search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ATM"

    • சிறிது நேரத்தில் மொய்தீனின் வங்கி கணக்கில் இருந்து ஏ.டி.எம்.கார்டு மூலம் ரூ.89 ஆயிரத்து 865 எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது.
    • டிப்-டாப் வாலிபர் பணம் எடுக்க உதவி செய்வது போல் நடித்து ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து பணத்தை சுருட்டி இருப்பது தெரிந்தது.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த குன்னமஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் மொய்தீன்(58). பொன்னேரியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார்.

    இவர் பொன்னேரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார். அப்போது அருகில் நின்று கொண்டி ருந்த டிப்-டாப் வாலிபரிடம் தனது ஏ.டி.எம்.கார்டை கொடுத்து பணம் எடுத்து தரும்படி கூறினார்.

    அந்த வாலிபரும் உதவி செய்வதாக கூறி ஏ.டி.எம்.கார்டை வாங்கினார். மேலும் மொய்தீனிடம் ரகசிய எண்ணையும் கேட்டு தெரிந்து கொண்டார்.

    பின்னர் ஏ.டி.எம்.எந்திரத்தில் பணத்தை எடுக்க முயன்றபோது பணம் வரவில்லை என்று கூறி ஏ.டி.எம்.கார்டை மொய்தீனிடம் கொடுத்து விட்டு டிப்-டாப் வாலிபர் அங்கிருந்து சென்றுவிட்டார். மொய்தீனும் அந்த வாலிபர் கொடுத்த ஏ.டி.எம். கார்டுடன் வீட்டுக்கு வந்தார்.

    சிறிது நேரத்தில் மொய்தீனின் வங்கி கணக்கில் இருந்து ஏ.டி.எம்.கார்டு மூலம் ரூ.89 ஆயிரத்து 865 எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மொய்தீன் வங்கிக்கு சென்று விசாரித்த போதுதான் டிப்-டாப் வாலிபர் பணம் எடுக்க உதவி செய்வது போல் நடித்து ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து பணத்தை சுருட்டி இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண் காணிப்பு காமிரா காட்சியை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஜோனின் மனைவியால் ஏடிஎம் அட்டைக்கான ஆறு இலக்க ரகசிய பின் நம்பரை ஞாபகம் வைத்துக்கொள்ள முடியவில்லை.
    • ஏடிஎம் இயந்திரங்கள் காலத்திற்கேற்ப நவீன மாற்றங்களை கண்டு விட்டாலும், இதற்கெல்லாம் அடிப்படையாக இருந்தது ஜோனின் காதலில் மலர்ந்த அந்த முதல் ஏடிஎம் தான்.

    ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன் என்பவர் தன் மனைவிக்கு பிறந்தநாள் பரிசளிக்க விரும்பி, அதற்காக வங்கியில் இருந்து பணம் எடுக்க வரிசையில் நின்றார்.

    பொறுமையுடன் காத்திருந்த அவர் கேஷ் கவுன்டரை நெருங்கியபோது, 'டைம் முடிந்து விட்டது' என்று கூறி கேஷியர் கவுன்டரை அடைத்து விட்டு சென்று விட்டார்.

    பெரும் ஏமாற்றம் அடைந்த ஜோன், வெறுங்கையோடு சென்று மனைவியைப் பார்க்க விரும்பவில்லை.

    கையில் இருந்த கொஞ்சம் சில்லறையை வைத்து, சாக்லேட்களை வாங்கிக் கொடுத்து மனைவியை மகிழ்விக்கலாம் என நினைத்து சாக்லேட் வெண்டிங் இயந்திரத்தைத் தேடிச் சென்றார்.

    இருந்த காசுக்கு கிடைத்த சாக்லேட்டை வாங்கி மனைவிக்கு கொடுத்தாலும், பணம் இருந்தும் நம்மால் விரும்பிய பரிசை மனைவிக்கு அளிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவருக்கு இருந்தது.

