search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chandrasekhar rao"

    தெலுங்கானா முதல் மந்திரியுடனான முக ஸ்டாலின் சந்திப்பு மரியாதை நிமித்தமானது என தி.மு.க. தலைமை தெரிவித்து உள்ளது.
    சென்னை

    தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்துள்ளார்.  அவர் திருச்சியில் தான் தங்கியிருந்த அறையிலிருந்து கிளம்பி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வந்தார்.

    கோபுர வாயிலில் அறநிலையத்துறை சார்பில் மாலை அணிவித்து அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பேட்டரி கார் மூலம் கோவிலுக்குள் சென்ற அவர், அதன் பின்னர் சிறிது தூரம் நடந்து சென்று, சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்ரீரங்கம் வரவேண்டும் என்ற தனது நெடுநாள் கனவு நிறைவேறியதாக தெரிவித்தார்.

    இதன்பின்னர் சென்னை ஆழ்வார்பேட்டை வீட்டில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை, தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் சந்தித்தார். சந்திப்பின் போது துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.


    இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரமாக நடைபெற்றது. தெலுங்கானா முதல் மந்திரியுடனான ஸ்டாலின் சந்திப்பு மரியாதை நிமித்தமானது என தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
    தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் இன்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
    ஸ்ரீரங்கம்:

    தெலுங்கானா முதல்- மந்திரி சந்திரசேகர ராவ் நேற்றிரவு தனி விமானம் மூலம் திருச்சி வந்தார். பின்னர் அவர் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் திருச்சி சங்கம் ஓட்டலுக்கு சென்றார்.

    இரவு அங்கு தங்கி ஓய்வு எடுத்த அவர், இன்று காலை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர் அவர் மூலவர் சன்னதி, தாயார் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு சென்று வழிபட்டார். அங்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பட்டாச்சாரியார்கள் சந்திரசேகர ராவ்க்கு பிரசாதம் வழங்கினர்.

    இதையடுத்து அவர் பேட்டரி கார் மூலம், கோவில் உள்பிரகாரம், வெளிப்பிரகாரம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார். அவருடன் கோவில் நிர்வாக அதிகாரிகள் சென்றனர்.

    பேட்டரி காரில் சந்திரசேகரராவ் ஸ்ரீரங்கம் கோவிலை வலம் வந்த காட்சி.

    சுவாமி தரிசனம் முடிந்ததும் கோவிலில் இருந்து வெளியே வந்த அவர், கார் மூலம் திருச்சி விமான நிலையம் சென்றார். அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார். இன்று மாலை அவர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார்.

    சந்திரசேகரராவ் வருகையையொட்டி ஸ்ரீரங்கம் கோவில், அவர் தங்கியிருந்த சங்கம் ஓட்டல், விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தெலுங்கானா போலீசாரும் பாதுகாப்புக்காக வந்திருந்தனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரம் கோவிலில் சந்திரசேகர ராவ் சாமி தரிசனம் செய்தார். பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ள நிலையில் அவர் கோவில்களில் சாமி தரிசனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
    தெலுங்கானாவில் சந்திரசேகரராவ் ஒவ்வொரு தொகுதி சீட்டையும் தலா ரூ.100 கோடிக்கு விற்பனை செய்துள்ளார் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. #congress #chandrasekharrao #parliamentelection

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஸ்ரவன் தசோஜு ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும் போது கூறியதாவது:-

    தெலுங்கானா மக்களை சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியினர் மிக திறமையாக ஏமாற்றுகிறார்கள். மது மற்றும் பிரியாணி வாங்கி கொடுத்து தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வைக்கிறார்கள்.

    சில இடங்களில் வாக்காளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வரை கொடுக்கிறார்கள். இதையெல்லாம் வாங்கி கொண்டு மக்கள் ஏமாறும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இனியாவது மக்கள் ஏமாறக்கூடாது.

    தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியில் இருப்பவர்கள் நல்லவர்கள் அல்ல. அந்த கட்சியின் வேட்பாளர்கள் வங்கிகளை ஏமாற்றி பணம் வாங்கி இருக்கிறார்கள். சில வேட்பாளர்கள் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளனர்.


    இவர்கள் சந்திரசேகரராவிடம் பணம் கொடுத்து தேர்தலில் போட்டியிட சீட் வாங்கி இருக்கிறார்கள். ஒவ்வொரு தொகுதி சீட்டையும் சந்திரசேகரராவ் தலா ரூ.100 கோடிக்கு விற்பனை செய்துள்ளார்.

