search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏடிஎம் எந்திரம்"

    • மர்ம நபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தின் முன்பக்கத்தை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஆலம்பட்டி பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு இந்தியா ஒன் என்ற தனியார் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.டி.எம். மையத்தை சுற்று வட்டார கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை ஆலம்பட்டியை சேர்ந்த சிலர் ஏ.டி.எம். மையம் உள்ள பகுதிக்கு சென்றபோது ஏ.டி.எம். எந்திரம் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு இருந்தது. இதைப் பார்த்த அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனே திருமங்கலம் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஏ.டி.எம். மையத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மர்ம நபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தின் முன்பக்கத்தை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.

    இதில் பணம் கொள்ளையடிக்கப்பட்டதா? அல்லது பணம் உள்ள பெட்டியை திறக்க முடியாமல் கொள்ளை திட்டத்தை பாதியிலேயே கைவிட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றார்களா? என தெரியவில்லை.

    இந்த சம்பவம் குறித்து ஏ.டி.எம். மைய நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொழில்நுட்ப பணியாளர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை திறந்த பின்பு தான் பணம் கொள்ளை போனது குறித்து தெரியவரும். இதற்கிடையில் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும் போலீசார் கைப்பற்றினர். அதை ஆய்வு செய்த பின்பு தான் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையில் ஈடுபட்டது யார்? என்பது குறித்து தெரியவரும்.

    இந்த சம்பவம் தொடர்பாக திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் சக்தி ரோட்டில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி அருகே அந்த வங்கியின் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு வழக்கம் போல் பணி முடிந்ததும் ஊழியர்கள் வங்கியை பூட்டி விட்டு சென்றுவிட்டனர்.

    இந்நிலையில் நள்ளிரவு 3 மணி அளவில் ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து அதில் இருக்கும் பணத்தை கொள்ளை அடிக்க முயன்றுள்ளார். இதற்காக அந்த மர்ம நபர் தான் கொண்டு வந்திருந்த ஆயுதத்தால் முதலில் ஏ.டி.எம் மையத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை அடித்து உடைத்துள்ளார்.

    பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்துள்ளார். இருந்தாலும் அவரால் பணத்தை திருட முடியவில்லை. இதனையடுத்து அந்த மர்மநபர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று உள்ளார். இன்று காலை ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர் ஒருவர் ஏ.டி.எம். எந்திரம் உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அவர் வீரப்பன்சத்திரம் போலீசார் மட்டும் வங்கியின் மேலாளருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். வங்கி மேலாளரும் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார்.

    சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். இதேப்போல் மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவி பிடிக்கவில்லை.

    போலீசார் விசாரணையில் மர்ம நபர் நள்ளிரவில் வந்து இந்த துணிகர கொள்ளை முயற்சி ஈடுபட்டது தெரிய வந்தது. நல்ல வாய்ப்பாக பணம் கொள்ளை போகாததால் லட்சக்கணக்கில் பணம் தப்பியது.

    இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    • உடனே கட்டுப்பாட்டு அறையிலிருந்து வியாசர்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
    • ராயபுரம் முனியப்பன் தேர்வை சார்ந்த வெங்கட்ராமன் என்பவர் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

    சென்னை:

    சென்னை வியாசர்பாடி எஸ்.எம். நகர் பகுதியில் இருந்த ஏ.டி.எம். மையத்தில் முன்புற கவர் உடைக்கப்படுவதை கண்காணிப்பு கேமரா மூலம் அறிந்த மும்பையில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். கட்டுப்பாட்டு அறை அதிகாரி, தமிழ்நாடு காவல் கட்டுப்பாட்டு அறிக்கை போன் செய்து தகவல் தெரிவித்தார் உடனே கட்டுப்பாட்டு அறையிலிருந்து வியாசர்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

