search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொங்கந்தன்பாறை ஊராட்சியில்  ரூ.18.87 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர்  வழங்கினார்
    X

    கொங்கந்தன்பாறை ஊராட்சிக்குட்பட்ட அங்கன்வாடி வளாகத்தில் கலெக்டர் கார்த்திகேயன் மரக்கன்று நட்ட ேபாது எடுத்த படம்.

    கொங்கந்தன்பாறை ஊராட்சியில் ரூ.18.87 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் வழங்கினார்

    • பாளை யூனியன் கொங்கந்தன்பாறை சமுதாய நல கூடத்தில் கொங்கந்தான்பாறை ஊராட்சி மற்றும் புதுக்குளம் ஊராட்சிகளுக்கு இன்று மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.
    • முகாமில் கலெக்டர் கார்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 76 பயனாளிகளுக்கு ரூ.18.87 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முகாமில் மொத்தம் 159 மனுக்கள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டது.

    நெல்லை:

    பாளை யூனியன் கொங்கந்தன்பாறை சமுதாய நல கூடத்தில் கொங்கந்தான்பாறை ஊராட்சி மற்றும் புதுக்குளம் ஊராட்சிகளுக்கு இன்று மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமில் கலெக்டர் கார்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 76 பயனாளிகளுக்கு ரூ.18.87 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முகாமில் மொத்தம் 159 மனுக்கள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டது.

    இதில் 98 மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. 61 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.

    இம்முகாமில் சுகாதாரத் துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை, மகளிர் திட்டம், ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் போன்ற பல்வேறு துறைகளின் செயல்முறை பணிகள் மற்றும் விழிப்புணர்வு கண்காட்சியினை, கலெக்டர் கார்த்திகேயன் பார்வையிட்டார்.

    தொடர்ந்து அவர் மக்களிடையே பேசுகையில், முதல்-அமைச்சர் ஏழை- எளிய மக்களுக்காக தொ டர்ந்து பல்வேறு திட்ட ங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். மக்களை தேடி அவர்களின் இருப்பிடத்திற்கு சென்று அவர்களது குறைகளை கேட்டறிந்து அதனை நிவர்த்தி செய்வதற்கு மற்றும் அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கும் ஒவ்வொரு மாதமும் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்று வருகிறது.

    இம்முகாமில் வருவாய்துறையின் சார்பில் இலவச வீட்டு மனைப்பட்டா, தனிப்பட்டா, ஆதரவற்றோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை உள்ளிட்ட 65 பயனாளிகளுக்கு ரூ.3.50 லட்சம் மதிப்பிலும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 3 பயனாளிக்கு ரூ.15,584 மதிப்பில் தேய்ப்பு பெட்டி மற்றும் விலையில்லா தையல் எந்திரமும், ரூ.14.85 லட்சம் மதிப்பில் ஒரு பயனாளிக்கு டிராக்டர் என மொத்தம் 77 பயனாளிகளுக்கு ரூ.18.87 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்க ப்பட்டுள்ளது என்றார்.

    முகாமில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சுரேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சிவகாமசுந்தரி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அனிதா, உதவி ஆணையர் (கலால்) ராமநாதன், மாவட்ட சமூக நல அலுவலர் தனலெட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் கலைச்செல்வி எபலேசன் (கொங்கந்தான்பாறை), முத்துக்குட்டி பாண்டியன் (புதுக்குளம்) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×