search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Argentina"

    உலக கோப்பை ஆக்கி போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது. #HockeyWorldCup2018 #Argentina #NewZealand
    புவனேஸ்வரம்:

    16 அணிகள் பங்கேற்றுள்ள 14-வது உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ள அணிகள் லீக் ஆட்டத்தில் மோதி வருகின்றன.

    இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள உலக தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் அணி, 20-வது இடத்தில் உள்ள பிரான்ஸ் அணியை எதிர்கொண்டது.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 6-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி வீரர் டிமோத்தீ கிளமென்ட் கோல் அடித்தார். ஸ்பெயின் அணியினர் பதில் கோல் திருப்ப கடும் முயற்சி மேற்கொண்டனர். பிரான்ஸ் அணியின் தடுப்பு ஆட்டக்காரர்கள் மற்றும் கோல் கீப்பர் ஆர்துர் தைப்ரே அபாரமாக செயல்பட்டு பெனால்டி கார்னர் உள்பட பல வாய்ப்புகளை முறியடித்தனர். முதல் பாதியில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

    48-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி பதில் கோல் திருப்பியது. அந்த அணி வீரர் அல்வரோ இக்லிசியஸ் இந்த கோலை அடித்தார். இதனால் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை ஏற்பட்டது. அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. 51-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு ‘பெனால்டி ஸ்டிரோக்’ வாய்ப்பு கிடைத்தது. இதனை ஸ்பெயின் அணியின் கோல்கீப்பர் குய்சோ கோர்டஸ் லாவகமாக செயல்பட்டு தடுத்து நிறுத்தினார்.

    முடிவில் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. முதல் லீக் ஆட்டங்களில் ஸ்பெயின் அணி அர்ஜென்டினாவிடமும், பிரான்ஸ் அணி நியூசிலாந்திடமும் தோல்வி கண்டு இருந்தன.



    மற்றொரு லீக் ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் அணியுமான அர்ஜென்டினா 3-0 என்ற கோல் கணக்கில் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள நியூசிலாந்தை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் அர்ஜென்டினா அணி நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெறுவது பிரகாசமாகி இருக்கிறது. அர்ஜென்டினா முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை வென்று இருந்தது. நியூசிலாந்து அணி முதல் ஆட்டத்தில் பிரான்சை சாய்த்து இருந்தது. இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா (மாலை 5 மணி), அயர்லாந்து-சீனா (இரவு 7 மணி) அணியும் மோதுகின்றன.

    அர்ஜென்டினாவில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற டிரம்ப், ஜி ஜின்பிங் மற்றும் ஷின்சோ அபே உள்ளிட்ட உலக தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். #G20summit #Modi
    புய்னோஸ் எய்ரேஸ்:

    ஜி-20 என்று சுருக்கமாக அழைக்கப்படும் அமைப்பானது உலகில் வளர்ச்சி அடைந்த 20 நாடுகளான அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய‌வை இடம்பெற்றுள்ளன.
     
    இந்த அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் உச்சி மாநாடுகள் நடைபெற்று வருகிறது. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான 13-வது உச்சி மாநாடு அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் புய்னோஸ் எய்ரேஸ் நகரில் நாளை தொடங்கி டிசம்பர் முதல் தேதி வரை நடைபெறுகிறது.



    இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அர்ஜென்டினா சென்றார். அங்கு அவருக்கு தூதரக அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

    இதற்கிடையே, அர்ஜென்டினாவில் இன்று நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதிகள் உலக நாடுகளுக்கு கடும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றனர் என தெரிவித்தார்.

    இந்த மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உள்ளிட்ட பல்வேறு உலக தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. #G20summit #Modi
    அர்ஜென்டினாவில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, உலக நாடுகளுக்கு கடும் அச்சுறுத்தலாக விளங்குவது பயங்கரவாதம் என தெரிவித்துள்ளார். #G20summit #Modi #XiJinping
    புய்னோஸ் எய்ரேஸ்:

    ஜி-20 என்று சுருக்கமாக அழைக்கப்படும் அமைப்பானது உலகில் வளர்ச்சி அடைந்த 20 நாடுகளான அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய‌வை இடம்பெற்றுள்ளன.
     
    இந்த அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் உச்சி மாநாடுகள் நடைபெற்று வருகிறது. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான 13-வது உச்சி மாநாடு அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் புய்னோஸ் எய்ரேஸ் நகரில் நாளை தொடங்கி டிசம்பர் முதல் தேதி வரை நடைபெறுகிறது.



    இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அர்ஜென்டினா சென்றார். அங்கு அவருக்கு தூதரக அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

    இந்நிலையில், ஜி 20 மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாதிகள் உலக நாடுகளுக்கு கடும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் பேசுகையில், பயங்கரவாதமும், முற்போக்குத் தன்மையும் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளன.
    பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளிப்பவர்களும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளனர். கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளில் உலக நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். 

    இந்த மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இன்று பிரதமர் மோடி சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. #G20summit #Modi #XiJinping
    ஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டினா அணி ஸ்பெயின் அணியை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. #HockeyWorldCup2018 #Argentina #Spain
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.

    இதில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள அர்ஜென்டினா, ஸ்பெயின் அணிகள் மோதின.

    ஆட்டம் தொடங்கிய 3வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் கான்செலஸ் முதல் கோல் அடித்தார். அடுத்த நிமிடத்திலேயே அர்ஜென்டினா வீரர் அகஸ்டின் மாசெல்லி ஒரு கோல் அடித்து சமனிலைக்கு கொண்டு வந்தார். இதேபோல், ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் ஜோசபின் ருமியு ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

    இதற்கும் அடுத்த வினாடியே அர்ஜெண்டினா வீரர் அகஸ்டின் மாசெல்லி பதில் கோல் அடித்து மீண்டும் சமனிலைக்கு கொண்டு வந்தார். தொடர்ந்து கிடைத்த பெனால்டி கார்னரில் கான்சலோ பெய்லாட் கோலாக்கினார்.இதையடுத்து ஆட்டத்தின் முதல் பாதியில் அர்ஜென்டினா 3-2 என முன்னிலை வகித்தது.

    இரண்டாவது பாதியில், ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் ரோயிஸ் ஒரு கோல் அடிக்க ஆட்டம் சமனிலை பெற்றது. கடைசியாக, ஆட்டத்தின் 49வது நிமிடத்தில் பெய்லாட் மீண்டும் ஒரு கோல் அடித்தார்.

    இறுதியில், அர்ஜென்டினா அணி ஸ்பெயின் அணியை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. #HockeyWorldCup2018 #Argentina #Spain
    ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று அர்ஜென்டினா சென்றடைந்தார். #ModileaveArgentina #G20summit
    புய்னோஸ் எய்ரேஸ்:

    ஜி-20 என்று சுருக்கமாக அழைக்கப்படும் அமைப்பானது உலகில் வளர்ச்சி அடைந்த 20 நாடுகளான அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய‌வை இடம்பெற்றுள்ளன.
     
    இந்த அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் உச்சி மாநாடுகள் நடைபெற்று வருகிறது. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான 13-வது உச்சி மாநாடு அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் புய்னோஸ் எய்ரேஸ் நகரில் நாளை தொடங்கி டிசம்பர் முதல் தேதி வரை நடைபெறுகிறது.



    இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று மாலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அர்ஜென்டினா புறப்பட்டார். 

    இந்நிலையில், பிரதமர் மோடி இன்று மாலை அர்ஜென்டினா தலைநகரம் புய்னோஸ் எய்ரேஸசை சென்றடைந்தார். விமான நிலையம் வந்த மோடிக்கு தூதரக அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

    இந்த மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவார். மாநாடு முடிந்ததும் அங்கிருந்து டிசம்பர் 2-ம் தேதி அவர் தாயகம் திரும்புகிறார் என இந்திய வெளியுறவு துறை தெரிவித்துள்ளது. #ModileaveArgentina  #G20summit
    உலக கோப்பை ஹாக்கி போட்டியில் ஏ பிரிவில் உள்ள அர்ஜென்டினா- ஸ்பெயின், பிரான்ஸ்- நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றனர். #HockeyWorldCup2018
    புவனேஷ்வர்:

    14-வது உலக கோப்பை ஹாக்கி போட்டி ஒடிஷா தலைநகர் புவனேஷ்வரத்தில் நேற்று தொடங்கியது.

    இந்தப் போட்டியில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டது.

    நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் உள்ள இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. இதில் இந்தியா வெற்றியுடன் தனது கணக்கை தொடங்கிய 5-0 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

    இந்திய அணி 2-வது ஆட்டத்தில் பெல்ஜியத்தை வருகிற 2-ந்தேதி எதிர் கொள்கிறது. இதே பிரிவில் நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் 2-1 என் கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தியது.

