search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Peacock hunt"

    விளாத்திகுளம் அருகே மயில்களை வேட்டையாடிய 3 பேருக்கு 10 ஆண்டுக்கு பின் சிறைதண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
    தூத்துக்குடி:

    விளாத்திக்குளம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தேசிய பறவையான மயில்கள் அதிக அளவில் கூட்டம் கூட்டமாக வசித்து வருகின்றன. இவற்றை சிலர் வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 2008-ம் ஆண்டு ஜூன் மாதம் 29-ந் தேதி மயில்வேட்டையாடிய விளாத்திக்குளம் அருகேயுள்ள சிதம்பர நகரை சேர்ந்த தெய்வசிகாமணி, சந்தனக்குமார், முருகன் ஆகிய 3 பேரை வனத்துறையினர் மடக்கி பிடித்தனர். இது தொடர்பான வழக்கு விளாத்திக்குளம் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    இந்த வழக்கில் தெய்வசிகாமணி, சந்தனக்குமார், முருகன் ஆகிய 3 பேருக்கும் வனவிலங்கு தடுப்பு சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் சிறைதண்டனையும், தலா ரூ.10ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறப்பட்டது. இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு 10வருடங்களுக்கு பிறகு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட வனஅலுவலர் சம்பத் , வனச்சரகர் சிவராம் ஆகியோர் கூறியதாவது:-

    தேசிய பறவையான மயில்களை வேட்டையாடுவது கண்டறியப்பட்டால் அதில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு குறைந்தது 3முதல் 5ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.

    விவசாயிகள் தங்களின் விளைநிலங்களை சேதப்படுத்துவதால் மயில்களை கொல்வதும் தண்டனைக்குரிய குற்றமாகும். விவசாயப்பயிர்கள் மயில்களால் சேதத்திற்குள்ளானால் இதற்கு விவசாயிகள் இழப்பீடு பெறுவதற்கான வழிமுறைகளும் இருக்கிறது. எனவே, மயில்களால் ஏதேனும் விவசாயப்பயிர்கள் சேதமானால் அது குறித்து வனத்துறையினருக்கு விவசாயிகள் தகவல் தெரிவிக்க வேண்டும்.

    தூத்துக்குடி மாவட்டத்தின் வனப்பகுதிகள் மற்றும் மயில்கள் அதிகமாக வாழும் கிராமப்பகுதிகளில் யாரேனும் மயிலை வேட்டையாடினால் பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்திடவேண்டும். தேசியப்பறவையான மயில்களை வேட்டையாடுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    ×