search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP MLA"

    • இந்த வழக்கில் பாஜக எம்எல்ஏ மதல் விருபாக்ஷப்பா பிரதான குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
    • தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்வதாக கூறி, முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

    பெங்களூரு:

    கர்நாடகாவின் சன்னகிரி தொகுதி பாஜக எம்எல்ஏவான மதல் விருபாக்ஷப்பா, கர்நாடகா சோப்ஸ் அண்ட் டிடர்ஜென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராகவும் உள்ளார். இந்நிலையில், இந்த நிறுவனத்துக்கு மூலப்பொருள் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை தனி நபர் ஒருவர் கோரி உள்ளார். ஒப்பந்தம் வழங்க கமிஷன் வழங்க வேண்டும் என்று அந்த தனி நபரிடம் எம்எல்ஏவின் மகன் பிரசாந்த் மதல் பேரம் பேசியுள்ளார். அதற்கு அந்த நபர் ஒப்புக்கொண்டதையடுத்து, ரூ.81 லட்சம் லஞ்சமாகக் கொடுக்க வேண்டும் என்று பேசி முடிக்கப்பட்டுள்ளது.

    அதில், ரூ.40 லட்சத்தை முன்பணமாக கொடுப்பதாக பிரசாந்த் மதலிடம் அந்த தனி நபர் தெரிவித்துள்ளார். அதன்படி, அவர் பணத்தைக் கொடுக்கும்போது மறைந்திருந்த லோக்ஆயுக்தா லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் பிரசாந்த் மதலை கையும் களவுமாகப் பிடித்தனர். மேலும், அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்திய லோக்ஆயுக்தா போலீசார், அங்கு கணக்கில் வராத ரூ.8 கோடி பணத்தை கைப்பற்றி உள்ளனர். மேலும், பிரசாந்த் மதலை கைது செய்ததுடன், எம்எல்ஏ மதல் விருபாக்ஷப்பா மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் இந்த வழக்கில் பிரதான குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

    கர்நாடகாவில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக எம்எல்ஏவின் மகன் லஞ்ச வழக்கில் சிக்கிய விவவாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எம்எல்ஏவை போலீசார் தேடுவதை அறிந்ததும், அவர் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.

    இதற்கிடையே தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து எம்எல்ஏ மதல் விருபாக்ஷப்பா இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது குடும்பத்தினருக்கு எதிராக சதி செய்யப்பட்டுள்ளது என்று கூறிய அவர், தன் மீது குற்றச்சாட்டு இருப்பதால், தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்வதாக கூறி, முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இஸ்லாமியர்களோ அல்லது கிறிஸ்தவர்களோ பஜ்ரங்பாலியை வணங்குவதில்லை.
    • பாஸ்வானின் இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு பிறகு எம்.எல்.ஏ.வுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள பிர்பைண்டி பகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ லாலன் பாஸ்வான், இந்து தெய்வங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், முஸ்லிம்கள் லட்சுமியை வழிபடுவதில்லை. அதனால், அவர்கள் பணக்காரர்கள் இல்லையா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    மேலும் அவர், "ஆத்மா மற்றும் பரமாத்மா என்பது மக்களின் நம்பிக்கை மட்டுமே. நீங்கள் நம்பினால் அது தெய்வம். இல்லை என்றால் அது வெறும் கற்சிலை. கடவுள், தெய்வங்களை நம்புகிறோமா இல்லையா என்பது நம் கையில் தான் உள்ளது. அதை அடைய அறிவியல் அடிப்படையில் சிந்திக்க வேண்டும். தர்க்கரீதியான முடிவு, நீங்கள் நம்புவதை நிறுத்தினால், உங்கள் அறிவுத்திறன் அதிகரிக்கும்.

    பஜ்ரங்பாலி (ஆஞ்சநேயர்) சக்தி கொண்ட தெய்வம் மற்றும் வலிமையை அளிக்கிறது என்று நம்பப்படுகிறது. இஸ்லாமியர்களோ அல்லது கிறிஸ்தவர்களோ பஜ்ரங்பாலியை வணங்குவதில்லை. அவர்கள் சக்தி வாய்ந்தவர்கள் இல்லையா? நீங்கள் நம்புவதை நிறுத்தும் நாளில் இவை அனைத்தும் முடிவுக்கு வரும்" என்று கூறினார்.

