search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வி.கே.புரம் மெயின் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
    X

    கலெக்டர் கார்த்திகேயன், எடை குறைந்த குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட்டுகளை வழங்கிய காட்சி.

    வி.கே.புரம் மெயின் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

    • மதுக்கடையால் மாணவ-மாணவிகள் மட்டுமின்றி பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது.
    • பொது கழிப்பறை இல்லாததால் பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் இன்று நடை பெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர். அம்பை தாலுகா ராமலிங்கபுரம் பகுதி பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மதுக்கடை

    வி.கே.புரம் நகராட்சி மெயின்சாலையில் ஒரு அரசு மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை அமைந்துள்ள பகுதியை சுற்றிலும் பல்வேறு தெருக்களில் 600 வீடுகளில் சுமார் 3 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் செயல்பட்டு வரும் மேல்நிலைப் பள்ளியில் 1500 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த மதுக்கடையால் மாணவ-மாணவிகள் மட்டுமின்றி பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே மதுக்கடையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    புதுக்குளம் ஊராட்சி சீனிவாசா அவின்யூ பகுதியை சேர்ந்த பொது மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதிக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கூறியிருந்தனர்.

    பாளையங்கால்வாய்

    திராவிட தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் திருக்குமரன் தலைமையில் வன்னிக்கோனேந்தல் அருகே உள்ள மேசியாபுரத்தை சேர்ந்த மதுரைவீரன் மற்றும் சிலர் கண்ணில் கருப்புதுணி கட்டி வந்து கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் 75 குடும்பத்தினர் வசித்து வருகின்றோம். ஆனால் எங்கள் பகுதிக்கு பொது கழிப்பறை இல்லாததால் பொது மக்கள் அவதி யடைந்து வருகின்றனர். எங்கள் கோரிக்கையை ஏற்று கழிப்பிடம் கட்டுவதற்கு பணிகள் தொடங்கிய நிலையில் சிலர் அதனை தடுத்து வருகின்றனர். எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து பணிகளை தொடங்க வேண்டும் என கூறியிருந்தனர்.

    சமூகஆர்வலர் சிராஜ் தலைமையில் கொடுத்த மனுவில், பாளையங் கால்வாயில் சாக்கடை கலக்காமலும், ஆக்கிரமிப்பு நடை பெறாமலும் தடுத்து தூய்மையான தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

    கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகேயன் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் எடை குறைந்த 5 குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட்டுகளை வழங்கினார்.

    Next Story
    ×