என் மலர்
நீங்கள் தேடியது "உலக அழகி போட்டி"
- ராஜஸ்தானைச் சேர்ந்த மாணிகா விஸ்வகர்மா மிஸ் யூனிவர்ஸ் இந்தியா 2025 பட்டத்தை வென்றுள்ளார்.
- இறுதிப்போட்டியில் மாணிகா வெற்றி பெற்று கீரிடம் சூட்டிக் கொண்டார்.
இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் வகையில், ராஜஸ்தானைச் சேர்ந்த மாணிகா விஸ்வகர்மா மிஸ் யூனிவர்ஸ் இந்தியா 2025 பட்டத்தை வென்றுள்ளார். வரும் நவம்பரில் தாய்லாந்தில் நடைபெறும் 74வது மிஸ் யூனிவர்ஸ் உலக அழகிப் போட்டியில் இந்தியாவின் சார்பாக இவர் முன்நிறுத்தப்படுவார்.
ஆகஸ்ட் 18, திங்கட்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் மாணிகா வெற்றி பெற்று கீரிடம் சூட்டிக் கொண்டார்.
போட்டியில்
முதல் ரன்னர் அப் – உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தான்யா சர்மா
இரண்டாவது ரன்னர் அப் – ஹரியானாவின் மேஹக் திங்க்ரா
மூன்றாவது ரன்னர் அப் – அமிஷி கௌஷிக்
யார் இந்த மாணிகா விஷ்வகர்மா?
ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணிகா தற்போது டெல்லியில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு மிஸ் யூனிவர்ஸ் ராஜஸ்தான் 2024 பட்டத்தை வென்றிருந்தார். தற்போது பொலிடிக்கல் சைன்ஸ் மற்றும் எகானாமிக்ஸ் துறையில் தனது பட்டப்படிப்பின் இறுதி ஆண்டில் பயின்று வருகிறார்.
பல்திறமைகளை கொண்டவர் மாணிகா, நடனம், ஓவியம் , இந்தியாவின் பிரதிநிதியாக BIMSTEC Sewocon (வெளிவிவகார அமைச்சகத்தின் முன்முயற்சி) நிகழ்வில் பங்கேற்றவர்
லலித் கலா அகாடமி மற்றும் ஜே.ஜே. ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் சார்பில் பாராட்டுப் பெற்றவர்
மாணிகாவின் சாதனைகள், அவர் பட்டம் வென்றுள்ள இந்த வெற்றியுடன் சேர்ந்து, இந்தியாவை உலக அரங்கில் மேலும் பிரகாசிக்கச் செய்யும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் போட்டியின் இறுதியில் கேட்கப்பட்ட அறிவு சார்ந்த கேள்விக்கு மாணிகா அளித்த பதி இணையத்தில் வைரலாகி வருகிறது. பெண்களுக்கு படிப்பா? அல்லது பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களுக்கு பண உதவி வாங்குவிர்களா? என கேட்டபோது . அவர் இது இரண்டுமே நாணயத்தின் இருப்பக்கம் போல் இரண்டுமே முக்கியம் தான் ஆனால் நான் பெண் படிப்புக்கு முக்கியத்ஹ்டுவம் கொடுப்பேன் ஏன்னெனில் அது தனிமனித வளர்ச்சி அல்ல ஒட்டு மொத்த உலகத்தில் வளர்ச்சியை அது குறிக்கும் என கூறினார்.
- தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் நேற்று உலக அழகி இறுதி போட்டி நடந்தது.
- தாய்லாந்தை சேர்ந்த ஒபல் சுசாதா சுவாங்ஸ்ரீக்கு வைரம் பதித்த கிரீடமும் அணிவிக்கப்பட்டது.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் நேற்று உலக அழகி இறுதி போட்டி நடந்தது. இதில் தாய்லாந்தை சேர்ந்த 21 வயதான ஒபல் சுசாதா சுவாங்ஸ்ரீ உலக அழிகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவருக்கு உடனடியாக ரூ. 8.50 கோடி, வைரம் பதித்த கிரீடமும் அணிவிக்கப்பட்டது.
உலக அழகி ஒபல் சுசாதா சுவாங்ஸ்ரீ சமூக நிகழ்வுகளில் பங்கேற்க உலகம் முழுவதும் பயணம் செய்யலாம். அவருக்கு ஆண்டு முழுவதும் ஆடம்பரமான வாழ்க்கை மற்றும் தொழில்முறை வடிவமைப்பாளர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் வசதி கிடைக்கும்.