    பாஸ்வானின் இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு பிறகு எம்.எல்.ஏ.வுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    • உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று நடைபெற்றது.
    • இந்த இரண்டு வீடியோவையும் சமாஜ்வாடி கட்சி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று நடைபெற்றது. கூட்டத்தின்போது, இரண்டு எம்.எல்.ஏக்கள் செய்த காரியம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    சபை நடவடிக்கையின்போது, பாஜக எம்எல்ஏ ராகேஷ் கோஸ்வாமி மொபைலில் ஆன்லைன் ரம்மி கேம் விளையாடிக் கொண்டிருந்தார்.

    மற்றொருவர், தனது கையில் புகையிலையை கொட்டி வாயில் போட்டு மென்றுக் கொண்டிருந்தார்.

    இந்த இரண்டு வீடியோவையும் சமாஜ்வாடி கட்சி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அந்த வீடியோவுடன், "சபையின் கண்ணியத்தை கெடுக்கும் பாஜக எம்எல்ஏக்கள்! என்று குறிப்பிட்டிருந்தது.

    மேலும், அத்துடன் மஹோபாவைச் சேர்ந்த எம்எல்ஏ சபையில் மொபைல் கேம் விளையாடுகிறார். ஜான்சியின் பாஜக எம்எல்ஏ புகையிலை சாப்பிடுகிறார். இவர்களிடம் மக்களின் பிரச்சினைகளுக்கு பதில் இல்லை. சட்டப்பேரவையை பொழுது போக்கு இடமாக வைத்துள்ளனர்.

    இவர்களின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது மற்றும் வெட்கக்கேடானது!" என்று பதிவிட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் இரண்டு எம்எல்ஏக்களின் செயலை விமர்சித்து வருகின்றனர்.



    • தோல் கட்டி நோயால் பாதிக்கப்படும் பசுக்களை காப்பாற்ற வேண்டும் என பாஜக எம்எல்ஏ கேட்டுக்கொண்டார்.
    • இந்நோயை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என முதல்வர் அசோக் கெலாட் வலியுறுத்தல்

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. கூட்டத்தொடருக்கு வந்த பாஜக எம்எல்ஏ சுரேஷ் சிங் ராவத், ஒரு பசுவை தன்னுடன் அழைத்து வந்தார். இதுதொடர்பாக அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, மாடுகள் லம்பி ஸ்கின் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன, ஆனால் மாநில அரசு ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது என்று குற்றம்சாட்டினார். பசுக்களுக்கு பரவி வரும் லம்பி ஸ்கின் நோய் குறித்து அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக பசுவை அழைத்து வந்ததாகவும் அவர் கூறினார். 

    அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே மாடு பயந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. அவரது ஆதரவாளர்கள் மாட்டை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    அப்போது தொடர்ந்து பேசிய எம்எல்ஏ ராவத், 'பாருங்கள். இந்த அரசு மீது கோமாதாவுக்கும் கோபம் வந்துவிட்டது. லம்பி ஸ்கின் நோயை கட்டுப்படுத்த தேவையான மருந்து ஊசிகளை அரசு ஏற்பாடு செய்ய வேண்டும், இந்நோயால் பாதிக்கப்படும் பசுக்களை காப்பாற்ற வேண்டும்' என கேட்டுக்கொண்டார்.

    அதேசமயம், சட்டசபையிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. லம்பி ஸ்கின் நோயை கட்டுப்படுத்த வலியுறுத்தி ராஷ்டிரிய லோக்தந்த்ரிக் கட்சி எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். கைகளில் பதாகைகளை ஏந்தி முழக்கம் எழுப்பினர்.

    கூட்டத்தொடர் தொடங்கும் முன், முதல்வர் அசோக் கெலாட் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'லம்பி ஸ்கின் எனப்படும் தோல் கட்டி நோயை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இந்நோயிலிருந்து மாடுகளின் உயிரைக் காப்பாற்றுவதற்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். தடுப்பூசி மற்றும் மருந்துகளை மத்திய அரசு வழங்க வேண்டும்' என்றார்.

    கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற உத்தரபிரதேச பா.ஜனதா எம்.எல்.ஏ அசோக் சிங் சந்தல் உள்ளூர் கோர்ட்டில் சரணடைந்தார்.
    ஹமிர்பூர்:

    உத்தரபிரதேசத்தின் ஹமிர்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட சதர் சட்டமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அசோக் சிங் சந்தல். இவருக்கும், உள்ளூர் பா.ஜனதா தலைவர் சுக்லா என்பவருக்கும் கடந்த 1997-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த அசோக் சிங் சந்தல் உள்ளிட்டோர் சுக்லா குடும்பத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் சுக்லாவின் சகோதரர்கள், மருமகன்கள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக அசோக் சிங் சந்தல் உள்ளிட்டோர் மீது உள்ளூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் இருந்து அவர்கள் அனைவரும் கடந்த 2002-ம் ஆண்டு விடுவிக்கப்பட்டனர்.இதை எதிர்த்து சுக்லா, அலாகாபாத் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு அசோக் சிங் சந்தல் உள்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. பின்னர் தண்டனைக்காக கோர்ட்டில் சரணடையாமல் இருந்ததால் அவர்களுக்கு எதிராக கைது வாரண்டும் பிறப்பிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நேற்று அசோக் சிங் சந்தல் உள்ளூர் கோர்ட்டில் சரணடைந்தார். அவருடன் மேலும் 5 பேரும் சரணடைந்தனர். அவர்கள் அனைவரும் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    உத்தரபிரதேசத்தில் மர்ம நபர் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் பா.ஜனதா எம்.எல்.ஏ. யோகேஷ் வர்மா காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். #BJPMLA #YogeshVerma
    லக்கிம்பூர்:

    உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. யோகேஷ் வர்மா. இவர், லக்கிம்பூரில் நேற்று தனது அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

    அப்போது, மர்ம நபர் ஒருவர், அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடினார். இதில், எம்.எல்.ஏ.வின் காலில் குண்டு பாய்ந்தது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 
    கோவாவில் பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் காலமானதால் ஆளும்கட்சியின் பலம் குறைந்துள்ள நிலையில் ஆட்சி அமைக்க தங்களை அழைக்க வேண்டும் என கவர்னருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. #Congressstakesclaim
    பனாஜி:

    கோவா சட்டசபையில் உள்ள 40 இடங்களில் முன்னர் பெரும்பான்மை பலம் கொண்ட பாஜக 13 சொந்தக்கட்சி உறுப்பினர்கள் மற்றும் இதர கட்சிகளை சேர்ந்த 9 உறுப்பினர்களின் ஆதரவுடன் அங்கு ஆட்சி அமைத்தது.

    முன்னாள் ராணுவ மந்திரியான மனோகர் பரிக்கர் கோவா முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார். சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 14 உறுப்பினர்கள் உள்ளனர்.

    இதற்கிடையில், பாஜகவை சேர்ந்த சட்டசபை உறுப்பினரான பிரான்சிஸ் டி சோசா என்பவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 14-2-2019 அன்று காலமானார். இதனால், ஆளும்கட்சியான பாஜக சட்டசபையில் தற்போது ஒரு உறுப்பினரை இழந்துள்ளது. இதுதவிர 2 இடங்கள் ஏற்கனவே காலியாக உள்ளது.



    இந்நிலையில், ஆளும்கட்சியின் பலம் குறைந்துள்ள நிலையில் ஆட்சி அமைக்க தங்களைஅழைக்க வேண்டும் என கோவா கவர்னருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, கோவா சட்டசபை எதிர்க்கட்சி (காங்கிரஸ்) தலைவரான சந்திரகாந்த் கவுலேக்கர், கவர்னர் மிருதுளா சின்ஹாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், மைனாரிட்டி அரசாக மாறிப்போன பாஜக தலைமையிலான ஆட்சியை உடனடியாக கலைத்து விட்டு, ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாறாக, கோவாவில் கவர்னர் ஆட்சியை திணிக்க முயன்றால் அது சட்டவிரோதமாக அமைந்து விடும். அப்படி ஏதும் நடந்தால் இவ்விவகாரத்தை காங்கிரஸ் கட்சி சட்டப்பூர்வமாக எதிர்கொள்ளும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. #Congressstakesclaim  #Goagovernment 
    ஏழ்மை காரணமாக குடிசையில் வசிக்கும் பாஜக எம்எல்ஏ, புதிய வீடு கட்டுவதற்காக பொதுமக்கள் தாராளமாக நிதி உதவி வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #BJPMLA #SitaramAdivasi
    விஜய்பூர்:

    மத்திய பிரதேச மாநிலத்தின் விஜய்பூர் தொகுதி எம்.எல்.ஏ சீதாராம். பழங்குடியினத்தை சேர்ந்த இவர் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளார். குடிசையில் வசிக்கும் அவர் ஏற்கெனவே இரண்டுமுறை பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தாலும் அந்த பகுதி மக்களிடம் நல்ல செல்வாக்கு உள்ளவர் என்பதால் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலிலும் அவருக்கு கட்சி தலைமை மீண்டும் சீட் வழங்கியது.

    ஆனால் இந்த முறை மக்கள் அவரை வெற்றி பெற வைத்தனர். எம்.எல்.ஏ ஆன பின்பும் தனது குடிசை வீட்டிலேயே வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.

    எம்.எல்.ஏ ஆன பிறகாவது வேறு வீட்டில் குடியிருக்கலாமே என பலர் வற்புறுத்தி உள்ளனர். ஆனால் தன்னிடம் அதற்கான பணம் இல்லை என்பதால் அவர்களின் கோரிக்கையை மறுத்து விட்டார்.

    இந்த வி‌ஷயம் வெளியில் தெரிய அந்த பகுதி கிராம மக்கள், கட்சி நிர்வாகிகள், அவரின் ஆதரவாளர்கள் என பலரும் பணம் வசூலித்து சீதாராமுக்கு புதிதாக வீடு கட்ட உதவி புரிந்துள்ளனர். தலா 100 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை வழங்கி உள்ளனர்.



    சீதாராமுக்கு இந்த மாதம் தான் முதல் சம்பளம் வர உள்ளது. ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் வரவுள்ள தனது சம்பளத்தையும் தொகுதி மக்களுக்கு செலவு செய்வதாக ஏற்கெனவே கூறி இருந்தார். ஆனால் அந்தப் பணத்தை வேண்டாம் என்று கூறியுள்ள அந்த பகுதி மக்கள், அதையும் வீடு கட்ட வைத்துக்கொள்ளுமாறு கூறியுள்ளனர். இதனால் சீதாராம் புதிய வீடு கட்டும் பணிகளை தொடங்கி உள்ளார்.

    சீதாராம் தனது வேட்பு மனு தாக்கலில் தெரிவித்த சொத்து விபரங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. ‘25,000 ரூபாய் ரொக்கமாக கையிலும், 21,000 ரூபாய் வங்கியிலும் உள்ளதாக தெரிவித்துள்ள அவர் அவருக்கு சொந்தமாக 600 சதுர அடியில் குடிசை வீடும், இரண்டு ஏக்கர் நிலமும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

    மக்கள் உதவி செய்துள்ளது குறித்து எம்.எல்.ஏ சீதாராம் கூறுகையில், ‘சொந்தமாக வீடு கட்டும் அளவுக்கு என் கையில் பணம் இல்லை. முதல் மாதச் சம்பளமும் இன்னும் வரவில்லை. என் நிலைமையை அறிந்து மக்கள் அனைவரும் எனக்கு வீடு கட்ட உதவியுள்ளனர்.

