search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Telengana"

    தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில், சந்திரசேகர ராவின் டிஆர்எஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றிருப்பதால் ஆட்சியை தக்கவைக்க வாய்ப்பு உள்ளது. #Results2018 #TelenganaElections #ChandrasekharRao
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 7-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

    தெலுங்கானா மாநிலத்தை பொறுத்தவரை, முதல்-மந்திரியாக இருந்த தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் தலைவர் சந்திரசேகர ராவ் சட்டசபையை முன்கூட்டியே கலைத்துவிட்டு தேர்தலை சந்தித்தார். தெலுங்கானா ராஷ்டிர சமிதி, காங்கிரஸ்-தெலுங்குதேசம், பா.ஜனதா ஆகிய 3 அணிகளுக்கிடையே போட்டி நிலவியது. மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 1,821 வேட்பாளர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் 43 மையங்களில் எண்ணப்பட்டு தற்போது முன்னிலை நிலவரங்கள் வெளியாகி உள்ளன.



    காலை 10.30 மணி நிலவரப்படி சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி (டிஆர்எஸ்) 86 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. முதல்வர் சந்திரசேகர  ராவ் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் கூட்டணி 21 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. பாஜக 5 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருந்தது. ஆட்சி அமைக்க 60 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், அதைவிட அதிக தொகுதிகளில் டிஆர்எஸ் வெற்றியை நெருங்குகிறது. எனவே கட்சியினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

    இதேபோல் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. #Results2018 #TelenganaElections #ChandrasekharRao

    தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முதல் மந்திரி வேட்பாளர் சந்திரசேகர ராவ் இன்று கஜ்வெல் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். #TelanganaAssemblyElections #ChandrashekharRao
    ஐதராபாத்:

    119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இங்கு ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள டி.ஆர்.எஸ். கட்சி போராடி வருகிறது.

    காங்கிரஸ் கட்சி தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதேபோல் பாஜகவும் களத்தில் இருக்கிறது.



    தெலுங்கானாவில் சோனியா காந்தி பிரசாரம் வரும் 22, 23-ம் தேதிகளில் பிரசாரம் செய்து காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். இதற்கிடையே, தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிடவுள்ள 65 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டது.

    இந்நிலையில், தெலுங்கானா சட்டசபை தேர்தலில் கஜ்வெல் தொகுதியில் போட்டியிடும் முதல் மந்திரி வேட்பாளர் சந்திரசேகர ராவ் இன்று தனது ஆதரவாளர்களுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். #TelanganaAssemblyElections #ChandrashekharRao
    தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிடவுள்ள 65 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது. #TelanganaAssemblyElections #Congress
    ஐதராபாத்:

    119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இங்கு ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள டி.ஆர்.எஸ். கட்சி போராடி வருகிறது.

    காங்கிரஸ் கட்சி தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதேபோல் பாஜகவும் களத்தில் இருக்கிறது.

    தொண்டர்களின் விருப்பத்தின் பேரில் தெலுங்கானாவில் சோனியா காந்தி பிரசாரம் செய்கிறார். வருகிற 22 மற்றும் 23-ம் தேதிகளில் பிரசாரம் செய்து காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.



    இந்நிலையில், தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிடவுள்ள 65 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது.

    தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ஹுசூர் நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அவரது மனைவி பத்மாவதி மீண்டும் கோகட் தொகுதியில் போட்டியிடுகிறார். 

