search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collector Karthikeyan"

    • பாளை யூனியன் கொங்கந்தன்பாறை சமுதாய நல கூடத்தில் கொங்கந்தான்பாறை ஊராட்சி மற்றும் புதுக்குளம் ஊராட்சிகளுக்கு இன்று மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.
    • முகாமில் கலெக்டர் கார்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 76 பயனாளிகளுக்கு ரூ.18.87 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முகாமில் மொத்தம் 159 மனுக்கள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டது.

    நெல்லை:

    பாளை யூனியன் கொங்கந்தன்பாறை சமுதாய நல கூடத்தில் கொங்கந்தான்பாறை ஊராட்சி மற்றும் புதுக்குளம் ஊராட்சிகளுக்கு இன்று மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமில் கலெக்டர் கார்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 76 பயனாளிகளுக்கு ரூ.18.87 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முகாமில் மொத்தம் 159 மனுக்கள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டது.

    இதில் 98 மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. 61 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.

    இம்முகாமில் சுகாதாரத் துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை, மகளிர் திட்டம், ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் போன்ற பல்வேறு துறைகளின் செயல்முறை பணிகள் மற்றும் விழிப்புணர்வு கண்காட்சியினை, கலெக்டர் கார்த்திகேயன் பார்வையிட்டார்.

    தொடர்ந்து அவர் மக்களிடையே பேசுகையில், முதல்-அமைச்சர் ஏழை- எளிய மக்களுக்காக தொ டர்ந்து பல்வேறு திட்ட ங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். மக்களை தேடி அவர்களின் இருப்பிடத்திற்கு சென்று அவர்களது குறைகளை கேட்டறிந்து அதனை நிவர்த்தி செய்வதற்கு மற்றும் அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கும் ஒவ்வொரு மாதமும் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்று வருகிறது.

    இம்முகாமில் வருவாய்துறையின் சார்பில் இலவச வீட்டு மனைப்பட்டா, தனிப்பட்டா, ஆதரவற்றோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை உள்ளிட்ட 65 பயனாளிகளுக்கு ரூ.3.50 லட்சம் மதிப்பிலும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 3 பயனாளிக்கு ரூ.15,584 மதிப்பில் தேய்ப்பு பெட்டி மற்றும் விலையில்லா தையல் எந்திரமும், ரூ.14.85 லட்சம் மதிப்பில் ஒரு பயனாளிக்கு டிராக்டர் என மொத்தம் 77 பயனாளிகளுக்கு ரூ.18.87 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்க ப்பட்டுள்ளது என்றார்.

    முகாமில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சுரேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சிவகாமசுந்தரி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அனிதா, உதவி ஆணையர் (கலால்) ராமநாதன், மாவட்ட சமூக நல அலுவலர் தனலெட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் கலைச்செல்வி எபலேசன் (கொங்கந்தான்பாறை), முத்துக்குட்டி பாண்டியன் (புதுக்குளம்) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • வெற்றி விஸ்வா சென்னையை சேர்ந்த ஒரு கப்பல் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.
    • 3 மாடிகளை கொண்ட கப்பல் முழுவதும் தேடியும் வெற்றி விஸ்வா கிடைக்கவில்லை.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    பாளை டேனியல் தாமஸ் தெருவை சேர்ந்த மகாராஜா என்பவரது மனைவி மகாலட்சுமி மற்றும் அந்த பகுதி மக்கள் திரளானோர் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து முற்றுகையிட்டனர்.

    தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலக பகுதிக்குள் நுழைய முயன்றனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணிக்கு நின்ற போலீசார் கலெக்டர் அலுவலக நுழைவாயில் கதவை அடைத்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    தொடர்ந்து மகாலட்சுமி கண்ணீர் மல்க கூறியதாவது:-

    எங்களது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் தேவர்குளம். எனது கணவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். எங்களது மூத்த மகன் வெற்றி விஸ்வா. இவர் கடற்படை துறையில் இளங்கலை அறிவியல் படிப்பு முடித்துவிட்டு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த ஒரு கப்பல் நிறுவ னத்தில் பணிக்கு சேர்ந்தார்.