    இப்போது மட்டும் உதவவில்லை. நான் தேர்தலில் வெற்றிபெற்றபோதே, என் எடைக்கு நிகராக காசுகளை அன்பளிப்புச் செய்தனர். அந்த பணத்தை வைத்துதான் அப்போது என் குடிசையைப் பராமரித்தேன். இப்போதும் என் முதல் மாத சம்பளத்தை வேண்டாம் என மக்கள் கூறியுள்ளனர்” என நெகிழ்ந்து கூறியுள்ளார். #BJPMLA #SitaramAdivasi
    தமிழகத்தை பின்பற்றி புதுவையிலும் பிளாஸ்டிக்கை தடை செய்யக்கோரி பா.ஜனதா எம்எல்ஏ புதுவை சட்டமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். #Plastic #BJPMLA
    புதுச்சேரி:

    தமிழகத்தில் நாளை முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசு, நீர் நிலை பாதிப்பு ஆகியவற்றை கருத்தில்கொண்டு தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது.



    புதுவையில் ஏற்கனவே 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை உள்ளது. ஆனால் இந்த தடை கடுமையாக அமல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டதால் புதுவையில் பிளாஸ்டிக் விற்பனை, தயாரிப்பின் கள்ளச்சந்தையாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பிளாஸ்டிக்கை தடை செய்ய வேண்டும் என பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க. வலியுறுத்தி வருகிறது.

    இந்நிலையில் தமிழகத்தை பின்பற்றி புதுவையிலும் பிளாஸ்டிக்கை தடை செய்யக்கோரி பா.ஜனதா எம்எல்ஏ புதுவை சட்டமன்ற வளாகத்தில் மைய மண்டபம் செல்லும் வழியில் படிக்கட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் தனது கையில் பதாகைகளை பிடித்தபடி அமர்ந்திருந்தார். அந்த பதாகைகளில் தடை செய், தடை செய் புதுவை நகரை மாசுபடுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத்தை கெடுக்கும் பிளாஸ்டிக்கை புதுவையில் தடை செய் என்ற பதாகைகளை கையில் பிடித்தபடி கோ‌ஷம் எழுப்பினார்.

    பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் திடீர் போராட்டம் சட்டசபை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்த சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயர் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.விடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் சாமிநாதன் எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தையை ஏற்காமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து போராட்டத்தை கைவிட்டார்.  #Plastic #BJPMLA

    கர்நாடகாவில் ஒரு வாரத்திற்குள் நாங்கள் ஆட்சி அமைப்போம் என்று பாஜக எம்எல்ஏ கூறியுள்ளார்.

    ஓசூர்:

    கர்நாடக முன்னாள் மந்திரியும், ஹூக்கேரி தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுமான உமேஷ் கத்தி நேற்று பெலகாவியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ‘‘காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய தயாராக உள்ளனர். 15-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்.கள் எங்களது தொடர்பில் உள்ளனர். இதையடுத்து, ஜே.டி.எஸ்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழும். இன்னும் ஒரு வாரத்திற்குள்

    பா.ஜ.க. ஆட்சி அமையும்’’. இவ்வாறு அவர் கூறினார்.


    இதனை தொடர்ந்து பெங்களூருவில் நிருபர்களிடம் பேசிய கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், ‘‘உங்களுக்கு (உமேஷ் கத்திக்கு) திறமை இருந்தால், 24 மணி நேரத்தில் ஆட்சியை கவிழுங்கள், பார்க்கலாம், இல்லையென்றால், அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய தயாரா? என்று சவால் விடுத்தார்.

    மேலும், உமேஷ் கத்தி, மூத்த அரசியல்வாதி. அவருக்கு திறமையிருந்தால், ஆட்சியை கவிழ்த்து காண்பிக்கட்டும், அதை விடுத்து, வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது’’. என்றும் ஆவேசத்துடன் கூறினார்.

    இதற்கு பதிலடியாக உமேஷ் கத்தி, ‘‘ எங்கள் பலத்தை தகுந்த நேரத்தில் நிரூபிப்போம். நான் எல்லா கட்சிக்கும் சென்று வந்துள்ளேன். எனக்கு நிறைய எம்.எல்.ஏ.க்கள் தொடர்பில் உள்ளனர். கர்நாடகாவில் எங்கள் ஆட்சி அமைந்து விட்டால், தினேஷ் குண்டுராவ், தனது கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வாரா? என்றும் சவால் விடுத்துள்ளார்.

