search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Consultative meeting"

    • அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று பேசினார்.

    அலங்காநல்லூர்

    மதுரை மேற்கு தெற்கு ஊராட்சி ஒன்றியம் அரியூர் கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் 2024 நாடாளு மன்றத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் ஒன்றிய கழக செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

    இதில் முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோ சனை வழங்கினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. க்கள் தமிழரசன், சரவணன், கருப்பையா, மாணிக்கம், அம்மா பேரவை நிர்வாகி வெற்றி வேல், மாவட்ட பொரு ளாளர் திருப்பதி, எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணைச்செயலாளர் ஜெயச்சந்திரமணியன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக பொதும்பு, அதலை உள்ளிட்ட பல கிராமங்களில் அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    • டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை மற்றும் சுற்றுப்புற சுகாதாரம் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
    • மருத்துவர் பூரணசந்திரன் ஆலோசனைகளை வழங்கினார்.

    சிவகிரி:

    சிவகிரி அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் டெங்கு கொசு ஒழிப்பு நடவ டிக்கை மற்றும் சுற்றுப்புற சுகாதாரம் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

    கொடுமுடி தாலுகாவை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் கொடுமுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் தலைமை மருத்துவர் பூரணசந்திரன் டெங்கு காய்ச்சல் மற்றும் தொற்ற நோய் பாதிப்புகளை தவிர்த்தல் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

    • நிர்வாகிகளிடம் பூத் கமிட்டி படிவங்கள் வழங்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் பூத் கமிட்டி அமைப்பது மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் தலைவர் உத்தமன் தலைமை தாங்கி பேசினார்.

    மாவட்ட துணை தலைவர் மோகன், முருகன், ராணி வெங்கடேசன், வசீகரன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டு, நிர்வாகிகளிடம் பூத் கமிட்டி படிவங்கள் வழங்கப்பட்டது.

    கூட்டத்தில் நிர்வாகிகள் காஜா, ஏ.கே.சுந்தரமூர்த்தி, சுவேதா பானு, விக்னேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரையில் நாளை அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
    • முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ தலைமையில் நடக்கிறது.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கழக பொதுச் செயலாளரு, முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க, மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வருகிற பாராளு மன்ற தேர்தல் வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம் மற்றும் மகளிர் குழு, இளைஞர் குழு அமைத்தல், கட்சி வளர்ச்சி பணி, பேரறிஞர் அண்ணா வின் பிறந்தநாள் பொதுக் கூட்டங்களை சிறப்பாக நடத்துவது தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரை பனகல் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நாளை (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு நடை பெறுகிறது.

    இந்த கூட்டத்தில் கட்சி யின் வளர்ச்சி பணிகள் மற்றும் பூத் கமிட்டி, மகளிர் குழு உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து விரிவாக ஆலோசனைகள் வழங்கப் பட உள்ளன.

    எனவே இந்த ஆலோ சனை கூட்டத்தில் இந்நாள், முன்னாள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பி னர்கள், மாவட்ட நிர்வாகி கள், பகுதி, வட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், இன்னாள், முன்னாள் உள்ளாட்சி மற்றும் கூட்டு றவு சங்க நிர்வாகிகள், கழக முன்னோடிகள் அனைவரும் திரளாக பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வாடிப்பட்டியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • இதில் முன்னாள்அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் அ.தி.மு.க. சார்பாக நாடாளுமன்ற தேர்தல் பூத்கமிட்டி அமைக்க ஆலோசனைக்கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு பேரூர் செய லாளர் டாக்டர் அசோக் குமார் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கருப்பையா, மாணிக்கம், மாவட்ட பொருளாளர் திருப்பதி, முன்னாள் பேரூ ராட்சி துணைத்தலைவர் சோனை, வடக்கு ஒன்றிய செயலாளர் காளிதாஸ், யூனியன் சேர்மன் மகா லட்சுமி ராஜேஷ்கண்ணா, மகளிரணி மாவட்ட செய லாளர் வக்கீல்லெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித் தனர்.

    பேரூர் துணைச்செயலாளர் சந்தனதுரை வரவேற்றார். கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

    ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று பலகட்ட ஆய்வுகளுக்குபின் முன்னாள் ஜனா திபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் 8 பேர் கொண்ட குழுஆய்வு செய்து அந்த ஆய்வறிக்கையை நாடாளுமன்ற கூட்டத்தில் விவாதிக்க இருக்கிறார்கள் அங்கு இருஅவைகளிலும் விவாதித்தபின் சட்டத்தை நிறைவேற்றிவிட்டால் அது தமிழ்நாடு மட்டுமல்ல நாடு முழுவதும் இந்தியாவில் உள்ளஅனைத்து மாநிலங்க ளுக்கும் செல்லும் என்பது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு தெரியாதா, அவர் அறியாமையில் புலம் புகிறார்.