    இப்படி கோடி கணக்கில் கொட்டி கொடுத்து தேர்தலில் சீட் வாங்கி இருப்பவர்கள் அந்த பணத்தை வட்டியோடு திருப்பி எடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த சமயத்தில் உங்களிடம் இருந்து பணம் பறிக்கப்படும் என்பதை மறந்து விடாதீர்கள்.

    காங்கிரஸ் கட்சி மட்டுமே மாதந்தோறும் ரூ. 6 ஆயிரம் தர உள்ளது. இதை நினைவில் கொண்டு தேர்தலில் வாக்களிக்கியுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சந்திரபாபு நாயுடுவுக்கு மனநிலை சரியில்லை என்று தெலுங்கானா முதல்- மந்திரி சந்திரசேகர ராவ் கூறியுள்ளார். #ChandrababuNaidu #ChandrasekharRao

    நகரி:

    தெலுங்கானா முதல்- மந்திரி சந்திரசேகர ராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தெலுங்குதேசம் கட்சி ஆங்கிலேயர்களை எதிர்த்து சுதந்திரத்துக்காக போராடிய கட்சி என சந்திரபாபு நாயுடு பேசியுள்ளார். தெலுங்கு தேசம் கட்சியை என்.டி.ராமா ராவ் நிறுவியது எப்போது? ஆங்கிலேயர்களை எதிர்த்து சுதந்திர போராட்டம் நடத்தியது எப்போது? சந்திரபாபு நாயுடுவிற்கு தோல்வி பயத்தில் என்ன பேசுகிறோம் என்கிற உணர்வே இல்லை.

    மோடியுடன் கைகோர்த்து கடந்த தேர்தலில் போட்டியிட்டு அமைச்சரவையிலும் பங்கேற்று நான்கு ஆண்டுகள் மோடியை இந்த உலகிலேயே இப்படிப்பட்ட தலைசிறந்த பிரதமர் இல்லை என சட்டமன்றத்திலேயே பாராட்டி பேசினார்.

    இப்போது மோதல் வந்ததும் மோடி ஆந்திராவிற்கு துரோகம் செய்து விட்டார். அவர் அரசியலில் என்னைவிட ஜூனியர். அவருக்கு முன் ஏழு ஆண்டுகளுக்கு முன்னரே நான் ஆந்திர முதல்வராகிவிட்டேன் என்றெல்லாம் பேசி வருகிறார். அதுமட்டுமின்றி மோடியுடன் எனக்கு மறைமுக தொடர்பு இருப்பதாக கூறிவருகிறார்.

    நான் எதுவாக இருந்தாலும் நேரில் மனதில் பட்டதை தைரியமாக சொல்பவன். இவரை போல மாமனாரின் முதுகில் குத்தி அவரது ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்றவில்லை. சுயமாக கட்சி தொடங்கி தனிமாநில கோரிக்கையை முன் வைத்து சாவின் விளிம்புவரை சென்று தனித் தெலுங்கானா சாதித்தேன். 400 ஆண்டுகளுக்கு முன்னரே நிஜாம் மன்னர்கள் உருவாக்கிய ஐதராபாத் நகரத்தை தான் கட்டினேன் என்கிறார். அவருக்கு மனநிலை சரியில்லை. ஒரு ஐடெக்கட்டிடத்தை கட்டினால் நகரத்தையே கட்டியதுபோல் ஆகிவிடுமா?

    நாங்கள் தனித்து நின்று இருமுறை ஆட்சியை பிடித்துள்ளோம். என்.டி.ராமராவிடம் இருந்து கட்சியை கைப்பற்றிய பிறகு சந்திரபாபு நாயுடு எந்த ஒரு தேர்தலையாவது கூட்டணி கட்சிகளின் உதவியின்றி சந்தித்ததுண்டா?

    ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்று இவர் சொன்னால் மக்கள் தலையிட வேண்டும். மீறி போராடியவர்களை இவர் சிறையில் அடைத்தார். இப்போது மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என இவர் போராடுவாராம். மக்கள் இவர் பின்னால் வர வேண்டுமாம். ஆந்திராவில் இவர் கட்சியினரின் ஊழல் அம்பலமாகிவிட்டது. மக்கள் இவரை வீட்டிற்கு அனுப்ப முடிவு செய்து விட்டனர்.

