search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Centre"

    தனியாருக்கு சொந்தமான கம்ப்யூட்டர்களை உளவு பார்க்க அரசின் சில துறைகளுக்கு அதிகாரமளித்த நடவடிக்கையை எதிர்த்த வழக்கில் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #SC #SCnotice #PIL
    புதுடெல்லி:

    உளவு அமைப்புகளான உளவுத்துறை (ஐ.பி.), போதைப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை பொருளாதார அமலாக்கத்துறை, மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம், வருவாய் உளவுத்துறை, சி.பி.ஐ., தேசிய விசாரணை முகமை, ‘ரா’ உளவு அமைப்பு, சிக்னல் உளவுத்துறை, டெல்லி போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம் ஆகிய 10 அமைப்புகளுக்கு கம்ப்யூட்டர்களை கண்காணிக்கவும், தகவல்களை ஆய்வு செய்யவும், தகவல் பரிமாற்றங்களை இடைமறித்து பார்க்கவும், தகவல்களை அளிக்கவும், ஏற்கனவே அழிக்கப்பட்ட தகவல்களை மீண்டும் கண்டுபிடித்து ஆய்வு செய்வது உள்பட அனைத்து அதிகாரங்களும் வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம்  20-12-2018  அன்று அறிவிக்கை வெளியிட்டது.

    மத்திய உள்துறை வழங்கிய இந்த கூடுதல் அதிகாரங்கள் மூலம் நாட்டில் உள்ள எந்த கம்ப்யூட்டரில் வைக்கப்பட்டு உள்ள தகவல்களையும் பறிமுதல் செய்ய முடியும். மேலும் தனிநபர்கள், நிறுவனங்கள் உள்பட அனைத்து பிரிவினரின் அனைத்து கம்ப்யூட்டர்களையும் உளவு பார்க்க முடியும்.

    இது தவிர ஒரு கம்ப்யூட்டரில் இருந்து மற்றொரு கம்ப்யூட்டருக்கு அனுப்பப்படும் தகவல்களை மேற்கண்ட 10 அமைப்புகளாலும் எளிதில் பெற வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கை கைபேசிகளுக்கும் பொருந்தும் வெளிநாடுகளில் இருந்து தனிநபர்களின் கம்ப்யூட்டர்களுக்கு வரும் அனைத்து தகவல்களையும் கண்காணித்து பறிமுதல் செய்ய மற்றும் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    10 அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு உள்ள இந்த அதிகாரங்கள் மூலம் நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் கம்ப்யூட்டரையும் உளவு அமைப்புகளால் மிக எளிதாக உளவு பார்க்க முடியும். இதுவரை கம்ப்யூட்டர்களில் பரிமாற்றம் செய்யப்படும் தகவல்களை கண்காணிக்கும் உரிமைகளை மட்டுமே இந்த 10 அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு இருந்தது.

    தற்போது வழங்கப்பட்டுள்ள கூடுதல் அதிகாரங்கள் மூலம் ஒருவரது தகவல் பரிமாற்றத்தை உளவு அமைப்புகள் கைப்பற்ற முடியும். மேலும் அந்த தகவல்களை உடனுக்குடன் அழிக்கவும் முடியும்.

    மத்திய அரசின் இந்த நடவடிக்கை அடிப்படையான தனிமனித உரிமை மற்றும் ஜனநாயகத்துக்கு விரோதமானது என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் 25-12-2018 அன்று பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெறும் நோக்கத்தில் அரசியல் எதிரிகள், சிந்தனையாளர்கள் அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் ஆகியோரை கண்டறிந்து பழிவாங்குவதற்காக ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் உளவுபார்க்கும் ஆளும்கட்சியின் இந்த சர்வாதிகார நடவடிக்கை நாட்டில் நெருக்கடி நிலையை பிறப்பிப்பதற்கு ஒப்பான ஜனநாயக படுகொலையாகும்.