    அப்போது, அவர் கண் முன்னால், பூட்டிய வங்கிக் கவுண்டரும், இயந்திரத்தில் காசு போட்டவுடன் கொட்டிய சாக்லேட்களும் அவர் மனதில் மீண்டும் மீண்டும் வந்து போயின. பணம் போட்டால் சாக்லேட் கிடைக்கும் இயந்திரம் போல், எந்த நேரத்திலும் பணத்தையும் எடுக்க ஒரு மெஷின் இருந்தால் எப்படி இருக்கும் என்று அவர் சிந்தனையில் உருவானது தான் ஏடிஎம் இயந்திரம்.

    இவர் உருவாக்கிய முதல் ஏடிஎம் இயந்திரம் 1969-ம் ஆண்டு வடக்கு லண்டனில் உள்ள பார்க்லேஸ் வங்கியில் வைக்கப்பட்டது. விரும்பிய நேரத்தில் பணத்தை எடுக்கவும் மிஷினா ? என அனைவரும் ஆச்சரியப்பட்டனர். அதிலும் ஒரு சிக்கல் ஏற்பட்டது.

    ஜோனின் மனைவியால் ஏடிஎம் அட்டைக்கான ஆறு இலக்க ரகசிய பின் நம்பரை ஞாபகம் வைத்துக்கொள்ள முடியவில்லை. உடனே செயலில் இறங்கிய ஜோன், அதை நான்கு இலக்கமாக குறைத்தார்.

    இன்று ஏடிஎம் இயந்திரங்கள் காலத்திற்கேற்ப நவீன மாற்றங்களை கண்டு விட்டாலும், இதற்கெல்லாம் அடிப்படையாக இருந்தது ஜோனின் காதலில் மலர்ந்த அந்த முதல் ஏடிஎம் தான்.

    -தூத்துக்குடி போவஸ்

    • பொதுமக்கள் ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
    • ஏ.டி.எம்மில் 4½ லட்சம் பணம் வைக்ப்பட்டிருந்ததாகவும் வாடிக்கையாளர்கள் எடுத்தது போக தற்போது ரூ.3½ லட்சம் இருப்பதாக தெரிவித்தார்.

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே உள்ள வெள்ளக்குட்டை கிராமத்தில் ஏ.டி.எம். மையம் உள்ளது.

    இங்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். அவர்கள் கடப்பாரையால் ஏ.டி.எம். எந்திரத்தின் முன் பகுதியை உடைத்தனர். ஆனால் பணம் இருந்த பகுதியை அவர்களால் உடைக்கமுடியவில்லை. அப்போது அங்கு வந்த பொதுமக்கள் நடமாட்டத்தால் கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    பொதுமக்கள் ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்து ஆலங்காயம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.

    அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களையும் உடைத்து எடுத்து சென்றனர். இதனால் அருகே கடையில் உள்ள கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    ஏ.டி.எம். அதிகாரி ஒருவர் வந்து ஆய்வு செய்தார். அவர் ஏ.டி.எம்மில் 4½ லட்சம் பணம் வைக்ப்பட்டிருந்ததாகவும் வாடிக்கையாளர்கள் எடுத்தது போக தற்போது ரூ.3½ லட்சம் இருப்பதாக தெரிவித்தார்.

    ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாததால் ரூ.3½ லட்சம் தப்பியது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த மாதம் 4 ஏ.டி.எம். மையங்களை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ.73 லட்சம் கொள்ளை போனது.

    இந்த வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் ரூ.67 லட்சம் பணம் மீட்கப்படவில்லை. இந்த வழக்கில் திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட தனிப்படை போலீசாரும் களம் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா தடை சம்பந்தமாக நேற்று திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று இரவு மாவட்டம் முழுவதும் விடிய விடிய போலீசார் வாகன சோதனை நடத்தினர்.