    இதனிடையே, விஜாபுராவில் நிருபர்களுக்கு பேட்டியளித்த பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான கே.எஸ்.ஈஸ்வரப்பா, கூறியதாவது:-

    ‘‘முன்பு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பலர், மந்திரி பதவிக்காக போராடினர். அவர்களில் சிலருக்கு மந்திரி பதவி கிடைத்து, தற்போது இலாகாவிற்காக சண்டை போட்டு வருகின்றனர்.

    சித்தராமையா, தனது ஆதரவாளர்களையே புதிய மந்திரிகளாக ஆக்கியுள்ளார். இதனால் முன்னாள் மந்திரி சாமனூரு சிவசங்கரப்பா போன்ற மூத்த தலைவர்களே அதிருப்தியடைந்துள்ளனர்.

    இதுபோன்ற நிகழ்வுகள், காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் புகைச்சலை வெட்ட வெளிச்சமாக காட்டுகிறது.

    எனவே, கர்நாடகாவில், கூட்டணி ஆட்சி தானாகவே கவிழ்ந்து விடும், அதன் பின்னர். பா..ஜ.க. ஆட்சிக்கு வரும்’’.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அசாம் மாநிலத்தில் தொகுதி மக்களுக்கு சேவை செய்ய முடியாததால் பதவி விலகுவதாக கூறி ராஜினாமா கடிதம் அனுப்பிய பாஜக எம்எல்ஏ இன்று ராஜினாமாவை திரும்ப பெற்றார். #AssamMLA #BJPMLAResign
    கவுகாத்தி:

    அசாம் மாநிலம் துலியாஜன் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தேராஷ் கோவல்லா. ஆளுங்கட்சியான பாஜகவைச் சேர்ந்த இவர், எம்எல்ஏவாக தன் கடமைகளை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை எனக் கூறி பதவியை ராஜினாமா செய்வதாக கூறினார். முதல்வர் சர்பானந்த சோனாவலுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பினார். ஆனால் சபாநாயரிடம் ராஜினாமா கடிதம் கொடுக்கவில்லை.



    தனது தொகுதியில் உள்ள அசாம் கேஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்திற்கு சமீபத்தில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டதில் தன்னை புறக்கணித்ததாக அவர் கூறியிருந்தார். தற்போது முதல்வர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ராஜினாமா முடிவை திரும்ப பெற்றுள்ளார்.

    இதுபற்றி தேராஷ் கோவல்லா கூறுகையில், ‘நேற்று இரவு முதல்வர் என்னை அழைத்து பேசினார். அப்போது, பல்வேறு சமூகங்கள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதால் இந்த பணி நியமனத்தில் உள்ள சிக்கல்கள் இருந்ததாக முதல்வர் விளக்கினார். எனது கவலைகளை ஏற்றுக்கொண்ட அவர், எதிர்காலத்தில் அது சரி செய்யப்படும் என உறுதி அளித்தார். அவர் கேட்டுக்கொண்டதால் ராஜினாமாவை வாபஸ் பெறுகிறேன். இது தொடர்பாக அவருக்கு மெயில் அனுப்பி உள்ளேன்’ என்றார். #AssamMLA #BJPMLAResign
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இன்று அதிகாலை பாஜக எம்.எல்.ஏ. வீட்டிம் துப்பாக்கி சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. #BJP #MLAHouseAttack
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சர்தானா தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் சங்கீத் சாம். இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் வெடிகுண்டு வீசி கொன்று விடுவோம் என கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த மிரட்டலை அவர் பொருட்படுத்தவில்லை. 

    இந்நிலையில், இன்று அதிகாலை சங்கீத் சாம் வீட்டின் அருகில் ஒரு கும்பல் வந்தது. அந்த கும்பல் சங்கீத் வீட்டில் இருந்த பாதுகாவலர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டது. மேலும் தாங்கள் கொண்டு வந்திருந்த கையெறி குண்டுகளையும் வீசினர். இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. 



    தகவலறிந்து அங்கு வந்த போலீசார், அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாஜக எம்.எல்.ஏ. வீட்டின் மீது துப்பாக்கி சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல் அதிகாலையில் நடத்தப்பட்டது உ.பி.யில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #BJP #MLAHouseAttack
    ×