என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தேனி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கலெக்டர் ஆய்வு
- காமாட்சி புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- பருவ காலங்களுக்கு தேவையான உரத்தினை இருப்பு வைத்து விநியோகம் செய்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தேனி:
தேனி அருகே காமாட்சி புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், பணியாளர்களின் எண்ணிக்கை, வருகை பதிவேடு, வைப்பறை, விவசாயிகளுக்கு உரங்கள் விநியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை, இருப்பு எண்ணிக்கை, அதற்கான பதிவேடுகள் மற்றும் விலைப்பட்டியல் மற்றும் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் ஷஜீவனா, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு ெதரிவித்ததாவது:-
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வேளாண்மை தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் நலனை காத்திடும் வகையில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின சார்பில் பல்வேறு வேளாண் சார்ந்த திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்.
அதனடிப்படையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் நடப்பு பருவ சாகுபடிக்குத் தேவையான உரங்கள் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
காமாட்சிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உரங்கள் விநியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை, இருப்பு எண்ணிக்கை, அதற்கான பதிவேடுகள் மற்றும் விலைப்பட்டியல் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இச்சங்கத்தின் மூலம் மாதந்தோறும் 1500-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு உரம் விநியோகம் செய்யப்பட்டு பயடைந்து வருகின்றனர்.
மேலும், விவசாயிகளுக்கு தரமான உரங்களை விநியோகம் செய்திடவும், இருப்பு தொடர்பான விபரங்களை உரிய பதிவேடுகளில் தினசரி பதிவு செய்திடவும், பருவ காலங்களுக்கு தேவையான உரத்தினை இருப்பு வைத்து விநியோகம் செய்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்