    இதற்கிடையே ஏ.டி.எம்மில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் இருக்கும் பகுதியை தெரிந்தவர்கள் மற்றும் எந்திரத்தை உடைப்பதில் கை தேர்ந்தவர்கள் தான் இதில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ஏ.டி.எம். மையத்துக்குள் வாலிபர் ஒருவர் நுழைந்தார்.
    • போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரத்தில் தனியார் வங்கி கிளைக்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு இந்த ஏ.டி.எம். மையத்துக்குள் வாலிபர் ஒருவர் நுழைந்தார்.

    அவர் இரும்பு கம்பியால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றார் . இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் விரைந்து சென்று ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொண்டிருந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் புளியகுளத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ஆனந்தன்(வயது39) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏ.டி.எம். எந்திரம் பாதுகாப்பான முறையில் உள்ளதா? காவலாளிகள் பணியில் உள்ளனரா? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
    • வங்கி ஏ.டி.எம்.மையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    காஞ்சிபுரத்தின் அண்டை மாவட்டமான திருவண்ணாமலை மாவட்டத்தில் நள்ளிரவில் அடுத்தடுத்து தொடர்ந்து 4 ஏ.டி.எம்.களில் மர்மநபர்கள் ரூ.75 லட்சம் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்நிலையில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் உத்தரவின் பெயரில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் உள்ள இடங்களில் தடுப்புகள் வைத்து கண்காணித்தல், பஸ் நிலையங்களின் அருகே விடுதிகளில் சந்தேகத்திற்கிடமாக யாரேனும் தங்கி உள்ளனரா? என ரோந்து பணியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தீவிர கண்காணிப்பு இந்த நிலையில் காஞ்சிபுரம் நகர பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வங்கி ஏ.டி.எம்.மையங்களில், பெரிய காஞ்சிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மேற்பார்வையில், போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது ஏ.டி.எம்.மையங்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் இயங்குகிறதா? ஏ.டி.எம். எந்திரம் பாதுகாப்பான முறையில் உள்ளதா? காவலாளிகள் பணியில் உள்ளனரா? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    மேலும், அங்கு பணியில் உள்ள காவலாளிகளிடம் ஏ.டி.எம்.மையத்திற்கு பணம் எடுக்க வருபவர்களில் சந்தேகத்திற்கிடமாக யாராவது வந்தாலோ, அடிக்கடி ஒரே நபர் நோட்டம் விட்டபடி அப்பகுதியில் சுற்றித்திரிந்தாலோ உடனடியாக போலீசாருக்கு தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினர். இதேபோல் அந்தந்த போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வங்கி ஏ.டி.எம்.மையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • முத்தீசுவரியின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வரவே அவர் பதறி போய் வங்கியில் விசாரித்த போது பணம் எடுத்திருப்பது தெரியவந்ததது.
    • 40 வயது மதிக்கத்தக்க நபர் அடிக்கடி ஏ.டி.எம். மையங்களில் வந்து பணம் எடுத்து செல்வது தெரியவந்தது.

    திருமங்கலம்:

    திருமங்கலத்தை அடுத்துள்ள காண்டை கிராமத்தை சேர்ந்த ராஜபாண்டி மனைவி முத்தீசுவரி(வயது 32). இவர் கடந்த அக்டோபர் 10-ந்தேதி திருமங்கலம்-உசிலம்பட்டி சாலையில் உள்ள தனியார் ஏ.டி.எம். பணம் எடுக்க சென்றார்.

    இவருக்கு பின்னால் நின்ற மர்மநபர் முத்தீசுவரியிடம் நைசாக பேசி தான் பணம் எடுத்து தருவதாக கூறி ஏ.டி.எம். கார்டை வாங்கி எந்திரத்தில் சொருகினார். பணம் வரவில்லை என்று கூறி தன்னிடம் இருந்த மற்றொரு கார்டை முத்தீசுவரிடம் கொடுத்து அனுப்பினார். பின்னர் அந்த மர்மநபர் முத்தீசுவரி கார்டை பயன்படுத்தி ரூ.10 ஆயிரத்தை எடுத்துக்கொண்டார்.

