search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "e-cigarettes"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒரே ஒரு இ-சிகரெட் வைத்திருப்பதும் குற்றம் என்று மத்திய அரசு தெளிவுபடுத்தி உள்ளது.
    • தடையை மீறுவோர் குறித்து புகார் தெரிவிக்க ஒரு இணையதளத்தையும் சுகாதார அமைச்சகம் தொடங்கி உள்ளது.

    புதுடெல்லி:

    மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு, மின்னணு சிகரெட் தடை சட்டத்தை கொண்டு வந்தது.

    அதன்படி, இ-சிகரெட் எனப்படும் மின்னணு சிகரெட்டுகளை உற்பத்தி செய்தல், ஏற்றுமதி, இறக்குமதி செய்தல், விற்பனை, வினியோகம் செய்தல், இருப்பு வைத்தல், விளம்பரம் செய்தல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது.

    இ-சிகரெட்டின் தனிப்பட்ட பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படுவதாக அதில் குறிப்பிடப்படவில்லை.

    இதற்கிடையே, இ-சிகரெட் தடை சட்டத்தில், சிறைத்தண்டனை, அபராதம் போன்ற கடுமையான விதிமுறைகள் இருப்பதையும் மீறி, இ-சிகரெட் சர்வசாதாரணமாக புழங்குவதாக மத்திய அரசுக்கு புகார்கள் வந்தன. குறிப்பாக, இளைஞர்கள் அதை பயன்படுத்துவது, மத்திய அரசுக்கு கவலை ஏற்படுத்தியது.

    இதையடுத்து, இ-சிகரெட் தடையை உறுதியுடன் அமல்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியது. மேலும், அந்த சிகரெட்டை விற்பனை செய்த 15 இணையதளங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

    இந்நிலையில், இ-சிகரெட்டை எந்த வடிவிலும், எந்த எண்ணிக்கையிலும், எந்த முறையிலும் வைத்திருப்பது இ-சிகரெட் தடை சட்டத்தை மீறிய குற்றம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெளிவுபடுத்தி உள்ளது. மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு அனுப்பிய கடிதத்தில் இத்தகவலை தெரிவித்துள்ளது.

    இதன்மூலம், ஒரே ஒரு இ-சிகரெட் வைத்திருப்பதும் குற்றம் என்று மத்திய அரசு தெளிவுபடுத்தி உள்ளது.

    மேலும், இந்த தடையை மீறுவோர் குறித்து புகார் தெரிவிக்க ஒரு இணையதளத்தையும் சுகாதார அமைச்சகம் தொடங்கி உள்ளது.

    இந்தியாவில் ‘இ சிகரெட்’ விற்பனைக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. #ECigaratte
    புதுடெல்லி:

    சிகரெட்டை போன்றே ‘இ சிகரெட்’டும் புற்று நோயை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளதால் அதற்கு தடை விதிப்பது குறித்து ஆய்வு செய்ய 3 துணைக்குழுக்களை அமைத்துள்ளதாக சமீபத்தில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய சுகாதாரத் துறை மந்திரி ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

    இந்த நிலையில், இந்தியாவில் ‘இ சிகரெட்’ விற்பனைக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. டெல்லியில் நடைபெற்ற மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. ‘இ சிகரெட்’ தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ‘இ சிகரெட்’ என்பது சிகரெட்டை போலவே இருக்கும் ஒரு மின்னணு கருவி. சிகரெட் புகைக்க நினைக்கும் போது இதை வாயில் வைத்து உறிஞ்சினால் உள்ளே இருக்கும் நிக்கோடின் புகை கிளம்பும். அந்த புகையை உள்ளிழுத்தால் சிகரெட் புகைப்பது போன்ற திருப்தியை ஏற்படுத்தும்.  #ECigaratte
    ×