    சர்வே சத்யநாராயண எம்.பி செகந்திராபாத் கண்டோன்மெண்ட் தொகுதியிலும், பூனம் பிரபாகர் கரீம் நகரிலும், பல்ராம் நாயக் மெகபூபாபாத் தொகுதியிலும் போட்டியிடுகிறார். #TelanganaAssemblyElections #Congress 
    தேர்தலில் ஓட்டு பெறுவதற்காக தெலுங்கானா மற்றும் ஆந்திர மக்களை பாஜக ஏமாற்றி விட்டதாக தெலுங்கானா மாநில மந்திரி ராமா ராவ் குற்றம்சாட்டியுள்ளார். #Telangana #MinisterRamaRao #BJP #AmitShah
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகர் ராவ் தலைமையில் ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த ஆட்சியை அவரே கலைத்து தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகிறார். மேலும், பாராளுமன்ற தேர்தலுக்கு முன்கூட்டியே தேர்தலை நடத்த சந்திரசேகர் ராவ் கோரிக்கை விடுத்து இருந்தார்.

    இதனை கடுமையாக விமர்சித்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மக்களின் வரிப்பணத்தை தேர்தலுக்காக செலவழித்து அதிக சுமையை மக்கள் மீது சந்திரசேகர் ராவ் சுமத்துவதாக விமர்சித்து இருந்தார்.



    அமித் ஷாவின் இந்த விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அம்மாநில தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ராமா ராவ், பிரதமர் மோடி குஜராத்தில் முதல்வராக இருந்தபோது முன்கூட்டியே தேர்தலை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.

    மேலும், 2004-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூட தேர்தலை முன்கூட்டியே நடத்தியதாக சுட்டிகாட்டினார். மாநிலத்துக்கு என எவ்வித சலுகைகளும் மத்திய அரசு வழங்காத நிலையில், 17.17 சதவிகிதம் மாநிலத்தின் வளர்ச்சி அதிகரித்துள்ளதாகவும் ராமா ராவ் குறிப்பிட்டுள்ளார்.

    தேசத்தின் வளர்ச்சியில் தெலுங்கானா முக்கிய பங்காற்றுவதாகவும், வருவாய் ஈட்டுவதற்கு மாநிலங்களின் பங்கை அமித் ஷா உணர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தேர்தலில் ஓட்டு பெறுவதற்காக தெலுங்கானா மற்றும் ஆந்திர மக்களை பாஜக ஏமாற்றி விட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். #Telangana #MinisterRamaRao #BJP #AmitShah
    தெலுங்கானா மாநிலத்தில் தனது கடனை அடைப்பதற்காக நண்பனை எரித்துக்கொன்று, அவனது செல்போனை எடுத்துச் சென்ற 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். #MobileKillsYoung
    ஐதாராபாத்:

    வயது பாரபட்சம் இன்றி, அனைவரையும் ஆட்டிப்படைக்கும் செல்போன் மோகத்தால் சிறுவன் கொடூரமாக எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தெலுங்கானாவில் நிகழ்ந்துள்ளது.

    தெலுங்கானா மாநிலம் ராமந்தப்பூர் பகுதியில் வசிக்கும் 19 வயதுடைய கட்டாம் பிரேம் சாகர் மற்றும் தாகே பிரேம் ஆகிய இருவரும் நண்பர்களாக இருந்துவந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பாக தாகே பிரேமை இருசக்கர வாகனத்தில் வெளியே அழைத்துச் சென்ற கட்டாம் பிரேம் சாகர், நடுவழியில் அவரை கொடூரமாக தாக்கியுள்ளார்.



    தாகே பிரேம் சுயநினைவை இழந்ததை அடுத்து, அவர் மீது பெட்ரோலை ஊற்றி எரித்து கொலை செய்துவிட்டு, அவரது செல்போனை திருடிச் சென்றுள்ளார். தனது மகன் மாயமானதாக தாகே பிரேமின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கொலை செய்ததை கட்டாம் பிரேம் சாகர் ஒப்புக்கொண்டார்.

    மேலும், தமக்கு கடன் இருந்ததாகவும், அதனை அடைக்க தாகே பிரேமின் செல்போனை எடுக்கவே அவனை கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    செல்போன் மோகத்தால் வாழ்வை இழந்த வாலிபர் மீது கொலை, ஆள்கடத்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #MobileKillsYoung
    ×