    முதல்வராக இருந்தும் கூட இது தெரியவில்லை என்பது வேதனையாக உள்ளது. திருமண வீட்டில் மணமக்களை வாழ்த்த வந்தவர் மாலையும், கழுத்துமாக காத்திருக்கும் வேளையிலே மணமக்களை வாழ்த் தாமல் ஆட்சி பறிபோகி விடுமோ என்ற பயத்தில் தனது கவலையை பகிர்ந்து கொண்டார். ஆட்சி அதிகா ரம் போய்விட்டால் என்ன செய்வது என்று கவலை யோடு பேசியிருக்கிறார்.

    எப்போது எல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு வருகி றதோ, அப்போதெல் லாம் அவர்கள் ஆட்சி அற்ப ஆயு ளில் கவிழ்ந்துவிடும் என் பதுதான் கடந்த கால வரலாறு. அது கருணாநிதி காலத்திலிருந்து தொடர்கிறது. அது தற்போது மு.க.ஸ்டாலின் காலத்திலும் தொடர இருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சி காலத்திட்டங் களை அரசியல் காழ்ப்பு–ணர்ச்சி காரணமாக தி.மு.க. ஆட்சியில் ரத்து செய்யப் பட்டுள்ளது.

    சத்துணவு திட்டம் தந்த சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர். என்று ஐக்கிய நாட்டு சபையில் சொல்வார்கள். தி.மு.க. இன்று காலை உணவுத்திட்டம் கொண்டு வருவதில் எந்தவித ஆட்சேப னையும் இல்லை. மாண வர்கள் பயனடைகிறார்கள் என்றால் அதை வரவேற் போம். ஆனால் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை கொடுக்கப்படுகிறது. ஆனால் சத்துணவு 1 முதல் 10-ம் வகுப்பு வரை கொடுக் கப்படுகிறது.

    இதில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை காலை உணவு யார் கொடுப்பார் கள்? எதற்கு இந்த வேறு பாடு. காலை உணவு திட் டத்தை அமுல்படுத்தும் போது ஒரே மாதிரியாக அமுல்படுத்த வேண்டும். சத்துணவு திட்டம் நிறுத்தப் பட்டு விடுமோ என்று நினைக்க தோன்றுகிறது. காரணம் சத்துணவுதிட்ட போர்டுகள் அகற்றப்பட்டு விட்டது.

    எம்.ஜி.ஆர். பெயரை தாங்கிய பெயர் பலகைகளை அகற்றிவிட்டு காலை உண வுத்திட்ட பெயர்பலகை வைப்பதனால் எம்.ஜி.ஆர். புகழை எந்த காலத்திலும் யாராலும் அழிக்கமுடியாது. அது இதயத்தில் ஊறிப்போய் உள்ளது, ரத்தத்தில் கலந்து போய் உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் எம்.ஜி.ஆர். மன்ற பேரூர் செயலாளர் முத்து கண்ணன், ஒன்றிய அவைத் தலைவர் ராமசாமி, வார்டு கவுன்சிலர்கள் சூர்யா, வெங்கடேஸ்வரி, பிரியதர்ஷினி, பஞ்சவர் ணம், கீதா, 18 வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள், உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேரூர் பேரவை செயலாளர் தனசேகரன் நன்றி கூறினார்.

    • வாடிப்பட்டியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசினார்.

    வாடிப்பட்டி

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோ சனை கூட்டம் நடந்தது. வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார்.

    முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கருப்பையா, மாணிக்கம் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    "ஒரே நாடு ஒரே தேர்தல்" திட்டத்திற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு விரைவில் அறிக்கை தாக்கல் செய்யும். அதில் பல ஆச்சரியங்கள் இருக்கப் போகிறது.

    இதை உங்களை போல் நானும் எதிர்பார்த்து கொண்டிருக்கி றேன். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று வெற்றிக கனியை பொதுச் செயலா ளர் எடப்பாடி பழனிசாமி காலடியில் சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்ட நிர்வாகிகள் திருப்பதி, வெற்றிவேல், சிங்கராஜ், பாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர் லட்சுமி, யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, பேரூர் செயலாளர் அசோக்குமார், ஒன்றிய அவைத் தலைவர் ராமசாமி, பேரூர் துணைச் செயலாளர் சந்தனத் துரை, பேரவை பேரூர் செயலாளர் தனசேகரன், கோட்டைமேடு பாலன் உள்பட கலர் கலந்து கொண்டனர். முடிவில் பாசறை மாவட்ட இணைச் செயலாளர் மணிமாறன் நன்றி கூறினார்.