விலை உயர்ந்த ஒப்பனை கருவிகள், உடைகள், நகைகள் போன்றவை அனைத்தும் இலவசமாகக் கிடைக்கும். எங்கு சென்றாலும் கடுமையான பாதுகாப்பு வழங்கப்படும்.
உலக அழகி பட்டம் வென்ற அவருக்கு விலைமதிப்பற்ற வைரங்கள் மற்றும் பல சிறப்பு அம்சங்களால் அலங்கரிக்கப்பட்ட கிரீடம் வழங்கப்பட்டது.
கிரீடத்தின் ஒவ்வொரு அம்சமும் உலக அழகி போட்டியின் முக்கியத்துவத்தையும் பெண்களின் சக்தியையும் பிரதிபலிக்கிறது.
தற்போதைய கிரீடத்தின் மதிப்பு தோராயமாக ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்திய மதிப்பில் ரூ.85.56 லட்சம் ஆகும். இது 4-வது உலக அழகி கிரீடம் ஆகும். கிரீடங்கள் மிகிமோட்டோ என்ற ஜப்பானிய நகை நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றன.
தற்போது பயன்பாட்டில் உள்ள கிரீடம் 2017-ல் வடிவமைக்கப்பட்டது. இந்த கிரீடம் ஒருபோதும் வெற்றியாளருக்குச் சொந்தமாகாது.
அடுத்த ஆண்டு உலக அழகி போட்டியில் வெற்றி பெறுபவருக்கு தற்போதைய உலக அழகி கிரீடத்தை அணிவிப்பார்.
- சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் நடைபெற்றது.
- இந்திய அழகி நந்தினி குப்தா பட்டம் வெல்வாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
ஐதராபாத்தில் நடந்து வரும் உலக அழகி போட்டியின் இறுதிப் போட்டி இன்று இரவு ஐதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் அரங்கில் நடைபெற்றது,
சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் நடைபெற்றது.
108 நாடுகளைச் சேர்ந்த அழகு ராணிகள் கிரீடத்தை வெல்ல போட்டியிட்டனர். மிஸ் இந்தியா பட்டம் வென்ற நந்தினி குப்தா உட்பட 40 பேர் காலிறுதிக்கு நுழைந்துள்ளனர்.
அமெரிக்கா-கரீபியன் ஆப்பிரிக்கா ஐரோப்பா மற்றும் ஆசியா ஓசியானியா கண்டங்களிலிருந்து தலா ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த நான்கில் கடைசி கேள்வியின் மூலம் உலக அழகி அறிவிக்கப்படுவார்.
1951-ம் ஆண்டு உலக அழகி போட்டி தொடங்கியதில் இருந்து இந்தியா 3-வது முறையாக உலக அழகி போட்டியை நடத்துகிறது.
இதற்கு முன்பு பெங்களூரு (1996) மற்றும் மும்பை (2024) ஆகிய இடங்களில் நடைபெற்றது. நம் நாட்டுப் பெண்கள் 6 முறை உலக அழகி பட்டத்தை வென்றுள்ளனர்.
ரீட்டா ஃபரியா (1966), ஐஸ்வர்யா ராய் (1994), டயானா ஹைடன் (1987), யுக்தமுகி (1999), பிரியங்கா சோப்ரா (2000), மற்றும் மனுஷி சில்லர் (2017) ஆகியோர் கிரீடத்தை வென்றுள்ளனர்.
இந்த முறை இந்திய அழகி நந்தினி குப்தா பட்டம் வெல்வாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், 2025ம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை தாய்லாந்தைச் சேர்ந்த சுசாதா சுவாங்ஸ்ரீ வென்றுள்ளார்.
- 1951-ம் ஆண்டு உலக அழகி போட்டி தொடங்கியதில் இருந்து இந்தியா 3-வது முறையாக உலக அழகி போட்டியை நடத்துகிறது.
- இறுதிப்போட்டி நடைபெறும் ஹைடெக்ஸ் முழுவதும் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் நடந்து வரும் உலக அழகி போட்டியின் இறுதிப் போட்டி இன்று இரவு ஐதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் அரங்கில் நடக்கிறது.
சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் நடைபெறுகிறது.
108 நாடுகளைச் சேர்ந்த அழகு ராணிகள் கிரீடத்தை வெல்ல போட்டியிட்டனர். மிஸ் இந்தியா பட்டம் வென்ற நந்தினி குப்தா உட்பட 40 பேர் காலிறுதிக்கு நுழைந்துள்ளனர்.