    இனி தன்னை மக்கள் நம்பமாட்டார்கள் என்பதை புரிந்துகொண்டு நாங்கள் ஜெகன்மோகன் ரெட்டியை வெற்றிபெறச் செய்ய உதவுவதாக எங்கள் மீதும் குற்றம் சுமத்தி வருகிறார். பா.ஜனதா, காங்கிரஸ் அல்லாத கூட்டணி அமைக்க மட்டுமே ஜெகன்மோகன் ரெட்டியை எனது மகன் சந்தித்து பேசினார். இன்னும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளது.

    ஆந்திர மாநிலத்துக்கு யார் சிறப்பு அந்தஸ்து வழங்கினாலும் அவர்களுக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாக ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார்.

    ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதை நாங்களும் ஆதரிக்கிறோம். தெலுங்கு மாநிலங்கள் இரண்டான போதிலும் தெலுங்கு மக்களாக சேர்ந்தே இருக்க வேண்டும் என்பதே எங்களின் கருத்து.

    இவ்வாறு அவர் கூறினார். #ChandrababuNaidu #ChandrasekharRao

    திருமயம் அருகே சாலை விபத்தில் பலியான அய்யப்ப பக்தர்களின் குடும்பத்துக்கு தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். #PudukkottaiAccident #ChandrasekharRao #Pilgrims
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் சபரிமலையில் வழிபாட்டை முடித்து விட்டு ராமேசுவரம் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பும்போது, புதுக்கோட்டையை அடுத்த திருமயம் அருகே அவர்கள் சென்ற வேன் விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர்.



    இந்த விபத்தில் உயிர்ப்பலி ஏற்பட்டதை அறிந்ததும் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தார். விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தனது இரங்கலை தெரிவித்த அவர் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகளை தெரிவித்தார்.



    மேலும் காயம் அடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். #PudukkottaiAccident #ChandrasekharRao #Pilgrims
    காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் முட்டாள்கள் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #ChandrasekharRao

    ஐதராபாத்:

    தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பஞ்சாயத்துராஜ் தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு குறைந்தபட்சம் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு பற்றி முட்டாள்கள் போன்று பேசி வருகிறார்கள்.

    எனது அரசு பஞ்சாயத்து தேர்தலில் 61.13 சதவீத இட ஒதுக்கீடு அளித்த புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது. ஆனால் அதற்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் ஸ்வப்னாரெட்டி, கோபால் ரெட்டி ஐகோர்ட்டை நாடினர்.

    இட ஒதுக்கீடுக்கு ஐகோர்ட்டு தடை விதித்ததால் சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளோம். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படிதான் அவசர சட்டம் கொண்டு வந்துள்ளோம்.

    ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஜனவரி 10-ந்தேதி பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்படும். இதர பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு பற்றி நன்கு தெரியாமல் காங்கிரஸ் தலைவர்கள் பேசுவதை ஆராய்ந்தால் முட்டாள் தனமாக இருக்கும்.

    அவர்கள் முட்டாள் தனத்தை வெளிக்காட்டுவதால் காங்கிரஸ் தலைவர்கள் முட்டாள்கள் என்று கூறுகிறோம்.

    சந்திரபாபுநாயுடு இந்தியாவிலேயே மோசமான அரசியல்வாதி. அவர் அரசியல் மேனேஜர். தலைவர்அல்ல. எனது கட்சி எப்போதுமே ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க ஆதரவு தெரிவிக்கும்.

    ஆனால் இந்த விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு தனது நிலைப்பாட்டை அரசியல் காரணங்களுக்காக மாற்றி வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார். #ChandrasekharRao

    பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கூட்டணிகளுக்கு மாற்றாக 3-வது அணி அமைப்பதில் தீவிரமாக இருக்கும் சந்திரசேகர ராவ், வருகிற 26-ந் தேதி முதல் டெல்லியில் முகாமிட்டு முக்கிய தலைவர்களை சந்தித்து பேச திட்டமிட்டு உள்ளார். #ChandrasekharRao
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வருவதையொட்டி அரசியல் கட்சிகள் முன்னேற்பாடு பணிகளில் இறங்கி உள்ளன. சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றிமுகம் காட்டிய காங்கிரஸ், அதே வேகத்தோடு பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகிறது. 5 மாநில தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் மீதும், ராகுல்காந்தி மீதும் எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையில் ஓர் அணியும், காங்கிரஸ் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடும் நிலை உள்ளது.

