search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bali"

    • கேரள மாநிலத்திற்கு சுற்றுலா செல்ல மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
    • நிலைதடுமாறி விழுந்து அருகில் உள்ள ஒரு மரத்தில் மோதியது.

    பரமத்திவேலூர்:

    ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், திருப்பதி அர்பன் பகுதியைச் சேர்ந்தவர் மோடன் வெங்கிட்டு. இவரது மகன் மோடன் கிரண் (26). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.டெக் இறுதி ஆண்டு படித்து வந்தார்.

    இவரது நண்பர் திருப்பதி, அசோக் நகரை சேர்ந்தவர் விஜயபிரதாப்ரெட்டி (25). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் திருப்பதியில் இருந்து புறப்பட்டு கேரள மாநிலத்திற்கு சுற்றுலா செல்ல மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். நாமக்கல் அருகே உள்ள புலவர்பாளையம் சர்வீஸ் ஸ்டேஷன் அருகே கல்லூரி மாணவர் மோடன் கிரண் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் சாலையின் இடது புறத்தில் இருந்த ஒரு பள்ளத்தில் எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி விழுந்து அருகில் உள்ள ஒரு மரத்தில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த மோடன் கிரணையும், அவரது நண்பர் விஜய பிரதாப்ரெ ட்டியையும் அவ்வழியாக வந்தவர்கள் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கல்லூரி மாணவர் மோடன் கிரண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர் விஜயபிரதாப்ரெட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    • ராமதாஸ் (வயது 55). விவசாயியான இவர் இன்று அதிகாலை தனது நிலத்திற்கு நீர் பாய்ச்ச சென்றார்
    • இந்த மின்வேலியில் எதிர்பாராத விதமாக சிக்கிய ராமதாஸ் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வளவனூர் கள்ளிப்பட்டு அருகே சின்னமடம் கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 55). விவசாயியான இவர் இன்று அதிகாலை தனது நிலத்திற்கு நீர் பாய்ச்ச சென்றார். அதே ஊரைச் சேர்ந்த இவரது உறவினராக பிரபுவின் நிலத்தை கடந்து தான் ராமதாசின் நிலத்திற்கு செல்லவேண்டும்   இந்த பகுதியில் காட்டுப் பன்றிகளின் அட்டகாசம் அதிகமாக உள்ளதால், பிரபு தனது நிலத்தை சுற்றி மின் வேலி அமைத்திருந்தார். இந்த மின்வேலியில் எதிர்பாராத விதமாக சிக்கிய ராமதாஸ் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். சிறிது நேரம் கழித்து அங்கு வந்த பிரபு, ராமதாஸ் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். ராமதாசின் உடலை அவரது நிலத்திற்கு கொண்டு சென்று போட்டுள்ளார். பின்னர் ஊருக்குள் வந்து ராமதாஸ் நிலத்தில் இறந்து கிடப்பதாக கூறினார்.

    உடனடியாக அங்கு விரைந்த கிராம மக்கள் ராமதாஸ் மின்வேலியில் சிக்கி இறந்ததை கண்டு பிடித்தனர். இதையடுத்து வளவனூர் போலீசாருக்கு கிராம மக்கள் தகவல் கொடுத்தனர்   தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வளவனூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் ராமதாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ம் இது தொடர்பான புகாரின் பேரில் பிரபுவை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விளை நிலங்களில் மின் வேலி அமைக்க கூடாது என்றும். அவ்வாறு இருந்தால் அதனை அப்புறப்படுத்த வேண்டுமென்றும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விழுப்புரம் கலெக்டர் பழனி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.Electric fence

    • ஜேடர் பாளையத்தில் இருந்து சோழசிராமணி நோக்கி எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.
    • இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து வந்த கோபிநாத் கீழே விழுந்து பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம், குரும்பலமகாதேவி அருகே உள்ள எலந்தகுட்டையைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் கோபிநாத் (வயது 29) எலக்ட்ரீசியன். இவர் தனது நண்பர் செல்வராஜ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஜேடர்பாளையம் சென்றார்.

    அப்போது ஜேடர் பாளையத்தில் இருந்து சோழசிராமணி நோக்கி எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது செல்வராஜ் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து வந்த கோபிநாத் கீழே விழுந்து பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

    மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த செல்வராஜ் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.

    மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கோபாலகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை வேலூர் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது பிரகாசின் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.
    • எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வெள்ளரிவெள்ளி ஊராட்சி, வேட்டுவப்பட்டி பகுதியைச் சேர்ந்த உத்தரசாமி மகன் பிரகாஷ் (வயது 25). வேன் டிரைவரான இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் எடப்பாடி நோக்கி வந்தார்.

    எடப்பாடி - கோனேரிப்பட்டி பிரதான சாலையில் நெசவாளர் காலனி பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்றபோது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது பிரகாசின் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.