    2-வது நாளான இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. இதில் ஏ பிரிவில் உள்ள அர்ஜென்டினா- ஸ்பெயின் (மாலை 5 மணி), பிரான்ஸ்- நியூசிலாந்து (இரவு 7 மணி) அணிகள் மோதுகின்றன. #HockeyWorldCup2018
    பிரதமர் மோடி அடுத்த மாதம் அர்ஜென்டினா நாட்டுக்கு சுற்றுப்பயணம் செல்கிறார். அங்கு நடைபெற உள்ள ஜி20 மாநட்டில் கலந்து கொள்கிறார். #PMModi #G20Conference
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி அடுத்த மாதம் அர்ஜென்டினா நாட்டுக்கு சுற்றுப்பயணம் செல்கிறார்.

    அங்கு ‘ஜி 20’ நாடுகள் மாநாடு நடக்கிறது. இதில் பிரதமர் மோடி மற்றும் ‘ஜி 20’ நாட்டு தலைவர்கள் உரை நிகழ்த்துகிறார்கள்.

    இந்த பயணத்தின் போது சீன ஜனாதிபதி ஸிஜிங்பிங்கை பிரதமர் மோடி தனியாக சந்தித்துப் பேசுகிறார்.

    அப்போது ஆப்கானிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு இந்தியாவும் சீனாவும் இணைந்து அளிக்கும் பயிற்சி முகாமை தொடங்கி வைப்பது பற்றி பேச்சு நடத்துகிறார்கள். அர்ஜென்டினாவில் பிரதமர் மோடி சீன அதிபரை சந்தித்து பேச இருக்கும் தகவலை டெல்லியில் சீன தூதர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். #PMModi #G20Conference
    அர்ஜெண்டினாவில் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கும் மசோதா அந்நாட்டு பாராளுமன்ற செனட் சபையில் தோல்வியடைந்தது.
    பியூனோ அய்ர்ஸ்:

    சட்டத்திற்கு புறம்பாக கருக்கலைப்பு செய்யும் பெண்ணுக்கும், மருத்துவருக்கும் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும் சட்டம் அர்ஜெண்டினாவில் அமலில் இருந்து வருகிறது. கருக்கலைப்பின் போது பெண்களின் உயிர் பறிபோவதை தடுக்கும் நோக்கில் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது.

    ஆனால், தங்களுக்கு கருக்கலைப்பு சுதந்திரம் வழங்கக் கோரி கடந்த சில மாதங்களாகவே அர்ஜெண்டினாவில் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், போராட்டம் வலுத்ததன் காரணமாக கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கும் மசோதா பாராளுமன்ற செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. 

    இந்த மசோதாவில்,14 வார கருவை கலைக்க சட்டபூர்வ அனுமதி உண்டு என்ற அம்சம் இடம்பெற்றிருந்தது. இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு இன்று நடந்த நிலையில், மசோதாவுக்கு ஆதரவாக 31 வாக்குகளும், எதிராக 38 வாக்குகளும் விழுந்தது. இதனால், மசோதா தோல்வியடைந்தது. 

    உடல்நலம் மிகவும் குன்றிய பெண்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களுக்கு கருக்கலைப்பு செய்வதற்கு மட்டுமே அர்ஜெண்டினாவில் அனுமதி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது
    20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கோடிப் கோப்பை சர்வதேச கால்பந்து போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது. #INDvARG #COTIF2018 #COTIFCup
    வாலென்சியா:

    20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கோடிப் கோப்பை சர்வதேச கால்பந்து போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதன் லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, அர்ஜென்டினாவை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் 6 முறை உலக சாம்பியனான (20 வயதுக்கு உட்பட்டோர்) அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி அளித்தது. இந்திய அணி தரப்பில் தீபக் தாங்ரி 4-வது நிமிடத்திலும், அன்வர் அலி 68-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். 54-வது நிமிடத்தில் இந்திய அணி வீரர் ஜாதவ் முரட்டு ஆட்டம் காரணமாக நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். பின்னர் 10 வீரர்களுடன் விளையாடிய இந்திய அணி பெற்ற முன்னிலையை போராடி தக்க வைத்து கொண்டது.