    இதற்கிடையே, பா.ஜனதா அணியிலும், காங்கிரஸ் அணியிலும் சேராமல், மாநில கட்சிகள் ஒருங்கிணைந்து 3-வது அணி ஒன்றை அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவரும், தெலுங்கானா முதல்-மந்திரியுமான சந்திரசேகர ராவ் யோசனை தெரிவித்தார்.

    இது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியையும் சந்தித்தார்.

    தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்ட போதிலும், 3-வது அணி அமைக்கும் முயற்சியில் சந்திரசேகர ராவ் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது. பிராந்திய கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் மாநிலங்களில் பா.ஜனதா மற்றும் காங்கிரசுக்கு எதிராக 3-வது அணி அமைத்து போட்டியிட்டால் அந்த அணியை மக்கள் ஆதரிப்பார்கள் என்று அவர் நம்புகிறார். இதுதொடர்பாக அவர் முக்கிய கட்சிகளின் தலைவர்களை சந்திக்க இருக்கிறார்.

    இதற்காக வருகிற 26-ந் தேதி டெல்லி செல்லும் சந்திரசேகர ராவ், அங்கு 2 அல்லது 3 நாட்கள் முகாமிட்டு, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட சில தலைவர்களை சந்தித்து பேச இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. #ChandrasekharRao

    தெலுங்கானாவில் இரண்டாவது முறையாக முதல் மந்திரியாக பதவியேற்றுள்ள சந்திரசேகர ராவுக்கு பிரதமர் மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். #TelanganaElections #ChandrashekharRao #Modi
    ஐதராபாத்:

    ஆந்திராவை இரண்டாகப் பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில் முதல் மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சி அமைந்தது. தனது அரசின் பதவிக்காலம் முடிய 9 மாதங்கள் இருந்த நிலையில், சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க அவர் தயாரானார்.

    தெலுங்கானாவில் கடந்த 7-ம்தேதி நடந்த சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில்,  மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி 88 தொகுதிகளில் அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.



    இதையடுத்து, தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவரான சந்திரசேகர ராவ், இரண்டாவது முறையாக இன்று முதல் மந்திரியாக பதவியேற்றார்.  முதல் மந்திரி பதவியேற்பு நிகழ்ச்சியை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    இந்நிலையில், தெலுங்கானாவில் இரண்டாவது முறையாக முதல் மந்திரியாக பதவியேற்றுள்ள சந்திரசேகர ராவுக்கு பிரதமர் மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தெலுங்கானா முதல் மந்திரியாக பதவியேற்றுக் கொண்ட சந்திரசேகர் ராவுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். #TelanganaElections #ChandrashekharRao #Modi
    தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி பெரும்பான்மை பெற்றதையடுத்து, சந்திரசேகர ராவ் மீண்டும் முதல்வராக பதவியேற்றுள்ளார். #TelanganaElections #ChandrashekharRao
    ஐதராபாத்:

    தெலுங்கானாவில் கடந்த 7-ம் தேதி நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் ஆளுங்கட்சியான தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி 88 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

    காஜ்வெல் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் காங்கிரஸ் வேட்பாளர் பிரதாப் ரெட்டியை 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். சந்திரசேகர  ராவின் மகன் கே.டி.ராமா ராவ், மருமகன் ஹரிஷ் ராவ் ஆகியோரும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

    இதையடுத்து ஆட்சியமைக்கும் பணிகளை தெலுங்கானா ராஷ்டிர சமிதி தொடங்கியது. புதிய அரசு அமைப்பதற்கு ஏதுவாக பதவியை ராஜினாமா செய்தார் சந்திரசேகர ராவ். ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். பின்னர் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள டிஆர்எஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் சட்டமன்ற கட்சி தலைவராக சந்திரசேகர ராவ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

    இதையடுத்து புதிய அரசு பதவியேற்பதற்கான நடைமுறைகள் தொடங்கின. ஆளுநர் மாளிகையில் இன்று பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இதையொட்டி அப்பகுதியில் ஏராளமான கட்சி தொண்டர்கள் குவிந்தவண்ணம் இருந்தனர். இதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.