    இதில் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த சிலுவம்பாளையம் தம்பாகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த உத்தரசாமி, அவரது மகன் கவின் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

    அவர்களை, அருகில் இருந்தவர்கள் மீட்டு எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த எடப்பாடி போலீசார், பிரகாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உம்பிளக்கம்பட்டியில் உள்ள தாய் அம்பிகா வீட்டிற்கு வந்த கோகிலா, மதுமிதா மற்றும் 3 மாத குழந்தையுடன் இங்கு தங்கி இருந்தார்.
    • அப்அபோது வீட்டிற்கு எதிரில் உள்ள கோவிலில் இருந்த தண்ணீர் தொட்டியில் சிறுமி தவறி விழுந்து பிணமாக மிதந்து கொண்டிருந்தார்.

    காடையாம்பட்டி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 35). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கோகிலா. இவர்களுக்கு மதுமிதா (6) என்ற பெண் குழந்தை இருந்தது.

    இந்நிலையில் மீண்டும் கருவுற்ற கோகிலாவுக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு குழந்தை பிறந்தது. பிரசவத்திற்காக, சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உம்பிளக்கம்பட்டியில் உள்ள தாய் அம்பிகா வீட்டிற்கு வந்த கோகிலா, மதுமிதா மற்றும் 3 மாத குழந்தையுடன் இங்கு தங்கி இருந்தார்.

    இந்த நிலையில், இன்று காலை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மதுமிதா திடீரென மாயமானார். இதையடுத்து குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தனர்.

    அப்போது, அம்பிகாவின் வீட்டிற்கு எதிரில் உள்ள கோவிலில் இருந்த தண்ணீர் தொட்டியில் சிறுமி பிணமாக மிதந்து கொண்டிருந்தார். இதை பார்த்து சிறுமியின் தாய் மற்றும் உறவினர் கதறி துடித்தனர்.

    இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியதில், கோவில் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது.

    இதையடுத்து சிறுமியின் உடலை மீட்ட போலீசார், இதுபற்றி வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 6 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • 3 பேரும் ஒரே மோட்டர் சைக்கிளில் குமரகிரி அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற கல்லூரி பஸ்சை முந்தி செல்லும்போது, எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற சரக்கு ஆட்டோவின் பின் பகுதியில் மோதினர்.
    • இதில் கீழே விழுந்த 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இதில் ரஞ்சித்குமார் சம்பவ இடத்திலேயே பரிதமாக இறந்தார்.

    சேலம்:

    சேலம் சீலநாயக்கன்பட்டி பொன்னுசாமி தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவர் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது மகன் ரஞ்சித்குமார் (வயது 20). இவர் உடையாப்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். ரஞ்சித்குமாருக்கு நேற்று பிறந்த நாள் ஆகும். அவர் வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று விட்டார்.

    ரஞ்சித்குமாரின் நண்பர்கள் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த சுந்தர் (22), ஓமலூர் பாகல்பட்டியை சேர்ந்த கவுதம் (19). இவர்கள் இருவரும் ரஞ்சித்குமாரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக, மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று அவரை அழைத்து வந்தனர்.

    3 பேரும் ஒரே மோட்டர் சைக்கிளில் குமரகிரி அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற கல்லூரி பஸ்சை முந்தி செல்லும்போது, எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற சரக்கு ஆட்டோவின் பின் பகுதியில் மோதினர்.

    இதில் கீழே விழுந்த 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இதில் ரஞ்சித்குமார் சம்பவ இடத்திலேயே பரிதமாக இறந்தார். கவுதம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவரும் இறந்தார். சுந்தர் அரியனூர் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்தநாள் கொண்டாட சென்றபோது விபத்தில் சிக்கி கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சக மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கோவை, கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் இவர் சேலம், கோவை புறவழிச்சாலை, எக்ஸல் கல்லூரி அருகே 4 சாலை சந்திப்பு பகுதியில் சாலையை நடந்து கடந்தார்.
    • அப்போது, கோவையி லிருந்து சேலம் நோக்கி வேகமாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் வைகுந்தகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    குமாரபாளையம்:

    கோவை, கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வைகுந்தகுமார்(வயது 46), சமையல் தொழிலாளி. இவர் சேலம், கோவை புறவழிச்சாலை, எக்ஸல் கல்லூரி அருகே 4 சாலை சந்திப்பு பகுதியில் சாலையை நடந்து கடந்தார். அப்போது, கோவையி லிருந்து சேலம் நோக்கி வேகமாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் வைகுந்தகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டிவந்த செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்த, தனியார் நிறுவன மேலாளர் ஸ்ரீதர்(41) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கரூர் மாவட்டம், புகளூர், பகுதியை சேர்ந்தவர் முருகன்(24.) மில் ஊழியர். இவர் தற்போது ஆனங்கூர் சாலை, ரங்கனூர் நால் ரோடு, பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று இரவு இவர் அப்பகுதி ஓட்டலில் சாப்பிட்டு விட்டு சேலம், கோவை புறவழிச் சாலையில் இடது புறமாக தனது மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது, மோட்டார்சைக்கிள் பஞ்சர் ஆகி, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். இவர் ஈரோடு தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனில்லாமல் இரவில் உயிரிழந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    • தொப்பூர் காமராஜர் நகர் அருகில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த மகேஸ்வரி தவறி கீழே விழுந்தார்.
    • அப்பொழுது பின்னால் வந்த வாகனம் மகேஸ்வரி மீது ஏறியதில் சம்பவ இடத்தில் அவர் பலியானார்.