    கடந்த 7-ந் தேதி இரவு எனது மகன் வீடியோ கால் மூலமாக எங்களிடம் பேசி விட்டு அதிகாலை 4 மணிக்கு பணிக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றார். அதன் பின்னர் அவர் போன் எதுவும் செய்யவில்லை.

    இந்நிலையில் தனியார் கப்பல் நிறுவனத்தில் இருந்து அதிகாலை 5 மணிக்கு எங்களுக்கு செல்போனில் அழைப்பு வந்தது. அப்போது அவர்கள் பேசும்போது, உங்களது மகனை காணவில்லை. செல்போன் மற்றும் அவரது உடமைகள் மட்டும் கப்பலிலேயே உள்ளது என்று தெரிவித்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள் அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசியபோது, வெற்றியை 3 மாடிகளை கொண்ட கப்பல் முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. அவர் எங்கே சென்றார்? என்பது தெரியவில்லை. அதனால் தகவல் கிடைத்தவுடன் தொடர்பு கொள்வதாக கூறிவிட்டு அதன் பின்னர் அழைப்பை ஏற்கவில்லை.

    எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மாயமான எனது மகனை மீட்டு தர துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    • நெல்லை, தென்காசி மற்றும் தென் மாவட்ட மக்களின் முக்கியமான ஆன்மீக நிகழ்ச்சியாக ஆடி அமாவாசை இருந்து வருகிறது.
    • குடிபோதையில் வரும் நபர்கள் ரோட்டில் அவதூறான செயல்களில் ஈடுபடுவதுமாக உள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்ப தாவது:-

    உள்ளூர் விடுமுறை

    நெல்லை, தென்காசி மற்றும் தென் மாவட்ட மக்களின் முக்கியமான ஆன்மீக நிகழ்ச்சியாக ஆடி அமாவாசை இருந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசை நாளை மறுநாள் (புதன்கிழமை) வருகிறது. எனவே அந்த நாளில் தென் மாவட்ட மக்கள் வழிபாடு செய்வ தற்கும், குடும்பத்தோடு கோவிலுக்கு செல்வதற்கும் வாய்ப்பாக அன்றைய தினத்தை உள்ளூர் விடுமுறையாக அறிவிக்க வேண்டும்.

    மேலும் திருவிழா காலம் முடியும் வரை வழக்கம் போல் சொரிமுத்து அய்யனார் கோவிலில் தங்குவதற்கும், வாகனங்களில் செல்வதற்கும் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுத்த பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    சமத்துவ மக்கள்கட்சி

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் அழகேசன் தலைமையில் மகளிர் அணி செயலாளர் லட்சுமி மற்றும் நிர்வாகிகள் திரண்டு வந்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- நெல்லை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பெரும்பாலானவை பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும், பள்ளி, கல்லூரி, வழிபாட்டுத்தலங்களின் அருகிலும் செயல்பட்டு வருகிறது. இதனால் கடைகளில் மது அருந்திவிட்டு குடிபோதையில் வரும் நபர்கள் ஆபாசமாக ரோட்டில் சுற்றி திரிவதும், ஆபாச வார்த்தைகளால் பேசித் திரிவதும், அவதூறான செயல்களில் ஈடுபடுவதுமாக உள்ளனர்.

    இதனால் பொதுமக்கள், பெண்கள், மாணவ-மாணவிகள் முகம் சுளிக்கும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக டவுன் நயினார்குளம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி செல்லும் நபர்கள் சாலையில் வைத்து பொதுமக்கள் பார்வையில் படும்படி மது அருந்தி விட்டு அந்த பாட்டில்களை நயினார்குளத்தில் வீசுகின்றனர்.

    ஒரு சிலர் போதையில் அந்த பாட்டில்களை சாலையில் போட்டு உடைக்கும் சம்பவங்களும் நடைபெறுகிறது. மேலும் அவர்கள் சாலையில் நடந்து செல்பவர்களை மிரட்டுவதும், ஆபாசமாக திட்டுவது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுபோன்ற சம்பவங்கள் மேற்கொண்டு நடைபெறாமல் இருக்க பொது இடங்களில் உள்ள மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மகளிர் அணி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு இதில் கூறியிருந்தனர்.

