search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம்
    X

    அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம்

    • அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று பேசினார்.

    அலங்காநல்லூர்

    மதுரை மேற்கு தெற்கு ஊராட்சி ஒன்றியம் அரியூர் கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் 2024 நாடாளு மன்றத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் ஒன்றிய கழக செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

    இதில் முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோ சனை வழங்கினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. க்கள் தமிழரசன், சரவணன், கருப்பையா, மாணிக்கம், அம்மா பேரவை நிர்வாகி வெற்றி வேல், மாவட்ட பொரு ளாளர் திருப்பதி, எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணைச்செயலாளர் ஜெயச்சந்திரமணியன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக பொதும்பு, அதலை உள்ளிட்ட பல கிராமங்களில் அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    Next Story
    ×