என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக அழகிப் போட்டி"

    • போட்டியில் 6 விருந்தினர்கள் கொண்ட ஒவ்வொரும் மேசையிலும் 2 பெண்கள் ஒதுக்கப்பட்டனர்.
    • அவர்களின் பொழுதுபோக்குக்காக நாங்கள் சுரண்டப்படுவது ஏற்றுக்கொள்வதாய் இல்லை.

    தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உலக அழகிப் போட்டி நடந்து வருகிறது.  

    இந்நிலையில் போட்டியாளர்கள் கண்ணியக் குறைவாக நடத்தப்படுவதாக கூறி இங்கிலாந்து அழகி மில்லா மேகி போட்டியில் இருந்து விலகி உள்ளார்.

    மே 7 ஆம் தேதியில் வந்தடைந்த மில்லா, மீண்டும் மே 16 ஆம் தேதியிலேயே இங்கிலாந்துக்கு திரும்பிவிட்டார்.

    போட்டி தொடர்பாக அந்நாட்டில் நேர்காணலில் பேசிய மில்லா மேகி, "போட்டியாளர்கள் 24 மணிநேரமும் ஒப்பனையுடனும், கண்கவர் ஆடைகளுடனும்தான் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர்.

    தொடர்ந்து, போட்டியில் 6 விருந்தினர்கள் கொண்ட ஒவ்வொரும் மேசையிலும் 2 பெண்கள் ஒதுக்கப்பட்டனர். இரவு முழுவதும் அவர்களை மகிழ்விக்கவே, நாங்கள் அமர்த்தப்பட்டோம்.

    வித்தைக் காட்டும் குரங்குகளைப்போல அங்கு அமர்ந்திருந்தோம். அவர்களின் பொழுதுபோக்குக்காக நாங்கள் சுரண்டப்படுவது ஏற்றுக்கொள்வதாய் இல்லை.  

    உலக அழகிப் பட்டத்துக்கென ஒரு தனிமதிப்பு இருக்க வேண்டும். ஆனால், அங்கு நான் ஒரு பாலியல் தொழிலாளி போல உணர்ந்தேன். இதுபோன்ற சூழ்நிலைக்கு தள்ளப்படுவேன் என்று ஒருபோதும் நினைக்கவில்லை" என்று தெரிவித்தார்.

    இதற்கிடையே மில்லாவின் குற்றச்சாட்டை மறுத்த மிஸ் வேர்ல்டு அமைப்பு, ஆதாரமற்ற, பொய்க் குற்றச்சாட்டுகளை மில்லா பரப்பி வருகிறார் என்றும் குடும்ப சூழ்நிலையை கூறி அவர் விலகியதகவும் தெரிவித்தது.

    மில்லாவுக்கு பதிலாக இங்கிலாந்து நாட்டின் இரண்டாவது அழகியான சார்லோட் கிராண்ட் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    • ஐதராபாத்தில் 72 ஆவது உலக அழகிப் போட்டி நடைபெற்று வருகிறது
    • இந்தப் போட்டியில் இந்தியா சார்பாக மிஸ் இந்தியா நந்தினி குப்தா பங்கேற்றுள்ளார்.

    72 ஆவது உலக அழகிப் போட்டி தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் கோலாகலமாக தொடங்கியது.

    உலகெங்கிலும் உள்ள 110க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள் மிஸ் யுனிவர்ஸ் கிரீடத்தை வெல்வதற்காக இந்தப் போட்டிகளில் பங்கேற்கின்றனர். இந்தப் போட்டிகளில் இந்தியா சார்பாக மிஸ் இந்தியா நந்தினி குப்தா பங்கேற்றுள்ளார்.

