search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Miss world"

    • உலக அழகிப்போட்டியில் இதற்கு முன்பு வரை 18-28 வயதுடைய பெண்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்ற விதிமுறை இருந்தது
    • அவரது நேர்த்தியும், நளினமும், புன்னகையும் தான் அவர் வெல்லக் காரணம் என்று போட்டியின் நடுவர்கள் கூறியுள்ளனர்

    அர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் நடந்த உலக அழகி போட்டியில் 60 வயதான அலெஜாண்ட்ரா மரிச ரோட்ரிகுயஸ் வென்றவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் அதிக வயதில் அழகிப்போட்டியில் பட்டம் வென்ற பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

    உலக அழகிப்போட்டியில் இதற்கு முன்பு வரை 18-28 வயதுடைய பெண்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்ற விதிமுறை இருந்தது. ஆனால், அந்த வயது வரம்பைக் கடந்தாண்டு தான் மிஸ் யுனிவர்ஸ் அமைப்பு நீக்கியது. இதன் மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட எந்த பெண்ணும் இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியும் என்ற நிலை உருவானது.

    அதன்பின் டொமினிகன் குடியரசில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் 2024இல் 47 வயதான ஹெய்டி குரூஸ் என்பவர் வெற்றி பெற்றிருந்தார். அதன் பிறகு 60 வயதில் அலெஜாண்ட்ரா மரிச ரோட்ரிகுயஸ் வெற்றி பெற்று அதிக வயதில் உலக அழகி பட்டம் பெற்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அலெஜாண்ட்ரா மரிச ரோட்ரிகுயஸ், "உலக அழகிப்போட்டியில் 18 முதல் 28 வயதுடையவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்ற விதி தளர்த்தப்பட்ட நிலையில் இது சாத்தியமாகியுள்ளது. அழகுக்கு வயது வரம்பு இல்லை. அடுத்த மாதம் அங்கு நடக்கும் மிஸ் யுனிவர்ஸ் அர்ஜெண்டினா போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதே தனது இலக்கு என்று அவர் தெரிவித்தார்.

    அவரது நேர்த்தியும், நளினமும், புன்னகையும் தான் அவர் வெல்லக் காரணம் என்று போட்டியின் நடுவர்கள் கூறியுள்ளனர்.

    அர்ஜெண்டினாவின் பியூனஸ் அயர்ஸ் பகுதியை சேர்ந்தவர் இந்த இவர் பல ஆண்டுகளாக வழக்கறிஞராக வேலை செய்துவருகிறார். அவர் அங்கு சில காலம் பத்திரிகையாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உலக அழகி போட்டியில் சுமார் 130 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
    • ஒவ்வொரு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி ஒவ்வொரு அழகிகள் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர்.

    புதுடெல்லி:

    இந்த ஆண்டு உலக அழகி போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது. மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் மார்ச் 9-ந் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியுடன் உலக அழகி போட்டி முடிவடைகிறது.

    27 வருடங்களுக்கு பின்னர், உலக அழகி போட்டி இந்த வருடம் இந்தியாவில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

    இதனால் உலகம் முழுவதும் உள்ள விளம்பர நிறுவனங்கள், மாடல் உலகின் ஜாம்பவான்கள், தொழிலதிபர்கள் இந்தியாவில் குவிந்துள்ளனர். அழகி போட்டியில் ஜெயிப்பவர்கள், கலந்து கொள்பவர்களை தங்கள் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் செய்ய இப்போதில் இருந்தே விளம்பர நிறுவனங்கள் போட்டியிட தொடங்கியுள்ளன.

    இந்த உலக அழகி போட்டியில் சுமார் 130 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ஒரு மாத காலம் இந்தியாவின் பல நகரங்களில் உலக அழகியை தேர்ந்தெடுக்கும் பல்வேறு போட்டிகள் நடக்கவுள்ளன. வெறும் அழகினால் மட்டுமின்றி, திறமை, புத்திசாலித்தனம் என அனைத்திலும் சிறந்த ஒருவரை இந்த போட்டியின் மூலம் உலக அழகியாக தேர்ந்தெடுக்கின்றனர்.

    ஒவ்வொரு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி ஒவ்வொரு அழகிகள் இப்போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர்.

    இதன் தொடக்க நிகழ்ச்சி புதுடெல்லியில் உள்ள அசோகா ஓட்டலில் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த அழகிகள் தங்கள் நாட்டு பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்றனர்.

    இந்தியா சார்பில் உலக அழகி போட்டியில் பங்கேற்கும் சினி ஷெட்டி சிவப்பு நிற பனாரஸ் பட்டுப்புடவை அணிந்து காட்சியளித்தார். அந்த படத்தை அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதில் "சேலை நமது கலாச்சாரத்தின் வளமான வரலாற்றையும், நமது அடையாளத்தின் துணியை நெசவு செய்யும் ஆழமான வேரூன்றிய மரபுகளையும் குறிக்கிறது," என்றும் அதுவே சேலையை தேர்வு செய்ததற்கு காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    • 1996-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் நடைபெறும் உலக அழகிப் போட்டி.
    • உலக அழகிப் போட்டி வரும் நவம்பர் மாதம் நடைபெறுகிறது.

