search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரா"

    டெல்லியில் நடைபெற்ற 5வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் டெல்லி டைனமோஸ் எப்.சி. - எப்.சி.கோவா அணிகளுக்கிடையிலான போட்டி டிராவில் முடிந்தது. #IndianSuperLeague
    புதுடெல்லி:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடரில் டெல்லியில் நேற்று இரவு நடந்த 69-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் எப்.சி.-எப்.சி.கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது. 14-வது ஆட்டத்தில் ஆடிய கோவா அணி 7 வெற்றி, 4 டிரா, 3 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. டெல்லி அணி 14 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, 5 டிரா, 7 தோல்வியுடன் 8-வது இடத்தில் இருக்கிறது.

    நாளை (புதன்கிழமை) இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் நடைபெறும் 70-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.-கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. #IndianSuperLeague

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு-டெல்லி அணிகள் இடையிலான கடைசி லீக் ஆட்டத்தில் தமிழக அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. அத்துடன் ஆட்டம் டிராவில் முடிந்தது. #RanjiTrophy
    சென்னை:

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு-டெல்லி அணிகள் இடையிலான கடைசி லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி முதல் இன்னிங்சில் 432 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய டெல்லி அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்து இருந்தது. ஜான்டி சித்து 104 ரன்னுடனும், லலித் யாதவ் 65 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்த நிலையில் கடைசி நாளான நேற்று தொடர்ந்து ஆடிய டெல்லி அணி முதல் இன்னிங்சில் 133.1 ஓவர்களில் 336 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. லலித் யாதவ் 91 ரன்னில் கேட்ச் ஆனார். ஜான்டி சித்து 140 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். தமிழக சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அடுத்து 96 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. அத்துடன் ஆட்டம் டிராவில் முடிந்தது. முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் தமிழக அணிக்கு 3 புள்ளி கிடைத்தது. இதனால் தனது பிரிவில் (பி) 8-வது இடத்தை பிடித்த தமிழக அணி அடுத்த சீசனில் இதே பிரிவில் நீடிப்பதை உறுதி செய்தது. அதே சமயம் தனது பிரிவில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட டெல்லி அணி அடுத்த சீசனில் ‘சி’ பிரிவுக்கு தரம் இறக்கப்படுகிறது.

    கால்இறுதி ஆட்டங்கள் வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது. கால்இறுதி ஆட்டங்களில் விதர்பா-உத்தரகாண்ட், சவுராஷ்டிரா-உத்தரபிரதேசம், கர்நாடகா-ராஜஸ்தான், கேரளா-குஜராத் அணிகள் மோதுகின்றன.  #RanjiTrophy

    சி.கே.நாயுடு கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு-குஜராத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிரா ஆனது.
    தேனி:

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சி.கே.நாயுடு கோப்பைக்கான 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 4 நாட்கள் கிரிக்கெட் போட்டி நாடு முழுவதும் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 36 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில், தமிழ்நாடு-குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டி தேனி அருகே தப்புக்குண்டுவில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மைதானத்தில் கடந்த 30-ந்தேதி தொடங்கியது.

    முதல் இன்னிங்சில் தமிழ்நாடு அணி 329 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து ஆடிய குஜராத் அணி 414 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 85 ரன்கள் பின்தங்கிய நிலையில் தமிழ்நாடு அணி 2-வது இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடர்ந்தது. 3-வது நாள் ஆட்டநேரம் முடிவில் தமிழ்நாடு அணி 4 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 12 ரன்கள் எடுத்து இருந்தது.

    4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து களம் இறங்கிய தமிழ்நாடு அணி வீரர்கள் போட்டியை டிராவை நோக்கி கொண்டு செல்லும் போக்கில் ஆடினர். முகுந்த் (54 ரன்), லோகேஸ்வர் (57) ரன் ஆகியோர் அரைசதம் அடித்து ஆறுதல் அளித்தனர். மற்ற வீரர்களில் ஆதித்யா பரூயா 31 ரன்னும், விஷால் வைத்யா 33 ரன்னும் எடுத்து இருந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். ஆட்டநேரம் முடிவில் தமிழ்நாடு அணி 85 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்த நிலையில் போட்டி டிரா ஆனது.

    இந்த போட்டியோடு தமிழ்நாடு அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 3 டிரா, ஒரு தோல்வி கண்டுள்ளது. குஜராத் அணி 4 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 2 டிரா கண்டுள்ளது.
    நடப்பு சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென், பாபியானோ காருனா இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கார்ல்சென் 49-வது நகர்த்தலில் ‘டிரா’ கண்டார். #WorldChessChampionship #Carlsen #Caruana
    லண்டன்:

    நடப்பு சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே), பாபியானோ காருனா (அமெரிக்கா) இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் 12 சுற்று முடிவில் அதிக புள்ளிகள் எடுக்கும் வீரருக்கு மகுடம் கிட்டும்.

    முதல் 2 சுற்றுகள் டிரா ஆன நிலையில் 3-வது சுற்று நேற்று முன்தினம் நடந்தது. இதில் கருப்பு நிற காய்களுடன் ஆடிய கார்ல்சென் 49-வது நகர்த்தலில் ‘டிரா’ கண்டார். இந்த ஆட்டம் 4¼ மணி நேரம் நீடித்தது. இந்த முடிவு திருப்தி அளித்தாலும், தனது ஆட்டத்தில் இன்னும் முன்னேற்றம் காண வேண்டி உள்ளது என்று கார்ல்சென் கூறினார். #WorldChessChampionship #Carlsen #Caruana
    கொச்சியில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கேரளா - டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. #ISL2018 #KeralaBlasters #DelhiDynamos
    கொச்சி:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொச்சி நேரு ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி.-டெல்லி டைனமோஸ் எப்.சி. அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.