    பாரதிய ஜனதா

    பாரதிய ஜனதா கட்சியின் நெல்லை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் கொடுத்த மனுவில்,நெல்லை அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி செயல்பட்டு வருகிறது. இதன் தொலைபேசி எண் 0462-2576878 ஆகும். இந்த தொலைபேசி எண்ணானது கடந்த ஒரு மாதமாக செயல்பாட்டில் இல்லை. இதனால் பொதுமக்களும், நோயாளிகளும் தொலைபேசியில் தொடர்பு கொள்ள இயலாத நிலை உள்ளது.

    எனவே உடனடியாக தொலைபேசியை செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.

    • திறந்தவெளி கிணறுக்கு போதுமான உயரத்தில் உறுதியான சுவர்கள் கட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
    • கைவிடப்பட்ட குவாரி குழிகளுக்கு உரிமையாளா்கள் உடனடியாக வேலி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் கைவிடப்பட்ட குவாரி குழிகள், திறந்தவெளி கிணறுகள் மற்றும் செயலிழந்த ஆழ்துளை கிணறுகளை கண்டறிய விரிவான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். மேலும், அவற்றின் இருப்பிடங்களின் பரிமாணங்கள் மற்றும் பிற தொடர்புடைய தகவல்களின் விரிவான பதிவை பராமரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்கள்.

    திறந்தவெளி கிணறுக்கு போதுமான உயரத்தில் உறுதியான சுவர்கள் கட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இதேபோல், செயலிழந்த ஆழ்துளை கிணறுகள் குறிப்பாக குழந்தைகளுக்கு ஆபத்தை விளை விக்கக்கூடிய கிணறுகள் உடனடியாக மூடப்பட வேண்டும். கைவிடப்பட்ட குவாரி குழிகளுக்கு சம்பந்தப்பட்ட உரிமையாளா்கள் உடனடியாக வேலி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அருகில் யாரும் செல்ல வேண்டாம், ஆபத்தான பகுதி என்ற எச்சரிக்கை பலகைகளை வைக்க வேண்டும். மேலும், சாலையோரங்களில் உள்ள கால்வாய்களில், சாலை பயன்பாட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, சாலை யோரங்களில் கட்டுமான பணிக்காக

    தோண்டப்படும் பள்ளங்கள் மற்றும் கால்வாய்களின் இருப்பை அறிவுறுத்தும் பொருட்டு டிரைவர்களுக்கு தெளிவாக தெரியும் வகையில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட வேண்டும். இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பணிகளை விரைந்து செய்ய வேண்டும். மேலும் பொதுமக்கள் இதுகுறித்த தகவல்களை அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • இந்திய விமானப்படையில் ஆட்சேர்ப்பிற்கான அக்னிவீர் வாயு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 17-ந் தேதி ஆகும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    2023-ம் ஆண்டிற்கு இந்திய விமானப்படையில் ஆட்சேர்ப்பிற்கான அக்னிவீர் வாயு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு 18 முதல் 21 வயது வரையுள்ள திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 27.06.2003 மற்றும் 27.12.2006 ஆகிய தேதிகளுக்குள் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.

    கல்வித்தகுதியாக பிளஸ்-2 வகுப்பில் (இயற்பியல், கணிதம் மற்றும் ஆங்கிலம்) குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அல்லது 3 ஆண்டு டிப்ளோமா பொறியியல் (மெக்கானிக்கல், எலக்ட்ரி க்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோ மொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரு மென்டேஷன் டெக்னாலஜி, இன்பர்மேஷன் டெக்னாலஜி) படிப்பு படித்திருக்க வேண்டும். அல்லது 2 வருட தொழிற்கல்வி கணிதம் மற்றும் அறிவியல் பாடத்துடன் 50 சதவீத மதிப்பெண்ணுடன் படித்திருக்க வேண்டும்.

    விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 17-ந் தேதி ஆகும். இந்த ஆட்சேர்ப்பு 3 கட்டங்களாக நடை பெறவிருக்கிறது. முதலாவதாக எழுத்து தேர்வு 13.10.2023 அன்று நடைபெறுகிறது. 2-வதாக உடற்தகுதி தேர்வும், 3-வதாக மருத்துவ பரிசோதனையும் நடைபெறும்.

    இத்தேர்வு குறித்த கூடுதல் தகவல்களை https://agnipathvayu.cdac.in என்ற இணைய தளத்தில் அறியலாம். இந்திய விமானப்படையில் இணைந்து பணியாற்ற விரும்பும் மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வேளாண், குடிநீர் தேவைக்கு வினாடிக்கு 750 கன அடி பயன்படுத்தினால் 10 முதல் 15 நாட்களுக்கு மட்டுமே நீரை பயன்படுத்த இயலும்.
    • ஒரு சில இடங்களில் விஷமிகள் தவறான நோக்கத்துடன் தேவையற்ற வதந்திகளை பரப்பி வருவதாக தெரிகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    நெல்லை மாவட்டத்தில் மழை பற்றாக்குறை காரணமாகவும், தாமிரபரணி குடிநீரையே நம்பி உள்ள 3 மாவட்ட மக்களின் நலன் காக்கும் விதமாகவும் பாபநாசம் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு நீர்வரத்தை பொறுத்து மட்டும் திறந்து விடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மணிமுத்தாறு அணையிலும் போதிய நீர் இல்லாத நிலையில் தற்போது உள்ள நீரை குடிநீர் தேவைக்கு மட்டும் ஒரு நாளைக்கு 300 முதல் 350 கன அடி பயன்படுத்தினால் 40 முதல் 45 நாட்கள் வரை பயன்படுத்தலாம். வேளாண் மற்றும் குடிநீர் தேவை ஆகிய 2-க்கும் வினாடிக்கு 750 கன அடி பயன்படுத்தி னால் 10 முதல் 15 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த இயலும்.

    இது தொடர்பாக நீர்வளத்துறையால் விவசாயிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களின் ஒத்துழைப்பும் கோரப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஒரு சில இடங்களில் விஷமிகள் தவறான நோக்கத்துடன் தேவையற்ற வதந்திகளை பரப்பி வருவதாக தெரிகிறது. அதுபோன்ற அவ தூறான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    குடிநீர் தேவைக்காக மக்கள் நலன் கருதி எடுக்கப்படும் இந்த நடவடிக்கைகளின் அவசியத்தை அனைவரும் உணர்ந்து ஒத்துழைக்க வேண்டும். இதுகுறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • எம்.இ.ஜி.பி. என்ற திட்டத்தினை உருவாக்கி செயல்படுத்தும் விதமாக ரூ. 5 கோடியே 97 லட்சத்து 35 ஆயிரத்தை ஒதுக்கி இத்திட்டத்தை மாவட்ட தொழில்மையம், அயலகத்தமிழர் நல ஆணை யரகத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுத்திட நடவடிக்கை எடுத்திட ஆணையிடப்பட்டு உள்ளது.
    • நெல்லை மாவட்டத்தில் விண்ணப்பிப்போர் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அலுவலகத்தில் கடவுச்சீட்டு, விசா நகல், கல்விச்சான்று, இருப்பிடச்சான்று, சாதிச் சான்று, மாற்றுத்திறனாளி களுக்கான சான்று மற்றும் திட்ட விபரங்களுடன் சமாப்பித்து பயன்பெறலாம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா காரணமாக வெளிநாட்டில் வேலை இழந்து தமிழகம் திரும்பிய தமிழர்களில் தொழில் தொடங்கிட ஆர்வம் உள்ளவர்களை ஊக்குவிப்ப தற்காக அவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் குறு தொழில்கள் செய்திட அதிக பட்சமாக ரூ. 2½ லட்சம் மானியத்துடன் கூடிய கடன் வசதி செய்து தரப்படும் எனவும் இததற்காக ரூ. 6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    அதனை தொடர்ந்து எம்.இ.ஜி.பி. என்ற திட்டத்தினை உருவாக்கி செயல்படுத்தும் விதமாக ரூ. 5 கோடியே 97 லட்சத்து 35 ஆயிரத்தை ஒதுக்கி இத்திட்டத்தை மாவட்ட தொழில்மையம், அயலகத்தமிழர் நல ஆணை யரகத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுத்திட நடவடிக்கை எடுத்திட ஆணையிடப்பட்டு உள்ளது.