    இந்நிலையில், இன்று பிற்பகல் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. தெலுங்கானா மாநில முதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்றார் சந்திரசேகர ராவ். அவருக்கு ஆளுநர் நரசிம்மன், பதவிப்பிரமாணமும் ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைத்து வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தலைவர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். #TelanganaElections #ChandrashekharRao
    தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவரான சந்திரசேகர ராவ், இரண்டாவது முறையாக நாளை முதல் மந்திரியாக பதவியேற்கிறார். #TelanganaElections #ChandrashekharRao
    ஐதராபாத்:

    ஆந்திராவை இரண்டாகப் பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில் முதல் மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சி அமைந்தது.

    அவர் தனது அரசின் பதவிக்காலம் முடிய 9 மாதங்கள் இருந்த நிலையில், சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க தயார் ஆனார்.

    இதற்கிடையே, தெலுங்கானாவில் கடந்த 7-ம்தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

    இதில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி 88 தொகுதிகளில் அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.



    இந்நிலையில், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவரான சந்திரசேகர ராவ், இரண்டாவது முறையாக நாளை முதல் மந்திரியாக பதவியேற்கிறார். 

    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ஐதராபாத்தில் உள்ள கவர்னர் மாளிகையில் நாளை மதியம் 1.30 மணியளவில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவரான சந்திரசேகர ராவ் முதல் மந்திரியாக பதவியேற்க உள்ளார். அவருக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் என தெரிவித்தனர்.

    முதல் மந்திரி பதவியேற்பு நிகழ்ச்சியை முன்னிட்டு கவர்னர் மாளிகையை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் போலீசர் ஈடுபட்டு வருகின்றனர். #TelanganaElections #ChandrashekharRao
    தெலுங்கானா மாநில சட்டசபையில் ஆளும் கட்சி தலைவராக சந்திரசேகர ராவ் இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். #TelanganaElections #ChandrashekharRao
    ஐதராபாத்:

    ஆந்திராவை இரண்டாகப் பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில் முதன் முதலாக முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சி அமைந்தது. அவர் தனது அரசின் பதவிக்காலம் முடிய 9 மாதங்கள் இருந்த நிலையில், சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க தயார் ஆனார்.

    இதற்கிடையே, தெலுங்கானாவில் கடந்த 7-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி 88 தொகுதிகளில் வெற்றி பெற்றது.



    காஜ்வெல் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் காங்கிரஸ் வேட்பாளர் பிரதாப் ரெட்டியை 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். சந்திரசேகர  ராவின் மகன் கே.டி.ராமா ராவ், மருமகன் ஹரிஷ் ராவ் ஆகியோரும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். 

    இந்நிலையில், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தேர்வு செய்யப்பட்ட புதிய எம் எல் ஏக்களின் கூட்டம் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

    கூட்டத்தின் முடிவில் தெலுங்கானா மாநில சட்டசபையின் ஆளும் கட்சி தலைவராக சந்திரசேகர ராவ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இதையடுத்து, சந்திரசேகர ராவ் தனது ஆதரவாளர்களுடன் தெலுங்கானா மாநில கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளார் என தெரிகிறது. #TelanganaElections #ChandrashekharRao
    தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில், சந்திரசேகர ராவின் டிஆர்எஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றிருப்பதால் ஆட்சியை தக்கவைக்க வாய்ப்பு உள்ளது. #Results2018 #TelenganaElections #ChandrasekharRao
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 7-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

    தெலுங்கானா மாநிலத்தை பொறுத்தவரை, முதல்-மந்திரியாக இருந்த தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் தலைவர் சந்திரசேகர ராவ் சட்டசபையை முன்கூட்டியே கலைத்துவிட்டு தேர்தலை சந்தித்தார். தெலுங்கானா ராஷ்டிர சமிதி, காங்கிரஸ்-தெலுங்குதேசம், பா.ஜனதா ஆகிய 3 அணிகளுக்கிடையே போட்டி நிலவியது. மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 1,821 வேட்பாளர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் 43 மையங்களில் எண்ணப்பட்டு தற்போது முன்னிலை நிலவரங்கள் வெளியாகி உள்ளன.



    காலை 10.30 மணி நிலவரப்படி சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி (டிஆர்எஸ்) 86 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. முதல்வர் சந்திரசேகர  ராவ் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் கூட்டணி 21 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. பாஜக 5 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருந்தது. ஆட்சி அமைக்க 60 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், அதைவிட அதிக தொகுதிகளில் டிஆர்எஸ் வெற்றியை நெருங்குகிறது. எனவே கட்சியினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

    இதேபோல் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. #Results2018 #TelenganaElections #ChandrasekharRao

    ×