search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Consultative meeting"

    • ஆலோசனை கூட்டத்திற்கு இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் சிறப்பு அழைப்பா ளராக கலந்து கொண்டார்.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்தில் நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது.

    புறநகர் மாவட்ட செயலா ளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் நாராயண பெருமாள், அமைப்பு செயலாளர் ஏ.கே.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அ.தி.மு.க. மருத்துவ அணி இணை செயலாள ரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பி னருமான டாக்டர் சரவணன் சிறப்பு அழைப்பா ளராக கலந்து கொண்டு வருகிற பாராளுமன்ற தேர்தலில் பூத் கமிட்டி நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும், அவர்களது பணிகளை ஒருங்கிணைப்பது உள்ளிட்டை குறித்து விரி வாக எடுத்துரைத்தார்.

    கூட்டத்தில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கூனியூர் மாடசாமி, மாவட்ட துணைசெயலாளர் செவல் முத்துசாமி, ஞானபுனிதா, பொதுக்குழு உறுப்பினர் பார்வதி பாக்கியம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செய லாளர் பெரிய பெருமாள், ஒன்றிய செயலாளர்கள் அம்பை விஜய பாலாஜி, சேரை மாரி செல்வம், களக்காடு வேல்சாமி, ராதா புரம் அந்தோணி அமல் ராஜ், செல்வராஜ், முத்து குட்டிப்பாண்டியன் நகரச் செயலாளர்கள் அம்பை அறிவழகன், வி.கே.புரம் கண்ணன், களக்காடு செல்வராஜ் சாமிநாதன், கல்லிடை முத்துகிருஷ்ணன், சேரை பழனிகுமார், நாங்குநேரி சங்கரலிங்கம், அம்பை நீர் பாசன கமிட்டி தலைவர் மாரிமுத்து, மணி முத்தாறு முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் சிவன்பாபு, அம்பை ஒன்றிய துணை செயலாளர் பிராங்க ளின், வக்கீல்கள் சுரேஷ், ஸ்டாலின் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • தனியாருக்கு சொந்தமான இடத்தில் தார் தொழிற்சாலை அமைந்துள்ளது.
    • 4 ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராம மக்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா எடமணல்-திருநகரி சாலையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் தார் தொழிற்சாலை அமைந்துள்ளது.

    இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்படும் என கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

    இந்நிலையில் 4 ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராம மக்களின் ஆலோசனைக் கூட்டம் எடமணல் கிராமத்தில் நடைபெற்றது ஜெய ராமன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எடமணல், திருநகரி, வேட்டங்குடி, திருமுல்லைவாசல் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராம நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தின் முடிவில் தார் பிளாண்ட் தொழிறடசாலையை தடை செய்வதற்கான முயற்சிகள் அனைத்திற்கும் ஒத்துழைப்பு அளிப்பது, தார் பிளாண்ட் தடை செய்யக்கோரி ஊராட்சி மன்ற தலைவர்களை அணுகி சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற கேட்டு பெறுவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • முடிவில் விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    சிவகாசி

    சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. வட்டார காங்கிரஸ் தலைவர் முத்துமாரி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். விருதுநகர் மாவட்ட செய்தி தொடர்பாளர் மீனாட்சி சுந்தரம் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் மத்திய அரசு வக்கீல் முருகானந்தம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவகுருநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வைரவசாமி ஆகியோர் பேசினர். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூடுதல் தொகுதிகள் கேட்டு பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் நந்தகுமார், செல்லையாதேவர், சங்கர், சோமசுந்தரம், சற்குண பாண்டியன், கோபால், சிவகாசி ஷேக், குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    • அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் செங்கோட்டையில் நடை பெற்றது.
    • பூத் கமிட்டி அமைக்கும் பணியை விரைந்து முடிக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    செங்கோட்டை:

    தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலா ளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமையில், மகளிரணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி முன்னிலையில் தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் செங்கோட்டையில் நடை பெற்றது.

    இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கிருஷ்ண முரளி பேசுகையில், அ.தி.மு.க.வின் 52-வது ஆண்டு விழாவை முன்னிட்டு சங்கரன்கோவிலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் நன்றி தெரிவித்தார்.

    அதனைத்தொடர்ந்து பொதுக்கூட்டத்தை மாநாடு போல் நடத்த உதவிய சங்கரன்கோவில், வாசுதேவ நல்லூர், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்துக் கொண்டார்.

