என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மரடோனா"
- மரடோனாவுக்கு அர்ப்பணிக்கும் வகையில் சில வரிகளை தெரிவித்து உள்ளார்.
- 1993-ம் ஆண்டு தனது 6-வது வயதில் கால்பந்து ஆட ஆரம்பித்தது முதல் தற்போதையை உலக கோப்பையை வென்றது வரை உள்ள சிறப்புகளை மெஸ்சி தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.
பியுனஸ் அயர்ஸ்:
கத்தாரில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் பெற்றது. இறுதி போட்டியில் பிரான்சை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தியது.
அர்ஜென்டினா 3-வது முறையாக உலக கோப்பையை வென்று உள்ளது. இதற்கு முன்பு 1978, 1986-ம் ஆண்டுகளில் சாம்பியன் ஆகி இருந்தது. மரடோனாவுக்கு பிறகு லியோனல் மெஸ்சி அந்நாட்டுக்காக உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தார்.
36 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜென்டினா உலக கோப்பையை கைப்பற்றிய தால் அந்நாடே விழாக் கோலம் பூண்டுள்ளது. அணியின் வெற்றியை திருவிழா போல் தொடர்ந்து கொண்டாடி வருகிறார்கள்.
உலக கோப்பையை வென்ற அர்ஜென்டினா கால்பந்து வீரர்கள் நேற்று நாடு திரும்பினர். அவர்களுக்கு மிகவும் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. மக்கள் பெரும் திரளாக பங்கேற்று தங்கள் நாட்டு நாயகர்களை வாழ்த்தி கோஷ மிட்டனர். திறந்த பஸ்சில் சென்ற அவர்களுக்கு சாலையின் இரு புறத்தில் இருந்தும் மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து உற்சாகப்படுத்தினர்.
இந்த உற்சாகமான வரவேற்பில் அர்ஜென்டினா கால்பந்து வீரர்கள் திக்கு முக்காடி விட்டனர். நாடு முழுவதும் இந்த வெற்றி கொண்டாட்டம் இருந்தது.
உலக கோப்பையை வென்றதன் மூலம் மெஸ்சியின் கனவு நனவாகி உள்ளது. இதன் மூலம் கால்பந்தின் அனைத்து காலக்கட்டத்திலும் தான் உலகின் சிறந்த வீரர்களில் ஒருவர் என்பதை நிரூபித்து காட்டி விட்டார்.
இந்த நிலையில் லியோனல் மெஸ்சி தனது 30ஆண்டுகள் பயணத்தை குறிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். கால்பந்து உலகில் மெஸ்சியின் புகழ் பெற்ற பயணம், சமீபத்தில் அதன் உச்சத்தை எட்டியது உள்ளிட்ட எல்லா அம்சங்களும் வீடியோவில் இருக்கிறது.
1993-ம் ஆண்டு தனது 6-வது வயதில் கால்பந்து ஆட ஆரம்பித்தது முதல் தற்போதையை உலக கோப்பையை வென்றது வரை உள்ள சிறப்புகளை மெஸ்சி தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.
மேலும் கால்பந்து ஜாம்பவனான டியாகோ மரடோனாவுக்கும் அவர் அஞ்சலியும் செலுத்தி உள்ளார். மரடோனாவுக்கு அர்ப்பணிக்கும் வகையில் சில வரிகளை தெரிவித்து உள்ளார். மனதை கவரும் தலைப்பையும் அதில் பதிவிட்டுள்ளார்.
மெஸ்சி இந்த வீடியோவை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
- உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்த அர்ஜென்டினா வீரர் கேப்ரியல் பாடிஸ்டுடா ஆவார். அவர் 10 கோல்களை அடித்துள்ளார்.
- அவருக்கு அடுத்தபடியாக மரடோனா, மெஸ்சி உள்ளனர்.
கால்பந்து ஜாம்பவான் என்று அழைக்கப்படுபவர் டிகோ மரடோனா. அர்ஜென்டினாவுக்கு 1986-ம் ஆண்டு உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தார். அவர் உலக கோப்பையில் 21 ஆட்டத்தில் 8 கோல்கள் அடித்துள்ளார். மரடோனாவின் இந்த சாதனையை லியோனஸ் மெஸ்சி சமன் செய்தார்.
கத்தாரில் நடைபெறும் உலக கோப்பை போட்டியில் உலகின் முன்னணி வீரரும், அர்ஜென்டினா கேப்டனுமான மெஸ்சி மெக்சிகோவுக்கு எதிராக ஒரு கோல் அடித்தார். ஏற்கனவே சவுதி அரேபியாவுக்கு எதிராக ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் உலக கோப்பையில் 8 கோல்களை (21 ஆட்டம்) அவர் தொட்டார்.
மரடோனா கடந்த 2020 ஆண்டு நவம்பர் 25-ந் தேதி மரணம் அடைந்தார். அவரது 2-வது ஆண்டு நினைவு தினத்துக்கு மறுநாளில் மெஸ்சி இந்த சாதனையை சமன் செய்தார். உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்த அர்ஜென்டினா வீரர் கேப்ரியல் பாடிஸ்டுடா ஆவார். அவர் 10 கோல்களை அடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக மரடோனா, மெஸ்சி உள்ளனர்.
- மருத்துவர்களின் அலட்சியத்தால் மரடோனா உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
- குற்றம் நிரூபிக்கப்பட்டால் 8 முதல் 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
பியூனர்ஸ் அயர்ஸ்:
பிரபல கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா கடந்த 2020ம் ஆண்டு மரணம் அடைந்தார். மூளையில் இரத்தக்கசிவுக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, இரண்டு வாரங்களுக்குப் பிறகு, இதய செயலிழப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக அவரது மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது மரணத்தில் சர்ச்சைகள் நிலவி வந்தது. மருத்துவர்களின் அலட்சியத்தால் மரடோனா உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் தற்போது மரடோனாவின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும் குடும்ப மருத்துவருமான லியோபோல்டோ லுக், மனநல மருத்துவர் அகஸ்டினா கோசாச்சோவ், உளவியலாளர் கார்லோஸ் டயஸ், மருத்துவ ஒருங்கிணைப்பாளர் நான்சி ஃபோர்லினி மற்றும் செவிலியர்கள் என மொத்தம் 8 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதை அர்ஜென்டினா நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.
இவர்களின் கவனக்குறைவு காரணமாக மரடோனா உயிரிழந்ததாக வழக்கறிஞர்கள் தெரிவித்ததை அடுத்து மருத்துவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். விசாரணை தேதி எதுவும் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 8 முதல் 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்