search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "court order"

    ஓடும் ரெயிலில் எலி கடித்த பயணிக்கு ரூ. 32 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தர விடப்பட்டுள்ளது. #Court

    சென்னை:

    சென்னையைச் சேர்ந்த ரெயில் பயணி வெங்கடாசலம். இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஆக்ஸ்டு மாதம் 8-ந் தேதி சேலம் வழியாக சென்னை எழும்பூர் வரும் ரெயிலில் பயணம் செய்தார்.

    அப்போது அவரை எலி கடித்துவிட்டது. இதனால் அவரது காலில் ரத்தம் கொட்டியது. கடுமையான வலியும் ஏற்பட்டது. இதுபற்றி அவர் டிக்கெட் பரிசோதகரிடம் புகார் செய்தும் எந்த முதல்உதவியும் அளிக்கப்படவில்லை. அடுத்த ரெயில் நிலையத்தில் தான் சிகிச்சை அளிக்க முடியும் என்று கூறிவிட்டார்.

    இதனால் ரெயில் எழும்பூர் வந்து சேர்ந்ததும் ரெயில்வே போலீசிலும் அதிகாரிகளிடமும் புகார் செய்தார். முதலில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வெங்கடாசலம் பின்னர் அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சை பெற்றார்.

    எலி கடித்த வேதனை ஒருபுறம், முதலுதவி சிகிச்சை பெற முடியாமல் தவித்தது ஒருபுறம் என பல வழிகளில் துன்பத்துக்கு ஆளான வெங்கடாசலம் இதுபற்றி நுகர்வோர் கோர்ட்டில் முறையிட்டு மனுதாக்கல் செய்தார். தனக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு இழப்பீடு கேட்டு இருந்தார்.

    மாவட்ட நுகர்வோர் குறைதீர்மன்ற நீதிபதி ஆர்.வி. தீனதயாளன், உறுப்பினர் ராஜலட்சுமி ஆகியோர் விசாரித்தனர். இதில் ரெயில் பயணிக்கு ஏற்பட்ட மனஉளைச்சல் மற்றும் அசவுகரியத்துக்காக அவருக்கு ரெயில்வே நிர்வாகம் ரூ. 25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

    மேலும் மருத்துவ செலவு ரூ. 2 ஆயிரம், வழக்கு செலவு ரூ. 5 ஆயிரம் சேர்த்து ரூ. 32 ஆயிரத்தை 9 சதவீத வட்டியுடன் 3 மாதத்தில் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தர விடப்பட்டுள்ளது.

    சென்னை அயனாவரம் சிறுமி கற்பழிப்பு வழக்கில் 17 பேர் ஜாமீன் கோரிய மனு தொடர்பாக இன்ஸ்பெக்டர் பதில் மனு தாக்கல் செய்ய மகளிர் கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். #ChennaiGirlHarassment #POCSOAct
    சென்னை:

    சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 7-ம் வகுப்பு படித்து வரும் 11 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக குடியிருப்பில் லிப்ட் ஆபரேட்டராக வேலை பார்த்த ரவிக்குமார், காவலாளிகள் அபிஷேக், சுகுமாறன் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அவர்கள் 17 பேரும் ஜாமீன் கோரி சென்னையில் உள்ள மகளிர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, இதுதொடர்பாக அயனாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். பின்னர், மனு மீதான விசாரணையை 16-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.  #ChennaiGirlHarassment #POCSOAct

    திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் சிலை கடத்தல் புகார் தொடர்பாக 6 வார காலத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #IdolSmugglingCases
    சென்னை:

    திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயில் மூலவர் சிலை திருடப்பட்டிருப்பதாகவும், உற்சவர் சிலை, கோயிலின் பழங்கால பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்க ராஜன் நரசிம்மன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை தரப்பில், 2012-ம் ஆண்டில் ஆகம விதிகளுக்குட்பட்டு ஸ்ரீரங்கம் கோவில் சீரமைப்பு பணிகளின் போது சிலைகள் சீரமைக்கப்பட்டது. ஆனால் சிலைகள் மாயமானதாக கூறும் புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை. அனைத்து சிலைகளும் கோவிலில் தான் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    அதேபோல, பாரம்பரிய கட்டிடத்தை சிறப்பாக புதுப்பித்தற்காக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு 2017-ம் ‘யுனஸ்கோ’ விருது வழங்கியிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால், ஆகம விதிகளுக்குட்பட்டு தான் அதிகாரிகள் கோவிலுக்குள் சென்று விசாரணை நடத்த வேண்டும் என்றும் கடவுகளுக்கும் தனி மனித சுதந்திரம் இருப்பதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து, ஸ்ரீரங்கம் கோவிலில் சிலை கடத்தல் புகார் தொடர்பாகவும், ஆயிரம் கால் மண்டபத்தையும் ஆய்வு செய்து 6 வார காலத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். #IdolSmugglingCases

    பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை பொது மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு நீதிபதி செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். #plasticban

    மதுரை:

    சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வளா கத்தை தூய்மையாக சுத்தமாக பராமரிக்கும் வகையிலும், பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக மாற்றும் வகையி லும் இன்று சிறப்பு தூய் மைப்பணி முகாம் நடந்தது.

    இதில் மாநகராட்சியின் சார்பில் 75துப்புரவு பணியாளர்களும், 4 டிராக்டர்களும், 1 டம்பர் பிளேசரும், 8 டம்பர் பின்களும், 1 டிப்பர் லாரியும், 1 ஜே.சி.பி. எந்திரமும், 1 மினிரோபோவும், 1 புகை பரப்பும் ஆட்டோவும், 4 கை கொசு புகைபரப்பும் எந்திரமும் ஈடுபடுத்தப் பட்டது.

    மேலும் தூய்மைப்பணிக் கான தளவாட சாமான்கள் மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பை வாளிகள் பயன்படுத்தப்பட்டது.

    6-வது பட்டாலியனை சார்ந்த 40 காவலர்களும், 40 ஊராட்சி பணியாளர்களும், 45 மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை வீரர்களும் நீதிமன்ற பணியாளர்களும் இந்த தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.

    குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என பிரித்து எடுக்கும் வகையில் பச்சை மற்றும் நீல நிற குப்பைத் தொட்டிகளையும், பிளாஸ் டிக் பைகளுக்கு மாற்றாத துணிப்பைகளையும் நீதிபதிகள் வழங்கினர்.

    நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் செல்வம் (நிர்வாகம்), பசீர்அகமது, சுந்தர், நிஷாபானு, கிருஷ்ணவள்ளி, சுரேஷ் குமார், கலெக்டர் வீரராக வராவ், மாநகராட்சி ஆணையாளர் அனீஷ்சேகர், முதன்மை நகர்நல அலுவலர் சதீஷ் ராகவன், உதவி ஆணையாளர் பழனிச்சாமி, செயற் பொறியாளர் ராஜேந் திரன், மக்கள் தொடர்பு அலுவலர்கள் தங்கவேல், சித்திரைவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பிளாஸ் டிக் பொருட்கள் தடை செய்யப்பட்ட வளாகமாக ஏற்கனவே அறிவித்திருந்தோம். அதனை தொடர்ந்து கடைபிடித்தும் வருகிறோம். பொதுமக்கள் அனைவரும் சுற்றச்சுழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் கேரிபைகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

    பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பையை உபயோகபடுத்தவேண்டும். ஏனென்றால் பிளாஸ்டிக் பையினை பூமியில் போட்டால் பல ஆண்டு காலத்திற்கு பிறகும் அது பிளாஸ்டிக் பொருளாகவே இருக்கும். பொதுமக்கள் பிளாஸ்டிக்கி னால் ஏற்படும் தீங்கினை கருத்தில் கொண்டு முற்றிலுமாக தவிர்த்து மாற்று பொருளை உபயோகப்படுத்தவேண்டும். இயற்கை வளங்களை நாம் மதித்தால்தான் இயற்கை நம்மை மதிக்கும் என தெரிவித்தார்.

    கூவம் மற்றும் அடையாறு கரையோரத்தில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார். #ChennaiCorporation

    சென்னை:

    பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை நகரத்தில் 2015-ம் ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு காரணம், சென்னையை சுற்றியுள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களே என நீதி மன்ற ஆணைகளின்படி நீர் நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் என்பதில் பெருநகர சென்னை மாநகராட்சி உறுதியாக உள்ளது.

    அந்த அடிப்படையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன.

