search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shami"

    • இந்தியா வரும் 23-ந்தேதி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதுகிறது.
    • காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து பும்ரா விலகினார்.

    8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நாளை மறுநாள் தொடங்குகிறது. நவம்பர் 13-ந்தேதி வரை நடைபெறும் இந்த போட்டிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்பட 16 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி வரும் 23-ந்தேதி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதுகிறது.

    இந்திய அணியில் நட்சத்திர பந்து வீச்சாளர் பும்ரா காயம் காரணமாக இந்த போட்டியில் இருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அணியில் இடம் பெறுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

    ஆஸ்திரேலியா சென்றுள்ள ஷமி, இந்திய அணியுடன் விரைவில் இணைவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் காத்திருப்பு வீரர்கள் பட்டியலில் இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

    • மாற்று வீரர்களாக இந்திய அணியில் இடம் பெறுகின்றனர்.
    • காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா, தீபக் சாஹர் அணியில் இருந்து விலகினர்.

    8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வரும் 16-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது.

    காயம் காரணமாக நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்த தொடரில் பங்கேற்காதது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. மேலும் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரும் காயமடைந்துள்ளதால் இந்திய அணியில் இடம் பெறவில்லை.

    இந்நிலையில் மாற்று வீரர்கள் பட்டியலில் புதிதாக வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சிராஜ், ஷர்துல் தாக்குர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று அவர்கள் ஆஸ்திரேலியா புறப்பட்டு செல்கின்றனர். எனினும் மூன்று பேரில் யார் அணியில் இடம் பெறுவார்கள் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

    ஷமியின் உடற்தகுதி மதிப்பீடு செய்யப்பட்ட பிறகே அவர் அணியில் இடம் பெறுவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய அணி பெர்த்தில் இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. பின்னர் பிரிஸ்பேனுக்குச் செல்லும் இந்தியா வீரர்கள் அங்கு இரண்டு ஆட்டங்களில் விளையாடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நீண்ட காலமாக விளையாடாமல் இருந்து திடீரென்று கொரோனாவில் இருந்து குணமடைந்து வந்ததும் கம்பேக் கொடுப்பது கடினமாகும்.
    • பும்ராவுக்கு பதிலாக சிராஜை தேர்வு செய்யலாம் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16-ந் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் துவங்குகிறது. இத்தொடரில் கோப்பையை வெல்வதற்காக உலகின் நம்பர் ஒன் டி20 அணியான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி உள்பட 16 அணிகள் களமிறங்குகின்றன.

    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா காயத்தால் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். அதனால் அவருக்கு பதிலாக தீபர் சாஹர் அல்லது முகமது சமி இடம் பெறலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தீபக் சாஹர் காயம் காரணமாக விலகி உள்ளார். இதனால் முகமது சமி ஆடும் லெவனில் இடம் பெறுவதும் கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

    இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரில் பும்ராவுக்கு பதிலாக சமியை தேர்வு செய்வதற்கு மாற்றாக சிராஜை தேர்வு செய்யலாம் என்று சுனில் கவாஸ்கர் காரணத்துடன் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் பும்ராவுக்கு பதிலாக சிராஜை தேர்வு செய்வேன். ஏனெனில் அவர் சிறப்பாக பந்து வீசுகிறார். சமி நீண்ட காலமாக விளையாடாமல் இருக்கிறார். அப்படிப்பட்ட அவர் ஒருசில பயிற்சி போட்டிகளில் மட்டும் விளையாடி விட்டு நேரடியாக உலக கோப்பையில் விளையாடுவது நிச்சயம் சரியான வழியல்ல.

    இருப்பினும் தற்சமயத்தில் 15ஆவது வீரராக யாரும் தேர்வு செய்யப்படாத நிலையில் சமி ஆஸ்திரேலியாவுக்கு செல்வாரா இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் சமீபத்தில் அவர் எந்த டி20 கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை என்பதே பிரச்சனையாகும்.

    அவரிடம் தரமும் திறமையும் உள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நீண்ட காலமாக விளையாடாமல் இருந்து திடீரென்று கொரோனாவில் இருந்து குணமடைந்து வந்ததும் கம்பேக் கொடுப்பது கடினமாகும்.

    இவ்வாறு சுனில் கவாஸ்கர் கூறினார்.

    • முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
    • இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஓவல்: 

    இங்கிலாந்திற்கு எதிராக ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் ரோகித் சர்மா 5 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 250 சிக்ஸ்ர்கள் குவித்த முதல் இந்தியர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனை படைத்ததில் சர்வதேச அளவில் முதல் இடத்தில் அப்ரிடி (351சிக்ஸர்), இரண்டாவது இடத்தில் கிறிஸ் கெயில் (331சிக்ஸர்), 3வது இடத்தில் ஜெயசூர்யா (270 சிக்ஸர்) உள்ளனர். ரோகித் சர்மாவுக்கு 4வது இடம் கிடைத்துள்ளது.

    நேற்றைய போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதி விரைவாக 150 விக்கெட்களை கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். மொத்தம் 80 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஷமி 150 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார்.

    இதற்கு முன்னர் இந்திய வீரர் அஜித் அகர்கர் 97 போட்டிகளில் விளையாடி 150 ஒருநாள் விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். சர்வதேச அளவில் அதி விரைவாக 150 விக்கெட்களை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான், ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்ஸ் மற்றும் பாகிஸ்தானின் சக்லைன் முஷ்டாக் ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

    இனிடையே நேற்றைய போட்டியில் 7.2 ஓவர் வீசிய இந்திய வேகபந்து வீச்சாளர் பும்ரா 19 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றி இருந்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தின் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

    கிரிக்கெட் வீரர்கள் ஜடேஜா, ஷமி, பும்ரா மற்றும் பூனம் யாதவ் ஆகியோர், அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். #ArjunaAward #BCCI
    புதுடெல்லி:

    விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனை படைக்கும் வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கி கவுரவிக்கும் வகையில், மத்திய அரசு சார்பில் அர்ஜுனா விருது வழங்கப்படுகிறது. இவ்விருதுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, வில்வித்தையில் சிறந்த வீரரான அர்ஜுனனின் வெங்கலச் சிலையோடு, ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டு பத்திரம் கொடுக்கப்படுகிறது.

    இந்த விருதுக்கு அந்தந்த விளையாட்டு அமைப்புகள் சார்பில் தகுதிவாய்ந்த  வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.



    அவ்வகையில் இந்த ஆண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு, கிரிக்கெட் வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, பும்ரா, முகமது ஷமி மற்றும் கிரிக்கெட் வீராங்கனை பூனம் யாதவ் ஆகியோரின் பெயர்களை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது. #ArjunaAward #BCCI
    ×