அமெரிக்கா-கரீபியன் ஆப்பிரிக்கா ஐரோப்பா மற்றும் ஆசியா ஓசியானியா கண்டங்களிலிருந்து தலா ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த நான்கில் கடைசி கேள்வியின் மூலம் உலக அழகி அறிவிக்கப்படுவார்.
1951-ம் ஆண்டு உலக அழகி போட்டி தொடங்கியதில் இருந்து இந்தியா 3-வது முறையாக உலக அழகி போட்டியை நடத்துகிறது.
இதற்கு முன்பு பெங்களூரு (1996) மற்றும் மும்பை (2024) ஆகிய இடங்களில் நடைபெற்றது. நம் நாட்டுப் பெண்கள் 6 முறை உலக அழகி பட்டத்தை வென்றுள்ளனர்.
ரீட்டா ஃபரியா (1966), ஐஸ்வர்யா ராய் (1994), டயானா ஹைடன் (1987), யுக்தமுகி (1999), பிரியங்கா சோப்ரா (2000), மற்றும் மனுஷி சில்லர் (2017) ஆகியோர் கிரீடத்தை வென்றுள்ளனர்.
இந்த முறை இந்திய அழகி நந்தினி குப்தா பட்டம் வெல்வாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இறுதிப்போட்டி நடைபெறும் ஹைடெக்ஸ் முழுவதும் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.
பிரபல நடிகர் சோனு சூட்டுக்கு உலக அழகி மனிதாபிமான விருது வழங்கப்பட உள்ளது.
- மத்திய அரசின் கருத்துக்களை கேட்டு அதன்படி மாநில அரசு செயல்பட முடிவு செய்துள்ளது.
- அழகிகளுக்கு தனித்தனியாக பாதுகாப்பு கொடுப்பது ஐதராபாத் போலீசாருக்கு பெரும் சவாலை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உலக அழகி போட்டி நடைபெற உள்ளது. நாளை கோலாகலத்துடன் தொடக்க விழா நடைபெறுகிறது.
இந்தியா- பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதட்டத்தின் காரணமாக உலக அழகி போட்டி ஏற்பாட்டாளர்கள், மாநில அரசுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனால் போட்டி நடத்துபவர்கள் கடும் அழுத்தத்தில் உள்ளனர்.
உலக அழகி போட்டியில் மொத்தம் 116 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி 109 நாடுகளை சேர்ந்த உலக அழகிகள் ஐதராபாத் வந்தனர்.
ஐதராபாத் வந்துள்ள அழகிகள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய மாநில அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. 3 வாரங்களுக்கு அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு தருவது ஒரு பெரிய சவாலாக உள்ளது.
இதனால் மத்திய அரசின் கருத்துக்களை கேட்டு அதன்படி மாநில அரசு செயல்பட முடிவு செய்துள்ளது.
போர் பதற்றம் காரணமாக விமான சேவையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் மற்றும் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதால் அழகி போட்டியில் கலந்து கொள்பவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருகிற 12-ந்தேதி நாகார்ஜுன சாகரில் உள்ள புத்தவனம் ஐதராபாத் சார்மினார், லாட் பஜார், வாரங்கல் ஆயிரம் தூண் கோவில், யாதகிரி குடா, போச்சம்பள்ளி மஹபூப் நகர் ஆகிய பகுதிகளுக்கு அழகி போட்டியில் கலந்து கொள்ளும் அழகு ராணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சிலர் ஐதாபாத் வீதிகளில் சுற்றி வருகின்றனர். அவ்வாறு வரும் அழகிகளுக்கு தனித்தனியாக பாதுகாப்பு கொடுப்பது ஐதராபாத் போலீசாருக்கு பெரும் சவாலை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தனர்.
- 72-வது உலக அழகி போட்டி தெலுங்கானாவில் ஐதராபாத் உள்பட கலாசார முக்கியத்துவம் வாய்ந்த 10 நகரங்களில் நடைபெறும்.
- உலக அழகிப் போட்டியை தெலுங்கானாவில் நடத்துவது வெறும் கவுரவப் பிரச்சினை அல்ல.
ஐதராபாத்:
இந்த ஆண்டுக்கான உலக அழகிப்போட்டி தெலுங்கானா மாநிலத்தில் வருகிற மே மாதம் 10-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிகளை தெலுங்கானா மாநில அரசு நடத்துகிறது.
