என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » verma plea
நீங்கள் தேடியது "Verma plea"
கட்டாய விடுப்பு உத்தரவுக்கு எதிராக சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டது. #CBIVsCBI #AlokVerma
புதுடெல்லி:
இதையடுத்து கட்டாய விடுப்பு உத்தரவை எதிர்த்து அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணக்கு வந்தது.
அலோக் வர்மா சார்பில் மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் ஆஜராகி வாதாடினார். அப்போது பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் தலைமை நீதிபதி கொண்ட தேர்வுக்குழுவின் ஒப்புதலுடன் சிபிஐ இயக்குனர் நியமிக்கப்பட்டதாகவும், அவரது பணியை தொடரவிடாமல் ஊழல் கண்காணிப்பு ஆணையமும், மத்திய அரசும் தடுத்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
அப்போது இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் மத்திய அரசு பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை நவம்பர் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். #CBIVsCBI #AlokVerma
சிபிஐ அமைப்பில் லஞ்ச ஊழல் தொடர்பான மோதல் உச்சகட்டத்தை எட்டியதையடுத்து, சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இருவரும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். அத்துடன் தற்காலிக சிபிஐ இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டு, உடனடியாக பொறுப்பேற்றார்.
இதையடுத்து கட்டாய விடுப்பு உத்தரவை எதிர்த்து அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணக்கு வந்தது.
அலோக் வர்மா சார்பில் மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் ஆஜராகி வாதாடினார். அப்போது பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் தலைமை நீதிபதி கொண்ட தேர்வுக்குழுவின் ஒப்புதலுடன் சிபிஐ இயக்குனர் நியமிக்கப்பட்டதாகவும், அவரது பணியை தொடரவிடாமல் ஊழல் கண்காணிப்பு ஆணையமும், மத்திய அரசும் தடுத்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
அப்போது இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் மத்திய அரசு பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை நவம்பர் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். #CBIVsCBI #AlokVerma
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X