    மே 31 வரை ஒரு மாத காலத்துக்கு உலக அழகிப் போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில், தெலுங்கானாவில் உள்ள ராமப்பா கோவிலுக்கு இந்திய கலாச்சார உடையான புடவை அணிந்து மிஸ் வேர்ல்ட் போட்டியாளர்கள் வருகை தந்தனர். போட்டியாளர்களுக்கு கோவிலின் நுழைவாயிலில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், உலக அழகி போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு தெலுங்கானா மாநில பெண்கள் கால்களை கழுவி பாத பூஜை செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இந்த சம்பவத்திற்கு பிஆர்.எஸ் கட்சி தலைவர் நிரஞ்சன் ரெட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "உலக அழகி போட்டியாளர்கள் கால்களை கழுவ வைத்தது கண்டனத்துக்கு உரியது. இது தெலுங்கானா மாநில மக்களுக்கு மிகப்பெரிய அவமானம். இந்த நிகழ்விற்கு முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.காங்கிரஸ் அரசின் தவறின் உச்சக்கட்டம்.இது சம்பந்தப்பட்ட பெண்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தெலுங்கானா சமூகத்திற்கும், கண்ணியத்திற்கும் அவமானம்.

    விவசாயிகள் பயிர் இழப்பீடு ,நிலுவைத் தொகை கேட்டு போராடி வரும் நிலையில் ஆடம்பரமான அழகி போட்டி மாநிலத்திற்கு தேவையா? நாட்டின் எல்லையில் போர் பதற்றம் மறுபுறம் விவசாயிகள் பாதிக்கப்பட்ட நிலையில் சார்மினாரில் கடைகளை மூடி அழகி போட்டியாளர்கள் கேட் வாக் நடத்தியது மிகப்பெரிய தவறு.

    தெலுங்கானா பெண்களை அவமானப்படுத்த வைப்பதில் அரசு மும்முரமாக உள்ளது. இந்த அழகி போட்டியால் தெலுங்கானாவுக்கு எந்த நன்மையும் கிடைக்க போவதில்லை" என்று தெரிவித்தார்.

    • ஐதராபாத்தில் 72 ஆவது உலக அழகிப் போட்டி நடைபெற்று வருகிறது.
    • இந்தப் போட்டியில் இந்தியா சார்பாக மிஸ் இந்தியா நந்தினி குப்தா பங்கேற்றுள்ளார்.

    72 ஆவது உலக அழகிப் போட்டி தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் கோலாகலமாக தொடங்கியது.

    உலகெங்கிலும் உள்ள 110க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள் மிஸ் யுனிவர்ஸ் கிரீடத்தை வெல்வதற்காக இந்தப் போட்டிகளில் பங்கேற்கின்றனர். இந்தப் போட்டிகளில் இந்தியா சார்பாக மிஸ் இந்தியா நந்தினி குப்தா பங்கேற்றுள்ளார்.

    மே 31 வரை ஒரு மாத காலத்துக்கு உலக அழகிப் போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில், தெலுங்கானாவில் உள்ள ராமப்பா கோவிலுக்கு இந்திய கலாச்சார உடையான புடவை அணிந்து மிஸ் வேர்ல்ட் போட்டியாளர்கள் வருகை தந்தனர். போட்டியாளர்களுக்கு கோவிலின் நுழைவாயிலில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    • பெரினி, கொம்மு கோயா, லம்படா மற்றும் ஒக்கு டோலு உள்ளிட்ட தெலுங்கானா பாரம்பரிய நடனங்கள் இடம்பெற்றன.
    • 110க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள் வந்துள்ளனர்.

    72 ஆவது உலக அழகிப் போட்டி தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் நேற்று (சனிக்கிழமை) இரவு கோலாகலமாக தொடங்கியது.

    தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, மிஸ் வேர்ல்ட் லிமிடெட் தலைவர் ஜூலியா மோர்லி சிபிஇ மற்றும் தற்போதைய மிஸ் வேர்ல்ட் கிறிஸ்டினா பிஸ்கோவா ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.

    இந்த நிகழ்வில், பெரினி, கொம்மு கோயா, லம்படா மற்றும் ஒக்கு டோலு உள்ளிட்ட பாரம்பரிய நாட்டுப்புற மற்றும் பழங்குடி நடன நிகழ்ச்சிகள் மூலம் தெலுங்கானாவின் வளமான கலாச்சார பாரம்பரியம் வெளிப்பட்டது.

