search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செயல்படாத ஏ.டி.எம்.மையத்தால் மக்கள் அவதி
    X

    செயல்படாத ஏ.டி.எம்.மையத்தால் மக்கள் அவதி

    • செயல்படாத ஏ.டி.எம்.மையத்தால் கிராம மக்கள் அவதிபடுகின்றனர்
    • பொதுமக்கள் வங்கி வாசலில் காத்திருக்கின்றனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள திருவரங்குளத்தி ல் தனியார் வங்கி ஒன்று இயங்கி வருகிறது. அந்த வங்கியில் அப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பண பரிவர்த்தனை செய்து வருகி ன்றனர்.

    இந்நிலையில் அங்குள்ள வங்கியில் ஏ.டி.எம். மெஷின் கடந்த நான்கு நாட்களாக செயல்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற் றம்சாட்டி வருகின்றனர்.

    இதைதொடர்ந்து வங்கியின் பொதுமக்கள் கேட்கும் போது, மெஷின் பழுதாகி விட்டது. நாங்கள் தகவல் கூறிவிட்டோம் ஆனால் இதுவரை வந்து சரி செய்யப்படவில்லை என்று அவர்கள் தரப்பில் கூறி வருகின்றனர்.

    ஏ.டி.எம் எந்திரத்தில் பணம் எடுக்க வேண்டும் என்றால் திருவரங்குளத்தில் இருந்து புதுக்கோட்டை 10 கிலோமீட்டர் ஆலங்குடி 10 கிலோமீட்டர் செல்ல வேண்டும். இதனால் மக்கள் தினந்தோறும் அல்லல்பட்டு வருகின்றனர். ஏடிஎம் பணம் எடுப்பதற்கு தினந்தோறும் பொதுமக்கள் வங்கி வாசலில் காத்திருக்கின்றனர். பொதுமக்கள் நலன் கருதி வங்கி மேலாளர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியின் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×