடுப்பு ஆகிய 4 பட்டியல்களில் இடம்பெறாத குடிசைகள் சேர்க்கப்படும்.

    ஆட்சேபணைக்குரிய புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போர், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வசிப்போர், தீ விபத்துகளில் வீட்டை இழந்து தற்போது குடிசையில் வசிப்போர் மற்றும் வாடகை வீட்டில் வசிக்கும் அனைத்து குடும்பங்களும் கணக்கெடுக்கப்படும். இந்த கணக்கெடுப்பு பணி வருகிற 31-ந்தேதி வரை நடைபெறும் என்றும், இதற்கு ஊராட்சி தலைவர்கள் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் முழு ஒத்துைழப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் முரளிதரன் கேட்டுக்கொண்டார்.

    • மேகமலை பேரூராட்சியில் செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளி மற்றும் ரேசன் கடையின் செய ல்பாடுகள் குறித்து கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான கட்டு மானப்பணிகளையும் பார்வையிட்டார்.

    தேனி:

    தேனி மாவட்டம் மேகமலை பேரூராட்சியில் செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளி மற்றும் ரேசன் கடையின் செய ல்பாடுகள் குறித்து கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேகமலை பேரூராட்சி ப்பகுதியில் செயல்பட்டு வரும் சி.எஸ்.ஐ தொடக்கப்ப ள்ளி, மணலாறு ஆரம்ப பள்ளி ஆகிய பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை, வருகை பதிவேடுகள், கழிப்பறை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியன குறித்தும், இப்பள்ளியில் செயல்பட்டு வரும் சத்துணவு மையத்தில் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களின் இருப்பு,

    சமைப்பதற்கு தேவையான பாத்திரங்களின் எண்ணிக்கை, மையத்தின் அடிப்படை வசதிகள் மற்றும் மாணவ, மாணவி யர்களுக்கான உணவின் தரம் குறித்தும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மாணவ-மாணவிகளிடம் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார்.

    அதனைத்தொடர்ந்து, மேகமலை கூட்டுறவு பண்டகசாலை ரேசன் கடை செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து அருகில் வசிக்கும் பொதுமக்களிடம் அரிசி மற்றும் குடிமைப் பொருட்களின் தரம், அளவு, ரேசன் கடை உரிய நேரத்திற்கு திறக்கப்படு கிறதா? என கேட்டறிந்தார். மேலும், மேகமலை பேரூராட்சிப்பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான கட்டு மானப்பணிகளையும் பார்வையிட்டார்.

    ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லத்தின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

    தேனி:

    தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட தருமத்துப்பட்டியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லத்தின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது, குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லத்தில் தங்கியிருக்க கூடிய குழந்தைகள் மற்றும் முதியோர்களின் எண்ணிக்கை, பணியாற்றும் பணியாளர்கள் எண்ணிக்கை, தங்கும் அறை, சமையலறை, வழங்கப்படும் உணவின் தரம், மருத்துவ வசதிகள், பொழுது போக்கு அம்சங்கள், சுகாதார வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகள் மற்றும் முதியோர்களுடன் கலந்துரையாடி, இல்லத்தின் அடிப்படை வசதிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின் போது, மாவட்ட சமூக நல அலுவலர் ஷியாமளா தேவி, ஏ.எச்.எம் டிரஸ்ட் இயக்குநர் முகம்மது ஷேக் இப்ராஹீம் உட்பட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

    முன்னதாக பூதிப்புரம், வீரபாண்டி, கோடாங்கிபட்டி ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் ரேசன் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் போ.மீனாட்சிபுரத்தில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த மாதம் ரேசன் கார்டு தாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ள நிலையில் கடைகளில் பொருட்களின் இருப்பு, தராசுகளின் தரம் ஆகியவற்றை ஆய்வு செய்து பொதுமக்களிடமும் கருத்துகளை கேட்டறிந்தார்.

    • சூரிய சக்தி பம்பு செட்டு ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • விவசாயிகள் தேனியில் செயல்பட்டு வரும் வேளாண்மை பொறியியல் துறை, செயற்பொறியாளர் அலுவலகத் தினை தொடர்பு கொண்டு பயனடைய வேண்டும் என தெரிவித்தார்.

    தேனி:

    தேனி அருகே பூமலைக்குண்டு ஊராட்சியில், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில், முதல்-அமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.1.86 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தி பம்பு செட்டு மற்றும் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வேப்பம்பட்டி ஊராட்சியில் ரூ.2.59 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தி பம்பு செட்டு ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தெரிவித்ததாவது,

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வேளாண்மை தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துகின்ற வகையில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் உள்ளிட்ட அனைத்து வேளாண் சார்ந்த துறைகளின் சார்பில் பல்வேறு வேளாண் சார்ந்த திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வேளாண் பெருங்குடிமக்களை பயன்பெற செய்து, அவர்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்தி வருகிறார்.

