search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bumrah"

    ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பும்ரா ஆகியோர் முதல் இடத்தில் உள்ளனர்.
    உலகக்கோப்பை போட்டியையொட்டி வீரர்களின் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டு உள்ளது.

    பேட்டிங்கில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதல் இடத்தையும், பந்து வீச்சில் பும்ரா முதல் இடத்திலும் உள்ளனர். ரோகித் சர்மா 20-வது இடத்தை பிடித்து உள்ளார். வேறு யாரும் ‘டாப் 10-ல்’ இடம் பெறவில்லை.

    பந்து வீச்சில் குல்தீப் யாதவ் 7-வது இடத்திலும், யசுவேந்திர சாஹல் 8-வது இடத்திலும் உள்ளனர்.
    உலகக்கோப்பையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோர் சிறப்பாக செயல்படுவார்கள் என்று மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது. உலகக்கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது.

    இந்த அணியில் உள்ள விராட் கோலி மற்றும் பும்ரா முக்கிய துருப்புச்சீட்டுக்கள். அவர்கள் இருவரும் இல்லாமல் இந்திய அணியால் கோப்பையை வெல்ல முடியாது என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மைக்கோல் ஹோல்டிங் கூறுகையில் ‘‘விராட் கோலி, பும்ரா ஆகிய இரண்டு பெயர்களை நான் குறிப்பிடுகிறேன். குவாலிட்டி வீரர்களான இருவராலும் இந்தியாவுக்கு கோப்பையை வென்று கொடுக்க முடியும்.



    இங்கிலாந்து அணி அதன் சொந்த மைதானத்தில் விளையாடுகிறது. சமீப காலமாக அவர்கள் ஒருநாள் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. அவர்கள் உண்மையிலேயே பேலன்ஸ் அணி.

    இந்தியா சிறப்பாக விளையாடுகிறது. மேலும், தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அவர்கள் சிறந்த வீரர்களை பெற்றுள்ளது. நெருக்கடியான நிலையில் எப்படி விளையாட வேண்டும் என்று சாம்பியன் அணிக்கு தெரியும். இரண்டு அணிகளில் ஒன்று கோப்பையை வென்றால் நான் ஆச்சர்யம் அடைய மாட்டேன்’’ என்றார்.
    கிரிக்கெட் வீரர்கள் ஜடேஜா, ஷமி, பும்ரா மற்றும் பூனம் யாதவ் ஆகியோர், அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். #ArjunaAward #BCCI
    புதுடெல்லி:

    விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனை படைக்கும் வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கி கவுரவிக்கும் வகையில், மத்திய அரசு சார்பில் அர்ஜுனா விருது வழங்கப்படுகிறது. இவ்விருதுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, வில்வித்தையில் சிறந்த வீரரான அர்ஜுனனின் வெங்கலச் சிலையோடு, ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டு பத்திரம் கொடுக்கப்படுகிறது.

    இந்த விருதுக்கு அந்தந்த விளையாட்டு அமைப்புகள் சார்பில் தகுதிவாய்ந்த  வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.



    அவ்வகையில் இந்த ஆண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு, கிரிக்கெட் வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, பும்ரா, முகமது ஷமி மற்றும் கிரிக்கெட் வீராங்கனை பூனம் யாதவ் ஆகியோரின் பெயர்களை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது. #ArjunaAward #BCCI
    ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்களை வென்ற இந்தியா, ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. #ICCODIRankings
    இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை 2-1 எனவும், நியூசிலாந்துக்கு எதிரான தொடரை 4-1 எனவும் கைப்பற்றியது. இதனால் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 122 புள்ளிகள் பெற்று 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    இங்கிலாந்து 126 புள்ளிகளுடன் முதல் இடத்தில உள்ளது. தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் தலா 111 புள்ளிகள் பெற்று முறையே 3 மற்றும் 4-வது இடத்தைப் பிடித்துள்ளன. பாகிஸ்தான் 102 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 100 புள்ளிகளுடன 6-வது இடத்தில் உள்ளது.



    பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட் கோலி 887 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். ரோகித் சர்மா 854 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் பும்ரா 808 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். டிரென்ட் போல்ட் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். குல்தீப் யாதவ் 4-வது இடத்திற்கு பின்தங்கினார்.
    ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 16-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். #ICC #Bumrah
    துபாய்:

    ‘பாக்சிங் டே’ நாளில் தொடங்கி நடந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் முடிவு கிடைத்தது. மெல்போர்னில் நடந்த 3-வது டெஸ்டில் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. பாகிஸ்தான் அணி, தென்ஆப்பிரிக்காவிடம் 3-வது நாளிலேயே ‘சரண்’ அடைந்தது. நியூசிலாந்து அணி 423 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை ஊதித்தள்ளியது.