    கூவம், அடையாறு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் நீர்வழிக்கால்வாய்கள் போன்ற நீர்வழித்தடங்களில் மறுசீரமைப்பு செய்து பழைய நிலைக்கு கொண்டு வருவதற்காகவும், வெள்ளம் பாதிக்கும் பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கும், நிலையில்லாத கட்டுமான குடியிருப்புகளில் இருக்கும் பொதுமக்களுக்கும் நாவலூர், திருவொற்றியூர், எழில்நகர் ஒக்கியம் துரைப்பாக்கம் மற்றும் பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

    2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தினால் அடையாறு நதியின் கரையோரம் 9,539 குடும்பங்கள் பாதிக்கப்பட்டனர் என கண்டறியப்பட்டு, 4,134 குடும்பங்கள் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை, ஒருங்கிணைந்த கூவம் நதி மறுசீரமைப்பு பணி மேற்கொள்ளும் பொருட்டு, கூவம் நதியோரம் 14,257 குடும்பங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கண்டறியப்பட்டு, இவர்களில் 6,879 குடும்பங்கள் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    பெருநகர சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் நீர்வழிக் கால்வாய்கள் ஓரம் மொத்தம் 3,041 குடும்பங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கண்டறியப்பட்டு, இவர்களில் 1,671 குடும்பங்கள் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    விரிவாக்கப்பட்ட பெரு நகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் வெள்ளத்தடுப்பு கட்டும் பணி மேற்கொள்ள நான்கு கால்வாய்களின் ஓரம் வசித்த 81 குடும்பங்கள் ஆக்கிரமிப்பாளர்களாக கண்டறியப்பட்டு, 81 குடும்பங்களும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    கூவம் நதி, அடையாறு நதி மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட நீர்வழிக்கால்வாய்களில், 26,837 குடும்பங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கண்டறியப்பட்டு, இதுவரை 12,765 குடும்பங்கள் தமிழ் நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் மறு குடியமர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    மீதமுள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றி, மறுகுடியமர்வு செய்ய தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ChennaiCorporation

    விளாத்திகுளம் அருகே மயில்களை வேட்டையாடிய 3 பேருக்கு 10 ஆண்டுக்கு பின் சிறைதண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
    தூத்துக்குடி:

    விளாத்திக்குளம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தேசிய பறவையான மயில்கள் அதிக அளவில் கூட்டம் கூட்டமாக வசித்து வருகின்றன. இவற்றை சிலர் வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 2008-ம் ஆண்டு ஜூன் மாதம் 29-ந் தேதி மயில்வேட்டையாடிய விளாத்திக்குளம் அருகேயுள்ள சிதம்பர நகரை சேர்ந்த தெய்வசிகாமணி, சந்தனக்குமார், முருகன் ஆகிய 3 பேரை வனத்துறையினர் மடக்கி பிடித்தனர். இது தொடர்பான வழக்கு விளாத்திக்குளம் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    இந்த வழக்கில் தெய்வசிகாமணி, சந்தனக்குமார், முருகன் ஆகிய 3 பேருக்கும் வனவிலங்கு தடுப்பு சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் சிறைதண்டனையும், தலா ரூ.10ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறப்பட்டது. இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு 10வருடங்களுக்கு பிறகு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட வனஅலுவலர் சம்பத் , வனச்சரகர் சிவராம் ஆகியோர் கூறியதாவது:-

    தேசிய பறவையான மயில்களை வேட்டையாடுவது கண்டறியப்பட்டால் அதில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு குறைந்தது 3முதல் 5ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.

    விவசாயிகள் தங்களின் விளைநிலங்களை சேதப்படுத்துவதால் மயில்களை கொல்வதும் தண்டனைக்குரிய குற்றமாகும். விவசாயப்பயிர்கள் மயில்களால் சேதத்திற்குள்ளானால் இதற்கு விவசாயிகள் இழப்பீடு பெறுவதற்கான வழிமுறைகளும் இருக்கிறது. எனவே, மயில்களால் ஏதேனும் விவசாயப்பயிர்கள் சேதமானால் அது குறித்து வனத்துறையினருக்கு விவசாயிகள் தகவல் தெரிவிக்க வேண்டும்.

    தூத்துக்குடி மாவட்டத்தின் வனப்பகுதிகள் மற்றும் மயில்கள் அதிகமாக வாழும் கிராமப்பகுதிகளில் யாரேனும் மயிலை வேட்டையாடினால் பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்திடவேண்டும். தேசியப்பறவையான மயில்களை வேட்டையாடுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    விபத்தில் உயிரிழந்த சென்னை வாலிபரின் குடும்பத்துக்கு ரூ.16½ லட்சம் நஷ்டஈடு வழங்க இன்சூரன்சு நிறுவனத்துக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை ராமாபுரத்தை சேர்ந்தவர் ஆர்.நாராயணன். இவரது மகன் மணிகண்டன் (20). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ‘சூப்பர்வைசர்’ ஆக பணிபுரிந்தார். மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம் பெற்று வந்தார்.

