என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Srirangam Ranganathar Temple"

    • திருச்சி மாவட்டத்துக்கு 2-ந் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
    • பள்ளி, கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது.

    திருச்சி:

    திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நாளான சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுவதை முன்னிட்டு திருச்சி மாவட்டத்துக்கு 2-ந் தேதி (திங்கட்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி அறிவிக்கப்படுகிறது.

    இந்த விடுமுறையானது திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு பொருந்தும். ஆயினும் பள்ளி/கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது.

    இந்த விடுமுறை நாளில் அரசு அனைத்து துணை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் பாதுகாப்பாக குறைந்த பணியாளர்களை கொண்டு செயல்படும். இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு வருகிற 7-ந் தேதி(சனிக்கிழமை) அன்று வேலைநாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாட்களுக்கு நடைபெறும்.
    • பக்தர்கள் வசதிக்காக பல்வேறு இடங்களில் குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

    108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா திருநெடுந்தாண்டகத்துடன் இன்று தொடங்குகிறது.

    பொதுவாக பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா பெரியாழ்வார் பாடிய திருப்பல்லாண்டு பாசுரத்துடன் தொடங்கும். ஸ்ரீரங்கத்தில் மட்டும் ஒரு நாள் முன்னர் திருநெடுந்தாண்டகம் சொல்லி விழா தொடங்கும்.

    திருநெடுந்தாண்டகம் திருமங்கை ஆழ்வாரால் தொடங்கப்பட்டது. அவரின் பாசுரங்களை அரங்கன் முதலில் கேட்க ஆசைப்பட்டார். பராசர பட்டர் மாதவன் என்ற ஜீயரை திருநெடுந்தாண்டகம் கொண்டு போட்டியில் வென்றார். அரங்கன் இந்த நிகழ்வை கேட்டு பராசர பட்டரிடம் அதை கொண்டே தொடங்க சொன்னதாக வரலாறு.



    வைகுண்ட ஏகாதசி பெருவிழா முழுவதுமே அரங்கனை தமிழால் பாடும் தமிழ் எழுச்சி விழா. நம்பெருமாள் முன்பாக பாசுரம் பாடுபவர்களை அரையர்கள் என்பார்கள். இவர்கள் ரங்கநாதர் முன்னர் திருநெடுந்தாண்டகம் 30 பாசுரங்கள் பாடுவர்.

    வைகுண்ட ஏகாதசி திருவிழா நாட்களில் நம்பெருமாள் முன்பாக பகல்பத்து மற்றும் ராப்பத்து என 21 நாட்கள் நாலாயிர திவ்யபிரபந்தம் அபிநயம் மற்றும் இசையுடன் பாடப்படும். அதற்காக ரெங்கநாதரிடம் மூலஸ்தானத்தில் அனுமதி பெற்று, நாலாயிர திவ்ய பிரபந்தத்தை படிக்க தொடங்குவதே திருநெடுந்தாண்டகம் ஆகும்.

    ஸ்ரீரங்கம் கோவிலில் நாலாயிர திவ்யபிரபந்தம் படிக்க ஆரம்பித்தவுடன் மற்ற திவ்ய தேசங்களில் இருந்து பெருமாள்கள் அனைவரும் இங்கு எழுந்தருளுகின்றனர் என்பது ஐதீகம்.

    அதன்படி இன்று ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று மாலை 7 மணிக்கு அரையர்கள் திருநெடுந்தாண்டகம் பாட கோலாகலமாக வைகுண்ட ஏகாதசி பெருவிழா தொடங்குகிறது. தொடர்ந்து நாளை பகல்பத்து உற்சவம் தொடங்குகிறது.

    பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 7.45 மணிக்கு நம் பெருமாள் மூல ஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 8.30 மணிக்கு அர்ஜுன மண்டபம் வந்தடைகிறார். காலை 8.30 மணி முதல் பகல் 12 மணி வரை அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிர திவ்யப் பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடுவார்கள்.

    இரவு 7 மணிக்கு அர்ஜுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். பகல் பத்தின் முதல் நாளில் இருந்து மூலவர், முத்தங்கி சேவையில் காட்சியளிப்பார். இந்த முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாட்களுக்கு நடைபெறும்.

    பகல் பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பகல்பத்து உற்சவத்தின் 10-ம் நாளான வருகிற 9-ந் தேதி நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருள்வார். மறுநாள் 10-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் சொர்க்க வாசல் திறப்பு நடைபெறும்.

    இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ராப்பத்து உற்சவம் நடைபெறும் 11-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை (8-ம் திருநாளான 17-ந் தேதி தவிர) சொர்க்கவாசல் திறந்திருக்கும்.

    ராப்பத்து உற்சவத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

    16-ந் தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், 17-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 19-ந் தேதி தீர்த்தவாரி கண்டருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 20-ந் தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா நிறைவு பெறுகிறது.

    விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஆயிரங்கால் மண்டபம், மணல் வெளி முழுவதும் அலங்கரிக்கப்பட்டு, கோவில் கோபுரங்கள் மின் விளக்குகளால் ஜொலிக்கின்றன. பக்தர்கள் வசதிக்காக பல்வேறு இடங்களில் குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி மேற்பார்வையில் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    விழா ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில், கோயில் இணை ஆணையர் மாரியப்பன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 

    தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் இன்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
    ஸ்ரீரங்கம்:

    தெலுங்கானா முதல்- மந்திரி சந்திரசேகர ராவ் நேற்றிரவு தனி விமானம் மூலம் திருச்சி வந்தார். பின்னர் அவர் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் திருச்சி சங்கம் ஓட்டலுக்கு சென்றார்.