    இந்த மூன்று டெஸ்ட் போட்டிகளின் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் டாப்-6 இடங்களில் மாற்றம் ஏதுமில்லை. இந்திய கேப்டன் விராட் கோலி (931 புள்ளி) முதலிடத்தில் கம்பீரமாக நீடிக்கிறார். அவர் கடந்த 135 நாட்களாக ‘நம்பர் ஒன்’ அரியணையை அலங்கரித்துக் கொண்டு இருக்கிறார். 2 முதல் 6 இடங்களில் முறையே நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்சன் (897 புள்ளி), ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித் (883 புள்ளி), இந்தியாவின் புஜாரா (834 புள்ளி), இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் (807 புள்ளி), ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (780 புள்ளி) ஆகியோர் உள்ளனர். மெல்போர்ன் டெஸ்டில் செஞ்சுரி அடித்த புஜாராவுக்கு 18 புள்ளிகள் கூடுதலாக கிடைத்த போதிலும் அவரது வரிசையில் மாற்றம் இல்லை.

    இலங்கைக்கு எதிரான டெஸ்டில் சதங்கள் விளாசிய நியூசிலாந்து வீரர்கள் ஹென்றி நிகோல்ஸ் 2 இடம் முன்னேறி 7-வது இடத்தையும், டாம் லாதம் 8 இடங்கள் எகிறி 14-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் அறிமுகமாகி 76 மற்றும் 42 ரன்கள் வீதம் எடுத்த இந்திய வீரர் மயங்க் அகர்வால், டெஸ்ட் தரவரிசையில் 67-வது இடத்துடன் தனது பயணத்தை தொடங்குகிறார். இந்திய விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் 10 இடங்கள் உயர்ந்து 38-வது இடத்துக்கு வந்துள்ளார். அதே சமயம் துணை கேப்டன் ரஹானே 3 இடங்கள் சரிந்து 18-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

    பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் தென்ஆப்பிரிக்காவின் காஜிசோ ரபடா (880 புள்ளி), இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் (874 புள்ளி) மாற்றமின்றி டாப்-2 பவுலர்களாக திகழ்கிறார்கள். மெல்போர்னில் இந்தியாவுக்கு எதிராக 9 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் (836 புள்ளி) 5 இடங்கள் ஏற்றம் கண்டு 3-வது இடத்தை வசப்படுத்தியுள்ளார். இது அவரது சிறந்த தரநிலையாகும். கிறைஸ்ட்சர்ச் டெஸ்டில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தி இலங்கையை நிலைகுலைய வைத்த நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் 14-வது இடத்தில் இருந்து 7-வது இடத்தை எட்டியிருக்கிறார். நியூசிலாந்தின் டிம் சவுதி 2 இடம் அதிகரித்து 9-வது இடத்தை பெற்றுள்ளார்.

    இதே போல் மெல்போர்ன் டெஸ்டில் மொத்தம் 9 விக்கெட்டுகளை கபளகரம் செய்து ஆட்டநாயகனாக ஜொலித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 28-வது இடத்தில் இருந்து 16-வது இடத்துக்கு வந்துள்ளார். இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் இப்போது சிறந்த தரவரிசையை பெற்றிருப்பது இவர் தான். மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 23-வது இடத்தில் இருக்கிறார். அதே சமயம் நமது சுழற்பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் கொஞ்சம் பின்னடைவை சந்தித்துள்ளனர். ஜடேஜா ஒரு இடம் குறைந்து 6-வது இடத்திலும், அஸ்வின் 2 இடம் தளர்ந்து 8-வது இடத்திலும் உள்ளனர். மெல்போர்னில் சோடை போன ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 7 இடங்களை பறிகொடுத்து 14-வது இடத்துக்கு பின்தங்கினார்.

    டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் டாப்-5 இடங்களில் இந்தியா (116 புள்ளி), இங்கிலாந்து (108 புள்ளி), நியூசிலாந்து (107), தென்ஆப்பிரிக்கா (106), ஆஸ்திரேலியா (102) ஆகிய அணிகள் உள்ளன. #ICC #Bumrah
    மெல்போர்னில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் இன்னிங்சில், இந்திய அணி முன்னணி விக்கெட்டுகளை இழந்தபோதும், 346 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் உள்ளது. #AUSvIND #TeamIndia
    மெல்போர்ன்:

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. புஜாரா (106 ரன்கள்), விராட் கோலி (82 ரன்கள்), ரோகித் சர்மா (63 ரன்கள்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் மெல்போர்னில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.

