என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Miss World 2025"

    • தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் நேற்று உலக அழகி இறுதி போட்டி நடந்தது.
    • தாய்லாந்தை சேர்ந்த ஒபல் சுசாதா சுவாங்ஸ்ரீக்கு வைரம் பதித்த கிரீடமும் அணிவிக்கப்பட்டது.

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் நேற்று உலக அழகி இறுதி போட்டி நடந்தது. இதில் தாய்லாந்தை சேர்ந்த 21 வயதான ஒபல் சுசாதா சுவாங்ஸ்ரீ உலக அழிகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    அவருக்கு உடனடியாக ரூ. 8.50 கோடி, வைரம் பதித்த கிரீடமும் அணிவிக்கப்பட்டது.

    உலக அழகி ஒபல் சுசாதா சுவாங்ஸ்ரீ சமூக நிகழ்வுகளில் பங்கேற்க உலகம் முழுவதும் பயணம் செய்யலாம். அவருக்கு ஆண்டு முழுவதும் ஆடம்பரமான வாழ்க்கை மற்றும் தொழில்முறை வடிவமைப்பாளர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் வசதி கிடைக்கும்.

    விலை உயர்ந்த ஒப்பனை கருவிகள், உடைகள், நகைகள் போன்றவை அனைத்தும் இலவசமாகக் கிடைக்கும். எங்கு சென்றாலும் கடுமையான பாதுகாப்பு வழங்கப்படும்.

    உலக அழகி பட்டம் வென்ற அவருக்கு விலைமதிப்பற்ற வைரங்கள் மற்றும் பல சிறப்பு அம்சங்களால் அலங்கரிக்கப்பட்ட கிரீடம் வழங்கப்பட்டது.

    கிரீடத்தின் ஒவ்வொரு அம்சமும் உலக அழகி போட்டியின் முக்கியத்துவத்தையும் பெண்களின் சக்தியையும் பிரதிபலிக்கிறது.

    தற்போதைய கிரீடத்தின் மதிப்பு தோராயமாக ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்திய மதிப்பில் ரூ.85.56 லட்சம் ஆகும். இது 4-வது உலக அழகி கிரீடம் ஆகும். கிரீடங்கள் மிகிமோட்டோ என்ற ஜப்பானிய நகை நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றன.

    தற்போது பயன்பாட்டில் உள்ள கிரீடம் 2017-ல் வடிவமைக்கப்பட்டது. இந்த கிரீடம் ஒருபோதும் வெற்றியாளருக்குச் சொந்தமாகாது.

    அடுத்த ஆண்டு உலக அழகி போட்டியில் வெற்றி பெறுபவருக்கு தற்போதைய உலக அழகி கிரீடத்தை அணிவிப்பார்.

    • சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் நடைபெற்றது.
    • இந்திய அழகி நந்தினி குப்தா பட்டம் வெல்வாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    ஐதராபாத்தில் நடந்து வரும் உலக அழகி போட்டியின் இறுதிப் போட்டி இன்று இரவு ஐதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் அரங்கில் நடைபெற்றது,

    சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் நடைபெற்றது.

    108 நாடுகளைச் சேர்ந்த அழகு ராணிகள் கிரீடத்தை வெல்ல போட்டியிட்டனர். மிஸ் இந்தியா பட்டம் வென்ற நந்தினி குப்தா உட்பட 40 பேர் காலிறுதிக்கு நுழைந்துள்ளனர்.

    அமெரிக்கா-கரீபியன் ஆப்பிரிக்கா ஐரோப்பா மற்றும் ஆசியா ஓசியானியா கண்டங்களிலிருந்து தலா ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த நான்கில் கடைசி கேள்வியின் மூலம் உலக அழகி அறிவிக்கப்படுவார்.

    1951-ம் ஆண்டு உலக அழகி போட்டி தொடங்கியதில் இருந்து இந்தியா 3-வது முறையாக உலக அழகி போட்டியை நடத்துகிறது.

    இதற்கு முன்பு பெங்களூரு (1996) மற்றும் மும்பை (2024) ஆகிய இடங்களில் நடைபெற்றது. நம் நாட்டுப் பெண்கள் 6 முறை உலக அழகி பட்டத்தை வென்றுள்ளனர்.

    ரீட்டா ஃபரியா (1966), ஐஸ்வர்யா ராய் (1994), டயானா ஹைடன் (1987), யுக்தமுகி (1999), பிரியங்கா சோப்ரா (2000), மற்றும் மனுஷி சில்லர் (2017) ஆகியோர் கிரீடத்தை வென்றுள்ளனர்.

    இந்த முறை இந்திய அழகி நந்தினி குப்தா பட்டம் வெல்வாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில், 2025ம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை தாய்லாந்தைச் சேர்ந்த சுசாதா சுவாங்ஸ்ரீ வென்றுள்ளார்.