    உலகெங்கிலும் உள்ள 110க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள் மிஸ் யுனிவர்ஸ் கிரீடத்தை வெல்வதற்காக இந்தப் போட்டிகளில் பங்கேற்கின்றனர். இந்தப் போட்டிகளில் இந்தியா சார்பாக மிஸ் இந்தியா நந்தினி குப்தா பங்கேற்கிறார்.

    தொடக்க நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக போட்டியாளர்களும் விதவிதமான உடைகளில் ஒய்யாரமாக மேடையில் நடைபோட்டனர். 'நோக்கத்துடன் கூடிய அழகு' என்ற கருப்பொருளுடன் இவ்வாண்டுப் போட்டி நடக்கிறது.

    மிஸ் வேர்ல்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான ஜூலியா மோர்லி, "பாரம்பரியம் புதுமையுடன் அழகாகப் பின்னிப் பிணைந்த இடமான தெலுங்கானாவிற்கு மிஸ் வேர்ல்ட் விழாவைக் கொண்டுவருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஆண்டு போட்டி உலக ஒற்றுமை, அமைதி மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றின் உணர்வைப் பிரதிபலிக்கிறது' என்று கூறினார்.

    மே 31 வரை ஒரு மாத காலத்துக்கு நடைபெறும் இந்த விழா, பல்வேறு கலாச்சார, ஆன்மீக மற்றும் தொண்டு நடவடிக்கைகளை உள்ளடக்கியது. வரவிருக்கும் பயணத்திட்டத்தில் மே 12 அன்று நாகார்ஜுனசாகரில் உள்ள புனித புத்தவனத்திற்கு வருகை தருவதும், அதைத் தொடர்ந்து மே 13 அன்று சார்மினார் மற்றும் லாட் பஜாரில் பாரம்பரிய நடைப்பயணம் நடத்துவதும் இடம்பெறும்.

    போட்டியாளர்கள் வரலாற்று சிறப்புமிக்க சௌமஹல்லா அரண்மனையில் நடைபெறும் அரச வரவேற்பு விருந்திலும், இசை நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வார்கள். 

    • 1996-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் நடைபெறும் உலக அழகிப் போட்டி.
    • உலக அழகிப் போட்டி வரும் நவம்பர் மாதம் நடைபெறுகிறது.

    இந்தியாவில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மிஸ் வேர்ல்ட் உலக அழகிப் போட்டி இந்த ஆண்டு நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    இந்தியாவில் கடைசியாக 1996ம் ஆண்டில் உலக அழகிப்போட்டி நடைபெற்றது. அதன் பிறகு இந்தியாவில் உலக அழகிப் போட்டி நடைபெறவில்லை.

    இந்நிலையில், உலக அழகிப் போட்டி இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறுகிறது.

    இதுகுறித்து மிஸ் வேர்ல்ட் உலக அழகிப்போட்டி அமைப்பின் தலைவர் ஜூலியா மோர்லி கூறுகையில், "71-வது உலக அழகிப்போட்டியின் இறுதிப்போட்டி இந்தியாவில் நடக்க உள்ளது.

    ஒரு மாதம் நடைபெறும் இந்தப் போட்டியில் 130 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொள்ள உள்ளனர். உலக அழகிப் போட்டி வரும் நவம்பர் மாதம் நடைபெறுகிறது" என்றார்.

    • பல்வேறு நாடுகளை சேர்ந்த 117 பேர் போட்டியில் பங்கேற்றனர்.
    • இந்தியாவை சேர்ந்த சினி ஷெட்டி உள்பட 14 பேர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.

    இந்தியாவில் நடைபெற்ற 71வது உலக அழகிப் போட்டியில் செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா (25) என்பவர் மகுடம் சூடினார்.

    இந்த போட்டியில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 117 பேர் போட்டியில் பங்கேற்றனர்.

    இந்தியாவை சேர்ந்த சினி ஷெட்டி உள்பட 14 பேர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.

    இந்நிலையில், செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா உலக அழகி பட்டத்தை வென்றார்.

    ×