    அதனடிப்படையில், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் முதல்-அமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு இல்லாமல் பகலில் சுமார் 8 மணி நேரம் பாசனத்திற்கு தடையில்லா மின்சாரம் பெறமுடியும். விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் தமிழக அரசின் மானியம் 40 சதவீதம் மற்றும் மத்திய அரசின் மானியம் 30 சதவீதம் ஆக மொத்தம் 70 சதவீத மானியத்தில் 30 சதவீதம் விவசாயிகளின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் 5 எச்.பி அளவுள்ள டி.சி மோட்டார் பெற்றிட மொத்த தொகையான ரூ.2,73,548க்கு 70 சதவீத மானியமான ரூ.1,86,896-ம், 7.5 எச்.பி அளவுள்ள டி.சி மோட்டார் பெற்றிட மொத்த தொகையான ரூ.3,81,736-க்கு 70 சதவீத மானியமான ரூ.2,59,764-ம், 10 எச்.பி அளவுள்ள டி.சி மோட்டார் பெற்றிட மொத்த தொகையான ரூ.4,58,261-க்கு 70 சதவீதம் மானியமான ரூ.2,59,764-ம் வழங்கப்பட்டு வருகிறது.

    தேனி மாவட்டத்தில் 5 எச்.பி மோட்டார் 35 எண்கள் இலக்கு, 7.5 எச்.பி மோட்டார் 24 எண்கள் இலக்கு, 10 எச்.பி மோட்டார் 3 எண்கள் இலக்கு என மொத்தம் 62 பேருக்கு தற்போதைய நிதியாண்டிற்கு மட்டும் வழங்கிட ரூ.140.17 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது வரை 43 பயனாளிகளுக்கு ரூ.88.02 லட்சம் மானியத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

    எனவே, மாவட்டத்திலுள்ள நீர் நிலை பாதுகாப்பான பகுதிகள் கொண்ட விவசாயிகள் மற்றும் ஆயில் எஞ்சின் பயன்பாடு உள்ள விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் தேனியில் செயல்பட்டு வரும் வேளாண்மை பொறியியல் துறை, செயற்பொறியாளர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு பயனடைய வேண்டும் என தெரிவித்தார்.

    • தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரேசன்கடை ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • அரிசி மற்றும் குடிமைப் பொருட்களின் விபரம், விநியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை குறித்தும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே க.விலக்கு பகுதியில் தமிழ்நாடு மருந்து சேவை கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட மருந்து கிடங்கு, ஆண்டிபட்டி அரசு ஆஸ்பத்திரி, சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையம், ராஜதானி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கதிர்நரசிங்காபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரேசன்கடை ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    க.விலக்கு பகுதியில் தமிழ்நாடு மருந்து சேவை கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட மருந்து கிடங்கில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை, அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற வரும் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதற்கு வைக்கப்பட்டுள்ள மருந்து, மாத்திரைகளின் இருப்பு, அதற்கான பதிவேடுகள், மருந்து, மாத்திரைகளில் அச்சிடப்பட்டுள்ள காலாவதியாவதற்கான காலம், மருந்து கிடங்கின் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    முன்னதாக, ஆண்டிபட்டி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை, வருகை பதிவேடு, மருத்துவ உபகர ணங்கள், அதன் செயல்பாடு கள், உள் நோயாளிகள் பிரிவில் உள்ள படுக்கை வசதி, புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வந்த பொதுமக்களின் எண்ணிக்கை, சிகிச்சை அளிக்கப்படும் விதம்,

    மருந்து, மாத்திரைகளின் இருப்பு, அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியன குறித்தும், அங்கு செயல்பட்டு வரும் சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தில் டாக்டர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை, வருகை பதிவேடு, பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சித்த சிகிச்சை முறை குறித்தும் மாவட்ட கலெக்டர் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொ ண்டார்.

    ராஜதானியில் செய ல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து, மாத்திரைகளின் இருப்பு, சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், கதிர்ந ரசிங்காபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரேசன்கடையில் இம்மாதம் குடும்ப அட்டைதார ர்களுக்கு வழங்கிட வரப்பெற்ற முதல் தவணை அரிசி மற்றும் குடிமைப் பொருட்களின் விபரம், விநியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை குறித்தும் மாவட்ட கலெக்டர் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொ ண்டார்.

    • ஆலமரம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் ரூ.76 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டுமானப்பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    தேனி:

    தேனி மாவட்டம், கம்பத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.7.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வாரசந்தை கட்டுமானப்பணி மற்றும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஆலமரம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் ரூ.76 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டுமானப்பணிகளை கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    கம்பம் நகராட்சிப்பகுதியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.7.75 கோடி மதிப்பீட்டில் 262 எண்ணம் உட்புற கடைகள், 23 எண்ணம் கொண்ட வணிக வளாகக் கட்டிடம், உணவகக்கட்டிடம் ஆகிய பணிகள் 4375 ச.மீட்டரில் கட்டப்பட்டு வரும் வாரச்சந்தைக்கான கட்டுமானப்பணி,

    நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஆலமரம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் ரூ.50 லட்சம் மற்றும் ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் 2 பணிகள் தேர்வு செய்யப்பட்டு, இதில் ரூ.3.33 லட்சம் பொது மக்களின் பங்களிப்புடன் 4 வகுப்பறை கட்டிடம், ரூ.50 லட்சம் மதிப்பீட்டிலும் 2 வகுப்பறை கட்டிடம், ரூ.26 லட்சம் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டு வருகின்றது.