இதையொட்டி இந்த போட்டியை பிரபலப்படுத்தும் முன்னோட்ட நிகழ்ச்சி ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மாநில சுற்றுலாத்துறை மந்திரி ஜூபள்ளி கிருஷ்ணா ராவ் கூறியதாவது:-
72-வது உலக அழகி போட்டி தெலுங்கானாவில் ஐதராபாத் உள்பட கலாசார முக்கியத்துவம் வாய்ந்த 10 நகரங்களில் நடைபெறும். இதற்கான செலவை தெலுங்கானா சுற்றுலாத்துறையும், மிஸ் வேர்ல்ட் நிறுவனமும் சமமாக ஏற்றுக்கொள்ளும். உலக அழகிப் போட்டி நடத்துவது மாநிலத்தின் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் என்று எதிர்க்கட்சிகள் தவறான பிரசாரம் செய்கின்றன. உண்மையில் இந்த போட்டியின் மூலம் மாநிலத்தின் பொருளாதாரம் உயரும்.
உலக அழகிப் போட்டியை தெலுங்கானாவில் நடத்துவது வெறும் கவுரவப் பிரச்சினை அல்ல. உலகம் முழுவதும் பெண்களைக் கொண்டாட இது ஒரு வாய்ப்பு. அவர்களின் மன உறுதியை அங்கீகரிக்க இது ஒரு தெளிவான அழைப்பு.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின்போது தற்போதைய உலக அழகியான கிறிஸ்டினா பிஸ்கோவா உடன் இருந்தார். அவர் கூறுகையில், கடந்த ஆண்டு இந்தியாவில் மும்பை மற்றும் டெல்லியில் உலக அழகி என்ற எனது பயணத்தை தொடங்கினேன். அந்த பயணத்தை இந்தியாவிலேயே நிறைவு செய்கிறேன். இந்தியாவின் பன்முகத்தன்மை அதன் பலம். உங்களிடம் பல மொழிகள், பல இனங்கள் உள்ளன. அது அழகாக இருக்கிறது என்றார்.
- மாலத்தீவில் 4 போட்டியாளர்களை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார்
- இந்த வெற்றியை "வெட்கக்கேடானது" என சமூக வலைதளங்களில் விமர்சிக்கின்றனர்
பெண்களுக்கான சர்வதேச அழகி போட்டிகளில் மிஸ் வேர்ல்ட், மிஸ் இன்டர்நேஷனல் மற்றும் மிஸ் எர்த் ஆகியவற்றுடன் பிரபலமான மற்றொரு அழகி போட்டி, மிஸ் யூனிவர்ஸ். இது அமெரிக்கா மற்றும் தாய்லாந்து ஆகிய இரு நாடுகளையும் தளமாக கொண்ட மிஸ் யூனிவர்ஸ் நிறுவனத்தால் வருடாவருடம் நடத்தப்படுகிறது.
சில தினங்களுக்கு முன் மாலத்தீவில் "மிஸ் யூனிவர்ஸ் பாகிஸ்தான்" போட்டி நடைபெற்றது. அதில் 4 போட்டியாளர்களை பின்னுக்கு தள்ளி, எரிகா ராபின் (24) எனும் இளம் பெண் முதலிடம் பிடித்தார். இதனையடுத்து இவ்வருடம் எல் சால்வடார் நாட்டில், வரும் நவம்பரில் நடைபெறவுள்ள 72-வது "குளோபல் மிஸ் யூனிவர்ஸ்" அழகி போட்டியில், முதல்முறையாக, பாகிஸ்தான் நாட்டின் சார்பாக கலந்து கொள்ளவிருக்கிறார்.
இந்த வெற்றியை குறித்து எரிகா ராபின் தெரிவித்ததாவது:
நான் பணிவுடன் இந்த வெற்றியை ஏற்கிறேன். எனக்கு இது உண்மையிலேயே பெருமையான விஷயம். மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் கலந்து கொண்டு பாகிஸ்தான் நாட்டின் அழகை உலகிற்கு பறைசாற்றுவேன். ஊடகங்கள் தெரிவிக்காத அழகான கலாச்சாரம் எங்களுக்கு உள்ளது. பாகிஸ்தானியர்கள் விருந்தோம்பலில் சிறந்தவர்கள்; பழகுவதற்கு அன்பானவர்கள், பெருந்தன்மையானவர்கள். பாகிஸ்தான் நாட்டின் ருசி மிக்க உணவு வகைகளை உண்டு மகிழவும், எங்கள் நாட்டின் இயற்கையழகையும், பனிமலைகளையும் மற்றும் வயல்வெளிகளையும் காணவும் அனைவரையும் அழைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் உள்ள ஒரு கிறித்துவ குடும்பத்தை சேர்ந்தவர் எரிகா. அவர், அந்நாட்டின் புகழ் பெற்ற மாடலாக பல விலையுயர்ந்த பிராண்டுகளின் விளம்பரங்களில் தோன்றியவர். மேலும், எரிகா ஒரு மென்பொருள் நிறுவனத்தில் துணை மேலாளராக பணிபுரிபவர்.
