search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அர்ஜெண்டினா"

    அர்ஜெண்டினாவில் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கும் மசோதா அந்நாட்டு பாராளுமன்ற செனட் சபையில் தோல்வியடைந்தது.
    பியூனோ அய்ர்ஸ்:

    சட்டத்திற்கு புறம்பாக கருக்கலைப்பு செய்யும் பெண்ணுக்கும், மருத்துவருக்கும் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும் சட்டம் அர்ஜெண்டினாவில் அமலில் இருந்து வருகிறது. கருக்கலைப்பின் போது பெண்களின் உயிர் பறிபோவதை தடுக்கும் நோக்கில் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது.

    ஆனால், தங்களுக்கு கருக்கலைப்பு சுதந்திரம் வழங்கக் கோரி கடந்த சில மாதங்களாகவே அர்ஜெண்டினாவில் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், போராட்டம் வலுத்ததன் காரணமாக கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கும் மசோதா பாராளுமன்ற செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. 

    இந்த மசோதாவில்,14 வார கருவை கலைக்க சட்டபூர்வ அனுமதி உண்டு என்ற அம்சம் இடம்பெற்றிருந்தது. இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு இன்று நடந்த நிலையில், மசோதாவுக்கு ஆதரவாக 31 வாக்குகளும், எதிராக 38 வாக்குகளும் விழுந்தது. இதனால், மசோதா தோல்வியடைந்தது. 

    உடல்நலம் மிகவும் குன்றிய பெண்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களுக்கு கருக்கலைப்பு செய்வதற்கு மட்டுமே அர்ஜெண்டினாவில் அனுமதி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது
    உலகக்கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றில் முன்னாள் சாம்பியன்கள் அர்ஜெண்டினா மற்றும் பிரான்ஸ் அணி மோத உள்ளதால் இன்றைய ஆட்டம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #worldcup2018 #LionelMessi #argentinavsfrance
    ரஷியாவில் நடந்து வரும் 2-வது உலக கோப்பை கால் பந்து போட்டியில் 32 அணிகள் பங்கேற்றன. இதன் லீக் ஆட்டங்கள் கடந்த 28-ந்தேதியுடன் முடிவடைந்தது. இதில் 2-வது சுற்றுக்கு உருகுவே, ரஷியா (‘ஏ’ பிரிவு), ஸ்பெயின், போர்ச்சுக்கல் (பி), பிரான்ஸ், டென்மார்க் (சி), குரோஷியா, அர்ஜென்டினா (டி), பிரேசில், சுவிட்சர்லாந்து (இ), சுவீடன், மெக்சிகோ (எப்), பெல்ஜியம், இங்கிலாந்து (ஜி), கொலம்பியா, ஐப்பான் (எச்) ஆகிய 16 அணிகள் தகுதி பெற்றன.

    நடப்பு சாம்பியனான ஜெர்மனி, சவுதி அரேபியா, எகிப்து, ஈரான், மொராக்கோ, பெரு, ஆஸ்திரேலியா, நைஜீரியா, ஐஸ்லாந்து, செர்பியா, கோஸ்டாரிகா, தென்கொரியா, துனிசியா, பனாமா, செனகல், போலந்து ஆகிய 16 அணிகள் முதல் சுற்றோடு வெளியேறின.

    2-வது சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. இதில் தோல்வி அடையும் அணி போட்டியில் இருந்து வெளியேறும். இதனால் ஒவ்வொரு ஆட்டமும் பரபரப்பாக இருக்கும். இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன.

    இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் முதலிடம் பிடித்த பிரான்ஸ்-’டி’ பிரிவில் 2-ம் இடம் பிடித்த அர்ஜென்டினா அணிகள் மோது கின்றன. இரண்டு முறை சாம்பியனான அர்ஜென்டினா லீக் சுற்றில் தொடக்கத்தில் திணறியது. ஐஸ்லாந்துடன் டிரா செய்த அந்த அணி குரோஷியாவிடம் தோற்றது.

    அடுத்து நைஜீரியாவிடம் போராடி வென்று 2-வது சுற்றுக்குள் நுழைந்தது. அர்ஜென்டினா அணியில் கேப்டன் மெஸ்சி நட்சத்திர வீரராக உள்ளார். முதல் 2 ஆட்டத்தில் சொபிக்க தவறிய அவர் கடைசி போட்டியில் ஒரு கோல் அடித்து பார்முக்கு திரும்பி உள்ளார். அவருக்கு ஏஞ்சல்டிமரியா, மார்கஸ் ரோஜோ ஆகியோர் பக்க பலமாக உள்ளனர். இதனால் பலம் வாய்ந்த பிரான்ஸ் அணியை வீழ்த்தி கால் இறுதிக்குள் அர்ஜென்டினா நுழையுமா என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    ஆனால் பிரான்சின் தடுப்பு ஆட்டத்தை உடைத்து கோல் அடிப்பது கடும் சவாலாக இருக்கும். இதில் மெஸ்சி ஜொலிப்பது மிகவும் அவசியம்.

