என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உலகக்கோப்பையில் விராட் கோலி, பும்ரா ‘மாஸ்’ காட்டுவார்கள்: மைக்கேல் ஹோல்டிங்
Byமாலை மலர்16 May 2019 10:46 AM GMT (Updated: 16 May 2019 11:20 AM GMT)
உலகக்கோப்பையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோர் சிறப்பாக செயல்படுவார்கள் என்று மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.
50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது. உலகக்கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது.
இந்த அணியில் உள்ள விராட் கோலி மற்றும் பும்ரா முக்கிய துருப்புச்சீட்டுக்கள். அவர்கள் இருவரும் இல்லாமல் இந்திய அணியால் கோப்பையை வெல்ல முடியாது என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மைக்கோல் ஹோல்டிங் கூறுகையில் ‘‘விராட் கோலி, பும்ரா ஆகிய இரண்டு பெயர்களை நான் குறிப்பிடுகிறேன். குவாலிட்டி வீரர்களான இருவராலும் இந்தியாவுக்கு கோப்பையை வென்று கொடுக்க முடியும்.
இங்கிலாந்து அணி அதன் சொந்த மைதானத்தில் விளையாடுகிறது. சமீப காலமாக அவர்கள் ஒருநாள் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. அவர்கள் உண்மையிலேயே பேலன்ஸ் அணி.
இந்தியா சிறப்பாக விளையாடுகிறது. மேலும், தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அவர்கள் சிறந்த வீரர்களை பெற்றுள்ளது. நெருக்கடியான நிலையில் எப்படி விளையாட வேண்டும் என்று சாம்பியன் அணிக்கு தெரியும். இரண்டு அணிகளில் ஒன்று கோப்பையை வென்றால் நான் ஆச்சர்யம் அடைய மாட்டேன்’’ என்றார்.
இந்த அணியில் உள்ள விராட் கோலி மற்றும் பும்ரா முக்கிய துருப்புச்சீட்டுக்கள். அவர்கள் இருவரும் இல்லாமல் இந்திய அணியால் கோப்பையை வெல்ல முடியாது என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மைக்கோல் ஹோல்டிங் கூறுகையில் ‘‘விராட் கோலி, பும்ரா ஆகிய இரண்டு பெயர்களை நான் குறிப்பிடுகிறேன். குவாலிட்டி வீரர்களான இருவராலும் இந்தியாவுக்கு கோப்பையை வென்று கொடுக்க முடியும்.
இங்கிலாந்து அணி அதன் சொந்த மைதானத்தில் விளையாடுகிறது. சமீப காலமாக அவர்கள் ஒருநாள் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. அவர்கள் உண்மையிலேயே பேலன்ஸ் அணி.
இந்தியா சிறப்பாக விளையாடுகிறது. மேலும், தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அவர்கள் சிறந்த வீரர்களை பெற்றுள்ளது. நெருக்கடியான நிலையில் எப்படி விளையாட வேண்டும் என்று சாம்பியன் அணிக்கு தெரியும். இரண்டு அணிகளில் ஒன்று கோப்பையை வென்றால் நான் ஆச்சர்யம் அடைய மாட்டேன்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X