இதற்கிடையே எரிகாவின் வெற்றியை "வெட்கக்கேடானது" என அந்நாட்டில் உள்ள மத அடிப்படைவாதிகள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். அதே சமயம், எரிகாவிற்கு ஆதரவாக பெண்ணுரிமைவாதிகள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், "பாகிஸ்தான் அரசாங்கம் எந்த பெண்ணையும் நாட்டின் சார்பாக அழகி போட்டிக்கு அனுப்பவில்லை. இத்தகைய போட்டிகளில் கலந்து கொள்பவர்களை அரசாங்கத்தின் பிரதிநிதியாக கருத முடியாது," என இது குறித்து அந்நாட்டின் செய்தி மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் முர்டாசா சோலங்கி கூறினார்.
- கடந்த வாரம் நடந்த மிஸ் போர்ச்சுக்கல் அழகி போட்டியில் மெரினா மஷேடி வெற்றி பெற்று பட்டம் வென்றார்.
- ரிக்கி கோலே ஜூலை மாதம் நடந்த அழகி போட்டியில் மிஸ் நெதர்லாந்து அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எல்சால்வடார்:
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சவால் விடும் வகையில் திருநங்கைகளும் ஒவ்வொரு துறையிலும் முத்திரை பதித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக அழகி போட்டி வரலாற்றில் முதன் முறையாக 2 திருநங்கைகள் பங்கேற்க உள்ளனர்.
72-வது உலக அழகி போட்டி இந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த 90 அழகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இவர்களுக்கு போட்டியாக 2 திருநங்கைகளும் களம் இறங்கி உள்ளனர். அதில் ஒருவரது பெயர் மெரினா மஷேடி. 23 வயதான இவர் விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் நடந்த மிஸ் போர்ச்சுக்கல் அழகி போட்டியில் இவர் வெற்றி பெற்று பட்டம் வென்றார்.
மற்றொரு திருநங்கை பெயர் ரிக்கி கோலே. நெதர்லாந்து நாட்டை சேர்ந்த மாடல் அழகி ஆவார். அவர் ஜூலை மாதம் நடந்த அழகி போட்டியில் மிஸ் நெதர்லாந்து அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் மிஸ் நெதர்லாந்து பட்டம் வென்ற முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்றார்.
உலக அழகி போட்டியில் கலந்து கொள்ளும் 2 திருநங்கைகளில் யாராவது ஒருவர் வெற்றி பெற்று மகுடம் சூட்டினால் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை என்ற சாதனையை படைக்கலாம்.
இது தொடர்பாக ரிக்கி கோலே கூறும் போது, சிறுவயதில் இருந்து நான் என் பாதையில் வந்த அனைத்தையும் வென்றேன். எனக்கு எனது குடும்பத்தினர் நல்ல ஊக்கம் அளித்து வருகிறார்கள். அவர்கள் ஆதரவால் தான் இது போன்ற சாதனைகளை செய்ய முடிகிறது. தற்போது என்னை பாருங்கள். இங்கே நான் வலிமையான, தன்னம்பிக்கையுடன் உங்கள் முன்பு ஒரு திருநங்கையாக நிற்கிறேன் என்று தெரிவித்தார்.
- உலக அழகி போட்டியில் சுமார் 130 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
- ஒவ்வொரு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி ஒவ்வொரு அழகிகள் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர்.
புதுடெல்லி:
இந்த ஆண்டு உலக அழகி போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது. மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் மார்ச் 9-ந் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியுடன் உலக அழகி போட்டி முடிவடைகிறது.