    காடையாம்பட்டி:

    தர்மபுரி மாவட்டம் கலெக்டர் அலுவலகம் அருகில் வசித்து வருபவர் முனுசாமி. இவரது மனைவி மகேஸ்வரி (வயது 42).இவர்கள் கொத்தனார் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் தருமபுரியில் இருந்து சேலத்தை நோக்கி வரும்போது தொப்பூர் காமராஜர் நகர் அருகில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த மகேஸ்வரி தவறி கீழே விழுந்தார். அப்பொழுது பின்னால் வந்த வாகனம் மகேஸ்வரி மீது ஏறியதில் சம்பவ இடத்தில் அவர் பலியானார். முனுசாமி லேசான காயத்துடன் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்று அதிகாலை வீராணத்திலிருந்து சேலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். குப்பனூர் அடுத்த பூவனூர் பஸ் நிறுத்தும் அருகே வந்தபோது, அந்த வழியாக வந்த லாரி ஒன்று, மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
    • சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    சேலம்:

    சேலம் கிச்சிபாளையம் களரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் மனோஜ் (வயது 23). அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் பீர்பாஷா மகன் ஜாகிர் (வயது 23) என்பவருடன் இன்று அதிகாலை வீராணத்திலிருந்து சேலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    குப்பனூர் அடுத்த பூவனூர் பஸ் நிறுத்தும் அருகே வந்தபோது, அந்த வழியாக வந்த லாரி ஒன்று, மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், மனோஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் வீராணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இறந்து கிடந்த மனோஜ் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மனோஜ் மற்றும் ஜாகீர் ஆகியோர் கொரியர் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் நண்பர் ஒருவர், இன்று அதிகாலை சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். அவரை அழைத்துச் சென்று வீராணம் அருகே உள்ள அவரது வீட்டில் விட்டுவிட்டு, சேலத்திற்கு திரும்பும் போது விபத்தில் சிக்கியது தெரிய வந்தது.

    தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் போலீசார், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார்.
    • சிவகாசி டவுன் போலீசார் ராம்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி நேரு காலனி துப்புரவு பணியாளர் குடியிருப்பை சேர்ந்தவர் லதா (வயது 44). இவரது மகன் ராம்குமார் (19). சம்பவத்தன்று 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டனர்.

    சிவகாசி-திருத்தங்கல் ரோட்டில் உள்ள கருப்பசாமி கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென ரோட்டின் குறுக்கே நாய் புகுந்தது. இதனால் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியது.

    அப்போது பின்னால் அமர்ந்திருந்த லதா தவறி கீழே விழுந்தார். தலையில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் லதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து லதாவின் மற்றொரு மகன் சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் ராம்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் அன்னதா னப்பட்டி அருகே மணியனூர் உத்தரப்பன் காடு அடுத்த அம்பேத்கர் நகரில் வசிப்பவர் லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
    • அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் ஏற்கனவே இறந்துவிட்ட தாக தெரிவித்தனர்.

    சேலம்:

    சேலம் அன்னதா னப்பட்டி அருகே மணியனூர் உத்தரப்பன் காடு அடுத்த அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் கிரேஸ்குமார் (வயது 37). இவர் நேற்று காலை பள்ளப்பட்டி, மையனூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது இவருக்கு பின்னால் வந்த லாரி, எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கிரேஸ்குமாரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கிரேஸ் குமாரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்ட தாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, லாரியை ஓட்டி வந்த தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பழையூர் தோப்பு பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் (42) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குமரகிரி அடிவாரம் சிவன் கரடு பகுதியைச் நேற்று இரவு 9.30 மணியளவில் மதன்ராஜ், சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் குமரகிரி அருகே சாலையை கடக்க முயன்றார்.
    • அப்போது அந்த வழியே வந்த ஒரு மோட்டார்சைக்கிள் எதிர்பாராத விதமாக மதன்ராஜ் மீது பயங்கரமாக மோதியது. சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    சேலம்:

    சேலம் சன்னியாசிகுண்டு குமரகிரி அடிவாரம் சிவன் கரடு பகுதியைச் சேர்ந்தவர் மதன்ராஜ் (வயது 38). ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணம் ஆகி உஷா (36) என்ற மனைவியுடன் வசித்து வந்தார். நேற்று இரவு 9.30 மணியளவில் மதன்ராஜ், சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் குமரகிரி அருகே சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியே வந்த ஒரு மோட்டார்சைக்கிள் எதிர்பாராத விதமாக மதன்ராஜ் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மதன்ராஜ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபரும் பலத்த காயமடைந்தார். இவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த அம்மாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மதன்ராஜ் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மோட்டார்சைக்கிள் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய மாசிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த தேவராஜ் மகன் விஜய் (22) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×