    • கூட்டத்தில் சந்திரயான்-3 விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கிய விஞ்ஞானிகளை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • வேறு எந்த உலக விண்வெளி சக்திகளாலும் செய்ய முடியாத வெற்றியை இஸ்ரோ செய்துள்ளது.

    கோவில்பட்டி:

    ராகவேந்திரா சேவா அறக்கட்டளையின் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நிறுவனர் சீனிவாசன், செயலாளர் ஜோதி காமாட்சி, தலைவர் ஜெயக்கொடி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    கூட்டத்தில் கடந்த வாரத்தில் நடைபெற்ற ஆண்டு விழா நடைபெற உழைத்திட்ட நிர்வாகிகள் அனைவரையும் பாராட்டி பேசினர். தொடர்ந்து சந்திரயான்-3 விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கிய விஞ்ஞா னிகளை பாராட்டி தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து வித்யா பிரகாசம் மன வளர்ச்சி குன்றி யோருக்கான சிறப்பு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப் பட்டது.

    நிகழ்ச்சியில் பொரு ளாளர் கார்த்திகேயன், நிர்வாக குழு உறுப்பினர் நடராஜன் ஆகியோர் வரவேற்று பேசினர்.

    நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் வனசுந்தர் கலந்துகொண்டு மாணவ- மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கி பேசுகையில், நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு இந்தியா. விண்வெளி துறையில் இந்தியாவின் வலிமை பறைசாற்றப்பட்டுள்ளது. வேறு எந்த உலக விண்வெளி சக்திகளாலும் செய்ய முடியாத வெற்றியை இஸ்ரோ செய்துள்ளது.

    எனவே இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நாம் அனைவரும் வாழ்த்துக்கள் கூறி தலை வணங்குகிறோம் என்றார்.

    நிகழ்ச்சியில் சந்திரசேகர், சந்தர கண்ணன், பொண்ணு பாண்டியன், கிராம நிர்வாக அலுவலர் மந்திர சூடாமணி, முத்து மாரியப்பன், முருகன் மற்றும் ஆசிரியர் கலந்து கொண்டனர்.

    • மதுரையில் 27-ந்தேதி தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
    • மாவட்ட அவைத் தலைவர் பாலசுப்பிர மணியம் தலைமை தாங்குகிறார்.

    மதுரை

    மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் சேலத்தில் நடைபெற உள்ள இளைஞர் அணி மாநில மாநாடு குறித்த செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளது.

    இதுகுறித்து மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர், அமைச்சர் பி.மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை மாவட்டம் முழுவதும் மேலும் எழுச்சியுடன் கொண்டாடுவது மற்றும் சேலத்தில் நடைபெற உள்ள தி.மு.க. இளைஞரணி மாநில மாநாட்டில் எழுச்சி யுடன் பங்கேற்று சிறப்பிப் பது உள்ளிட்ட கட்சி ஆக்கப் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு திருப்பாலை பெண்கள் கல்லூரி அருகே அமைந்துள்ள குறிஞ்சி திருமண மஹாலில் நடக்கிறது.

    மாவட்ட அவைத் தலைவர் பாலசுப்பிர மணியம் தலைமை தாங்குகிறார்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மாநில, மாவட்ட நிர்வாகி கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, வட்டக் கழக, பேரூர் செயலாளர், நிர்வாகிகள் அனைத்து அணிகளின் அமைப்பா ளர்கள், துணை அமைப்பா ளர்கள், முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கிளைச் செயலாளர்கள், நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • கே.டி.ராஜேந்திரபாலாஜி பங்கேற்றார்.

    விருதுநகர்

    விருதுநகர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் மதுரையில் 20-ந் தேதி நடைபெற உள்ள எழுச்சி மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட அவைத்தலைவர் எஸ்.ஆர். விஜயகுமரன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளரும் அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசியதா வது:-

    விருதுநகர் மாவட்டம் என்றும் அ.தி.மு.க. கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த மாநாடு அமைய வேண்டும். தமிழகத்தில் திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் திரளான பேர் இதில் கலந்து கொள்ள வேண்டும். விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் இருந்தும் அதிக எண்ணிக்கையில் அ.தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகி களும் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள் செய்துள்ள ஏற்பாடு களையும் கேட்ட றிந்தார். இக்கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணைத்தலைவர் கலாநிதி, விருதுநகர் நகர செயலாளர் முகமதுநயினார், ஒன்றிய செயலாளர்கள் கே.கே. கண்ணன், தர்மலிங்கம், மச்ச ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • கோவிந்தராஜ் கமுதி வாசுதேவன் உள்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் சட்டமன்ற தொகுதி தி.மு.க. பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். அமைச்சர் ராஜ கண்ணப்பன், மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னி லை வகித்தனர். துணை செயலாளர் கருப்பையா வரவேற்றார்.

    கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசு கையில், ராமநாதபுரம் தொகுதியில் யார் யாரோ போட்டியிட போவதாக கூறுகிறார்கள். யார் போட்டியிட்டாலும் தி.மு.க. தான் வெற்றி பெரும். தலைவர் மு.க.ஸ்டாலின் யாரை தேர்தலில் நிறுத்துகிறாரோ அவரை வெற்றி பெற செய்ய வேண்டும். கடந்த முறை இழந்த தேனி பாராளும ன்ற தொகுதியிலும் இந்த முறை வெற்றி பெற வேண்டும்.

    முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியை கடந்த காலங்களில் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. முன்னேறிய தொகுதியாக உள்ள முதுகுளத்தூரில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தந்துள்ளோம். கிராமங்களில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் பாக முகவர்கள் எனது கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றார்.

    தொடர்ந்து காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. பேசுகையில், ராமநாதபுரத்திற்கு வருகை தரஉள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 34 இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படு கிறது. மாவட்டத்தில் 1371 பாக முகவர்கள் உள்ளனர். இதில் 385 பாகமுகவர்கள் முதுகுளத்தூர் தொகுதியில் உள்ளனர். அவர்களுக்கு முதல்வர் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்தில் முதல் வரிசையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

    வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதி களிலும் வெற்றி பெற பாகமுகவர்கள் கண்ணும் கருத்துமாக பணியாற்ற வேண்டும்.

    நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் தூவல் லெட்சுமி, ஒன்றியெ லாளர்கள் சண்முகம் ,பூபதி மணி, கோவிந்தராஜ் கமுதி வாசுதேவன் உள்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

    • மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது.
    • மாநில மாநாட்டு பணிகள் மற்றும் இல்லந்தோறும் இளைஞர் அணியின் பணிகள் பற்றி இதில் விவாதிக்கப்படுகிறது.

    சென்னை:

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. இளைஞர் அணியின் மாவட்ட-மாநில-மாநகர அமைப்பாளர்கள்-துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்தில் கழக இளைஞர் அணியின் மாவட்ட-மாநகர-மாநில அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.

    கலைஞரின் நூற் றாண்டை இளைஞர் அணி சார்பில் கொண்டாடுவது, இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டு பணிகள் மற்றும் இல்லந்தோறும் இளைஞர் அணியின் பணிகள் பற்றி இதில் விவாதிக்கப்படுகிறது.

    • மண்டல ம.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடக்கிறது.
    • கூட்டத்தில் 14-ந்தேதி வைகோ பேசுகிறார்.

    மதுரை

    மதுரையில் வருகிற 14-ந்தேதி நடைபெறும் ம.தி.மு.க. மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் வைகோ எம்.பி. சிறப்புரையாற்றுகிறார்.

    இது தொடர்பாக மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 115-வது பிறந்தநாள் மாநாடு அடுத்த மாதம் 15 -ந் தேதி மதுரையில் சிறப்பாக கொண்டாடப்படு கிறது. இதையொட்டி மதுரை மண்டல ம.தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் வருகிற 14-ந்தேதி

    (திங்கள்கிழமை) மாலை 5 மணி அளவில் தெப்பக்குளம் நோட்புக் அரங்கில் நடைபெறுகிறது.

    இந்த ஆலோசனை கூட்டத்திற்கு மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் எம்.எல்.ஏ., மாநகர் மாவட்ட செயலாளர் முனியசாமி ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மார்நாடு, தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயராமன், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் செல்வராகவன், தேனி மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், ராமநாத புரம் மாவட்ட செயலாளர் சுரேஷ், சிவகங்கை மாவட்ட செயலாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வைக்கிறார்கள்.

    கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எம்.பி. சிறப்புரையாற்று கிறார். மேலும் தலைமை கழக நிர்வாகிகள் அவை தலைவர் அர்ச்சுனராஜ், பொருளாளர் செந்தில திபன், முதன்மை செயலா ளர் துரை வைகோ, துணை பொதுசெயலாளர்கள் மல்லை சத்யா, செஞ்சி மணி, ஆடுதுறை முருகன், ராஜேந்திரன், ரொஹையா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    முடிவில் மாவட்ட அவைத் தலைவர் சுப்பையா நன்றி கூறுகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மதுரை மாநகர், தெற்கு, வடக்கு மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×