    இரவு நேர ரோந்து பணியில் இருந்த வியாசர்பாடி போலீசார் சிவராஜ், செட்டார், கதிரவன், ஞான பிரசாத் ஆகிய நால்வருக்கும் காவல் நிலையத்தில் இருந்து தகவல் தெரிவித்ததை அடுத்து ஏ.டி.எம். மிஷினை உடைத்துக் கொண்டிருக்கும் பொழுதே மர்ம நபர் கையும் களவுமாக பிடிபட்டார். பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்திய போது ராயபுரம் முனியப்பன் தேர்வை சார்ந்த வெங்கட்ராமன் என்பவர் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

    • ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாமல் திணறிய கொள்ளையர்கள் வெளியில் வந்தனர்.
    • கடையின் கல்லாப் பெட்டியில் இருந்த ரூ.15 ஆயிரம் பணத்தையும் திருடிவிட்டு, கடையை மூடிவிட்டு சென்றுள்ளனர்.

    சங்கராபுரம்:

    சங்கராபுரம் பஸ் நிலையம் அருகே தனியார் வங்கி ஏ.டி.எம். உள்ளது. இதன் அருகில் உள்ள பஸ் நிலையத்தில் பேரூராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் பல்வேறு கடைகள் செயல்படுகின்றன.

    இரவு 10 மணிக்கு மேல் பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வராது என்பதால் அங்குள்ள கடைகளை மூடிவிட்டு அதன் உரிமையாளர் வீட்டிற்கு சென்று விடுவார்கள்.

    இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் நேற்றிரவு 11 மணிக்கு மேல் தனியார் வங்கி ஏ.டி.எம்.மிற்கு வந்துள்ளனர். அங்கிருந்த ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாமல் திணறிய கொள்ளையர்கள் வெளியில் வந்தனர்.

    அருகில் இருந்த பழக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, கல்லாப் பெட்டியில் இருந்த ரூ.15 ஆயிரத்து 700 பணத்தை திருடினர். மேலும், அங்கிருந்த ஆப்பிள், திராட்சை போன்ற பழங்களை எடுத்து சாப்பிட்டுள்ளனர்.

    கொள்ளையர்களின் தேவை அதிகமாக இருந்ததால், பழக்கடைக்கு அருகில் இருந்த பல்பொருள் அங்காடியின் பூட்டை உடைத்து அதனுள் நுழைந்தனர். அந்த கடையின் கல்லாப் பெட்டியில் இருந்த ரூ.15 ஆயிரம் பணத்தையும் திருடிவிட்டு, கடையை மூடிவிட்டு சென்றுள்ளனர்.

    இன்று அதிகாலை பணம் எடுக்க ஒரு சிலர் ஏ.டி.எம்,மிற்கு வந்தனர். அங்கு ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயற்சி நடந்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இத்தகவல் காட்டுத்தீ போல பரவியது. இதையடுத்து பஸ் நிலைய பகுதியில் இருந்த கடை உரிமையாளர்கள் அனைவரும் விரைந்து வந்து, தங்கள் கடைகளில் திருட்டு ஏதேனும் நடந்ததா என சோதனை நடத்தினர்.

    அப்போது பழக்கடை மற்றும் பல்பொருள் அங்காடி ஆகியவற்றின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த உரிமையாளர்கள் இது குறித்து சங்கராபுரம் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்கராபுரம் போலீசார், முதலில் ஏ.டி.எம். மையத்தில் சோதனை நடத்தினர். தொடர்ந்து பழக்கடை, பல்பொருள் அங்காடிகளில் சோதனை நடத்தினர். அப்போது பழக்கடை மற்றும் பல்பொருள் அங்காடிகளில் கொள்ளையர்கள் மிளகாய் பொடியை தூவி சென்றதை கண்டனர்.

    இதையடுத்து விழுப்புரத்தில் இருந்த கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மேலும், தனியார் ஏ.டி.எம். நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்து அவர்களை வரவழைத்தனர். அங்கிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    சங்கராபுரத்தின் மையப்பகுதியில் மக்கள் நடமாட்டம் உள்ள பஸ் நிலையத்தில் உள்ள ஏ.டி.எம்,மில் கொள்ளை முயற்சி, அருகில் உள்ள 2 கடைகளில் திருட்டு நடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • ஏ.டி.எம். எந்திரங்களின் முகப்பு திரைகள் அப்பளம் போல் நொறுங்கின.
    • மதுபோதையில் இந்த செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    நெல்லை:

    பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் மற்றும் வி.எம்.சத்திரம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு வங்கிகளின் ஏ.டி.எம்.கள் அமைக்கப்பட்டுள்ளன.

    நேற்று நள்ளிரவு 12 மணியளவில் போதை ஆசாமி ஒருவர் கே.டி.சி நகர் பகுதியில் நடந்து சென்றுள்ளார். அங்குள்ள ஏ.டி.எம். அறைக்குள் புகுந்த அவர் எந்திரத்தின் முகப்பு ஸ்கிரீனை கல்லால் தாக்கி உடைத்துள்ளார்.

    பின்னர் அவர் வி.எம்.சத்திரம் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு இருந்த 2 ஏ.டி.எம். அறைகளிலும் புகுந்து கம்பு மற்றும் கல்லால் தாக்கி சேதப்படுத்தி உள்ளார். இதில் ஏ.டி.எம். எந்திரங்களின் முகப்பு திரைகள் அப்பளம் போல் நொறுங்கின.

    இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து உடனடியாக பெருமாள்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் ரோந்து போலீசார் மற்றும் பெருமாள்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்துள்ளனர்.

    அப்போது அந்த நபர் தன்னிலை மறந்த அளவில் மது குடித்துவிட்டு தள்ளாடியபடி நின்றுள்ளார்.அவரை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரித்தனர்.

    அப்போது, அவர் நெல்லையை அடுத்த தாழையூத்து செல்வி அம்மன்கோவில் தெருவை சேர்ந்த முத்து(வயது 50) என்பதும், ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்தால் பணத்தை எடுத்து கொள்ளலாம் என்று மதுபோதையில் இந்த செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    • ஜெயச்சந்திரன் பணத்தை வங்கி மேலாளரிடம் ஒப்படைத்தார்.
    • ஜெயச்சந்திரனின் நேர்மையை வங்கி மேலாளர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 54). ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் நேற்று காலை 10 மணிக்கு குளச்சல் மெயின் ரோட்டில் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க சென்றுள்ளார்.

    அங்கு ஏ.டி.எம். கார்டை செருக முயன்றபோது எந்திரத்தில் இருந்து தானாக பணம் வந்துள்ளது. கார்டையே செருகவில்லை, அதற்குள் பணம் வருகிறதே என ஆச்சர்யத்துடன் அவர் அந்த பணத்தை எடுத்து எண்ணி பார்த்தார்.

    அதில் 50 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தது. இது அனைத்தும் ரூ.500 நோட்டுகள் ஆகும். இந்த பணம் தன்னுடையது இல்லை என்பதால் அதனை நேர்மையுடன் ஒப்படைக்க சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்றார்.

    அங்கு பணத்தை வங்கி மேலாளரிடம் ஒப்படைத்தார். ஜெயச்சந்திரனின் நேர்மையை வங்கி மேலாளர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

    இதுகுறித்து வங்கி மேலாளர் கூறுகையில், "சம்பந்தப்பட்ட ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுப்பதோடு, டெபாசிட் செய்யும் வசதியும் உள்ளது. ஜெயச்சந்திரன் செல்வதற்கு முன்பு வாடிக்கையாளர் யாராவது பணத்தை எந்திரத்தில் டெபாசிட் செய்திருக்கலாம். ஆனால் எந்திரத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பணம் உரிய கணக்கில் டெபாசிட் ஆகாமல் இருந்திருக்கும். இது தெரியாமல் அந்த வாடிக்கையாளர் சென்றிருக்கலாம். ஜெயச்சந்திரன் சென்றபோது அந்த பணம் வெளியே வந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரை வரவழைத்து அவரது கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்" என்றார்.

    • செல்வராஜ் வருவதை பார்த்து, வெளியே காவலுக்கு நின்றிருந்த நபர் தப்பியோடிவிட்டார்.
    • போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியை அடுத்த ஜோடுகுளி பஸ் நிறுத்தம் அருகே வசித்து வருபவர் செல்வராஜ். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

    இவது வீட்டின் ஒரு பகுதியில், 2 தனியார் ஏ.டி.எம். மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு வீட்டு உரிமையாளரான செல்வராஜூக்கு தீ கருகிய வாடை வந்துள்ளது.

    இதையடுத்து வெளியே வந்து பார்த்தபோது, 2 மர்ம நபர்கள், அங்கிருந்த ஒரு ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்து எந்திரத்தை வெல்டிங் மிஷின் உதவியுடன் உடைத்து திறக்க முயன்று கொண்டிருந்தனர். மற்றொரு நபர் ஏ.டி.எம். மையத்திற்கு வெளியே காவலுக்கு நின்று கொண்டிருந்தார்.

    செல்வராஜ் வருவதை பார்த்து, வெளியே காவலுக்கு நின்றிருந்த நபர் தப்பியோடிவிட்டார். இதையடுத்து மற்ற 2 மர்ம பேரையும் ஏ.டி.எம். மையத்திற்குள்ளேயே வைத்து ஷட்டரை அடைத்து செல்வராஜ் பூட்டு போட்டார்.

    பின்னர் இதுபற்றி தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார், ஷட்டரை திறந்து, அந்த 2 நபர்களையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    2 பேரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. மேலும் தப்பியோடிய மற்றொருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    இதனிடையே, ஏ.டி.எம். கொள்ளை முயற்சி தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதனிடையே சாதுர்யமாக செயல்பட்டு வடமாநில கொள்ளையர்களை பிடிக்க உதவிய போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற பணியாளர் செல்வராஜுக்கு பாராட்டுகள் குவிகின்றன. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாரும் அவரை பாராட்டினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கூடுதல் அம்சமாக 15 நாட்கள் செயல்முறை பயிற்சியும் தருகிறார்கள்.
    • ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் நுட்பத்தை பீகாரின் சப்ரா பகுதியை சேர்ந்த சுதிர் மிஸ்ராவிடம் கற்றுக் கொண்டதாக கூறினார்.

    லக்னோ:

    சமீப காலங்களாக ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதில் அனுபவமில்லாத கொள்ளையர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதில் தோல்வி அடைகிறார்கள்.

    இவர்களை போன்று அனுபவம் இல்லாதவர்களுக்கு பீகார் மாநிலத்தில் புதுமையான பள்ளிக் கூடம் இயங்கி வருகிறது. இந்த பள்ளிக் கூடத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க 3 மாத பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் கூடுதல் அம்சமாக 15 நாட்கள் செயல்முறை பயிற்சியும் தருகிறார்கள்.

    உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த 4-ந் தேதி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த கொள்ளையர்கள் அதில் இருந்த ரூ.39.58 லட்சம் பணத்தை திருடிச் சென்றனர். சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் கொள்ளையர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது தான் இந்த புதுமையான பள்ளிக் கூடம் பற்றிய தகவல் கிடைத்தது.

    கைதான ஏ.டி.எம். கொள்ளையன் நீரஜ் என்பவரிடம் விசாரித்தபோது, அவர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் நுட்பத்தை பீகாரின் சப்ரா பகுதியை சேர்ந்த சுதிர் மிஸ்ராவிடம் கற்றுக் கொண்டதாக கூறினார்.

    வெளி மாநிலங்களை சேர்ந்த வேலையில்லா இளைஞர்களுக்கு ஏ.டி.எம். எந்திரத்தை உடைப்பது குறித்து 3 மாத பயிற்சியை சுதிர் மிஸ்ரா அளித்துள்ளார். இதனால் அவர் ஏ.டி.எம். பாபா என்றும் அழைக்கப்பட்டுள்ளார்.

    ஏ.டி.எம். அறையின் கண்ணாடிகளில் பனி படர்ந்தது போன்ற திரவத்தை அடிப்பது, அதன் பிறகு 15 நிமிடங்களுக்குள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை எடுப்பது குறித்து அவர் நேரடி பயிற்சி அளித்து உள்ளார். பயிற்சி முடித்தவர்களுக்கு 15 நாட்கள் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த பணியை 15 நிமிடங்கள் மற்றும் அதற்கு முன்பாக முடிப்பவர்கள் மட்டுமே ஏ.டி.எம். எந்திரத்தில் பணத்தை கொள்ளையடிப்பதற்கு களம் இறக்கப்படுகிறார்கள்.

    ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் கொள்ளையர்களுக்கு பயிற்சி அளித்த ஏ.டி.எம். பாபா சுதிர் மிஸ்ராவை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • பொதுமக்கள் ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
    • ஏ.டி.எம்மில் 4½ லட்சம் பணம் வைக்ப்பட்டிருந்ததாகவும் வாடிக்கையாளர்கள் எடுத்தது போக தற்போது ரூ.3½ லட்சம் இருப்பதாக தெரிவித்தார்.

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே உள்ள வெள்ளக்குட்டை கிராமத்தில் ஏ.டி.எம். மையம் உள்ளது.

    இங்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். அவர்கள் கடப்பாரையால் ஏ.டி.எம். எந்திரத்தின் முன் பகுதியை உடைத்தனர். ஆனால் பணம் இருந்த பகுதியை அவர்களால் உடைக்கமுடியவில்லை. அப்போது அங்கு வந்த பொதுமக்கள் நடமாட்டத்தால் கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    பொதுமக்கள் ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்து ஆலங்காயம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.

    அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களையும் உடைத்து எடுத்து சென்றனர். இதனால் அருகே கடையில் உள்ள கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    ஏ.டி.எம். அதிகாரி ஒருவர் வந்து ஆய்வு செய்தார். அவர் ஏ.டி.எம்மில் 4½ லட்சம் பணம் வைக்ப்பட்டிருந்ததாகவும் வாடிக்கையாளர்கள் எடுத்தது போக தற்போது ரூ.3½ லட்சம் இருப்பதாக தெரிவித்தார்.

    ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாததால் ரூ.3½ லட்சம் தப்பியது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த மாதம் 4 ஏ.டி.எம். மையங்களை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ.73 லட்சம் கொள்ளை போனது.

    இந்த வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் ரூ.67 லட்சம் பணம் மீட்கப்படவில்லை. இந்த வழக்கில் திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட தனிப்படை போலீசாரும் களம் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா தடை சம்பந்தமாக நேற்று திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று இரவு மாவட்டம் முழுவதும் விடிய விடிய போலீசார் வாகன சோதனை நடத்தினர்.

    இதற்கிடையே ஏ.டி.எம்மில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் இருக்கும் பகுதியை தெரிந்தவர்கள் மற்றும் எந்திரத்தை உடைப்பதில் கை தேர்ந்தவர்கள் தான் இதில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • அம்பத்தூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவர் ரூ.8 ஆயிரம் எடுக்க முயன்றபோது அவருக்கு கூடுதலாக ரூ.12 ஆயிரம் சேர்த்து ரூ.20 ஆயிரம் வந்தது.
    • 10-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கும் கூடுதலாக பணம் வந்தது.

    அம்பத்தூர்:

    சென்னை அம்பத்தூர் பழைய சி.டி.எச். சாலையில் இந்தியன் வங்கி உள்ளது. அதே கட்டிடத்தில் அந்த வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று அதிகாலை இந்த ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் வந்தனர்.

    அப்போது ஏ.டி.எம். எந்திரம் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட பணத்துக்கு பதிலாக தாராளமாக பணத்தை அள்ளி வழங்கியது. ஆனால் அவர்களின் செல்போனுக்கு குறிப்பிட்ட பணம் மட்டும் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது.

    இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள், போட்டி போட்டு தங்கள் ஏ.டி.எம். கார்டு மூலம் பணத்தை எடுத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    அம்பத்தூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவர் ரூ.8 ஆயிரம் எடுக்க முயன்றபோது அவருக்கு கூடுதலாக ரூ.12 ஆயிரம் சேர்த்து ரூ.20 ஆயிரம் வந்தது.

    அதேபோல் திருமுல்லைவாயலைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் ரூ.20 ஆயிரம் எடுக்க முயன்றபோது, அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.8 ஆயிரம் மட்டும் எடுக்கலாம் என ஏ.டி.எம். எந்திரத்தில் தகவல் காண்பித்தது. அதன்படி அவர் ரூ.8 ஆயிரம் எடுக்க முயன்றபோது அவருக்கும் ரூ.20 ஆயிரத்தை அள்ளி கொடுத்தது.

    இதே போல் 10-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கும் கூடுதலாக பணம் வந்தது. ஏ.டி.எம். எந்திரத்தின் இந்த தாராள பண மழையால் அங்கு ஏராளமானவர்கள் குவிந்தனர்.

    இவ்வாறு ஏ.டி.எம். மையத்தில் கூடுதலாக பணத்தை எடுத்த வாடிக்கையாளர்களில் 6 பேர் மட்டும் வங்கி திறக்கும் வரை அங்கேயே காத்திருந்து, வங்கி திறந்ததும் இது தொடர்பாக வங்கி அதிகாரிகளிடம் எழுதிகொடுத்து கூடுதலாக வந்த பணத்தை திருப்பி கொடுத்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி அதிகாரிகள், ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வைக்கும் தனியார் நிறுவன ஊழியர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்த ஏ.டி.எம். எந்திரத்தை சரிபார்த்தபோது, 200 ரூபாய் நோட்டுகள் வைக்க வேண்டிய இடத்தில் ரூ.500 நோட்டுகள் வைத்திருந்ததும், இதனால் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை வாரி வழங்கியதும் தெரியவந்தது. உடனடியாக ஏ.டி.எம்.எந்திரம் சரி செய்யப்பட்டது.

    இந்த ஏ.டி.எம். எந்திரத்தில் கூடுதலாக பணம் எடுத்தவர்கள் யார்? என்ற விவரத்தை வைத்து வங்கி அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • மும்பையில் உள்ள வங்கியின் கட்டுப்பாட்டு அறையில் அலாரம் ஒலித்துள்ளது.
    • போலீசார் விரைந்து வந்ததால் ஏ.டி.எம். மையத்தில் இருந்த பல லட்சம் பணம் தப்பியது.

    திருச்சி:

    திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலையில் இருந்து அம்மா மண்டபம் செல்லும் சாலையில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் அமைந்துள்ளது. இதனை அப்பகுதியை சேர்ந்த வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். இருந்தபோதிலும் இந்த ஏ.டி.எம். மையத்திற்கு காவலாளி யாரும் நியமிக்கப்படவில்லை.

    இந்தநிலையில் இன்று அதிகாலை சுமார் 2.45 மணியளவில் அந்த ஏ.டி.எம். மையத்திற்கு மர்ம நபர் ஒருவர் வந்தார். முகமூடி, குல்லா மற்றும் கையுறை அணிந்திருந்த அவர் கையில் கட்டிங் எந்திரம், வயர், உளி உள்ளிட்ட பொருட்களை வைத்திருந்தார். கடுமையான பனிப்பொழிவு, அதிகாலை நேரம் என்பதால் சாலையில் ஆட்கள் நடமாட்டம் துளியும் இல்லை.

    முன்னதாக உள்ளேயிருந்த கண்காணிப்பு கேமரா மீது கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி தான் பதிவாவதில் இருந்து தப்பித்தார். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அந்த மர்ம நபர், ஏ.டி.எம். மையத்திற்குள் சென்று சாவகாசமாக தான் கொண்டு வந்திருந்த வயரை அந்த எந்திரத்திற்கு பின்னால் இணைத்து கட்டிங் எந்திரம் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தின் போல்ட்டுகளை கழற்றியுள்ளார். மேலும் பணம் வைக்கப்பட்டிருக்கும் கவச பெட்டியையும் உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    இதற்கிடையே மும்பையில் உள்ள இந்த வங்கியின் கட்டுப்பாட்டு அறையில் அலாரம் ஒலித்துள்ளது. உடனே உஷாரான அந்த அறையில் பணியில் இருந்த ஊழியர்கள் கேமராவை கண்காணித்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் ஏ.டி.எம். மையத்தினை உடைத்து கொண்டிருந்ததை பார்த்துவிட்டனர். உடனடியாக அவர்கள் திருச்சி நெம்பர் 1 டோல்கேட் தனியார் வங்கி கிளை மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் வங்கி மேலாளர் ஸ்ரீரங்கம் போலீசாரை செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். அடுத்த விநாடி மின்னல் வேகத்தில் செயல்பட்ட ஸ்ரீரங்கம் போலீசார், ரோந்து போலீசார் ஆகியோர் கொள்ளை முயற்சி நடந்த ஏ.டி.எம். மையத்தை நோக்கி சென்றனர். அதற்குள் சுதாரித்துக்கொண்ட கொள்ளையன் அங்கிருந்த நைசாக தப்பிவிட்டார். போலீசார் வந்து பார்த்தபோது அங்கு வயர், கட்டிங் எந்திரம் மட்டும் கிடந்தது.

    போலீசார் விரைந்து வந்ததால் ஏ.டி.எம். மையத்தில் இருந்த பல லட்சம் பணம் தப்பியது. இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதல்கட்ட விசாரணையை தொடங்கினர்.

    இதில் ஏ.டி.எம். மையத்திற்குள் அந்த மர்ம நபர் நுழைவது, உள்ளே இருந்த கேமராவை கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி மறைப்பது, கொள்ளையனின் கண்கள் ஆகியவையும், அவசரம் அவசரமாக அந்த நபர் வெளியேறும் காட்சியும் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் கொள்ளையனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மேலும் சம்பவம் நடந்த ஏ.டி.எம். மையத்தை ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் நிவேதா லட்சுமி, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பெரியசாமி ஆகியோர் பார்வையிட்டனர். இன்று அதிகாலை ஏ.டி.எம். மையத்தில் நடந்த கொள்ளை முயற்சி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

      திருப்பதி:

      ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் அடுத்த பொந்தூர் பகுதியை சேர்ந்தவர் சத்யநாராயணா. விவசாயி. இவர் ஸ்ரீகாக்குளம் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்துள்ளார்.

      இந்த நிலையில் நேற்று மாலை வங்கி ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க முயன்றார். ஆனால் பல முறை முயற்சி செய்தும் ஏ.டி.எம் எந்திரத்தில் இருந்து பணம் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சத்திய நாராயணா அருகில் இருந்த நாற்காலியை எடுத்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தார்.

      இதில் எந்திரம் சேதமடைந்தது. அங்கிருந்த ஏ.டி.எம். காவலாளி இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து சத்ய நாராயணாவிடமிருந்த நாற்காலியை பிடுங்கிக் கொண்டு, இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

      போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சத்திய நாராயணனை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். குறிப்பிட்ட வங்கியில் கணக்கு தொடங்கி பணம் டெபாசிட் செய்து வைத்து இருக்கிறேன்.

      ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க பலமுறை முயன்றும் பணம் வரவில்லை. என்னுடைய தேவைக்காக தான் வங்கியில் பணத்தை டெபாசிட் செய்து வைத்திருந்தேன். ஆனால் என்னுடைய அவசர செலவுக்கு பணம் கிடைக்காததால் ஆத்திரத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை சேதப்படுத்தியதாக தெரிவித்தார்.

      மேலும் ஏ.டி.எம்.மில் பணத்தை நிரப்பாத வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

      இதையடுத்து போலீசார் சத்திய நாராயணாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

      ×