    இத்திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வோரின் வயது, பொது பிரிவினருக்கு 18 முதல் 45-க்குள்ளும், பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர, மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது 18 முதல் 55-க்குள்ளும் இருக்க வேண்டும்.

    மேலும் கல்வி தகுதியாக குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சியோடு வேலை வாய்ப்பு விசாவுடன் 2 ஆண்டுகளுக்கு குறையாமல் வெளிநாட்டில் வேலை பார்த்து 1-1-2020 அல்லது அதற்கு பிறகு வெளிநாட்டில் இருந்து தமிழகம் திரும்பியவராக இருத்தல் வேண்டும்.

    உற்பத்தி துறையை பொருத்தமட்டில் அதிகப்பட்ச திட்டச் செலவு ரூ. 15 லட்சத்திற்குள்ளும், சேவை மற்றும் வணிகத்துறை பொறுத்தமட்டில் அதிகபட்ச திட்டச் செலவு ரூ. 5 லட்சத்திற்கு ள்ளும் இருத்தல் வேண்டும்.

    தொழில் முனைவோரின் முதலீடு பொதுப்பிரிவினருக்கு திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதம், சிறப்பு பிரிவினருக்கு திட்ட மதிப்பீட்டில் 5 சதவீதம் இருத்தல் வேண்டும். அரசின் மானியத்தொகையாக திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம், அதிகபட்சமாக ரூ. 25 லட்சம் வரை வழங்கப்படும்.

    இந்த திட்டத்திற்கு நெல்லை மாவட்டத்தில் விண்ணப்பிப்போர் நெல்லை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அலுவலகத்தில் கடவுச்சீட்டு, விசா நகல், கல்விச்சான்று, இருப்பிடச்சான்று, சாதிச் சான்று, மாற்றுத்திறனாளி களுக்கான சான்று மற்றும் திட்ட விபரங்களுடன் சமாப்பித்து பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு நெல்லை மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை அலுவலக நாட்களில் சந்தித்து விபரம் அறியலாம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • மழைக்காலங்களில் தெரு முழுவதும் சகதி காடாக காட்சியளிக்கிறது.
    • நயினார்குளம் சாலையில் ஓடையை எடுத்துவிட்டு சிறிய அளவிலான பாலம் அமைக்க வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயனிடம் இன்று டவுன் மண்டல சேர்மன் மகேஸ்வரி தலைமையில் கவுன்சிலர்கள் கிட்டு என்ற ராமகிருஷ்ணன், உலகநாதன், ரவீந்தர் ஆகியோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை டவுன் சத்தியமூர்த்தி தெரு, தெப்பக்குளம் கீழத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்வதற்காக ஓடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் கழிவுநீர் சீராக செல்வதில்லை.

    மழைக்காலங்களில் தெப்பக்குளம் கீழ தெருவில் கழிவு நீர் ஓடைகளிலிருந்து தண்ணீர் வெளியே வந்து அந்த தெரு முழுவதும் சகதி காடாக காட்சியளிக்கிறது.இந்த நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.

    எனவே இதற்கு நிரந்தர தீர்வு காணும் விதமாக நயினார்குளம் சாலையில் பெட்ரோல் பங்க் அருகே உள்ள ஓடையை எடுத்துவிட்டு சிறிய அளவிலான பாலம் அமைக்க வேண்டும். அப்போதுதான் மழைக்காலங்களிலும் எவ்வித தடையும் இன்றி தண்ணீர் செல்லும். எனவே அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு கூறியிருந்தனர்.