    இந்தியாவில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மிஸ் வேர்ல்ட் உலக அழகிப் போட்டி இந்த ஆண்டு நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    இந்தியாவில் கடைசியாக 1996ம் ஆண்டில் உலக அழகிப்போட்டி நடைபெற்றது. அதன் பிறகு இந்தியாவில் உலக அழகிப் போட்டி நடைபெறவில்லை.

    இந்நிலையில், உலக அழகிப் போட்டி இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறுகிறது.

    இதுகுறித்து மிஸ் வேர்ல்ட் உலக அழகிப்போட்டி அமைப்பின் தலைவர் ஜூலியா மோர்லி கூறுகையில், "71-வது உலக அழகிப்போட்டியின் இறுதிப்போட்டி இந்தியாவில் நடக்க உள்ளது.

    ஒரு மாதம் நடைபெறும் இந்தப் போட்டியில் 130 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொள்ள உள்ளனர். உலக அழகிப் போட்டி வரும் நவம்பர் மாதம் நடைபெறுகிறது" என்றார்.

    உலக அழகி பட்டத்தை வெல்வதே எனது லட்சியம் என்று தனது சொந்த ஊரான திருச்சி வந்த மிஸ் இந்தியா அழகி அனுகீர்த்தி வாஸ் கூறினார். #MissIndia #AnuKeerthiVas
    திருச்சி:

    சொந்த ஊரான திருச்சி வந்த மிஸ் இந்தியா அழகி அனுகீர்த்தி வாசுக்கு பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    1947-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை நடந்துள்ள மிஸ் இந்தியா அழகி போட்டிகளில் இதுவரை 3 பேர் தமிழகத்தில் இருந்து இந்திய அழகிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 1947-ல் நடந்த முதல் இந்திய அழகி போட்டியில் மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த எஸ்தர் விக்டோரியா ஆபிரகாம் இந்திய அழகி பட்டம் வென்றார். 1952-ல் தமிழகத்தை சேர்ந்த இந்திராணி ரக்மான் முதல் முறையாக இந்திய அழகி பட்டம் வென்றார். அதன் பிறகு 1977-ல் நளினி விஸ்வநாதனுக்கு இந்திய அழகி பட்டம் வழங்கப்பட்டது. 

    இவர்களுக்கு பிறகு தமிழகத்தை சேர்ந்த கிறிஸ்ட பெல்லி ஹோயே 1991-ல் இந்திய அழகி பட்டம் வென்றார். 1991-க்கு பிறகு 27 ஆண்டுகள் கழித்து தமிழகத்தை சேர்ந்த திருச்சி காட்டூர் சரஸ்வதி நகர் அனுகீர்த்தி வாஸ் 2018-ம் ஆண்டிற்கான இந்திய அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    அனுகீர்த்தி வாஸ் குடும்பம் திருச்சி காட்டூர் சரஸ்வதி நகரில் வசித்து வருகிறது. இவரது தாயார் செலினா, தந்தை பிரசாத், ஒரே தம்பி கவுதம் என்ஜினீயரிங் படித்து வருகிறார்.

    தாய் செலினா, பாட்டி கோமளா ஆகியோருடன் சரஸ்வதி நகர் வீட்டில் வசித்து வந்த அனுகீர்த்தி வாஸ் திருச்சி மான்போர்ட் பள்ளியில் 10-ம் வகுப்பு வரையும் பெல் ஆர்.எஸ்.கே. பள்ளியில் 11,12-ம் வகுப்பும் படித்தார். அதன்பிறகு சென்னை லயோலா கல்லூரியில் படித்து வந்தவர் இந்திய அழகி போட்டியில் பங்கேற்று பட்டம் வென்றுள்ளார்.



    இந்திய அழகி பட்டம் வென்ற பிறகு முதல் முறையாக நேற்று திருச்சி காட்டூரில் உள்ள சொந்த வீட்டிற்கு வந்த அனுகீர்த்தி வாசுக்கு அப்பகுதி மக்கள் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர். மேலும் அவர் படித்த பள்ளியில் நடந்த விழாவிலும் அவர் பங்கேற்றார்.

    அனுகீர்த்தி வாஸ் வருகை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தாலும் அவரை காண ஏராளமானோர் திரண்டிருந்தனர். மக்கள் வாழ்த்தை ஏற்றுக்கொண்ட அவர், தாய், பாட்டி ஆகியோரிடம் ஆசி பெற்றார். அதன் பிறகு மீண்டும் சென்னை புறப்பட்டு சென்றார்.

    முன்னதாக நிருபர்களிடம் உலக அழகி பட்டத்தை வெல்வதே எனது லட்சியம் என தெரிவித்தார். உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் அனுகீர்த்தி வாஸ் பங்கேற்கிறார்.

    ஏற்கனவே 1994-ல் இந்திய அழகியாக பட்டம் வென்ற சுஸ்மிதா சென் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தையும், 2000-ம் ஆண்டு இந்திய அழகி பட்டம் வென்ற லாரா தத்தா உலக அழகியாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பிறகு திருச்சியை சேர்ந்த இந்திய அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ள அனுகீர்த்தி வாஸ் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டால் திருச்சி மக்களுக்கு பெருமையாக இருக்கும் என காட்டூர் பகுதி மக்கள் தெரிவித்தனர்.  #MissIndia #AnuKeerthiVas



    ×