search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏ.டி.எம்"

    • துரை நேரு வீதியில் உள்ள ஒரு வங்கியில் ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பதற்காக வந்தார்.
    • மொபைல் எண்ணிற்கு இருபதாயிரம் பணம் எடுத்ததற்காக குறுஞ்செய்தி வந்தது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த பெலாகுப்பம் பகுதியை சேர்ந்த துரை (வயது 70). இவர் திண்டிவனம் நேரு வீதியில் உள்ள ஒரு வங்கியில் ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பதற்காக வந்தார். அவருக்கு ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கத் தெரியாததால் அருகே இருந்த டிப்டாப் நபர் ஒருவரை தனது ஏ.டி.எம்.மில் இருந்து பணம் எடுத்து தர தெரிவித்துள்ளார். இதன் பெயரில் அந்த மர்ம நபர் ஏ.டி.எம்.மில் பணம் இல்லை என கூறி உள்ளார். இந்த நிலையில் துரை அருகே இருக்கும் வேறு ஒரு வங்கியில் பணம் எடுப்பதற்காக சென்றார். இந்த நிலையில் அவரது மொபைல் எண்ணிற்கு இருபதாயிரம் பணம் எடுத்ததற்காக குறுஞ்செய்தி வந்தது.

    அந்த செய்தியை அரசு வங்கியில் காண்பித்த போது அதில் 20 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்து விட்டதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். துரை வைத்திருந்த ஏ.டி.எம். வேறு வங்கி ஏ.டி.எம். என அதிகாரிகள் தெரிவித்தனர். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த துரை திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • ஏ.டி.எம்.மையத்துக்கு வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க சென்றனர்.
    • ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    கோவை 

    கோவை நஞ்சப்பா ரோட்டில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது.

    சம்பவத்தன்று இந்த ஏ.டி.எம்.மையத்துக்கு வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க சென்றனர். அப்போது ஏ.டி.எம் எந்திரம் உடைக்கப்பட்டு இருந்தது.

    இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் இது குறித்து வங்கி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வங்கி அதிகாரிகள் ஏ.டி.எம். மையத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர்.

    அப்போது யாரோ மர்ம நபர் ஏடிஎம் எந்த எந்திரத்தில் பணம் வைக்கும் அறையை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயற்சி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வங்கி அதிகாரிகள் காட்டூர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அதில், அதிகாலை 3 மணியளவில் உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர் தான் கொண்டு சென்ற ஆயுதத்தால் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயற்சி செய்ததும், முடியாததால் அங்கிருந்து சென்றதும் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றிய போலீசார் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயன்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • செயல்படாத ஏ.டி.எம்.மையத்தால் கிராம மக்கள் அவதிபடுகின்றனர்
    • பொதுமக்கள் வங்கி வாசலில் காத்திருக்கின்றனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள திருவரங்குளத்தி ல் தனியார் வங்கி ஒன்று இயங்கி வருகிறது. அந்த வங்கியில் அப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பண பரிவர்த்தனை செய்து வருகி ன்றனர்.

    இந்நிலையில் அங்குள்ள வங்கியில் ஏ.டி.எம். மெஷின் கடந்த நான்கு நாட்களாக செயல்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற் றம்சாட்டி வருகின்றனர்.

    இதைதொடர்ந்து வங்கியின் பொதுமக்கள் கேட்கும் போது, மெஷின் பழுதாகி விட்டது. நாங்கள் தகவல் கூறிவிட்டோம் ஆனால் இதுவரை வந்து சரி செய்யப்படவில்லை என்று அவர்கள் தரப்பில் கூறி வருகின்றனர்.

    ஏ.டி.எம் எந்திரத்தில் பணம் எடுக்க வேண்டும் என்றால் திருவரங்குளத்தில் இருந்து புதுக்கோட்டை 10 கிலோமீட்டர் ஆலங்குடி 10 கிலோமீட்டர் செல்ல வேண்டும். இதனால் மக்கள் தினந்தோறும் அல்லல்பட்டு வருகின்றனர். ஏடிஎம் பணம் எடுப்பதற்கு தினந்தோறும் பொதுமக்கள் வங்கி வாசலில் காத்திருக்கின்றனர். பொதுமக்கள் நலன் கருதி வங்கி மேலாளர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியின் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • வங்கிகளின் ஏ.டி.எம்., மையங்களில் சில நேரங்களில், பணம் எடுக்க முடியாமல் நெட் ஒர்க் பிரச்சினை ஏற்படுகிறது
    • ஏ.டி.எம்., எந்திரங்களில், பெரும்பாலும் 500 ரூபாய் நோட்டுகள் தான் வருகிறது.

    அவினாசி :

    தன்னார்வ நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளுடன், திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், காலாண்டு கூட்டம் நடத்தினார்.

    இதில் கன்ஸ்யூமர்ஸ் கேர் அசோசியேசன் சார்பில் அதன் தலைவர் காதர்பாட்சா, பொது செயலர் ராமலிங்கம், நியமன செயலர் கிறிஸ்டோபர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கை வருமாறு:-சில வங்கிகளின் ஏ.டி.எம்., மையங்களில் சில நேரங்களில், பணம் எடுக்க முடியாமல் நெட் ஒர்க் பிரச்சினை ஏற்படுகிறது. இதனால் பென்ஷனர்கள், மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஏ.டி.எம்., எந்திரங்களில், பெரும்பாலும் 500 ரூபாய் நோட்டுகள் தான் வருகிறது.

    சில்லரை செலவினங்களுக்கு தேவையான10, 20, 50, 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் கிடைப்பதில்லை. இதுவும் பல வகைகளில் பிரச்சினையாகவே உள்ளது.எனவே அருகேயுள்ள வங்கி கிளைகளில் 500 ரூபாய் நோட்டுகளுக்கு சில்லரை நோட்டு தரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது, ஏ.டி.எம்., மையங்களில் சில்லரை ரூபாய் நோட்டுகள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.கூட்டத்தில் நுகர்வோர் சார்ந்த செயல்பாடுகளில் சிறப்புற செயல்பட்டமைக்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்ட பாராட்டுச்சான்று, விருது, கேடயம் ஆகியவற்றை சங்க தலைவர் காதர்பாட்சா பெற்று கொண்டார்.

    ×