search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The girl"

    • சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உம்பிளக்கம்பட்டியில் உள்ள தாய் அம்பிகா வீட்டிற்கு வந்த கோகிலா, மதுமிதா மற்றும் 3 மாத குழந்தையுடன் இங்கு தங்கி இருந்தார்.
    • அப்அபோது வீட்டிற்கு எதிரில் உள்ள கோவிலில் இருந்த தண்ணீர் தொட்டியில் சிறுமி தவறி விழுந்து பிணமாக மிதந்து கொண்டிருந்தார்.

    காடையாம்பட்டி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 35). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கோகிலா. இவர்களுக்கு மதுமிதா (6) என்ற பெண் குழந்தை இருந்தது.

    இந்நிலையில் மீண்டும் கருவுற்ற கோகிலாவுக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு குழந்தை பிறந்தது. பிரசவத்திற்காக, சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உம்பிளக்கம்பட்டியில் உள்ள தாய் அம்பிகா வீட்டிற்கு வந்த கோகிலா, மதுமிதா மற்றும் 3 மாத குழந்தையுடன் இங்கு தங்கி இருந்தார்.

    இந்த நிலையில், இன்று காலை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மதுமிதா திடீரென மாயமானார். இதையடுத்து குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தனர்.

    அப்போது, அம்பிகாவின் வீட்டிற்கு எதிரில் உள்ள கோவிலில் இருந்த தண்ணீர் தொட்டியில் சிறுமி பிணமாக மிதந்து கொண்டிருந்தார். இதை பார்த்து சிறுமியின் தாய் மற்றும் உறவினர் கதறி துடித்தனர்.

    இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியதில், கோவில் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது.

    இதையடுத்து சிறுமியின் உடலை மீட்ட போலீசார், இதுபற்றி வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 6 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×