    எனவே, இதுதொடர்பாக அரசு வெளியிட்ட அறிவிக்கை சட்டத்துக்கு விரோதமானது, அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது என்று இந்த நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த உத்தரவின் அடிப்படையில் தனிநபர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழ் விசாரணை அமைப்புகள் கிரிமினல் நடவடிக்கைகளை எடுக்க தடை விதிக்கவும் அவர் வலியுறுத்தினார்.



    இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வின் முன்னர் இவ்வழக்கு இன்று விசாரணைக்குவந்தது. இவ்விவகாரத்தில் மனுதாரரின் குற்றச்சாட்டுகளுக்கு 6 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. #SC #SCnotice #PIL 
    ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்துக்கு மாநிலம் சார்பில் ஒதுக்கப்பட வேண்டிய 40 சதவீத நிதியை ஒதுக்க முடியாது என மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். #MamataBanerjee #AyushmanBharatYojana
    கொல்கத்தா:

    இந்தியாவில் சுமார் 10 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ செலவை மத்திய அரசே ஏற்கும் புதிய மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும் என்று கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கலின் போது அறிவிக்கப்பட்டது. 

    இந்த திட்டத்துக்காக மத்திய அரசு ஆண்டுதோறும் 12 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்யும் என்று நிதி மந்திரி அருண்ஜெட்லி தெரிவித்தார். உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீடு திட்டமாக இந்த திட்டம் கருதப்படுகிறது. இந்த திட்டம் ‘‘ஆயுஷ்மான் பாரத்’’ என்று அழைக்கப்படும் இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதம் பேர் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சில் நடந்த பிரம்மாண்ட விழாவில் பிரதமர் மோடி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். 



    மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து ஒவ்வொரு ஏழைக் குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.1000 முதல் ரூ.1200 வரை காப்பீட்டுத் தொகை செலுத்தி, ஒரு குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் இந்த மருத்துவக் காப்பீடு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்துக்கு தேவையான நிதியில் 60 சதவீதம் மத்திய அரசினாலும், மீதித் தொகையை மாநில அரசுகளும் ஏற்கும். இதனால் நாடு முழுவதும் 10 கோடிக்கும் மேற்பட்ட ஏழை எளியவர்கள் மிக எளிதாக பயன்பெறுவார்கள்.

    இந்நிலையில், ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்துக்கு மாநிலம் சார்பில் ஒதுக்கப்பட வேண்டிய 40 சதவீத நிதியை ஒதுக்க முடியாது என மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்துக்கு மாநிலம் சார்பில் ஒதுக்கப்பட வேண்டிய 40 சதவீத நிதியை எங்களால் ஒதுக்கமுடியாது. மாநிலத்தில் இந்த திட்டத்தை தொடர விரும்பினால் மத்திய அரசு முழு நிதியையும் அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். #MamataBanerjee #AyushmanBharatYojana
    கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஆல் இந்தியா ரேடியோவின் தேசிய ஒலிபரப்பை நிறுத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. #AllIndiaRadio
    புதுடெல்லி:

    கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஆல் இந்தியா ரேடியோவின் தேசிய ஒலிபரப்பு சேவையை நிறுத்துவதுடன், அங்குள்ள பிராந்திய பயிற்சி மையங்களை மூடவும் பிரசார் பாரதி முடிவு செய்துள்ளது. 



    சிக்கன நடவடிக்கையாக கேரளாவின் திருவனந்தபுரம், மேகாலயாவின் ஷில்லாங்,  குஜராத்தின் அகமதாபாத், தெலுங்கானாவின் ஐதராபாத் மற்றும் உத்தர பிரதேசத்தின் லக்னோ ஆகிய நகரங்களில் உள்ள அகில இந்திய வானொலி சேவையை நிறுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #AllIndiaRadio
    டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து, கஜா புயல் பாதிப்பு தொடர்பாக அறிக்கை அளித்து, மத்திய அரசு நிவாரண நிதி வழங்கும்படி கேட்டுக்கொண்டார். #GajaCyclone #EdappadiPalaniswami #Modi
    புதுடெல்லி:

    தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் ‘கஜா’ புயல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். உயிர் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    அரசு சார்பிலும், தனியார் நிறுவனம், அரசியல் கட்சிகள், திரை உலகம் உள்பட பல்வேறு தரப்பில் இருந்தும் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், ‘கஜா’ புயல் பாதிப்பு குறித்து விளக்கவும், சேத மதிப்பு தொடர்பான விவரங்களை பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு தேவையான நிதியை பெற்றுவருவதற்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார்.  அவருடன் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் சென்றனர்.

    நேற்று இரவு தமிழ்நாடு இல்லத்தில் தங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று காலை அங்கிருந்து பிரதமர் இல்லத்திற்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.



    அதில் தமிழகத்துக்கு தேவையான மத்திய அரசின் நிதி குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. கஜா புயலினால் என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டன? அதிலிருந்து மக்களை மீட்கும் பணிகள் மற்றும் நிவாரணத்துக்கு ஆகும் செலவுகள் குறித்து கூறப்பட்டுள்ளது. கணிசமான நிதியை முதல் கட்டமாக ஒதுக்கும்படி பிரதமரிடம், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுள்ளார். இதையடுத்து மத்திய அரசு முதற்கட்டமாக குறிப்பிட்ட நிதியை ஒதுக்கீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் தமிழக அரசின் கோரிக்கையின் அடிப்படையில், சேதங்களை மதிப்பிடுவதற்கு மத்திய அரசு தனது அதிகாரிகள் அடங்கிய குழுவை தமிழகத்துக்கு அனுப்பி ஆய்வுகளை நடத்தும். புயல் சேதங்களை அந்த குழு மதிப்பிட்டு மத்திய அரசுக்கு அறிக்கை சமர்பிக்கும். அதன் பின்னர் தேவையான நிதியை தமிழகத்துக்கு மத்திய அரசு அளிக்கும். #GajaCyclone #EdappadiPalaniswami #Modi
    தமிழகத்தைப் பேரிடர் பாதிப்பு மாநிலமாக அறிவித்து தமிழக அரசு கோரும் புயல் இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்குவதற்கு ஆவன செய்ய வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். #GajaCyclone #Vaiko
    திருச்சி:

    ம.தி.மு.க. உயர் நிலைக்குழு கூட்டம் திருச்சியில் நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகளில் இரவு பகலாக கண் துஞ்சாமல் பணியாற்றிக் கொண்டிருக்கும் அரசுத்துறை பணியாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோரின் அர்ப்பணிப்பு மிக்க பணிகளுக்கு ம.தி.மு.க. பாராட்டு தெரிவித்துக் கொள்கிறது.

    புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு அளிக்க வேண்டும்.

    தென்னை விவசாயிகளின் 20 ஆண்டு கால உழைப்பு பலன் இன்றி ஒரே நாளில் வாழ்வாதாரத்தைப் பறிகொடுத்துவிட்டு கண்ணீரில் மிதக்கிறார்கள். புயலால் முறிந்து விழுந்த தென்னை மரம் ஒன்றுக்கு இழப்பீடு ரூ. 600 என்றும், அதனை வெட்டி அகற்ற ரூ. 500 என்றும் ஆக மொத்தம் ரூ. 1,100 இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்து இருப்பது எந்த வகையிலும் ஈடாகாது.

    சேலம்-சென்னை 8 வழி பசுமைச் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தியபோது தென்னை மரம் ஒன்றுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது. அதே இழப்பீடுத் தொகையை ‘கஜா’ புயலில் தென்னை மரங்களை இழந்த விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும்.



    நெல் ஒரு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரமும், வாழை ஒரு ஏக்கருக்கு ரூ.3 லட்சமும், வழங்க வேண்டும். மக்காச்சோளம், பருத்தி, பயிறு வகைகள் மற்றும் வெற்றிலை, முருங்கை உள்ளிட்ட பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 30 ஆயிரமும், கரும்புக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்க வேண்டும்.