    • முகாமில் புதிதாக குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கலாம்.
    • விண்ணப்பிக்க செல்லும் போது தேவையான ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களில் பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. முகாமில் புதிதாக குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கலாம். மேலும் குடும்ப அட்டையில் செல்போன் எண் பதிவு செய்தல், மாற்றம் செய்யலாம். இவற்றுக்கு தேவையான ஆதார் கார்டு மற்றும் குடியிருப்பு முகவரிக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் பிறப்பு-இறப்பு சான்றிதழில் தேவையானவற்றை கொண்டு செல்ல வேண்டும்.

    இதுதவிர ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்து புகார் அளிக்கலாம். தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்தும் புகார் அளிக்கலாம்.

    பொது வினியோக திட்ட செயல்பாடுகள் குறித்த புகார்களுக்கு 9342471314 என்ற நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக பொது வினியோக திட்ட கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    இந்த தகவலை நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்து உள்ளார்.

    • மதுக்கடையால் மாணவ-மாணவிகள் மட்டுமின்றி பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது.
    • பொது கழிப்பறை இல்லாததால் பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் இன்று நடை பெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர். அம்பை தாலுகா ராமலிங்கபுரம் பகுதி பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மதுக்கடை

    வி.கே.புரம் நகராட்சி மெயின்சாலையில் ஒரு அரசு மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை அமைந்துள்ள பகுதியை சுற்றிலும் பல்வேறு தெருக்களில் 600 வீடுகளில் சுமார் 3 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் செயல்பட்டு வரும் மேல்நிலைப் பள்ளியில் 1500 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த மதுக்கடையால் மாணவ-மாணவிகள் மட்டுமின்றி பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே மதுக்கடையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    புதுக்குளம் ஊராட்சி சீனிவாசா அவின்யூ பகுதியை சேர்ந்த பொது மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதிக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கூறியிருந்தனர்.

    பாளையங்கால்வாய்

    திராவிட தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் திருக்குமரன் தலைமையில் வன்னிக்கோனேந்தல் அருகே உள்ள மேசியாபுரத்தை சேர்ந்த மதுரைவீரன் மற்றும் சிலர் கண்ணில் கருப்புதுணி கட்டி வந்து கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் 75 குடும்பத்தினர் வசித்து வருகின்றோம். ஆனால் எங்கள் பகுதிக்கு பொது கழிப்பறை இல்லாததால் பொது மக்கள் அவதி யடைந்து வருகின்றனர். எங்கள் கோரிக்கையை ஏற்று கழிப்பிடம் கட்டுவதற்கு பணிகள் தொடங்கிய நிலையில் சிலர் அதனை தடுத்து வருகின்றனர். எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து பணிகளை தொடங்க வேண்டும் என கூறியிருந்தனர்.

    சமூகஆர்வலர் சிராஜ் தலைமையில் கொடுத்த மனுவில், பாளையங் கால்வாயில் சாக்கடை கலக்காமலும், ஆக்கிரமிப்பு நடை பெறாமலும் தடுத்து தூய்மையான தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

    கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகேயன் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் எடை குறைந்த 5 குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட்டுகளை வழங்கினார்.

    • நிகழ்ச்சியானது நாளை மறுநாள் வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது.
    • போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்கள் போன்றவை நிகழ்ச்சியில் விளக்கமாக எடுத்துரைக்கப்பட உள்ளது

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ்-2 வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தொடர்ந்து உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாநிலத்தில் உள்ள அனைத்து வருவாய் கோட்டங்களிலும் "உயர்வுக்கு படி" என்னும் தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

    நெல்லை மாவட்டத்தில் இந்நிகழ்ச்சியானது நாளை மறுநாள்(செவ்வாய்க் கிழமை) வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியிலும், அடுத்த மாதம் 4-ந்தேதி சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரியிலும் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த வழிகாட்டல், உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் உள்ள படிப்புகள், சேர்க்கை மற்றும் தேர்வு கட்டணம், உயர்கல்வியில் சேருவதற்கு வங்கிகளால் வழங்கப்படும் கல்விக் கடன்கள், அதற்கு தேவையான ஆவணங்கள், படிப்பு முடித்த பின்னர் அரசு பணியில் சேருவத ற்கான போட்டித் தேர்வு களும், அதனை அணுகும் முறை மற்றும் அரசால் நடத்தப்படும் போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்கள் போன்றவை விளக்கமாக எடுத்துரைக்கப்பட உள்ளது.

    மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் வழங்கப்படும் குறுகிய கால திறன் பயிற்சி, கல்லூரி கனவு சிற்றேடுகள் சமூக நலத்துறையால் செயல்படுத்தப்படும் சமூக நலப் பாதுகாப்புத் திட்ட ங்கள், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் பழங்குடி யினர் நலத்துறையால் செயல்படுத்தப்படும் உதவித்தொகை திட்டங்கள், இட ஒதுக்கீடு, மாணவர்க ளுக்கான இலவச விடுதி வசதிகள் போன்ற தகவல் களும், ஆலோ சனைகளும் வழங்கப்பட உள்ளது. மாண வர்களும், பெற்றோர்களும் இதில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • ஊரக பகுதிகளுக்கான உறுப்பினர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    • நகர்புற உள்ளாட்சி உறுப்பினர்கள் 394 பேர் வாக்காளர்களாக தகுதி பெற்றுள்ளனர்.

    நெல்லை:

    இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 243 இசட் டி-ன் கீழ் மாவட்டத் திட்டக்குழு செயல்பட்டு வருகிறது. இந்தக் குழுவின் துணை தலைவராக மாவட்ட கலெக்டர் இருப்பார். இவருக்கு உதவிட உதவி திட்ட இயக்குநர்களும் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்களும் இருப்பர்.

    உறுப்பினர் தேர்தல்

    மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சிகள், பேரூராட்சி கள் மற்றும் நகராட்சிகளின் குடிநீர், வடிகால் வசதிகள் போன்ற உட்கட்டமைப்பு வளர்ச்சி களுக்கு, இம்மாவட்டத் திட்டக் குழு திட்டங்களை வகுத்து மாநில அரசிற்கு வழங்கும். இந்தத் திட்ட குழு உறுப்பின ர்களு க்கான தேர்தல் நெல்லை மாவட்ட த்தில் அறிவிக்க ப்பட்டு இன்று நடைபெற்றது.

    ஊரக பகுதிகளுக்கான உறுப்பினர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் நகர்புற பகுதிகளுக்கான உறுப்பினர்கள் 10 பேரை தேர்வு செய்து வருவதற்காக தேர்தல் இன்று நடை பெற்றது. 10 உறுப்பினர்களை தேர்வு செய்ய 23 வேட்பா ளர்கள் களத்தில் உள்ளனர்.

    முகவர்கள் நியமனம்

    நகர்புற உள்ளாட்சி உறுப்பினர்கள் 394 பேர் வாக்காளர்களாக தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் 10 வாக்குகள் செலுத்தும் படி தேர்தல் நடைபெற்றது. தேர்தல் காலை 10 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வேட்பாளர்கள் ஒவ்வொரு வருக்கும் முகவர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னி லையில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சிமன்ற கூட்ட அரங்கில் நடைபெறும் இந்த தேர்தலின் காரணமாக மாவட்ட கலெக்டர் அலு வலக வளாகம் முழு வதும் போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

    கலெக்டர் ஆய்வு

    தேர்தலை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் அனைத்து நபர்களும் தீவிரமாக சோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். வேட்பாளர்கள் முகவர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு தனித்தனி அடையாள அட்டைகளும் தேர்தல் நடத்தும் அலுவலரால் வினி யோகம் செய்யப்பட்டுள்ளது.

    மாலை 3 மணி வரை நடைபெறும் தேர்தல் காரண மாக வாக்காளர்களிடம் வாக்குகள் சேகரிக்கும் பணியில் வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த தேர்தல் வாக்குப்பதிவை நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் மைதீன்கான், கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது முன்னாள் எம்.எல்.ஏ மாலை ராஜா, துணை மேயர் கே.ஆர். ராஜூ, தச்சை மண்டல முன்னாள் சேர்ம னும், 3-வது வார்டு கவுன்சி லருமான தச்சை சுப்பிர மணியன், கிழக்கு மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் செல்வ சூடா மணி மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    ×