    இந்த நிலையில் பூந்தமல்லியை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தின் டேங்கர் லாரியில் அமர்ந்து பயணம் செய்தார். அவருடன் 2 ஊழியர்களும் இருந்தனர். அப்போது நடந்த விபத்தில் லாரி கவிழ்ந்து மரணம் அடைந்தார்.

    இச்சம்பவம் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 29-ந்தேதி அதாவது 4 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்தனர்.

    இதற்கிடையே விபத்தில் இறந்த மணிகண்டனின் தந்தை நாராயணன் சென்னையில் உள்ள மோட்டார் விபத்துகள் இழப்பீடு நடுவர்மன்ற கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    எனது மகன் மணிகண்டன் வருமானத்தில்தான் குடும்பம் இயங்கி வந்தது. தற்போது நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம். டிரைவர் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் லாரியை ஓட்டியதால் விபத்த ஏற்பட்டுள்ளது. எனவே லாரி நிறுவனமும், தனியார் இன்சூரன்சு நிறுவனமும், ரூ.20 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் விசாரணையின் போது லாரி நிறுவனம் ஆஜராகவில்லை. தனியார் இன்சூரன்சு கம்பெனியும் குற்றச்சாட்டுகளை மறுத்தது.

    ஆனால் வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.ரமேஷ் விபத்தில் மரணம் அடைந்த மணிகண்டன் குடும்பத்துக்கு தனியார் இன்சூரன்சு நிறுவனம் ரூ.16 லட்சத்து 42 ஆயிரம் நஷ்டஈடு தொகையை 2015-ம் ஆண்டு முதல் 7.5 சதவீத வட்டியுடன் வழங்க உத்தரவிட்டார். டிரைவர் அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் லாரியை ஓட்டி விபத்து ஏற்படுத்தியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். #Tamilnews

    நாட்டிலேயே முதன்முறையாக விபத்தில் இறந்த வாலிபர் குடும்பத்துக்கு நெடுஞ்சாலை ஆணையம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மதுரை செசன்சு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கருங்காலக்குடியை சேர்ந்தவர் கண்ணன் (37). இவர் கடந்த மார்ச் மாதம், 23-ந் தேதி, இரவு 8 மணியளவில், மதுரை- திருச்சி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தார்.

    அப்போது சாலை விதிகளுக்கு மாறாக எதிர் திசையில் நின்ற லாரி மீது மோதி படுகாயமடைந்த கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கண்ணனின் மனைவி வாசுகி மற்றும் அவரது குடும்பத்தினர், மதுரை 4-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விபத்தில் உயிரிழந்த கண்ணனுக்கு உரிய இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்தனர்.

    அந்த மனுவில் ‘’மதுரை- திருச்சி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை ஏற்படுத்திய லாரி, 2 நாட்களாக நின்றதும், இதை முறையாக எடுத்துச்செல்ல தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நடவடிக்கை எடுக்காததாலும்தான் விபத்து ஏற்பட்டது’’ என்று கூறப்பட்டிருந்தது.

    இதனையடுத்து நீதிபதி சஞ்சய்பாபா தாமாக முன்வந்து இந்த வழக்கில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய தலைமை அதிகாரியை எதிர் மனுதாரராக சேர்த்தார்.

    வழக்கு விசாரணையின் போது இரு தரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதி சஞ்சய்பாபா தீர்ப்பு வழங்கினார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

    4 வழிச்சாலைகளில் கட்டணம் வசூலிப்பது மட்டுமின்றி, சாலைகளை முறையாக பராமரிப்பதும், விபத்து ஏற்படாமல் தடுப்பதும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் பணி. ஆனால் தங்களது பணியை கவனிக்க அவர்கள் தவறிவிட்டனர். இந்த வழக்கில், ரூ.19 லட்சத்து 97 ஆயிரத்து 800 இழப்பீடு வழங்க வேண்டும்.

    மனுதாரரின் கணவர் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியுள்ளார். எனவே, இழப்பீட்டில் 15 சதவீதம் குறைக்கப்படுகிறது. மீதமுள்ள பணத்தில், லாரி இன்சூரன்ஸ் செய்யப்பட்ட நிறுவனம் 50 சதவீதமும், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் 35 சதவீதமும் என கணக்கிட்டு மனுதாரருக்கு வழங்க வேண்டும்.

    மேற்கண்டவாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    விபத்து வழக்கில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமும் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது நாட்டிலேயே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×