    அடுத்ததாக பூத் கமிட்டி அமைக்கும் பணியை விரைந்து முடிக்க ஆலோ சனைகள் வழங்கினார்.மேலும் பாராளுமன்ற தேர்தலுக்காக தெருமுனை பிரசாரங்களை மேற்கொள்ள தயாராகுமாறு நிர்வாகிகளுக்கு ஆலோ சனைகள் வழங்கினார்.

    • பூத் வாரியாக பூத் கமிட்டி ஏற்படுத்துதல் சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் பள்ளமடை பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகர் மாவட்டம் மானூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் சீதபற்பநல்லூர், வெள்ளாளங்குளம், வல்லவன் கோட்டை ஊராட்சிகளுக்கு உட்பட்ட பூத் எண்கள் 140,141,142,138,116,117 ஆகியவற்றிற்கான பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதில் நெல்லை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இந்த பூத் வாரியாக பூத் கமிட்டி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துதல் சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதற்கு மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார்.

    இதில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் கல்லூர் வேலாயுதம், மாவட்ட அவைத் தலைவர் பரணி சங்கரலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு மேற்பார்வையிட்டனர். இதில் மாவட்ட துணை செயலாளர் பள்ளமடை பாலமுருகன், மானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் லெட்சுமண பெருமாள், ஓட்டுனரணி செய லாளர் சிவந்தி ராஜேந்திரன், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பா.ம.க அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மக்தூம் கான் வரவேற்றார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி கிழக்கு மாவட்டம் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் தேனி சை.அக்கிம் தலைமை தாங்கி னார். மாவட்ட தலைவர் சந்தானதாஸ், மாவட்ட அமைப்புச் செயலாளர் சதாம் ராஜா, அமைப்பு தலைவர் ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மக்தூம் கான் வரவேற்றார். நிகழ்ச்சியில் புதிய மாவட்ட இளைஞர் சங்க அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்நகர் லட்சுமணனுக்கு சந்தான தாஸ் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் புதிய கிளைகள் அமைக்க வேண்டும், கிளைகள் அனைத்திலும் கொடி ஏற்ற வேண்டும், இளைஞர் சங்கங்களை பலப்படுத்த வேண்டும், ராமநாதபுரம் மாவட்டம் வைகை நீர் ஒப்பந்தத்தின்படி 12-ல் 7 பங்கு நீரை தமிழக அரசு ராமநாதபுரம் மாவட் டத்திற்கு கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறை வேற்றப் பட்டது.

    பசுமை தாயகத்தின் மாநில துணைச் செயலாளர் கர்ண மகா ராஜா, மாவட்ட துணை செயலாளர் ராசிக், ராமநாத புரம் நகர செயலாளர் பாலா, மண்ட பம் ஒன்றிய செய லாளர் வெங்கடேஷ், கீழக்கரை நகர செயலாளர் லோக நாதன், மாவட்ட தொழிற் சங்க செயலாளர் லட்சு மணன், திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், நகர துணை செயலாளர் கார்த்திக், இளைஞர் சங்க செயலாளர் துல்கர், இளைஞர் சங்க அமைப் பாளர் ராம் நகர் லட்சுமணன் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் இப்ராகிம்,

    சிறுபான்மை பிரிவு செயலாளர் வாப் பாசா, மாணவர் சங்க செயலாளர் சந்தோசம், மாவட்ட மாணவர் சங்க அமைப் பாளர் கபில்தேவ், கடலாடி ஒன்றிய செயலாளர் இரு ளாண்டி, கடலாடி ஒன்றிய துணை செயலாளர் முனிய சாமி, மண்டபம் ஒன்றிய துணை செயலாளர் சாகுல், மண்டபம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் முனியசாமி, மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் பொறியாளர் முகமது ஷரீப் நன்றி கூறி னார். புதிய மாவட்ட இளைஞர் சங்க அமைப்பா ளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்நகர் லட்சுமணனுக்கு மாவட்ட தலைவர் சந்தானதாஸ் சால்வை அணிவித்து வரவேற்றார்.

