search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மண்டல ம.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்
    X

    மண்டல ம.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்

    • மண்டல ம.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடக்கிறது.
    • கூட்டத்தில் 14-ந்தேதி வைகோ பேசுகிறார்.

    மதுரை

    மதுரையில் வருகிற 14-ந்தேதி நடைபெறும் ம.தி.மு.க. மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் வைகோ எம்.பி. சிறப்புரையாற்றுகிறார்.

    இது தொடர்பாக மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 115-வது பிறந்தநாள் மாநாடு அடுத்த மாதம் 15 -ந் தேதி மதுரையில் சிறப்பாக கொண்டாடப்படு கிறது. இதையொட்டி மதுரை மண்டல ம.தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் வருகிற 14-ந்தேதி

    (திங்கள்கிழமை) மாலை 5 மணி அளவில் தெப்பக்குளம் நோட்புக் அரங்கில் நடைபெறுகிறது.

    இந்த ஆலோசனை கூட்டத்திற்கு மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் எம்.எல்.ஏ., மாநகர் மாவட்ட செயலாளர் முனியசாமி ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மார்நாடு, தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயராமன், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் செல்வராகவன், தேனி மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், ராமநாத புரம் மாவட்ட செயலாளர் சுரேஷ், சிவகங்கை மாவட்ட செயலாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வைக்கிறார்கள்.

    கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எம்.பி. சிறப்புரையாற்று கிறார். மேலும் தலைமை கழக நிர்வாகிகள் அவை தலைவர் அர்ச்சுனராஜ், பொருளாளர் செந்தில திபன், முதன்மை செயலா ளர் துரை வைகோ, துணை பொதுசெயலாளர்கள் மல்லை சத்யா, செஞ்சி மணி, ஆடுதுறை முருகன், ராஜேந்திரன், ரொஹையா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    முடிவில் மாவட்ட அவைத் தலைவர் சுப்பையா நன்றி கூறுகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மதுரை மாநகர், தெற்கு, வடக்கு மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×