    மேற்கு ஆசிய கால்பந்து பெடரேஷன் சார்பில் 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான சர்வதேச கால்பந்து போட்டி ஜோர்டானில் நடந்து வருகிறது. இதில் லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, ஆசிய சாம்பியன் ஈராக்கை சந்தித்தது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஈராக்கை வீழ்த்தியது. கடைசி நிமிடத்தில் இந்திய வீரர் புவனேஷ் வெற்றிக்கான கோலை அடித்தார். ஈராக் அணியை இந்திய அணி தோற்கடித்து இருப்பது இதுவே முதல்முறையாகும். #INDvARG #COTIF2018 #COTIFCup 
    உலக கோப்பை கால்பந்து போட்டியில் நாக் அவுட் சுற்றில் பிரான்ஸ் அணி 4-3 என்ற கணக்கில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. #WorldCup2018 #ARGFRA #ArgentinavsFrance
    ரஷியாவில் நடந்து வரும் 2-வது உலக கோப்பை கால்பந்து போட்டியில் 32 அணிகள் பங்கேற்றன. இதன் லீக் ஆட்டங்கள் கடந்த 28-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதில் 2-வது சுற்றுக்கு உருகுவே, ரஷியா (‘ஏ’ பிரிவு), ஸ்பெயின், போர்ச்சுக்கல் (பி), பிரான்ஸ், டென்மார்க் (சி), குரோஷியா, அர்ஜென்டினா (டி), பிரேசில், சுவிட்சர்லாந்து (இ), சுவீடன், மெக்சிகோ (எப்), பெல்ஜியம், இங்கிலாந்து (ஜி), கொலம்பியா, ஐப்பான் (எச்) ஆகிய 16 அணிகள் தகுதி பெற்றன.

    இதற்கிடையே, 2-வது சுற்று ஆட்டங்கள் இன்று இரவு தொடங்கின. இரவு 7.30 மணிக்கு நடந்த ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் முதலிடம் பிடித்த பிரான்ஸ் மற்றும் ’டி’ பிரிவில் 2-ம் இடம் பிடித்த அர்ஜென்டினா அணிகள் மோதின.



    ஆட்டம் தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் அபாரமாக விளையாடினர். பிரான்ஸ் அணியின் அண்டோனி கிரிஸ்மான் 13வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். 

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அர்ஜெண்டினா அணியின் ஏஞ்சல் டி மரியா 41வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து நாக் அவுட் ஆட்டத்தின் முதல் பாதியில் பிரான்சும் அர்ஜெண்டினாவும் 1-1 என்ற கணக்கில் சமனிலை வகித்தது.



    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 48வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் காப்ரிய்ல் மர்கோடா ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

    இதைத்தொடர்ந்து பிரான்ஸ் அணியின் பெஞ்சமின் பவார்ட் 57-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து சமனிலைப்படுத்தினார். அவரை தொடர்ந்து பிரான்ஸ் அணியின் மபாப்பி 64 மற்றும் 68-வது நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.

    கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் அர்ஜெண்டினா வீரர் செர்ஜியோ அகுரோ ஒரு கோல் அடித்தார்.
      


    இதையடுத்து, பிரான்ஸ் அணி அர்ஜெண்டினாவை 4-3 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது. லியோன் மெஸ்சியின் உலக கோப்பை கனவு தகர்ந்தது. #ARGFRA #WorldCup #ArgentinavsFrance #LionelMessi #Football #WorldCupRussia2018 #FifaWorldCup18 #FIFA 
    உலக கோப்பை கால்பந்து போட்டியில் நாக் அவுட் சுற்றின் முதல் பாதியில் அர்ஜெண்டினாவும், பிரான்சும் 1-1 என்ற கணக்கில் சமனிலை வகிக்கிறது. #WorldCup2018 #ARGFRA #ArgentinavsFrance
    ரஷியாவில் நடந்து வரும் 2-வது உலக கோப்பை கால்பந்து போட்டியில் 32 அணிகள் பங்கேற்றன. இதன் லீக் ஆட்டங்கள் கடந்த 28-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதில் 2-வது சுற்றுக்கு உருகுவே, ரஷியா (‘ஏ’ பிரிவு), ஸ்பெயின், போர்ச்சுக்கல் (பி), பிரான்ஸ், டென்மார்க் (சி), குரோஷியா, அர்ஜென்டினா (டி), பிரேசில், சுவிட்சர்லாந்து (இ), சுவீடன், மெக்சிகோ (எப்), பெல்ஜியம், இங்கிலாந்து (ஜி), கொலம்பியா, ஐப்பான் (எச்) ஆகிய 16 அணிகள் தகுதி பெற்றன.