    • அகஸ்தியர்புரம், ராமலிங்கபுரம் உள்ளிட்ட இடங்களில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் அ.தி.மு.க. நகர செயலாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    விக்கிரமசிங்கபுரத்தில் தெற்கு அகஸ்தியர்புரம், பசுக்கிடைவிளை வடக்கு தெரு, ராமலிங்கபுரம் ஆகிய இடங்களில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் புறநகர் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு அ.தி.மு.க.வினர் நாடாளுமன்ற தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி அறிவிக்கும் வேட்பாளரை வெற்றி பெற அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. நகர செயலாளர் கண்ணன், பேச்சாளர் மீனாட்சி சுந்தரம், அம்பை ஒன்றிய துணைச் செயலாளர் பிராங்கிளின், கவுன்சிலர்கள் கிறாஸ் இமாக்குலேட், அம்பை மாரிமுத்து, மணிமுத்தாறு நகரச் செயலாளர் ராமையா, நகர இணைச் செயலாளர் மரிய சாந்தா ரோஸ், சிங்கை அருண், அரிச்சந்திரன், அருண் தபசு, வக்கீல்கள் செல்வ ஆண்டணி, ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்தில் சுரேஷ் மனோகரன் கலந்து கொண்டு பாகமுக வர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
    • நாடும் நமதே, நாற்பதும் நமதே என்பதை உறுதி படுத்தும் வகையில் தேர்தல் பணிகளை செய்ய வேண்டும்.

    திசையன்விளை:

    ராதாபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பாகமுகவர்கள் ஆலோ சனை கூட்டம் திசையன் விளை வி.எஸ்.ஆர். மாலில் அமைந்துள்ள கெட்டி மேளம் மகாலில் மாவட்ட பஞ்சாயத்து மற்றும் திட்டக் குழு தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளரும், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளரு மான சுரேஷ் மனோகரன் கலந்து கொண்டு பாகமுக வர்களுக்கு ஆலோசனை களை வழங்கினார்.

    கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் பேசுகை யில், வருகிற பாராளு மன்ற தேர்தலில் தலைமை கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வதே பாகமுகவர்களின் முக்கிய நோக்கமாக கருத்தில் கொண்டு வெற்றி பெற செய்ய வேண்டும்.

    தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கி தி.மு.க. வெற்றி பெற பணி களை மேற்கோள்வதோடு நாடும் நமதே, நாற்பதும் நமதே என்பதை உறுதி படுத்தும் வகை யில் தேர்தல் பணிகளை செய்ய வேண்டும் என கூறினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்கள் நாகமணி மார்த்தாண்டம், அமைச்சியார, மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் ஜான்சன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சங்கர், மாவட்ட பொறியா ளர் அணி துணை அமைப்பா ளர் கோகுல், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், திசையன்விளை பேரூர் இளைஞரணி அமை ப்பாளர் நெல்சன், நவ்வலடி சரவணகுமார், மாவட்ட பிரதிநிதிகள் ராஜன், வேலப்பன், மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் சுப்பையா, அல்போன்ஸ், அந்தோணி, முன்னாள் ஊராட்சி செயலாளர்கள் பால்ராஜ், சொக்கலிங்கம், முன்னாள் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங் கிணைப்பாளர் எஸ்தாக் கேனிஸ்டன், செயற்குழு உறுப்பினர் ராம் கிஷோர் பாண்டியன், பொற்கிழி நடராஜன், திராவிடமணி, ஜோசப், மாவட்ட நெசவா ளர் அணி துணை அமைப் பாளர் ஞானராஜ், ஹேர்மஸ், சார்லஸ், ரமேஷ், காந்தி, முத்து, எழில் ஜோசப், புளியடி குமார், முத்து, ராஜா, சாகுல் ஹமீது, முத்தையா, வடிவேல், பாகா முகவர்கள் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே திருவேடகம் மன்னாடி மங்கலம் குருவித்துறை தாமோதரன் பட்டி இரும்பாடி கருப்பட்டி நாச்சிகுளம் ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் அந்தந்த ஊராட்சி கிராமத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கருப்பையா, மாணிக்கம், யூனியன் பெருந்தலைவர் மகாலட்சுமி, ராஜேஷ் கண்ணா மாவட்ட கவுன் சிலர் அகிலா ஜெயக்குமார், மகளிரணி மாவட்ட செய லாளர் லட்சுமி, வடக்கு ஒன்றிய செயலாளர் காளி தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய அவைத்தலைவர் முனியாண்டி வரவேற்றார்.

    திருவேடத்தில் நடந்த பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மாவட்டச் செயலாளர் ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்.