    இதுகுறித்து முத்தீசுவரியின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வரவே அவர் பதறி போய் வங்கியில் விசாரித்த போது பணம் எடுத்திருப்பது தெரியவந்ததது. இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார்.

    இதேபோன்று திருமங்கலத்தை சேர்ந்த செல்ல பாண்டி(52) என்பவரிடம் ரூ 35 ஆயிரம், கண்டுகுளத்தை சேர்ந்த சத்தியராஜ்(19) என்பவரிடம் ரூ.35 ஆயிரத்தை ஏ.டி.எம். கார்டுகள் மூலமாக மர்மநபர் எடுத்துள்ளார். இது குறித்தும் திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் உத்தரவின்படி தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் வங்கி ஏ.டி.எம். மையங்களில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது 40 வயது மதிக்கத்தக்க நபர் அடிக்கடி ஏ.டி.எம். மையங்களில் வந்து பணம் எடுத்து செல்வது தெரியவந்தது. விசாரணையில் அவர் மதுரை பெரியார் நிலையம் அருகே அறை எடுத்து தங்கி திருமங்கலம் பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் பணத்தினை எடுக்கவரும் கிராமத்து மக்களிடம் பணம் எடுத்து தருவது போல் வேறு ஒரு கார்டை கொடுத்து பணத்தை நூதன முறையில் திருடுபவர் என்பது தெரியவந்தது.

    அவரை தனிப்படை போலீசார் நேற்று திருமங்கலம் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். அருகே பிடித்து டவுன்போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்திய போது அவர் நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த பக்ரூதீன்(46) என்பதும், தென்மாவட்டங்களில் பல இடங்களில் ஏ.டி.எம். மையத்தில் திருடியதையும் ஒப்புக்கொண்டார்.

    அவரிடம் இருந்து 63 ஏ.டி.எம். கார்டுகள், ரூ.80 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் பக்ரூதினை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

    • ஏ.டி.எம்., சென்டரில் 500 ரூபாய் நோட்டுகளாக 10 ஆயிரம் ரூபாய் கிடந்துள்ளது.
    • விவசாயி வரதராஜனின் நேர்மையை பாராட்டிய போலீசார், பணம் யாருடையது என விசாரித்து வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் நெருப்பெரிச்சல் அடுத்த வாவிபாளையத்தை சேர்ந்தவர் வரதராஜன்(வயது 43). விவசாயி. இவர் அங்குள்ள கனரா வங்கி ஏ.டி.எம் சென்டரில் பணம் எடுக்க சென்றுள்ளார். ஏ.டி.எம்., சென்டரில் 500 ரூபாய் நோட்டுகளாக 10 ஆயிரம் ரூபாய் கிடந்துள்ளது. அதனை எடுத்த அவர் திருமுருகன் பூண்டி போலீசில் ஒப்படைத்தார்.விவசாயி வரதராஜனின் நேர்மையை பாராட்டிய போலீசார், பணம் யாருடையது என விசாரித்து வருகின்றனர்.

    • நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதே கட்டிடத்தில் வங்கியின் ஏ.டி.எம். அறை உள்ளது
    • பணம் எடுக்க முயன்றபோது அதில் பணம் வரவில்லை.

    நெல்லை:

    நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதே கட்டிடத்தில் வங்கியின் ஏ.டி.எம். அறை உள்ளது.

    கண்ணாடி உடைப்பு

    சம்பவத்தன்று இரவு அங்கு பணம் எடுப்பதற்காக ஒரு நபர் வந்துள்ளார். அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் ஏ.டி.எம்.மில் கார்டை செருகி பணம் எடுக்க முயன்றபோது அதில் பணம் வரவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த நபர் அந்த அறையின் கதவு கண்ணாடியை உடைத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். மறுநாள் காலை வங்கி பணிக்கு வந்தவர்கள் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    சி.சி.டி.வி. ஆய்வு

    உடனே பாளை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம். அறையில் இருந்த சி.சி.டி.வி. காமிராவை ஆய்வு செய்தனர்.

    அதில் பதிவாகியிருந்த அந்த நபரின் உருவத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த நபர் வண்ணார்பேட்டை வெற்றிவேல் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன்(வயது 45) என்பதும், அவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏ.டி.எம்.மையத்துக்கு வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க சென்றனர்.
    • ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    கோவை 

    கோவை நஞ்சப்பா ரோட்டில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது.

    சம்பவத்தன்று இந்த ஏ.டி.எம்.மையத்துக்கு வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க சென்றனர். அப்போது ஏ.டி.எம் எந்திரம் உடைக்கப்பட்டு இருந்தது.

    இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் இது குறித்து வங்கி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வங்கி அதிகாரிகள் ஏ.டி.எம். மையத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர்.

    அப்போது யாரோ மர்ம நபர் ஏடிஎம் எந்த எந்திரத்தில் பணம் வைக்கும் அறையை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயற்சி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வங்கி அதிகாரிகள் காட்டூர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அதில், அதிகாலை 3 மணியளவில் உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர் தான் கொண்டு சென்ற ஆயுதத்தால் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயற்சி செய்ததும், முடியாததால் அங்கிருந்து சென்றதும் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றிய போலீசார் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயன்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • செயல்படாத ஏ.டி.எம்.மையத்தால் கிராம மக்கள் அவதிபடுகின்றனர்
    • பொதுமக்கள் வங்கி வாசலில் காத்திருக்கின்றனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள திருவரங்குளத்தி ல் தனியார் வங்கி ஒன்று இயங்கி வருகிறது. அந்த வங்கியில் அப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பண பரிவர்த்தனை செய்து வருகி ன்றனர்.

    இந்நிலையில் அங்குள்ள வங்கியில் ஏ.டி.எம். மெஷின் கடந்த நான்கு நாட்களாக செயல்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற் றம்சாட்டி வருகின்றனர்.

    இதைதொடர்ந்து வங்கியின் பொதுமக்கள் கேட்கும் போது, மெஷின் பழுதாகி விட்டது. நாங்கள் தகவல் கூறிவிட்டோம் ஆனால் இதுவரை வந்து சரி செய்யப்படவில்லை என்று அவர்கள் தரப்பில் கூறி வருகின்றனர்.

    ஏ.டி.எம் எந்திரத்தில் பணம் எடுக்க வேண்டும் என்றால் திருவரங்குளத்தில் இருந்து புதுக்கோட்டை 10 கிலோமீட்டர் ஆலங்குடி 10 கிலோமீட்டர் செல்ல வேண்டும். இதனால் மக்கள் தினந்தோறும் அல்லல்பட்டு வருகின்றனர். ஏடிஎம் பணம் எடுப்பதற்கு தினந்தோறும் பொதுமக்கள் வங்கி வாசலில் காத்திருக்கின்றனர். பொதுமக்கள் நலன் கருதி வங்கி மேலாளர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியின் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • ஏ.டி.எம். கார்டில் பணம் எடுத்து தருவதாக கூறி முன்னாள் ராணுவ வீரரிடம் ரூ.77 ஆயிரம் மோசடி செய்த பெண்ணை தேடி வருகின்றனர்.
    • ராஜகோபாலிடம் ஏ.டி.எம். கார்டை வாங்கிய பெண், அதற்கு பதிலாக போலி கார்டை கொடுத்து ஏமாற்றி உள்ளார்.

     மதுரை

    மதுரை தனக்கன்குளம், நேதாஜி நகரை சேர்ந்தவர் ராஜகோபால். இவர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார்.