    இதற்கிடையே, 2-வது சுற்று ஆட்டங்கள் இன்று இரவு தொடங்கின. இரவு 7.30 மணிக்கு நடந்த ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் முதலிடம் பிடித்த பிரான்ஸ் மற்றும் ’டி’ பிரிவில் 2-ம் இடம் பிடித்த அர்ஜென்டினா அணிகள் மோதின.



    ஆட்டம் தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் அபாரமாக விளையாடினர். பிரான்ஸ் அணியின் அண்டோனி கிரிஸ்மான் 13வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். 

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அர்ஜ்ண்டினா அணியின் ஏஞ்சல் டி மரியா 41வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து நாக் அவுட் ஆட்டத்தின் முதல் பாதியில் பிரான்சும் அர்ஜெண்டினாவும் 1-1 என்ற கணக்கில் சமனிலை வகிக்கிறது. #ARGFRA #WorldCup #ArgentinavsFrance #LionelMessi #Football #WorldCupRussia2018 #FifaWorldCup18 #FIFA 
    உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நாளை நடைபெறும் 2-வது சுற்று ஆட்டத்தில் பிரான்ஸ், உருகுவே-போர்ச்சுக்கல் அணிகள் மோதுகின்றன. #FIFA2018 #WorldCupfootball2018
    கசான்:

    21-வது உலகக்கோப்பை கால்பந்து போட்டி கடந்த 14-ந்தேதி ரஷியாவில் கோலாகலமாக தொடங்கி யது.

    இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றன. ‘லீக்’ சுற்றில் ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 1 முறைமோத வேண்டும். இதன் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘நாக்அவுட்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

    நேற்றுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் உருகுவே, ரஷியா (‘ஏ’ பிரிவு), ஸ்பெயின், போர்ச்சுக்கல் (பி), பிரான்ஸ், டென்மார்க் (சி), குரோஷியா, அர்ஜென்டினா (டி), பிரேசில், சுவிட்சர்லாந்து (இ), சுவீடன், மெக்சிகோ (எப்’, பெல்ஜியம், இங்கிலாந்து (ஜி), கொலம்பியா, ஜப்பான் (எச்) ஆகிய 16 அணிகள் ‘நாக்அவுட்’ சுற்றுக்கு தகுதி பெற்றன.

    சவுதிஅரேபியா, எகிப்து (‘ஏ’ பிரிவு), ஈரான், மொராக்கோ (பி), பெரு, ஆஸ்திரேலியா (சி), நைஜீரியா, ஐஸ்லாந்து(டி), செர்பியா, கோஸ் டாரிகா (இ), தென் கொரியா, ஜெர்மனி (எப்), துனிசியா, பனாமா (ஜி), செனகல், போலந்து (எச்), ஆகிய 16 நாடுகள் வெளியேற்றப்பட்டன.

    இன்று ஓய்வு நாளாகும் 2-வது சுற்று ஆட்டங்கள் நாளை (30-ந்தேதி) தொடங்குகிறது. ‘சி’ பிரிவில் முதலிடத்தை பிடித்த பிரான்ஸ்- ‘டி’ பிரிவில் 2-வது இடத்தை பிடித்த அர்ஜன்டீனா அணிகள் முதல் ஆட்டத்தில் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு 7.30-க்கு இந்தப்போட்டி தொடங்குகிறது.

    இரண்டு அணிகளும் முன்னாள் சாம்பியன் ஆகும். அர்ஜென்டீனா 1978, 1986-ம் ஆண்டுகளிலும், பிரான்ஸ் 1998-ம் ஆண்டி லும் உலககோப்பையை வென்றுள்ளன. இந்த இரண்டு அணிகளில் ஒன்று வெளியேற்றப்பட்டுவிடும்.

    நாளை நடைபெறும் 2-வது ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் முதல் இடத்தை பிடித்த உருகுவே -‘பி’ பிரிவில் 2-வது இடத்தை பிடித்த போர்ச்சுக்கல் அணிகள் மோதுகின்றன.

    3-ந்தேதி வரை, 2-வது சுற்று ஆட்டங்கள் நடக்கிறது. கால் இறுதி ஆட்டங்கள் 6 மற்றும் 7-ந்தேதிகளிலும், அரை இறுதி ஆட்டங்கள் 10 மற்றும் 11-ந்தேதிகளிலும், 3-வது இடத்திற்கான போட்டி 14-ந்தேதியயும் நடைபெறுகிறது. இறுதி போட்டி 15-ந்தேதி நடக்கிறது. #FIFA2018 #WorldCupfootball2018
    ×