    மா, பலா, முந்திரி உள்ளிட்ட மரங்களுக்கு ரூ. 30 ஆயிரமும், அவற்றை வெட்டி அகற்றுவதற்கு ஆகும் முழுச் செலவையும் தமிழக அரசே ஏற்க வேண்டும்.

    மின் கட்டணம், நில வரி உள்ளிட்டவற்றை ரத்து செய்ய வேண்டும்.

    குடிசை வீடுகளை இழந்தோருக்கும், கடலோர மீனவர் குடியிருப்புக்களைப் புனரமைக்கவும், கல் வீடுகளில் சேதம் அடைந்தவற்றைப் புதுப்பிக்கவும் அரசு சார்பில் கணக்கீடு செய்து முழுச் செலவையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும்.

    மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடிப் படகுகள், வலைகள், மீன்பிடிக் கருவிகள் உள்ளிட்டவற்றைச் சீர்படுத்திட தமிழக அரசே முழுமையாக உதவி அளிக்க வேண்டும்.

    இயற்கைச் சீற்றத்தால் தொடர்ந்து பாதிக்கப்படும் தமிழகத்தைப் பேரிடர் பாதிப்பு மாநிலமாக அறிவித்து தமிழக அரசு கணக்கீடு செய்து கோரும் புயல் இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்குவதற்கு ஆவன செய்ய வேண்டும்.

    மழை, வெள்ளம் மற்றும் புயல் உள்ளிட்ட பேரிடர்கள் தாக்கும் நேரத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பேரிடர் காலங்களில் நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளாட்சிகளில் மக்கள் பிரதிநிதிகள் இருப்பது இன்றியமையாதது ஆகும். எனவே, தமிழக அரசு உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு முன்வர வேண்டும்.

    பஸ் எரிப்பு வழக்கில் 3 அ.தி.மு.க.வினரை விடுதலை செய்தது போல ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய, மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி, வருகிற 24-ந்தேதி காலை 10 மணி அளவில், வடசென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது. #GajaCyclone #Vaiko

    கட்டாய விடுப்பு உத்தரவுக்கு எதிராக சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டது. #CBIVsCBI #AlokVerma
    புதுடெல்லி:

    சிபிஐ அமைப்பில் லஞ்ச ஊழல் தொடர்பான மோதல் உச்சகட்டத்தை எட்டியதையடுத்து, சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர்  ராகேஷ் அஸ்தானா இருவரும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். அத்துடன் தற்காலிக சிபிஐ இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டு, உடனடியாக பொறுப்பேற்றார்.



    இதையடுத்து கட்டாய விடுப்பு உத்தரவை எதிர்த்து அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணக்கு வந்தது.

    அலோக் வர்மா சார்பில் மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் ஆஜராகி வாதாடினார். அப்போது பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் தலைமை நீதிபதி கொண்ட தேர்வுக்குழுவின் ஒப்புதலுடன் சிபிஐ இயக்குனர் நியமிக்கப்பட்டதாகவும், அவரது பணியை தொடரவிடாமல் ஊழல் கண்காணிப்பு ஆணையமும், மத்திய அரசும் தடுத்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

    அப்போது இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் மத்திய அரசு பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை நவம்பர் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். #CBIVsCBI #AlokVerma
    ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான பொதுநல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த ஒப்பந்த நடைமுறைகள் தொடர்பாக அறிக்கை அளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. #RafaleDeal #RafaleScam #SupremeCourt
    புதுடெல்லி:

    பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதனை மத்திய அரசு மறுத்து வரும் நிலையில், ரபேல் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.சர்மா பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அதில், ரபேர் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதால், இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என எம்எல் சர்மா கூறியிருந்தார்.

    இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரபேல் போர் விமானங்களை சராசரி விலையை விட கூடுதல் விலைக்கு வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருப்பதாக மனுதாரர் வாதாடினார்.

