என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Miss World Pageant"

    • ஐதராபாத்தில் 72 ஆவது உலக அழகிப் போட்டி நடைபெற்று வருகிறது
    • இந்தப் போட்டியில் இந்தியா சார்பாக மிஸ் இந்தியா நந்தினி குப்தா பங்கேற்றுள்ளார்.

    72 ஆவது உலக அழகிப் போட்டி தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் கோலாகலமாக தொடங்கியது.

    உலகெங்கிலும் உள்ள 110க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள் மிஸ் யுனிவர்ஸ் கிரீடத்தை வெல்வதற்காக இந்தப் போட்டிகளில் பங்கேற்கின்றனர். இந்தப் போட்டிகளில் இந்தியா சார்பாக மிஸ் இந்தியா நந்தினி குப்தா பங்கேற்றுள்ளார்.

    மே 31 வரை ஒரு மாத காலத்துக்கு உலக அழகிப் போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில், தெலுங்கானாவில் உள்ள ராமப்பா கோவிலுக்கு இந்திய கலாச்சார உடையான புடவை அணிந்து மிஸ் வேர்ல்ட் போட்டியாளர்கள் வருகை தந்தனர். போட்டியாளர்களுக்கு கோவிலின் நுழைவாயிலில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், உலக அழகி போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு தெலுங்கானா மாநில பெண்கள் கால்களை கழுவி பாத பூஜை செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இந்த சம்பவத்திற்கு பிஆர்.எஸ் கட்சி தலைவர் நிரஞ்சன் ரெட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "உலக அழகி போட்டியாளர்கள் கால்களை கழுவ வைத்தது கண்டனத்துக்கு உரியது. இது தெலுங்கானா மாநில மக்களுக்கு மிகப்பெரிய அவமானம். இந்த நிகழ்விற்கு முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.காங்கிரஸ் அரசின் தவறின் உச்சக்கட்டம்.இது சம்பந்தப்பட்ட பெண்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தெலுங்கானா சமூகத்திற்கும், கண்ணியத்திற்கும் அவமானம்.

    விவசாயிகள் பயிர் இழப்பீடு ,நிலுவைத் தொகை கேட்டு போராடி வரும் நிலையில் ஆடம்பரமான அழகி போட்டி மாநிலத்திற்கு தேவையா? நாட்டின் எல்லையில் போர் பதற்றம் மறுபுறம் விவசாயிகள் பாதிக்கப்பட்ட நிலையில் சார்மினாரில் கடைகளை மூடி அழகி போட்டியாளர்கள் கேட் வாக் நடத்தியது மிகப்பெரிய தவறு.

    தெலுங்கானா பெண்களை அவமானப்படுத்த வைப்பதில் அரசு மும்முரமாக உள்ளது. இந்த அழகி போட்டியால் தெலுங்கானாவுக்கு எந்த நன்மையும் கிடைக்க போவதில்லை" என்று தெரிவித்தார்.

    • ஐதராபாத்தில் 72 ஆவது உலக அழகிப் போட்டி நடைபெற்று வருகிறது.
    • இந்தப் போட்டியில் இந்தியா சார்பாக மிஸ் இந்தியா நந்தினி குப்தா பங்கேற்றுள்ளார்.

    72 ஆவது உலக அழகிப் போட்டி தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் கோலாகலமாக தொடங்கியது.

    உலகெங்கிலும் உள்ள 110க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள் மிஸ் யுனிவர்ஸ் கிரீடத்தை வெல்வதற்காக இந்தப் போட்டிகளில் பங்கேற்கின்றனர். இந்தப் போட்டிகளில் இந்தியா சார்பாக மிஸ் இந்தியா நந்தினி குப்தா பங்கேற்றுள்ளார்.

    மே 31 வரை ஒரு மாத காலத்துக்கு உலக அழகிப் போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில், தெலுங்கானாவில் உள்ள ராமப்பா கோவிலுக்கு இந்திய கலாச்சார உடையான புடவை அணிந்து மிஸ் வேர்ல்ட் போட்டியாளர்கள் வருகை தந்தனர். போட்டியாளர்களுக்கு கோவிலின் நுழைவாயிலில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    • பெரினி, கொம்மு கோயா, லம்படா மற்றும் ஒக்கு டோலு உள்ளிட்ட தெலுங்கானா பாரம்பரிய நடனங்கள் இடம்பெற்றன.
    • 110க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள் வந்துள்ளனர்.

    72 ஆவது உலக அழகிப் போட்டி தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் நேற்று (சனிக்கிழமை) இரவு கோலாகலமாக தொடங்கியது.

    தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, மிஸ் வேர்ல்ட் லிமிடெட் தலைவர் ஜூலியா மோர்லி சிபிஇ மற்றும் தற்போதைய மிஸ் வேர்ல்ட் கிறிஸ்டினா பிஸ்கோவா ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.

    இந்த நிகழ்வில், பெரினி, கொம்மு கோயா, லம்படா மற்றும் ஒக்கு டோலு உள்ளிட்ட பாரம்பரிய நாட்டுப்புற மற்றும் பழங்குடி நடன நிகழ்ச்சிகள் மூலம் தெலுங்கானாவின் வளமான கலாச்சார பாரம்பரியம் வெளிப்பட்டது.

    உலகெங்கிலும் உள்ள 110க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள் மிஸ் யுனிவர்ஸ் கிரீடத்தை வெல்வதற்காக இந்தப் போட்டிகளில் பங்கேற்கின்றனர். இந்தப் போட்டிகளில் இந்தியா சார்பாக மிஸ் இந்தியா நந்தினி குப்தா பங்கேற்கிறார்.