27 வருடங்களுக்கு பின்னர், உலக அழகி போட்டி இந்த வருடம் இந்தியாவில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இதனால் உலகம் முழுவதும் உள்ள விளம்பர நிறுவனங்கள், மாடல் உலகின் ஜாம்பவான்கள், தொழிலதிபர்கள் இந்தியாவில் குவிந்துள்ளனர். அழகி போட்டியில் ஜெயிப்பவர்கள், கலந்து கொள்பவர்களை தங்கள் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் செய்ய இப்போதில் இருந்தே விளம்பர நிறுவனங்கள் போட்டியிட தொடங்கியுள்ளன.
இந்த உலக அழகி போட்டியில் சுமார் 130 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ஒரு மாத காலம் இந்தியாவின் பல நகரங்களில் உலக அழகியை தேர்ந்தெடுக்கும் பல்வேறு போட்டிகள் நடக்கவுள்ளன. வெறும் அழகினால் மட்டுமின்றி, திறமை, புத்திசாலித்தனம் என அனைத்திலும் சிறந்த ஒருவரை இந்த போட்டியின் மூலம் உலக அழகியாக தேர்ந்தெடுக்கின்றனர்.
ஒவ்வொரு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி ஒவ்வொரு அழகிகள் இப்போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன் தொடக்க நிகழ்ச்சி புதுடெல்லியில் உள்ள அசோகா ஓட்டலில் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த அழகிகள் தங்கள் நாட்டு பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்றனர்.
இந்தியா சார்பில் உலக அழகி போட்டியில் பங்கேற்கும் சினி ஷெட்டி சிவப்பு நிற பனாரஸ் பட்டுப்புடவை அணிந்து காட்சியளித்தார். அந்த படத்தை அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதில் "சேலை நமது கலாச்சாரத்தின் வளமான வரலாற்றையும், நமது அடையாளத்தின் துணியை நெசவு செய்யும் ஆழமான வேரூன்றிய மரபுகளையும் குறிக்கிறது," என்றும் அதுவே சேலையை தேர்வு செய்ததற்கு காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
- உலக அழகிப்போட்டியில் இதற்கு முன்பு வரை 18-28 வயதுடைய பெண்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்ற விதிமுறை இருந்தது
- அவரது நேர்த்தியும், நளினமும், புன்னகையும் தான் அவர் வெல்லக் காரணம் என்று போட்டியின் நடுவர்கள் கூறியுள்ளனர்
அர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் நடந்த உலக அழகி போட்டியில் 60 வயதான அலெஜாண்ட்ரா மரிச ரோட்ரிகுயஸ் வென்றவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் அதிக வயதில் அழகிப்போட்டியில் பட்டம் வென்ற பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
உலக அழகிப்போட்டியில் இதற்கு முன்பு வரை 18-28 வயதுடைய பெண்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்ற விதிமுறை இருந்தது. ஆனால், அந்த வயது வரம்பைக் கடந்தாண்டு தான் மிஸ் யுனிவர்ஸ் அமைப்பு நீக்கியது. இதன் மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட எந்த பெண்ணும் இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியும் என்ற நிலை உருவானது.
அதன்பின் டொமினிகன் குடியரசில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் 2024இல் 47 வயதான ஹெய்டி குரூஸ் என்பவர் வெற்றி பெற்றிருந்தார். அதன் பிறகு 60 வயதில் அலெஜாண்ட்ரா மரிச ரோட்ரிகுயஸ் வெற்றி பெற்று அதிக வயதில் உலக அழகி பட்டம் பெற்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அலெஜாண்ட்ரா மரிச ரோட்ரிகுயஸ், "உலக அழகிப்போட்டியில் 18 முதல் 28 வயதுடையவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்ற விதி தளர்த்தப்பட்ட நிலையில் இது சாத்தியமாகியுள்ளது. அழகுக்கு வயது வரம்பு இல்லை. அடுத்த மாதம் அங்கு நடக்கும் மிஸ் யுனிவர்ஸ் அர்ஜெண்டினா போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதே தனது இலக்கு என்று அவர் தெரிவித்தார்.
அவரது நேர்த்தியும், நளினமும், புன்னகையும் தான் அவர் வெல்லக் காரணம் என்று போட்டியின் நடுவர்கள் கூறியுள்ளனர்.
அர்ஜெண்டினாவின் பியூனஸ் அயர்ஸ் பகுதியை சேர்ந்தவர் இந்த இவர் பல ஆண்டுகளாக வழக்கறிஞராக வேலை செய்துவருகிறார். அவர் அங்கு சில காலம் பத்திரிகையாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