    இக்கட்டிடத்தில் பூச்சு வேலை மற்றும் தரையில் டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டு வரும் பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது.

    தமிழக அரசு நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் வசிக்கின்ற பொது மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்திடும் வகையில் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை செயல்படுத்தி, அதன்மூலம் அவர்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்தி வருகிறது.

    அதனடிப்படையில், நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளிலுள்ள பொதுமக்கள் படித்து பயன்பெறும் வகையில் நூலகங்கள் கட்டுதல், ஏழை, எளிய மக்கள் குறைந்த செலவில் நிகழ்ச்சிகள் நடத்திட சமுதாயக்கூடங்கள் கட்டுதல், சிறு வணிகர்கள் பயன்பெறும் வகையிலும்,

    உள்ளூர் விவசாயிகள் வெளியூர் சென்று சிரமப்படாத வகையில் உள்ளூரிலேயே வணிகம் செய்யும் பொருட்டு சந்தைகள் அமைத்தல், பொது மக்கள் எளிதில் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் வகையில் சாலைகள் அமைத்தல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதனைப்போன்று, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள், சுற்றுச்சுவர் கட்டுதல், மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் கூடுதல் கட்டிடங்கள் கட்டுதல், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல், பொது சுகாதார கழிப்பறை கட்டுதல், பொது மயானத்தில் சுற்று சுவர் கட்டுதல், இயந்திர தளவாடங்கள் கொள்முதல் செய்தல், சாலை அமைத்தல், பேவர் பிளாக் கற்கள் பதித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கம்பம் நகராட்சிப்பகுதியில் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டம், நமக்கு நாமே திட்டம் உள்ளிட்ட அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    • ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியினை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • அரிசி, சர்க்கரை மற்றும் கரும்பில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் சம்பந்தப்பட்ட துறை அலு வலர்களிடம் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தினார்.

    தேனி:

    தேனி-அல்லிநகரம் நகராட்சி, கோடாங்கிபட்டி ஊராட்சி, பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட லட்சுமிபுரம் ஊராட்சி, சருத்துப்பட்டி ஊராட்சி, தென்கரை பேரூராட்சி மற்றும் பெரியகுளம் நகராட்சி ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியினை கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார்.

    அரிசி குடும்ப அட்டை தாரர்களின் எண்ணிக்கை, இதுவரை பொங்கல் பரிசு த்தொகுப்பு வழங்கப்பட்ட எண்ணிக்கை, வழங்கப்பட வேண்டிய எண்ணிக்கை, சர்க்கரை மற்றும் பச்சரிசியின் தரம், இருப்பு மற்றும் கரும்பின் அளவு அதன் தடிமன் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு குடும்ப அட்டைதாரர்களிடம் பொங்கல் பரிசுத்தொகு ப்பின் சர்க்கரை, பச்சரிசி, கரும்பு ஆகியவற்றின் தரம் குறித்து கேட்டறிந்தார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர வின்படி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ரூ.1000 ரொக்கம் மற்றும் முழு கரும்பு ஒன்று அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    எனவே, பொங்கல் பரிசுத்தொகுப்பில் அரிசி, சர்க்கரை மற்றும் கரும்பில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கிடாமல் அதனை உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அலு வலர்களிடம் தகவல் தெரிவித்து, அதனை மாற்று வதற்கான உரிய நடவடிக்கை கள் மேற்கொள்ள விற்பனையாளர்களை அறிவுறுத்தினார்.

    • காமாட்சி புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • பருவ காலங்களுக்கு தேவையான உரத்தினை இருப்பு வைத்து விநியோகம் செய்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தேனி:

    தேனி அருகே காமாட்சி புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், பணியாளர்களின் எண்ணிக்கை, வருகை பதிவேடு, வைப்பறை, விவசாயிகளுக்கு உரங்கள் விநியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை, இருப்பு எண்ணிக்கை, அதற்கான பதிவேடுகள் மற்றும் விலைப்பட்டியல் மற்றும் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் ஷஜீவனா, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு ெதரிவித்ததாவது:-

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வேளாண்மை தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் நலனை காத்திடும் வகையில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின சார்பில் பல்வேறு வேளாண் சார்ந்த திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்.

    அதனடிப்படையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் நடப்பு பருவ சாகுபடிக்குத் தேவையான உரங்கள் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    காமாட்சிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உரங்கள் விநியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை, இருப்பு எண்ணிக்கை, அதற்கான பதிவேடுகள் மற்றும் விலைப்பட்டியல் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இச்சங்கத்தின் மூலம் மாதந்தோறும் 1500-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு உரம் விநியோகம் செய்யப்பட்டு பயடைந்து வருகின்றனர்.

    மேலும், விவசாயிகளுக்கு தரமான உரங்களை விநியோகம் செய்திடவும், இருப்பு தொடர்பான விபரங்களை உரிய பதிவேடுகளில் தினசரி பதிவு செய்திடவும், பருவ காலங்களுக்கு தேவையான உரத்தினை இருப்பு வைத்து விநியோகம் செய்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    ×