என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிஸ் வேர்ல்ட்"

    • 21 வயதாகும் ஓபல் சுச்சாட்டா கடந்த நான்கு ஆண்டுகளாக மாடலிங் துறையில் இருக்கிறார்.
    • தனது வீட்டில் 16 பூனைகளையும் ஐந்து நாய்களையும் வளர்க்கிறார்.

    ஐதராபாத்தில் நடந்து வந்த உலக அழகிப் போட்டியின் இறுதிச் சுற்று நேற்று நடந்தது. இதில் தாய்லாந்து அழகி சுசாதா சுவாங்ஸ்ரீ வென்றார். அவருக்கு ரூ.8.50 கோடி பரிசு அறிவிக்கப்பட்டது.

    21 வயதாகும் ஓபல் சுச்சாட்டா கடந்த நான்கு ஆண்டுகளாக மாடலிங் துறையில் இருக்கிறார்.

    அவர் 2021 ஆம் ஆண்டு மிஸ் ரத்தனகோசின் போட்டியுடன் தனது அழகுப் போட்டி பயணத்தை தொடங்கினார்.

    2022 ஆம் ஆண்டு, அவர் மிஸ் யுனிவர்ஸ் தாய்லாந்து போட்டியில் பங்கேற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இரண்டாவது இடத்தைப் பிடித்தவர் விலகியதால், அவர் இரண்டாவது இடத்திற்கு உயர்த்தப்பட்டார்.

    ஓபல் சுச்சாட்டாவுக்கு 16 வயதில் மார்பகத்தில் புற்றுநோய் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது, ஆனால் சரியான நேரத்தில் சிகிச்சை பெற்ற பிறகு அவள் குணமடைந்தாள். அந்த நேரத்தில் தனது உடல் மற்றும் மன நிலையை விவரிக்க முடியாததாக சுச்சாதா கூறினார்.

    பெண்களைப் பாதிக்கும் இந்தப் பிரச்சினையை நீக்குவதற்குப் பொது விழிப்புணர்வு அவசியம் என்பதை உணர்ந்த அவர், 'பால் ஃபார் ஹெர்' என்ற பெயரில் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

    உளவியல் மற்றும் மானுடவியலில் ஆர்வமுள்ள ஓபல், இளம் பெண்களிடையே கல்வியை மேம்படுத்துவதற்காகவும் பணியாற்றுகிறார். சுச்சாதா ஒரு விலங்கு பிரியரும் ஆவார். அவர் தனது வீட்டில் 16 பூனைகளையும் ஐந்து நாய்களையும் வளர்க்கிறார்


    தனது வெற்றிக்கான ரகசியத்தை விளக்கிய சுச்சாதா, "எப்போதும் உங்களை நம்புங்கள். உங்கள் முக்கிய மதிப்புகளில் உறுதியாக இருங்கள். நான் என் இலக்கைப் பிடித்துக் கொண்டு என்னை நம்பியதால் இன்று நான் இங்கே இருக்கிறேன்.

    இந்தப் பயணத்தில் உங்களை நீங்களே நேசிக்க மறக்காதீர்கள். இது எப்போதும் எளிதானது அல்ல, சில சமயங்களில் சோர்வாகவும் வெறுப்பாகவும் உணரலாம்.

    ஆனால் நீங்கள் ஒருபோதும் கைவிடவில்லை என்றால், நீங்கள் விரும்பும் இடத்தை நிச்சயமாக அடைவீர்கள்" என்று அவர் கூறினார்.

    • போட்டியில் 6 விருந்தினர்கள் கொண்ட ஒவ்வொரும் மேசையிலும் 2 பெண்கள் ஒதுக்கப்பட்டனர்.
    • அவர்களின் பொழுதுபோக்குக்காக நாங்கள் சுரண்டப்படுவது ஏற்றுக்கொள்வதாய் இல்லை.

    தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உலக அழகிப் போட்டி நடந்து வருகிறது.  

    இந்நிலையில் போட்டியாளர்கள் கண்ணியக் குறைவாக நடத்தப்படுவதாக கூறி இங்கிலாந்து அழகி மில்லா மேகி போட்டியில் இருந்து விலகி உள்ளார்.

    மே 7 ஆம் தேதியில் வந்தடைந்த மில்லா, மீண்டும் மே 16 ஆம் தேதியிலேயே இங்கிலாந்துக்கு திரும்பிவிட்டார்.

    போட்டி தொடர்பாக அந்நாட்டில் நேர்காணலில் பேசிய மில்லா மேகி, "போட்டியாளர்கள் 24 மணிநேரமும் ஒப்பனையுடனும், கண்கவர் ஆடைகளுடனும்தான் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர்.

    தொடர்ந்து, போட்டியில் 6 விருந்தினர்கள் கொண்ட ஒவ்வொரும் மேசையிலும் 2 பெண்கள் ஒதுக்கப்பட்டனர். இரவு முழுவதும் அவர்களை மகிழ்விக்கவே, நாங்கள் அமர்த்தப்பட்டோம்.

    வித்தைக் காட்டும் குரங்குகளைப்போல அங்கு அமர்ந்திருந்தோம். அவர்களின் பொழுதுபோக்குக்காக நாங்கள் சுரண்டப்படுவது ஏற்றுக்கொள்வதாய் இல்லை.  

    உலக அழகிப் பட்டத்துக்கென ஒரு தனிமதிப்பு இருக்க வேண்டும். ஆனால், அங்கு நான் ஒரு பாலியல் தொழிலாளி போல உணர்ந்தேன். இதுபோன்ற சூழ்நிலைக்கு தள்ளப்படுவேன் என்று ஒருபோதும் நினைக்கவில்லை" என்று தெரிவித்தார்.

    இதற்கிடையே மில்லாவின் குற்றச்சாட்டை மறுத்த மிஸ் வேர்ல்டு அமைப்பு, ஆதாரமற்ற, பொய்க் குற்றச்சாட்டுகளை மில்லா பரப்பி வருகிறார் என்றும் குடும்ப சூழ்நிலையை கூறி அவர் விலகியதகவும் தெரிவித்தது.

    மில்லாவுக்கு பதிலாக இங்கிலாந்து நாட்டின் இரண்டாவது அழகியான சார்லோட் கிராண்ட் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    • 1996-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் நடைபெறும் உலக அழகிப் போட்டி.
    • உலக அழகிப் போட்டி வரும் நவம்பர் மாதம் நடைபெறுகிறது.

    இந்தியாவில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மிஸ் வேர்ல்ட் உலக அழகிப் போட்டி இந்த ஆண்டு நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    இந்தியாவில் கடைசியாக 1996ம் ஆண்டில் உலக அழகிப்போட்டி நடைபெற்றது. அதன் பிறகு இந்தியாவில் உலக அழகிப் போட்டி நடைபெறவில்லை.

    இந்நிலையில், உலக அழகிப் போட்டி இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறுகிறது.

    இதுகுறித்து மிஸ் வேர்ல்ட் உலக அழகிப்போட்டி அமைப்பின் தலைவர் ஜூலியா மோர்லி கூறுகையில், "71-வது உலக அழகிப்போட்டியின் இறுதிப்போட்டி இந்தியாவில் நடக்க உள்ளது.

    ஒரு மாதம் நடைபெறும் இந்தப் போட்டியில் 130 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொள்ள உள்ளனர். உலக அழகிப் போட்டி வரும் நவம்பர் மாதம் நடைபெறுகிறது" என்றார்.

    ×