    தொடக்க நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக போட்டியாளர்களும் விதவிதமான உடைகளில் ஒய்யாரமாக மேடையில் நடைபோட்டனர். 'நோக்கத்துடன் கூடிய அழகு' என்ற கருப்பொருளுடன் இவ்வாண்டுப் போட்டி நடக்கிறது.

    மிஸ் வேர்ல்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான ஜூலியா மோர்லி, "பாரம்பரியம் புதுமையுடன் அழகாகப் பின்னிப் பிணைந்த இடமான தெலுங்கானாவிற்கு மிஸ் வேர்ல்ட் விழாவைக் கொண்டுவருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஆண்டு போட்டி உலக ஒற்றுமை, அமைதி மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றின் உணர்வைப் பிரதிபலிக்கிறது' என்று கூறினார்.

    மே 31 வரை ஒரு மாத காலத்துக்கு நடைபெறும் இந்த விழா, பல்வேறு கலாச்சார, ஆன்மீக மற்றும் தொண்டு நடவடிக்கைகளை உள்ளடக்கியது. வரவிருக்கும் பயணத்திட்டத்தில் மே 12 அன்று நாகார்ஜுனசாகரில் உள்ள புனித புத்தவனத்திற்கு வருகை தருவதும், அதைத் தொடர்ந்து மே 13 அன்று சார்மினார் மற்றும் லாட் பஜாரில் பாரம்பரிய நடைப்பயணம் நடத்துவதும் இடம்பெறும்.

    போட்டியாளர்கள் வரலாற்று சிறப்புமிக்க சௌமஹல்லா அரண்மனையில் நடைபெறும் அரச வரவேற்பு விருந்திலும், இசை நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வார்கள். 

    • மத்திய அரசின் கருத்துக்களை கேட்டு அதன்படி மாநில அரசு செயல்பட முடிவு செய்துள்ளது.
    • அழகிகளுக்கு தனித்தனியாக பாதுகாப்பு கொடுப்பது ஐதராபாத் போலீசாருக்கு பெரும் சவாலை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தனர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உலக அழகி போட்டி நடைபெற உள்ளது. நாளை கோலாகலத்துடன் தொடக்க விழா நடைபெறுகிறது.

    இந்தியா- பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதட்டத்தின் காரணமாக உலக அழகி போட்டி ஏற்பாட்டாளர்கள், மாநில அரசுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனால் போட்டி நடத்துபவர்கள் கடும் அழுத்தத்தில் உள்ளனர்.

    உலக அழகி போட்டியில் மொத்தம் 116 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி 109 நாடுகளை சேர்ந்த உலக அழகிகள் ஐதராபாத் வந்தனர்.

    ஐதராபாத் வந்துள்ள அழகிகள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய மாநில அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. 3 வாரங்களுக்கு அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு தருவது ஒரு பெரிய சவாலாக உள்ளது.

    இதனால் மத்திய அரசின் கருத்துக்களை கேட்டு அதன்படி மாநில அரசு செயல்பட முடிவு செய்துள்ளது.

    போர் பதற்றம் காரணமாக விமான சேவையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் மற்றும் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதால் அழகி போட்டியில் கலந்து கொள்பவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வருகிற 12-ந்தேதி நாகார்ஜுன சாகரில் உள்ள புத்தவனம் ஐதராபாத் சார்மினார், லாட் பஜார், வாரங்கல் ஆயிரம் தூண் கோவில், யாதகிரி குடா, போச்சம்பள்ளி மஹபூப் நகர் ஆகிய பகுதிகளுக்கு அழகி போட்டியில் கலந்து கொள்ளும் அழகு ராணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் சிலர் ஐதாபாத் வீதிகளில் சுற்றி வருகின்றனர். அவ்வாறு வரும் அழகிகளுக்கு தனித்தனியாக பாதுகாப்பு கொடுப்பது ஐதராபாத் போலீசாருக்கு பெரும் சவாலை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தனர்.

    • உலகம் முழுவதும் 140 நாடுகளை சேர்ந்த இளம்பெண்கள் பங்கேற்க உள்ளனர்.
    • தொடக்கம் மற்றும் நிறைவு விழா போட்டிகள் ஐதராபாத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளன.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 72-வது உலக அழகி போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் வருகிற மே மாதம் 7-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை 4 வாரங்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    இதற்கு முன்பு மும்பை மற்றும் டெல்லியில் உலக அழகி போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.

    நாட்டில் 3-வது முறையாக தெலுங்கானாவில் உலக அழகி போட்டி நடைபெற உள்ளது.

    இந்த போட்டிகளில் உலகம் முழுவதும் 140 நாடுகளை சேர்ந்த இளம்பெண்கள் பங்கேற்க உள்ளனர்.

    நாட்டில் புதிய மாநிலமாக தோன்றிய தெலுங்கானா கடந்த 10 ஆண்டுகளாக வேகமாக முன்னேறி வருகிறது. தற்போது உலக அழகி போட்டி நடைபெற உள்ளதால் உலக அளவில் தெலுங்கானா, ஐதராபாத் பெருநகர பகுதி பிரபலமாகும். தெலுங்கானா சுற்றுலா துறையுடன் இணைந்து இந்த போட்டிகளை மிஸ் வேர்ல்ட் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

    தொடக்கம் மற்றும் நிறைவு விழா போட்டிகள் ஐதராபாத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளன.

    மீதமுள்ள போட்டிகள் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் நடத்த பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இதற்கான இடங்கள் தேர்வு நடந்து வருகிறது.

    ×