    பிற்பாதி ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் (48-வது நிமிடம்) கேரளா அணியின் வினீத் இடது காலால் பந்தை உதைத்து கோலாக்கினார். 84-வது நிமிடத்தில் டெல்லி அணி வீரர் அன்ட்ரிஜா காலுட்ஜெரோவிச் பதில் கோல் திருப்பினார். முடிவில் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. 3-வது ஆட்டத்தில் ஆடிய கேரளா அணி ஒரு வெற்றி, 2 டிரா கண்டுள்ளது. 3-வது ஆட்டத்தில் களம் கண்ட டெல்லி அணி 2 டிரா, ஒரு தோல்வி கண்டு இருக்கிறது. ஜாம்ஷெட்பூரில் இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.-அட்லெடிகோ டி கொல்கத்தா (இரவு 7.30 மணி) அணிகள் சந்திக்கின்றன. #ISL2018 #KeralaBlasters #DelhiDynamos
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கோவா-கவுகாத்தி அணிகள் இடையிலான ஆட்டம் யாருக்கும் வெற்றி தோல்வியின்றி ‘டிரா’வில் முடிந்தது. #ISL2018 #NorthEastUnited #FCGoa
    கவுகாத்தி:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னையின் எப்.சி., பெங்களூரு எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), எப்.சி.கோவா, மும்பை சிட்டி, ஜாம்ஷெட்பூர், அட்லெடிகோ டி கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ், டெல்லி டைனமோஸ், புனே சிட்டி ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.



    இந்த நிலையில் கவுகாத்தியில் நேற்றிரவு நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் கவுகாத்தி-கோவா அணிகள் மல்லுகட்டின. இதில் பலம் வாய்ந்த கோவா அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கவுகாத்தி அணியினர் ஈடுகொடுத்து ஆடினர். கோவா கோல் கீப்பர் முகமது நவாஸ் செய்த தவறால் 8-வது நிமிடத்தில் கவுகாத்தி வீரர் பெடரிகோ காலெகோ கோல் அடித்தார். அதாவது தனது பகுதியை விட்டு வெளியே வந்து பந்தை பிடித்த முகமது நவாஸ் அது ஆப்-சைடு என்று அறிவிக்கப்படும் என்று நினைத்தார். ஆனால் நடுவரோ உடனடியாக பிரிகிக் வாய்ப்பு வழங்கினார். அவர் திரும்புவதற்குள் பந்தை பெடரிகோ கோலாக மாற்றினார்.

    இதன் பின்னர் 14-வது நிமிடத்தில் பதிலடி கொடுத்த கோவா அணியின் நட்சத்திர வீரர் பெரன் கோராமினோஸ் கோல் அடித்தார். 39-வது நிமிடத்தில் எதிரணியின் மூன்று தடுப்பாட்டக்காரர்களை ஏமாற்றி கோராமினோஸ் மீண்டும் ஒரு கோல் போட்டார். இதனால் 2-1 என்ற கோல் கணக்கில் கோவா முன்னிலை பெற்றது. ஆனால் இந்த முன்னிலையை அவர்கள் தக்க வைத்துக் கொள்ள தவறினர். 53-வது நிமிடத்தில் கவுகாத்தி கேப்டன் பார்த்தோலோம் ஓக்பேச் தலையால் முட்டி கோல் அடித்தார். முடிவில் இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

    மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக்கில் மும்பை சிட்டி-ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதுகின்றன. #ISL2018 #NorthEastUnited #FCGoa 
    அர்ஜென்டினா அணி ஐஸ்லாந்திடம் டிரா கண்டது அவமானமாகும். இந்த ஆட்டத்தில் நான் எந்த வீரரையும் குறை சொல்ல மாட்டேன் என அர்ஜென்டினா அணியின் முன்னாள் ஜாம்பவான் மரடோனா கூறியுள்ளார். #DiegoMarodona #Argentina
    மாஸ்கோ:

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் தனது முதலாவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினா அணி 1-1 என்ற கோல் கணக்கில் குட்டி தேசமான ஐஸ்லாந்துடன் டிரா கண்டது. இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி பெனால்டி வாய்ப்பை கோட்டை விட்டார்.



    இந்த ஆட்டம் குறித்து அர்ஜென்டினா அணியின் முன்னாள் ஜாம்பவான் மரடோனா கருத்து தெரிவிக்கையில்,

    ‘ஐஸ்லாந்து அணியுடன் டிரா கண்டது அவமானமாகும். இந்த ஆட்டத்தில் நான் எந்த வீரரையும் குறை சொல்ல மாட்டேன். மெஸ்சி பெனால்டி வாய்ப்பை தவறவிட்டது தான் வெற்றி கிடைக்காமல் போனதற்கு காரணம் என்று நினைக்கவில்லை. எதிரணிக்கு தகுந்த படி ஆட்ட யுக்தியை அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் அமல்படுத்தவில்லை. இந்த மாதிரி தொடர்ந்து விளையாடினால் அர்ஜென்டினா அணி நாடு திரும்ப முடியாது’ என்றார்.  #DiegoMarodona #Argentina
    ×