    திருவேடகம் கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மணி என்ற பெரியசாமி முள்ளிப் பள்ளம் கிராமத்தில் சேது முன்னாள் ஒன்றிய கவுன் சிலர் பாண்டியம்மாள், மன்னாடிமங்கலம் கிரா மத்தில் கிளைச் செயலாளர் ராஜபாண்டி, குருவித்துறை கிராமத்தில் மகளிரணி வனிதா உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மதுரை மேற்கு ஒன்றியத்தில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வா கிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

    அலங்காநல்லூர்

    மதுரை மேற்கு (தெற்கு) ஊராட்சி ஒன்றியம் பிள்ளையார் நத்தம் கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் 2024 நாடாளு மன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை யில் நடைபெற்றது.

    இதில் முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வா கிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

    முன்னாள் எம்.எல்.ஏக்கள் தமிழரசன், கருப்பையா, மாணிக்கம், சதன் பிரபாகரன், மாவட்ட விவசாய அணி செயலாளர் ராம்குமார், ஒன்றிய செயலாளர் காளிதாஸ், வாடிப்பட்டி பேரூர் செயலாளர் அசோக்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து சிறுவாலை, அம்பலதாடி, விட்டங்குலம் உள்ளிட்ட பல கிராமங்களில் அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது.

    • ஆலோசனை‌ கூட்டத்தில் கலெக்டர் உத்தரவு
    • திட்டங்கள் குறித்து அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும்

    ராணிப்பேட்டை:-

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிலவரங்கள் குறித்து அனைத்துத் துறை அலுவ லர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் வளர்மதி பேசியதாவது:-

    முதல்வரின் முகவரி திட்டத்தில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. மனுக்களுக்கு 40 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும்.

    மேலும், நிலுவையில் உள்ள மனுக்களுக்கு உடனடி தீர்வும், பதில் மனுக்களுக்கு நேர்மையான பதில்கள் இருப்பதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். இந்த மனுக்கள் மீது தலைமையிடத்திலிருந்து நேரடியாக மனுதாரரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. ஆகவே இதில் அனைத்து துறை அலுவலர்களும் சரியான தீர்வு மேற்கொள்ள வேண்டும்.

    தற்போது பரவி வரும் காய்ச்சல் பாதிப்பினை கட்டுப்படுத்த அனைத்து தனியார் மருத்துவ மனைகளிலும் காய்ச்சல் சிகிச்சைக்கு வரும் நோயாளி களின் விவரங்களை சேகரித்து கண்காணிக்க வேண்டும்.

    மழை பருவ காலங்களில் ஏற்படும் காய்ச்சல் பாதிப்பு குறித்த தகவல்களை உடனுக்குடன் அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.

    தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சைகள் வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டுகள் வருகின்றது. தனியார் மருத்துவமனைகள் கட்டாயம் இந்த திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு அறிவுரைகளை வழங்கிட வேண்டும்.

    உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படை வசதி திட்டப்பணிகள் நிலுவையில் இருப்பதை உடனடியாக முடிக்க வேண்டும்.

    மேலும் சிறப்பு செயலாக்க திட்டங்கள், காலை உணவு திட்டம், புதுமைப் பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து அடிக்கடி ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பரமத்திவேலூரில் உள்ள போலீஸ் நிலைய வளாகத்தில் வர்த்தக நிறுவன உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களை தடுக்கவும், திருட்டு சம்பவங்களை ஈடுபடுவோரை கண்டுபிடிக்கவும் தரமான சி.சி.டிவி கேமராவை அவசியம் பொருத்த வேண்டும்.

    நாமக்கல்:

    பரமத்திவேலூரில் நடக்கும் குற்ற சம்பவங்களை தடுக்க துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி உத்தரவின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் நடராஜ் தலைமையில் பரமத்திவேலூரில் உள்ள போலீஸ் நிலைய வளாகத்தில் வர்த்தக நிறுவன உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வர்த்தக நிறுவனங்களில் நடைபெற்று வரும் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களை தடுக்கவும், திருட்டு சம்பவங்களை ஈடுபடுவோரை கண்டுபிடிக்கவும் தரமான சி.சி.டிவி கேமராவை அவசியம் பொருத்த வேண்டும். சந்தேகப்படும் படியான நபர்களின் வருகை இருப்பின் உடனடியாக போலீஸ் நிலையத்தில் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும். அனுமதியின்றி பிளக்ஸ் பேனர்களை வைக்கக்கூடாது. வர்த்தக நிறுவனங்கள் முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை வாடிக்கையாளர்கள் நிறுத்த அனுமதிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டது. ஆலோசனைக் கூட்டத்தில் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நகைக்கடை, ஓட்டல், மளிகை கடை, ஜவுளிக்கடை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த உரிமையாளர்கள் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ×