search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Argentina"

    உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் 3-வது சுற்றில் அர்ஜென்டினா, போர்ச்சுக்கல் அணிகள் வெற்றி பெற்றால் மெஸ்சியும் ரொனால்டோவும் கால் இறுதியில் நேருக்கு நேர் மோதுவார்கள். #FifaWorldCup2018 #FIFA2018 #Ronaldo #Messi
    உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்கள் லியோனஸ் மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ. அர்ஜென்டினா கேப்டனான மெஸ்சி பார்சிலோனா கிஸ்டிக்காவும், போர்ச்சுக்கல் கேப்டனான ரொனால்டோ ரியல் மாட்ரீட் அணிக்காகவும் ஆடுகிறார்.

    இந்த உலகக்கோப்பையில் இருவரும் நேருக்கு நேர் மோதுவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது. அர்ஜென்டினா 2-வது சுற்றில் பிரான்சுடனும், போர்ச்சுக்கல் அணி உருகுவேயுடனும் மோதுகின்றன. இந்த ஆட்டங்கள் 30-ந்தேதி நடக்கிறது.

    3-வது சுற்றில் அர்ஜென்டினா, போர்ச்சுக்கல் அணிகள் வெற்றி பெற்றால் மெஸ்சியும் ரொனால்டோவும் கால் இறுதியில் நேருக்கு நேர் மோதுவார்கள். பிரான்ஸ் அணி மிகவும் வலுவாக இருப்பதால் அர்ஜென்டினாவுக்கு மிகவும் கடினமே. ஆனால் மெஸ்சி தனது அபாரமான ஆட்டத்திறமையை வெளிப்படுத்தினால் பிரான்சால் தடுக்க முடியாது. #FifaWorldCup2018 #FIFA2018 #Ronaldo #Messi
    ரஷியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ‘சி’ பிரிவில் நேற்று நடந்த லீக் போட்டியில் நைஜீரியாவை 2-1 என வீழ்த்திய அர்ஜெண்டினா அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது. #NGAARG #WorldCup2018 #FIFA2018

    மாஸ்கோ:

    உலகக்கோப்பை கால்பந்து தொடர் போட்டிகள் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நான்கு லீக் போட்டிகள் நடைபெற்றது. முதல் லீக் ஆட்டத்தில் பெரு, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. டென்மார்க், பிரான்ஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது லீக் போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து மூன்றாவது லீக் ‘டி’ பிரிவில் இடம்பிடித்துள்ள அர்ஜெண்டினா, நைஜீரியா அணிகள் பலப்பரீட்சை செய்தன.

    இரு அணிகளும் இந்த போட்டியில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்துடன் களமிறங்கின. அர்ஜெண்டினா அணியின் கேப்டன் மெஸ்சி முதல் இரண்டு லீக் போட்டிகளில் ஒரு கோல் கூட அடிக்காமல் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். இதனால் இந்த போட்டியில் அவர் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருந்தது.

    இப்போட்டி தொடங்கியதில் இருந்தே அர்ஜெண்டினா வீரர்கள் பந்தை முடிந்த அளவு தங்கள் வசமே வைத்திருந்தனர். 14-வது நிமிடத்தில் 
    அர்ஜெண்டினா அணிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் மெஸ்சி சிறப்பான முறையில் ஒரு கோல் அடித்தார். இதனால் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். 



    அதன்பின், முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. இதனால் அர்ஜெண்டினா 1-0 என முன்னிலை வகித்தது.

    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் நைஜீரியா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் நைஜீரியா வீரர் விக்டர் மோசஸ் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது. 



    அதன்பின் 87-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் மார்கஸ் ரோஜோ கோல் அடித்தார். இதனால் அர்ஜெண்டினா அணி 2-1 என முன்னிலை பெற்றது.



    அதன்பின் எந்த கோலும் அடிக்கப்படாததால் அர்ஜெண்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முன்னதாக நடந்த மற்றொரு டி பிரிவு ஆட்டத்தில் குரோசியா அணி ஐஸ்லாந்தை வீழ்த்தியது. இதனால் இந்த பிரிவில் இரண்டாவது இடத்தை பிடித்த அர்ஜெண்டினா அணி நாக்-அவுட் சுற்றுக்கு தகுதிப்பெற்றது #NGAARG #WorldCup2018 #FIFA2018
    உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடக்கும் முக்கியமான ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி ஆப்பிரிக்க அணியான நைஜீரியாவை எதிர்கொள்கிறது. #FIFA2018 #Argentina #Messi #Nigeria

    ‘சி’ பிரிவில் முன்னாள் சாம்பியன் பிரான்ஸ் அணி 2 வெற்றிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறி விட்டது. இந்த பிரிவில் அடுத்த சுற்றை எட்டும் இன்னொரு அணி எது என்பது இன்று இரவு தெரிந்து விடும். 4 புள்ளிகளுடன் உள்ள டென்மார்க் அணி பிரான்சுடன் டிரா செய்தாலே நாக்-அவுட் சுற்றை அடைந்து விடலாம். அதே சமயம் ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை அதிக கோல்கள் வித்தியாசத்தில் பெருவை வீழ்த்த வேண்டும், பிரான்ஸ் அணி, டென்மார்க்கை சாய்க்க வேண்டும். இவ்வாறு நிகழ்ந்தால் ஆஸ்திரேலியா, டென்மார்க் தலா 4 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கும். அப்போது கோல் விகிதாச்சாரம் அடிப்படையில் ஒரு அணிக்கு அதிர்ஷ்டம் கிட்டும்.

    ‘டி’ பிரிவில் முக்கியமான ஆட்டம் ஒன்றில் 2 முறை சாம்பியனான அர்ஜென்டினா அணி, ஆப்பிரிக்க அணியான நைஜீரியாவை எதிர்கொள்கிறது. ஐஸ்லாந்துடன் டிரா கண்டு, குரோஷியாவுடன் படுதோல்வி அடைந்த அர்ஜென்டினா (1 புள்ளி) இன்றைய தனது கடைசி லீக்கில் கட்டாயம் வென்றாக வேண்டிய உச்சக்கட்ட நெருக்கடியில் உள்ளது. அப்போது தான் அடுத்த சுற்று வாய்ப்பு பற்றி நினைத்து பார்க்க முடியும். முதல் இரு ஆட்டங்களிலும் சொதப்பிய அர்ஜென்டினாவின் நட்சத்திர ஆட்டக்காரர் லயோனல் மெஸ்சி இந்த ஆட்டத்திலாவது ஜொலிப்பாரா? என்ற ஏக்கத்துடன் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். தங்கள் அணியை அவர் வெற்றிகரமாக கரைசேர்க்க தவறினால் இத்துடன் அவரது சர்வதேச கால்பந்து வாழ்க்கை முடிந்து போகும் ஆபத்து கூட இருக்கிறது. அதே சமயம் அர்ஜென்டினாவுக்கு ‘ஆப்பு’ வைத்து அடுத்த சுற்றுக்குள் நுழைவதில் நைஜீரியா இளம் படையினரும் கங்கணம் கட்டி நிற்பதால் இந்த ஆட்டத்தில் அனல்பறக்கும் என்று நம்பலாம்.

    ஏற்கனவே 2-வது சுற்றை உறுதி செய்து விட்ட பலம் வாய்ந்த குரோஷியா அணி, கடைசி லீக்கில் ஐஸ்லாந்துடன் மோதுகிறது. இதில் குரோஷியா எளிதில் வெற்றி காணும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஒரு வேளை ஐஸ்லாந்து அதிர்ச்சி அளித்தால், அர்ஜென்டினாவுக்கு சிக்கல் உருவாகும். #FIFA2018 #Argentina #Messi #Nigeria
    நெதர்லாந்து நாட்டில் நடைபெற்றுவரும் ஹாக்கி சாம்பியஸ் கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா, அர்ஜெண்டினாவை 2-1 என வீழ்த்தியது. #HCT2018 #INDvARG #ARGvIND

    ப்ரீடா:

    சாம்பியஸ் கோப்பை ஹாக்கி தொடர் நெதர்லாந்து நாட்டின் ப்ரீடா நகரில் நேற்று தொடங்கியது. இதில் இந்தியா, பாகிஸ்தான், அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய ஆறு அணிகள் கலந்துகொண்டுள்ளன. நேற்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா, அர்ஜெண்டினாவை எதிர்கொண்டது.

    இப்போட்டி தொடங்கியதில் இருந்தே இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிகாட்டினர். முதல் பாதிநேர ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் இந்திய வீரர் ஹர்மன்பிரீத் சிங் இந்திய அணிக்காக முதல் கோல் அடித்தார். அதன்பின் 28-வது நிமிடத்தில் இந்திய வீரர் மந்தீப் சிங் கோல் அடித்தார்.



    அதைத்தொடர்ந்து 29-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணியினர் கோல் அடித்தனர். இதனால் முதல் பாதிநேர ஆட்ட முடிவில் இந்தியா 2-1 என முன்னிலை வகித்தது.

    அதைத்தொடர்ந்து இரண்டாவது பாதிநேர ஆட்டம் நடைபெற்றது. அதன் முதல் கால் பகுதிநேர ஆட்டத்தில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமாகவே அமைந்தது. இதனால் கடைசி 15 நிமிட ஆட்டத்தில் இரு அணியினரும் அதிரடியாக விளையாடினர். 

    இருப்பினும் இறுதிவரை யாரும் கோல் அடிக்காததால், இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. வருகிற 27-ம் தேதி நடைபெறும் லீக் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. #HCT2018 #INDvARG #ARGvIND
    உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மெஸ்சியின் அணி தோற்ற விரக்தியில் வீட்டைவிட்டு வெளியேறி தற்கொலை செய்துகொண்ட கேரள வாலிபரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. #FIFA2018 #LionelMessi #Argentina #KeralaFanSuicide

    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலத்தின் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த தினு அலெக்ஸ் என்ற வாலிபர் அர்ஜெண்டினா அணியின் ஆதரவாளராக இருந்தார். குறிப்பாக அந்த அணியின் கேப்டன் மெஸ்சியின் தீவிர ரசிகராக இருந்தார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் அர்ஜெண்டினா அணி தோல்வியடைந்தது. 

    இதனால் மனமுடைந்த அலெக்ஸ் தற்கொலை கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேறினார். அந்த தற்கொலை கடிதத்தில் மெஸ்சி தோற்தை என்னால் தாங்க முடியவில்லை. அதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. 


    தற்கொலை செய்துகொண்ட தினு அலெக்ஸ்

    இது குறித்து பேசிய அலெக்சின் தந்தை, அலெக்ஸ் மெஸ்சியின் தீவிர ரசிகன். அவன் அணி தோல்வியடைந்ததை அடுத்து மிகவும் மனமுடைந்து காணப்பட்டான் என கூறினார். இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுனர். அதற்காக மோப்ப நாய் பயன்படுத்தப்பட்டது. அந்த நாய் அலெக்ஸ் வீட்டின் அருகே உள்ள ஆறுவரை சென்று நின்றுவிட்டது. இதனால் அவர் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என கூறப்பட்டது.

    இந்நிலையில், அவரது வீட்டின் அருகே உள்ள ஆற்றில் இருந்து அலெக்சின் உடல் இன்று கண்டெடுக்கப்பட்டது. அவர் குதித்ததாக கூறப்படும் இடத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அவரது உடலை மீட்புப்படையினர் கண்டெடுத்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    கால்பந்து போட்டியில் மெஸ்சி அணி தோற்ற விரக்தியில் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்திகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #FIFA2018 #LionelMessi #Argentina #KeralaFanSuicide
    உலக கோப்பை இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி இங்கிலாந்தை சந்திக்கும் என்று தான் நம்புவதாக இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் பெக்காம் கூறியுள்ளார்.
    பீஜிங்:

    விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சீனா சென்றிருந்த இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் பெக்காமிடம், 2018-ம்ஆண்டு உலக கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தில் எந்த அணிகள் மோதுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி இங்கிலாந்தை சந்திக்கும் என்று நம்புகிறேன்’ என்று பதில் அளித்தார். மேலும் அவர், ‘இங்கிலாந்து அணி இந்த உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம்.



    தொடக்க லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இளம் வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணிக்கு நிறைய அனுபவம் கிடையாது. பெரிய அணிகளை சந்திக்க வேண்டி இருப்பதால் இங்கிலாந்துக்கு இந்த உலக கோப்பை பயணம் இனி தான் கடினமாக இருக்கும்’ என்றார். 
    அர்ஜெண்டினாவை சேர்ந்த டென்னிஸ் வீரரான நிகோலஸ் கிக்கர் மேட்ச் பிங்சிங்கில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு ஆறு ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. #NicolasKicker #Argentinatennisplayer #matchfixing

    அர்ஜெண்டினாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் நிகோலஸ் கிக்கர். 25 வயதாகும் அவர் கடந்த 2015-ம் ஆண்டு இத்தாலி மற்றும் கொலம்பியாவில் நடைபெற்ற ஏடிபி சேலஞ்சர் போட்டிகளில் மேட்ச் பிங்சிங்கில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

    இதையடுத்து டென்னிஸ் ஒருங்கிணைப்பு குழு சார்பில் அவர் மீது விசாரணை நடத்தப்பட்டது. நிகோலஸ் இந்த விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை என கூறப்படுகிறது. 



    இந்நிலையில், நிகோலஸ் மேட்ச் பிங்சிங்கில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டுள்ளதாக டென்னிஸ் ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது. இதையடுத்து அவர் ஆறு ஆண்டுகள் விளையாட டென்னிஸ் ஒருங்கிணைப்பு குழு தடை விதித்துள்ளது. அதோடு 25 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

    அவருக்கு விதிக்கப்பட்ட ஆறு ஆண்டு தடை பாதியாக குறைக்கப்படுவதாகவும் டென்னிஸ் ஒருங்கிணைப்பு குழு பின்னர் அறிவித்தது. இதனால் அவர் வருகிற 2021-ம் ஆண்டு மே மாதம் மீண்டும் சர்வதேச போட்டிகளில் களமிறங்கலாம் என கூறப்பட்டுள்ளது. #NicolasKicker #Argentinatennisplayer #match
    அர்ஜென்டினா அணி ஐஸ்லாந்திடம் டிரா கண்டது அவமானமாகும். இந்த ஆட்டத்தில் நான் எந்த வீரரையும் குறை சொல்ல மாட்டேன் என அர்ஜென்டினா அணியின் முன்னாள் ஜாம்பவான் மரடோனா கூறியுள்ளார். #DiegoMarodona #Argentina
    மாஸ்கோ:

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் தனது முதலாவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினா அணி 1-1 என்ற கோல் கணக்கில் குட்டி தேசமான ஐஸ்லாந்துடன் டிரா கண்டது. இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி பெனால்டி வாய்ப்பை கோட்டை விட்டார்.



    இந்த ஆட்டம் குறித்து அர்ஜென்டினா அணியின் முன்னாள் ஜாம்பவான் மரடோனா கருத்து தெரிவிக்கையில்,

    ‘ஐஸ்லாந்து அணியுடன் டிரா கண்டது அவமானமாகும். இந்த ஆட்டத்தில் நான் எந்த வீரரையும் குறை சொல்ல மாட்டேன். மெஸ்சி பெனால்டி வாய்ப்பை தவறவிட்டது தான் வெற்றி கிடைக்காமல் போனதற்கு காரணம் என்று நினைக்கவில்லை. எதிரணிக்கு தகுந்த படி ஆட்ட யுக்தியை அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் அமல்படுத்தவில்லை. இந்த மாதிரி தொடர்ந்து விளையாடினால் அர்ஜென்டினா அணி நாடு திரும்ப முடியாது’ என்றார்.  #DiegoMarodona #Argentina
    உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ‘டி’ பிரிவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அர்ஜென்டினா மற்றும் ஐஸ்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. #FIFA2018 #WolrdCup2018 #ARGvsICE
    உலக கோப்பை கால்பந்து போட்டியில் மாலை 6.30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் ‘டி’ பிரிவில் உள்ள அர்ஜென்டினா மற்றும் ஐஸ்லாந்து மோதின.

    ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் செர்ஜியோ அகிரோ ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, சிறிது நேரத்திலேயே ஐஸ்லாந்து அணியின் ஆல்பிரட் பின்பகாசன் 23-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் சமனிலை அடைந்தன. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமனிலையில் இருந்தன.

    இதையடுத்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இறுதியில், அர்ஜென்டினா மற்றும் ஐஸ்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி 1-1 என்ற கணக்கில் சமனிலை அடைந்தது.

    ஐஸ்லாந்து அணி முதல் முறையாக உலகக் கோப்பையில் விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #FIFA2018 #WolrdCup2018 #ARGvsICE
    இஸ்ரேல் - அர்ஜெண்டினா அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த பீபா கால்பந்து பயிற்சி ஆட்டம் காஸா வன்முறையில் 123 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளது. #ArgentinavsIsrael #FIFAWorldCup #WarmUpMatch #GazaViolence

    ஜெருசலேம்:

    21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி வருகிற 14-ந் தேதி ரஷியாவில் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் அணிகள் வெவ்வேறு அணிகளுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. அந்த வகையில் வருகிற 9-ம் தேதி இஸ்ரேல் - அர்ஜெண்டினா அணிகள் பயிற்சி ஆட்டத்தில் விளையாட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த போட்டி ஜெருசலேம் நகரில் நடைபெறுவதாக இருந்தது.

    இந்நிலையில், இந்த போட்டியில் அர்ஜெண்டினா அணி விளையாடுவதற்கு பாலஸ்தீன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், அப்படி அர்ஜெண்டினா அணி ஜெருசலேம் நகரில் கால்பந்து விளையாடினால் அர்ஜெண்டினா நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சியின் ஜெர்சி மற்றும் படத்திற்கு தீவைக்குமாறு பாலஸ்தீன அரசியல் தலைவர் ஒருவர் தெரிவித்தார். 

    இதையடுத்து, இஸ்ரேல் உடனான பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்வதாக அர்ஜெண்டினா அறிவித்துள்ளது.  இஸ்ரேல் - பாலஸ்தீன எல்லையான காஸா முனைப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் மற்றும் பாலஸ்தீன மக்கள் இடையே மோதல் நடந்து வருகிறது. சமீபத்தில், இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலில் 123 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #ArgentinavsIsrael #FIFAWorldCup #WarmUpMatch #GazaViolence
    உலகக் கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் ஹைதி அணிக்கு எதிராக அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி ஹாட்ரிக் கோல் அடித்துள்ளார். #WorldCup2018 #Messi
    உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் அடுத்த மாதம் 14-ந்தேதி முதல் ஜூலை மாதம் 15-ந்தேதி வரை நடக்கிறது. இதில் 32 அணிகள் பங்கேற்று விளையாடுகிறது.

    உலகக் கோப்பை தொடருக்கு முன் தற்போது நட்பு ரீதியிலான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. நேற்று நள்ளிரவு நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜென்டினா - ஹைதி அணிகள் மோதின. இதில் அர்ஜென்டினா 4-0 என வெற்றி பெற்றது.

    ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவிற்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி மெஸ்சி கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் அர்ஜென்டினா 1-0 என முன்னிலைப் பெற்றது.



    2-வது பாதி நேரத்தில் அர்ஜென்டினா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 58-வது மற்றும் 66-வது நிமிடத்தில் மெஸ்சி அடுத்தடுத்து கோல் அடித்தார். மெஸ்சியின் ஹாட்ரிக் கோலால் அர்ஜென்டினா 3-0 என முன்னிலைப் பெற்றிருந்தது. 69-வது நிமிடத்தில் செர்ஜியோ அக்யூரோ ஒரு கோல் அடிக்க 4-0 என வெற்றி பெற்றது.
    ×