    ஆனால் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டியதில்லை என்றும், ராணுவ ரகசியம் சார்ந்த விஷயம் என்பதால் இதை விசாரிக்கக்கூடாது என்றும் மத்திய அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.



    இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசு விளக்க அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். அதாவது ரபேல் தொடர்பாக முடிவெடுக்கும் நடைமுறைகள் தொடர்பான அறிக்கையை சீலிட்ட கவரில் வைத்து தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 29-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். #RafaleDeal #RafaleScam #SupremeCourt
    வங்கி கடன்களை தாராளமயமாக்கியதன் மூலம் மத்தியில் ஆளும் அரசு விவசாயிகளின் நலனுக்காக பாடுபட்டு வருவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். #farmerswelfare #Modi
    சண்டிகர்:

    வெள்ளையர் ஆட்சிக்காலத்தின்போது விவசாயிகளின் உரிமைகளுக்காக போராடியவரும், விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டங்களை வடிவமைக்க முன்னோடியாக இருந்தவருமான தீன்பந்து சோட்டு ராம் என்பவரின் 64 அடி உயர சிலையை அரியானா மாநிலம், சம்ப்லா கிராமத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

    சோட்டு ராமின் பேரனும் மத்திய மந்திரியுமான பிரேந்தர் சிங், அரியானா முதல் மந்திரி மனோகர் லால் கத்தார் உள்ளிட்டவர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சோட்டு ராமின் போராட்டமும், உழைப்பும் இந்த மாநிலத்தில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு இன்றும் ஊக்க சக்தியாக இருப்பதாக புகழாரம் சூட்டினார்.

    விவசாயத்துறைக்கு மத்திய அரசு அளித்து வரும் முக்கியத்துவம் தொடர்பாக சுட்டிக்காட்டிய மோடி, வட்டிக்காரர்களின் கோரப்பிடியில் விவசாயிகளும், சிறு வணிகர்களும் சிக்காமல் இருக்க இவர்களுக்கு அரசு வங்கிக் கடன்கள் தாராளமயமாக்கப்பட்டுள்ளது.



    வங்கிகளின் கதவுகள் விவசாயிகளுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. அரியானா மாநிலத்தில் மட்டும் சுமார் 66.50 லட்சம் மக்களுக்கு ஜன் தன் திட்டத்தின் மூலம் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

    விவசாயிகளின் விளைபொருட்களுக்கு தற்போது உரிய விலை கிடைத்து வருவதாகவும், பயிர் காப்பீடு, நவீன வகை விதைகள், மண் வளத்தை பெருக்க போதுமான உரம் ஆகியவற்றை அரசு அளித்து வருவதாகவும் மோடி தெரிவித்தார். #farmerswelfare  #Modi #SirChhotuRam 
    பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் தொடர்பாக அரசாங்கம் எடுக்கும் முடிவுகளில் கோர்ட்டு தலையிடாது என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். #PetrolDiesel #PetrolPriceHike
    புதுடெல்லி:

    டெல்லியைச் சேர்ந்த பூஜா மகாஜன் என்பவர், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக அங்குள்ள ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனு கடந்த 12-ந்தேதி விசாரணைக்கு வந்த போது, அரசின் பொருளாதார கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது என்று ஐகோர்ட்டு கூறிவிட்டது.



    இதைத்தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலை எந்த அடிப்படையில் தினசரி மாற்றி அமைக்கப்படுகிறது என்பது பற்றிய விவரங்களை வெளியிடுமாறும், அவற்றை அத்தியாவசிய பொருட்களாக கருதி நியாயமான விலையை நிர்ணயிக்குமாறும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி பூஜா மகாஜன் மற்றொரு மனுவை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.