    பின்னர் தங்களது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்களுக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். குறிப்பாக பும்ரா, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவால் அளித்தார். இந்தியாவின் வேகப்பந்துகளை சமாளிக்க முடியாமல் தடுமாறிய ஆஸ்திரேலியா, மூன்றாம் நாளான இன்று 151 ரன்களில் சுருண்டது. பும்ரா 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.


    இதையடுத்து 292 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி, 2ம் இன்னிங்சை தொடங்கியது. முதல் இன்னிங்சில் ஏற்பட்ட பின்னடைவுக்கு ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் பதிலடி கொடுத்தனர். குறிப்பாக கம்மின்ஸ் வீசிய பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறினர்.

    துவக்க வீரர் விகாரி 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்சில் சதம் அடித்த புஜாரா, இந்த இன்னிங்சில் ரன் எதுவும் எடுக்கமல் வெளியேறினார். இதேபோல் கேப்டன் விராட் கோலியும் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். ரகானே 1 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இந்த நான்கு விக்கெட்டுகளையும் கம்மின்ஸ் கைப்பற்றினார்.


    இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், மற்றொரு முன்னணி வீரர் ரோகித் சர்மாவின் விக்கெட்டை ஹேசில்வுட் கைப்பற்றினார். 44 ரன்கள் எடுப்பதற்குள் 5 முன்னணி விக்கெட்டுகளை இழந்த நிலையில், மயங்க் அகர்வால், ரிஷப் பந்த் ஜோடி நிதானமாக விளையாடியது. இன்றைய ஆட்டநேர முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்துள்ளது. அகர்வால் 28 ரன்களுடனும், ரிஷப் பந்த் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    நாளை 4-ம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. தற்போதைய நிலையில், ஆஸ்திரேலியாவைவிட இந்தியா 346 ரன்கள் முன்னிலையில் உள்ளது. நாளைய ஆட்டத்தில் மேற்கொண்டு 50 ரன்கள் சேர்த்தால்கூட ஆஸ்திரேலியாவுக்கு அது கடின இலக்காக அமையும்.  #AUSvIND #TeamIndia
    மெல்போர்னில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், பும்ராவின் வேகப்பந்தில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சில் 151 ரன்களில் ஆல் அவுட் ஆனது. #AUSvIND
    மெல்போர்ன்:

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. புஜாரா (106 ரன்கள்), விராட் கோலி (82 ரன்கள்), ரோகித் சர்மா (63 ரன்கள்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் மெல்போர்னில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.

    பின்னர் தங்களது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்களுக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். குறிப்பாக பும்ரா, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவால் அளித்தார்.

    22 ரன்கள் சேர்த்து இருந்த மார்கஸ் ஹாரிஸ் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் பிஞ்ச் 8 ரன்களில் இஷாந்த் ஷர்மா பந்தில், மயங்க் அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய உஸ்மான் கவாஜாவும் நீடிக்கவில்லை. அவர் 21 ரன்களில் ஜடேஜா பந்தில் வெளியேறினார். தடுப்பாட்டத்தில் ஈடுபட்ட ஷான் மார்ஷ் 61 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்து இருந்த நிலையில், பும்ரா பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார்.


    உணவு இடைவேளையின்போது 4 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. அதன்பின்னர் டிராவிஸ் ஹெட் 20 ரன்களில் பும்ரா பந்தில் கிளீன் போல்டு ஆனார். மிட்செல் மார்ஷ் 9 ரன்களில் ஜடேஜா பந்தில் விக்கெட்டை தாரை வார்த்தார். ஆஸ்திரேலிய அணி, தேநீர் இடைவேளையின்போது 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்திருந்தது.

    விக்கெட்டைக் காப்பாற்ற போராடிய கம்மின்ஸ் 17 ரன்களிலும், பெயின் 22 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். லயன் மற்றும் ஹாசில்வுட் டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்ப, ஆஸ்திரேலிய அணி 151 ரன்களில் சுருண்டது.


    இந்தியா தரப்பில் பும்ரா 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஜடேஜா 2 விக்கெட், இஷாந்த் சர்மா, முகமது ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து 296 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி, 2ம் இன்னிங்சை ஆடி வருகிறது.  #AUSvIND #TeamIndia 
    மெல்போர்னில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முன்னணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. #AUSvIND
    மெல்போர்ன்:

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. புஜாரா (106 ரன்கள்), விராட் கோலி (82 ரன்கள்), ரோகித் சர்மா (63 ரன்கள்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் மெல்போர்னில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.