    முன்னாள் சாம்பியன் பிரான்ஸ் பலம் வாய்ந்து இருக்கிறது. லீக் சுற்றில் ஆஸ்திரேலியா, பெரு அணிகளை வீழ்த்தியது. டென்மார்க்குடன் டிரா செய்தது. அந்த அணிக்கு 2-வது சுற்றில் இருந்துதான் சவால் ஆரம்பமாகிறது. நட்சத்திர வீரர் கிரிஸ்மான் தனது முழு திறமையை இன்றும் நிரூபிக்கவில்லை. பால்போக்பா, பாப்பே, ஆலிவர் ஜுரூட் நல்ல நிலையில் உள்ளனர். பிரான்ஸ் அணி தடுப்பு மற்றும் தாக்குதல் ஆட்டம் என இரண்டிலும் சிறப்பாகவே இருக்கிறது.

    இதனால் கால் இறுதிக்குள் நுழையும் வேட்கையுடன் அந்த அணி உள்ளது. முன்னாள் சாம்பியன் அணிகள் மோதுவதால் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

    இப்போட்டி குறித்து பிரான்ஸ் பயிற்சியாளர் டெஸ்சாம்ப்ன்ஸ் கூறியதாவது-

    அர்ஜென்டினா மற்றும் மெஸ்சிக்கு எதிராக களத்தில் விளையாடும் போது அவரை தடுக்க பல்வேறு வழிகளை செயல்படுத்த வேண்டும். அவர் ஆட்டத்தில் வித்தியாசத்தை காட்டுவார் என்பதை அறிவோம் என்றார். #worldcup2018 #LionelMessi #argentinavsfrance

    உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜெண்டினா அணிக்கு போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். #CristianoRonaldo #NGAARG #WorldCup2018
    மாஸ்கோ:

    உலகக்கோப்பை கால்பந்து தொடர் போட்டிகள் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நான்கு லீக் போட்டிகள் நடைபெற்றது. முதல் லீக் ஆட்டத்தில் பெரு, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. டென்மார்க், பிரான்ஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது லீக் போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து மூன்றாவது லீக் ‘டி’ பிரிவில் இடம்பிடித்துள்ள அர்ஜெண்டினா, நைஜீரியா அணிகள் பலப்பரீட்சை செய்தன.

    இரு அணிகளும் இந்த போட்டியில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்துடன் களமிறங்கின.

    இப்போட்டி தொடங்கியதில் இருந்தே அர்ஜெண்டினா வீரர்கள் பந்தை முடிந்த அளவு தங்கள் வசமே வைத்திருந்தனர். 14-வது நிமிடத்தில்
    அர்ஜெண்டினா அணிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் மெஸ்சி சிறப்பான முறையில் ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் நைஜீரியா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் நைஜீரியா வீரர் விக்டர் மோசஸ் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது.



    அதன்பின் 87-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் மார்கஸ் ரோஜோ கோல் அடித்தார். இதனால் அர்ஜெண்டினா அணி 2-1 என முன்னிலை பெற்றது.
    அதன்பின் எந்த கோலும் அடிக்கப்படாததால் அர்ஜெண்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முன்னதாக நடந்த மற்றொரு டி பிரிவு ஆட்டத்தில் குரோசியா அணி ஐஸ்லாந்தை வீழ்த்தியது. இதனால் இந்த பிரிவில் இரண்டாவது இடத்தை பிடித்த அர்ஜெண்டினா அணி நாக்-அவுட் சுற்றுக்கு தகுதிப்பெற்றது.

    அர்ஜெண்டினா அணியின் கேப்டன் மெஸ்சி முதல் இரண்டு லீக் போட்டிகளில் ஒரு கோல் கூட அடிக்காமல் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். இதனால் இந்த போட்டியில் அவர் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருந்தது.


    இந்நிலையில், வெற்றி பெற்ற அர்ஜெண்டினா அணிக்கு போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதில், 'நோக்கம் நிறைவேறி விட்டது. மிகுந்த கவனத்துடனும், ஒற்றுமையுடன் விளையாடி வெற்றி பெற்றுள்ளது. செல்லலாம் அர்ஜெண்டினா' என டுவிட் செய்திருந்தார்.  #CristianoRonaldo #NGAARG #WorldCup2018
    ×