    • 1951-ம் ஆண்டு உலக அழகி போட்டி தொடங்கியதில் இருந்து இந்தியா 3-வது முறையாக உலக அழகி போட்டியை நடத்துகிறது.
    • இறுதிப்போட்டி நடைபெறும் ஹைடெக்ஸ் முழுவதும் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    ஐதராபாத்தில் நடந்து வரும் உலக அழகி போட்டியின் இறுதிப் போட்டி இன்று இரவு ஐதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் அரங்கில் நடக்கிறது.

    சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் நடைபெறுகிறது.

    108 நாடுகளைச் சேர்ந்த அழகு ராணிகள் கிரீடத்தை வெல்ல போட்டியிட்டனர். மிஸ் இந்தியா பட்டம் வென்ற நந்தினி குப்தா உட்பட 40 பேர் காலிறுதிக்கு நுழைந்துள்ளனர்.

    அமெரிக்கா-கரீபியன் ஆப்பிரிக்கா ஐரோப்பா மற்றும் ஆசியா ஓசியானியா கண்டங்களிலிருந்து தலா ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த நான்கில் கடைசி கேள்வியின் மூலம் உலக அழகி அறிவிக்கப்படுவார்.

    1951-ம் ஆண்டு உலக அழகி போட்டி தொடங்கியதில் இருந்து இந்தியா 3-வது முறையாக உலக அழகி போட்டியை நடத்துகிறது.

    இதற்கு முன்பு பெங்களூரு (1996) மற்றும் மும்பை (2024) ஆகிய இடங்களில் நடைபெற்றது. நம் நாட்டுப் பெண்கள் 6 முறை உலக அழகி பட்டத்தை வென்றுள்ளனர்.

    ரீட்டா ஃபரியா (1966), ஐஸ்வர்யா ராய் (1994), டயானா ஹைடன் (1987), யுக்தமுகி (1999), பிரியங்கா சோப்ரா (2000), மற்றும் மனுஷி சில்லர் (2017) ஆகியோர் கிரீடத்தை வென்றுள்ளனர்.

    இந்த முறை இந்திய அழகி நந்தினி குப்தா பட்டம் வெல்வாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இறுதிப்போட்டி நடைபெறும் ஹைடெக்ஸ் முழுவதும் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    பிரபல நடிகர் சோனு சூட்டுக்கு உலக அழகி மனிதாபிமான விருது வழங்கப்பட உள்ளது.

    • 72-வது உலக அழகி போட்டி தெலுங்கானாவில் ஐதராபாத் உள்பட கலாசார முக்கியத்துவம் வாய்ந்த 10 நகரங்களில் நடைபெறும்.
    • உலக அழகிப் போட்டியை தெலுங்கானாவில் நடத்துவது வெறும் கவுரவப் பிரச்சினை அல்ல.

    ஐதராபாத்:

    இந்த ஆண்டுக்கான உலக அழகிப்போட்டி தெலுங்கானா மாநிலத்தில் வருகிற மே மாதம் 10-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிகளை தெலுங்கானா மாநில அரசு நடத்துகிறது.

    இதையொட்டி இந்த போட்டியை பிரபலப்படுத்தும் முன்னோட்ட நிகழ்ச்சி ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மாநில சுற்றுலாத்துறை மந்திரி ஜூபள்ளி கிருஷ்ணா ராவ் கூறியதாவது:-

    72-வது உலக அழகி போட்டி தெலுங்கானாவில் ஐதராபாத் உள்பட கலாசார முக்கியத்துவம் வாய்ந்த 10 நகரங்களில் நடைபெறும். இதற்கான செலவை தெலுங்கானா சுற்றுலாத்துறையும், மிஸ் வேர்ல்ட் நிறுவனமும் சமமாக ஏற்றுக்கொள்ளும். உலக அழகிப் போட்டி நடத்துவது மாநிலத்தின் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் என்று எதிர்க்கட்சிகள் தவறான பிரசாரம் செய்கின்றன. உண்மையில் இந்த போட்டியின் மூலம் மாநிலத்தின் பொருளாதாரம் உயரும்.

    உலக அழகிப் போட்டியை தெலுங்கானாவில் நடத்துவது வெறும் கவுரவப் பிரச்சினை அல்ல. உலகம் முழுவதும் பெண்களைக் கொண்டாட இது ஒரு வாய்ப்பு. அவர்களின் மன உறுதியை அங்கீகரிக்க இது ஒரு தெளிவான அழைப்பு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த பேட்டியின்போது தற்போதைய உலக அழகியான கிறிஸ்டினா பிஸ்கோவா உடன் இருந்தார். அவர் கூறுகையில், கடந்த ஆண்டு இந்தியாவில் மும்பை மற்றும் டெல்லியில் உலக அழகி என்ற எனது பயணத்தை தொடங்கினேன். அந்த பயணத்தை இந்தியாவிலேயே நிறைவு செய்கிறேன். இந்தியாவின் பன்முகத்தன்மை அதன் பலம். உங்களிடம் பல மொழிகள், பல இனங்கள் உள்ளன. அது அழகாக இருக்கிறது என்றார்.

    ×