    பின்னர் தங்களது முதல் இன்னிங்சை ஆஸ்திரேலிய அணி ஆடியது. எஞ்சிய 6 ஓவர்களை ஆரோன் பிஞ்ச் (3 ரன்), மார்கஸ் ஹாரிஸ் (5 ரன்) ஜோடி சமாளித்துக் கொண்டது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் அவர்கள் விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்து இருந்தனர்.

    3-வது நாள் ஆட்டம் இன்று துவங்கியதும் ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்களுக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். குறிப்பாக பும்ரா, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவால் அளித்தார்.



    22 ரன்கள் சேர்த்து இருந்த மார்கஸ் ஹாரிஸ் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் பிஞ்ச் 8 ரன்களில் இஷாந்த் ஷர்மா பந்தில், மயங்க் அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய உஸ்மான் கவாஜாவும் நீடிக்கவில்லை. அவர் 21 ரன்களில் ஜடேஜா பந்தில் வெளியேறினார். தடுப்பாட்டத்தில் ஈடுபட்ட ஷான் மார்ஷ் 61 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்து இருந்த நிலையில், பும்ரா பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார்.

    உணவு இடைவேளையின்போது 4 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. அதன்பின்னர் டிராவிஸ் ஹெட் 20 ரன்களில் பும்ரா பந்தில் கிளீன் போல்டு ஆனார். மிட்செல் மார்ஷ் 9 ரன்களில் ஜடேஜா பந்தில் விக்கெட்டை தாரை வார்த்தார். ஆஸ்திரேலிய அணி, தேநீர் இடைவேளையின்போது 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்திருந்தது.

    முன்னணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் ஆஸ்திரேலிய அணி விக்கெட்டுகளை காப்பாற்ற நிதானமாக ஆடி வருகிறது. தற்போதைய நிலையில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. டிம் பெயின், கம்மின்ஸ் ஆகியோர் களத்தில் இருந்தனர். #AUSvIND #TeamIndia 
    ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி, பும்ரா தொடர்ந்து முதலிடம் வகிக்கின்றனர். ரோகித் சர்மா 2-வது இடத்தில் உள்ளார். #ICCRankings
    ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 899 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். ரோகித் சர்மா 2-வது இடத்தில் உள்ளார். ஷிகர் தவான் 9-வது இடத்தில் இருந்து 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.



    பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் பும்ரா 841 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடம் வகிக்கிறார். குல்தீப் யாதவ் மூன்றாவது இடத்திலும், சாஹல் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.



    ஆல்ரவுண்டர் தரவரிசையில் ரஷித் கான் 353 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.
    புனேயில் நடைபெற்று வரும் 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியாவிற்கு 284 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ். #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 3-வது ஒருநாள் போட்டி புனேயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சு தேர்வு செய்தார். இந்திய அணியில் புவனேஸ்வர் குமார், பும்ரா, கலீல் அஹமது சேர்க்கப்பட்டனர். உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஜடேஜா அணியில் இருந்து நீக்கப்பட்டனர்.

    கியெரன் பொவேல், சந்த்ரபால் ஹெம்ராஜ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஹெம்ராஜ் 15 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். பொவேல் 21 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இந்த விக்கெட்டையும் பும்ராதான் வீழ்த்தினார்.

    3-வது நபராக களம் இறங்கிய ஷாய் ஹோப் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த சாமுவேல்ஸ் 9 ரன்னில் வெளியேறினார்.

    4-வது விக்கெட்டுக்கு ஷாய் ஹோப் உடன் ஷிம்ரோன் ஹெட்மையர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-வது போட்டியில் விளையாடியது போல் அபாரமாக விளையாடியது. ஹெட்மையர் 21 பந்தில் 3 சிக்சருடன் 37 ரன்கள் எடுத்திருக்கும்போது டோனியால் ஸ்டம்பிங் செய்து வெளியேற்றப்பட்டார்.



    ஹெட்மையர் அவுட்டால் இந்தியா நிம்மதி அடைந்தது. அடுத்து வந்த ரோவ்மேன் பொவேல் 4 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த ஜேசன் ஹோல்டர் ஷாய் ஹோப்பிற்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் அரைசதம் அடித்த ஷாய் ஹோப் சதத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார்

    ஹோல்டர் 32 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். ஷாய் ஹோப் 95 ரன்கள் எடுத்த நிலையில் பும்ராவின் நேர்த்தியான யார்க்கரில் ஸ்டம்பை பறிகொடுத்து சதத்தை தவறவிட்டார்.