    சம்பவத்தன்று இவர் எஸ்.எஸ்.காலனி ஜவகர் தெருவுக்கு வந்தார். அங்குள்ள ஏ.டி.எம்.மையத்தில் பணம் எடுப்பதற்காக சென்றார். எந்திரத்தில் பணம் வரவில்லை.

    இந்த நிைலயில் அங்கு வந்த 35 வயது பெண், 'நான் முயற்சி செய்து பார்க்கிறேன். உங்களின் கார்டை கொடுங்கள்' என்று கேட்டதும் ராஜகோபால் ஏ.டி.எம். கார்டை கொடுத்தார். அதன் பிறகு அந்தப் பெண், வங்கி ரகசிய குறியீட்டு எண்ணை அறிந்து கொண்டு முயற்சி செய்தார்.

    ஆனால் பணம் வரவில்லை. இதையடுத்து அந்தப்பெண் ராஜகோபாலிடம் ஏ.டி.எம்.கார்டை திருப்பி கொடுத்தார். அதன் பிறகு ராஜகோபால் வீட்டுக்கு சென்றார். அப்போது அவருக்கு ஏ.டி.எம் மையத்தில் இருந்து ரூ.76 ஆயிரத்து 869 பணம் எடுக்கப்பட்டு இருப்பதாக குறுஞ்செய்தி வந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் ஏ.டி.எம். கார்டை சோதனை செய்து பார்த்தார். அப்போது தான் அது போலியானது என்பது தெரிய வந்தது.

    ராஜகோபாலிடம் ஏ.டி.எம். கார்டை வாங்கிய பெண், அதற்கு பதிலாக போலி கார்டை கொடுத்து ஏமாற்றி உள்ளார். இதுகுறித்து எஸ்.எஸ். காலனி போலீசில் ராஜகோபால் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி, ராஜகோபாலிடம் ஏ.டி.எம். கார்டை அபகரித்து பண மோசடி செய்த பெண்ணை தேடி வருகின்றனர்.

    • கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஏ.டி.எம். அமைக்கப்படும் என்று மாநில பதிவாளர் தெரிவித்துள்ளார்
    • விவசாயிகளுக்கு தேவையான சேவைகளையும் வழங்க முடியும்.

    பெரம்பலூர்:

    கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஏடிஎம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் தெரிவித்தார்.

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றுவது தொடர்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 53 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலாளர்களுடனான ஆய்வுக்கூட்டம் பெரம்பலூர் மாவட்ட துணைப்பதிவாளர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் கலந்து கொண்ட கூட்டுறவு சங்க ங்களின் மாநில பதிவாளர் சண்முக சுந்தரம் செய்தியா ளர்களிடம் கூறியதாவது :-

    கூட்டுறவு கடன் சங்கங்கள் அனைத்தும் பல்நோக்கு சேவை மையங்களாக மாற்ற ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இச்சேவை மையங்கள் மூலமாக விவசாயிகளுக்கு தேவையான பல்ேவறு சேவைகளையும் வழங்க முடியும்.

    கூட்டுறவு கடன் சங்கங்களில் காலிப்ப ணியிட ங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் தொடர்ந்து கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் நகைக்கடன் மற்றும் விவசாயக் கடன் போன்ற சேவைகளுக்கு மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளுக்கு சென்று வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்பதால் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். இந்த பிரச்சினையை தவிர்ப்பதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுவ ருகின்றன.

    கூட்டுறவுச் சங்கங்கள் அனைத்தையும் கணினி மயமாக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

    மேலும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஏடிஎம் மையங்கள் அமைக்க ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். நாள் ஒன்றுக்கு 500-க்கும் மேற்பட்ட நபர்கள் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் இடங்களில் மட்டுமே ஏடிஎம் இயந்தி ரங்கள் பொருத்த முடியும் என்பதால் அது குறித்த கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது என்றார்.

    ×