    இரவு அங்கு தங்கி ஓய்வு எடுத்த அவர், இன்று காலை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர் அவர் மூலவர் சன்னதி, தாயார் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு சென்று வழிபட்டார். அங்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பட்டாச்சாரியார்கள் சந்திரசேகர ராவ்க்கு பிரசாதம் வழங்கினர்.

    இதையடுத்து அவர் பேட்டரி கார் மூலம், கோவில் உள்பிரகாரம், வெளிப்பிரகாரம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார். அவருடன் கோவில் நிர்வாக அதிகாரிகள் சென்றனர்.

    பேட்டரி காரில் சந்திரசேகரராவ் ஸ்ரீரங்கம் கோவிலை வலம் வந்த காட்சி.

    சுவாமி தரிசனம் முடிந்ததும் கோவிலில் இருந்து வெளியே வந்த அவர், கார் மூலம் திருச்சி விமான நிலையம் சென்றார். அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார். இன்று மாலை அவர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார்.

    சந்திரசேகரராவ் வருகையையொட்டி ஸ்ரீரங்கம் கோவில், அவர் தங்கியிருந்த சங்கம் ஓட்டல், விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தெலுங்கானா போலீசாரும் பாதுகாப்புக்காக வந்திருந்தனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரம் கோவிலில் சந்திரசேகர ராவ் சாமி தரிசனம் செய்தார். பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ள நிலையில் அவர் கோவில்களில் சாமி தரிசனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மூலவருக்கு அணிவிக்கப்படும் ரத்தின அங்கி மற்றும் முத்தங்கிகளில் முத்து, ரத்தின கற்கள் மாயமாகி உள்ளதாக யானை ராஜேந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். #SrirangamTemple
    திருச்சி:

    கோவில் சிலைகள் கடத்தல் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ள யானை ராஜேந்திரன் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் 1959-ம் ஆண்டுக்கு பின்னர் தான் பல கோவில்களில் உள்ள மிகவும் பழமையான சிலைகள் திருடப்பட்டும், கடத்தப்பட்டும் இருக்கின்றன. இதுவரை நடத்தப்பட்ட விசாரணை மற்றும் ஆய்வின் மூலம் சுமார் 4 ஆயிரம் சிலைகள் கடத்தப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

    இதில் 261 சிலைகள் வெளிநாடுகளில் உள்ளன. இவை எல்லாம் வெறும் சிலைகள் அல்ல. தெய்வ திருமேனிகள். வெளிநாடுகளில் உள்ள அனைத்து சிலைகளையும் மீட்டு கொண்டு வருவதற்கு போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் நடவடிக்கை எடுத்து வருகிறார். அவரை இந்த பணியில் இருந்து மாற்றம் செய்யக்கூடாது. வழக்கையும் சி.பி.ஐ.க்கு மாற்றக்கூடாது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மூலவர் ரெங்கநாதரின் திருமேனியில் போர்த்தப்படும் ரத்தின அங்கி மற்றும் முத்தங்கிகள் இரண்டு முறை வெளியே கொண்டு செல்லப்பட்டு இருக்கின்றன. மிகவும் பழமையான இந்த அங்கிகளில் முத்துக்கள், வைரம், வைடூரிய கற்கள் மற்றும் நவரத்தின கற்கள் 500-க்கும் மேல் இருந்தன.

    ஆனால் தற்போது 10 முத்துக்களும், 15 ரத்தின கற்களும் தான் இருக்கின்றன. மற்றவை இருந்த இடங்களில் வெறும் ஓட்டை தான் உள்ளன. இந்த ரத்தின கற்கள், முத்துக்கள் ஆகியவை எப்படி மாயமானது? என்பதை கண்டுபிடிக்க வேண்டுமென ஐகோர்ட்டில் நான் வழக்கு தொடர்ந்துள்ளேன். திப்பு சுல்தான், ரெங்கநாதர் கோவிலுக்கு கொடுத்த நகைகள் எங்கே போனது என தெரியவில்லை.

    சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட பொதுநல வழக்கினால் விவசாய விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வருவது தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது. மனைப்பிரிவு அங்கீகாரம் மற்றும் மற்றும் வீட்டு மனைகளை முறைப்படுத்துவது தொடர்பாக ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை மீறி மாவட்ட அளவில் உள்ளூர் திட்டக்குழும அதிகாரிகள் முறைகேடு செய்து வருகிறார்கள்.

    திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் தாலுகா மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் நாச்சிக்குறிச்சி ஊராட்சியில் விதிமுறைகளை மீறி மனைப்பிரிவு அங்கீகாரம் வழங்கிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரி வழக்கு தொடர்ந்து இருக்கிறேன். இந்த வழக்கில் இன்னும் இரண்டு வாரங்களில் இறுதி தீர்ப்பு வர உள்ளது. தமிழகத்தில் 13 லட்சம் வீட்டுமனைகள் முறைப்படுத்தப்படாமல் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார். #SrirangamTemple

    ×