    9-வது வீரராக களம் இறங்கிய நர்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஸ்கோர் 270 ரன்களை தாண்டியது. புவனேஸ்வர் குமார் வீசிய 49-வது ஓவரில் ஒரு சிக்ஸ், மூன்று பவுண்டரிகள் தூக்கினார். கடைசி ஓவரை பும்ரா வீசினார். 5-வது பந்தில் நர்ஸ் ஆட்டமிழந்தார். நர்ஸ் 22 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 40 ரன்கள் குவித்தார். கடைசி பந்தில் வெஸ்ட் இண்டீஸ் ரன்ஏதும் எடுக்கவில்லை. இதனால் வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 283 ரன்கள் சேர்த்தது.



    இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 284 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ். இந்திய அணி சார்பில் பும்ரா அதிகபட்சமாக நாக்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் 317 ரன்கள் குவித்ததன் மூலம் ரோகித் சர்மா ஐசிசி ஒருநாள் தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். #ICCRankings #RohitSharma
    ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபு தாபியில் நடைபெற்றது. இந்தியா இரண்டு லீக், மூன்று ‘சூப்பர் 4’ மற்றும் இறுதிப் போட்டி என 6 போட்டிகளில் விளையாடியது. இதில் இந்திய அணி கேப்டனாக செயல்பட்ட ரோகித் சர்மா 5 போட்டிகளில் விளையாடினார்.

    ஐந்து இன்னிங்சில் ஒரு சதம் இரண்டு அரைசதத்துடன் 317 ரன்கள் குவித்தார். இதன்மூலம் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். விராட் கோலி முதல் இடத்தில் நீடிக்கிறார். 342 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருது பெற்ற ஷிகர் தவான் நான்கு இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.



    பந்து வீச்சாளர்களில் பும்ரா முதல் இடத்தில் நீடிக்கிறார். குல்தீப் யாதவ் மூன்று இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். இதுதான் ஒருநாள் தரவரிசையில் இவரது சிறந்த தரவரிசையாகும்.

    ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் பந்து வீச்சாளர்களில் 2-வது இடத்தையும், ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார்.
    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ராவின் வலைப் பயிற்சியைப் பார்த்து அசந்து விட்டேன் என்று பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார். #INDvPAK
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் குரூப் பிரிவிலும், சூப்பர் 4 சுற்றிலும் மோதியுள்ளன. இரண்டிலும் இந்தியா வெற்றி பெற்றது.

    பாகிஸ்தான் அணியால் இந்தியாவிற்கு எந்த அளவிலும் நெருக்கடி கொடுக்க முடியவில்லை. இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா நேற்று முன்தினம் நடைபெற்ற ‘சூப்பர் 4’ சுற்றில் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். குறிப்பாக ‘டெத்’ ஓவரில் அசத்தினார்.

    இந்தியா - பாகிஸ்தான் அணிகள் துபாய் ஐசிசி அகாடமியில் வலைப்பயிற்சி மேற்கொண்டனர். அப்போது பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் பும்ராவின் பந்து வீச்சை பார்த்து சிலிர்த்து போய்விட்டார். பும்ராவின் பந்து வீச்சு வீடியோவை காண்பித்து பாகிஸ்தான் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பேன் என்றார்.



    இதுகுறித்து பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறுகையில் ‘‘பயிற்சியின் போது நாங்கள் 20 நிமிடம் அமர்ந்து, பும்ராவின் வலைப் பயிற்சியை பார்த்தோம். யார்க்கர், யார்க்கர் என அடுத்தடுத்து யார்க்கராக வீசி அசத்தினார். அவரது பந்து வீச்சு என்னை மிகவும் ஈர்த்தது. அதை எங்களுக்கு எதிராக செய்தும் காட்டினார்.

    நாங்கள் பும்ராவின் பந்து வீச்சை வீடியோவை காண்பித்து, ‘டெத்’ ஓவரில் எப்படி பந்து வீச வேண்டும் என்பதை எங்களது வீரர்களுக்கு கற்றுக் கொடுப்போம்’’ என்றார்.

    நாளை நடைபெறும் வங்காள தேசம் - பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால், வெள்ளிக்கிழமை இந்தியா - பாகிஸ்தான் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.
    ×