    இந்த மனு தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி வி.கே.ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் தொடர்பாக அரசாங்கம் எடுக்கும் முடிவுகளில் கோர்ட்டு தலையிடாது என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 
    சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. #ChennaiSalemRoad
    சென்னை

    சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவ்வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்தனர். இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற விசாரணையின்போது 8 வழிச்சாலைக்காக மரங்களை வெட்டப்படுவது எந்த சூழ்நிலையில் உள்ளது என்பது குறித்த அறிக்கையை அரசு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மேலும், சமூக பாதிப்பு மதிப்பீட்டு ஆய்வு அறிக்கை எந்த நிலையில் உள்ளது? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் 8 வழிச்சாலைக்கு மரங்களை வெட்ட கூடாது என்ற உத்தரவை மீறினால் மொத்த திட்டத்துக்கு தடை விதிக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.



    இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து, இந்த  திட்டத்திற்காக மரங்கள் வெட்டப்பட்ட விவகாரத்தில் வனத்துறை அதிகாரி அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறுவதற்கு மேற்கொண்ட நடவடிக்கை குறித்து மத்திய அரசு அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தனர். #ChennaiSalemRoad

    இந்தியாவில் ‘இ சிகரெட்’ விற்பனைக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. #ECigaratte
    புதுடெல்லி:

    சிகரெட்டை போன்றே ‘இ சிகரெட்’டும் புற்று நோயை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளதால் அதற்கு தடை விதிப்பது குறித்து ஆய்வு செய்ய 3 துணைக்குழுக்களை அமைத்துள்ளதாக சமீபத்தில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய சுகாதாரத் துறை மந்திரி ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

    இந்த நிலையில், இந்தியாவில் ‘இ சிகரெட்’ விற்பனைக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. டெல்லியில் நடைபெற்ற மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. ‘இ சிகரெட்’ தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ‘இ சிகரெட்’ என்பது சிகரெட்டை போலவே இருக்கும் ஒரு மின்னணு கருவி. சிகரெட் புகைக்க நினைக்கும் போது இதை வாயில் வைத்து உறிஞ்சினால் உள்ளே இருக்கும் நிக்கோடின் புகை கிளம்பும். அந்த புகையை உள்ளிழுத்தால் சிகரெட் புகைப்பது போன்ற திருப்தியை ஏற்படுத்தும்.  #ECigaratte
    விழுப்புரம் மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கோரும் மனுவை ஐகோர்ட்டு நிராகரித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. #Villupuram #AIIMS #SupremeCourt
    புதுடெல்லி:

    விழுப்புரத்தை சேர்ந்த வக்கீல் வி.ஜெயகுமார் என்பவர், தமிழ்நாட்டில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையை விழுப்புரத்தில் அமைக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்த மனுவை கடந்த ஆண்டு டிசம்பர் 12-ந்தேதி சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து வி.ஜெயகுமார் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஏப்ரல் மாதம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

    விழுப்புரம் மாவட்டத்தில் 1,490 வருவாய் கிராமங்கள், 13 தாலுகாக்கள், 22 ஒன்றியங்கள், 5 நகர பஞ்சாயத்துகள், 3 நகராட்சிகள் உள்ளன. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், மிகவும் பின்தங்கிய வகுப்பினர் இந்த மாவட்டத்தில் அதிகமாக வசிக்கின்றனர். தமிழ்நாட்டிலேயே கிராமப்புறத்தில் வசிக்கும் மக்களின் விகிதாச்சாரம் அதிகமாக கொண்ட மிகப்பெரிய மாவட்டம் இது. மேலும் இந்த மாவட்டத்தில் விபத்துகளும் மிகவும் அதிக அளவில் நடைபெறுகின்றன.

    இந்த நிலையில் இந்த மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது மிகவும் சரியாக இருக்கும் என்று கோரும் மனுவை சென்னை ஐகோர்ட்டு சரியாக விசாரிக்க தவறி உள்ளது. எனவே சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், இந்த மனு விசாரணைக்கு ஏற்கத்தக்கது அல்ல என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.  #Villupuram #AIIMS #SupremeCourt
    ×