search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "FIFA 2018"

    இங்கிலாந்து- கொலம்பியா அணிகள் மோதிய ஆட்டத்தில் நடுவருக்கு எதிராக கருத்தை விமர்சித்த மரடோனா சர்வதேச கால்பந்து சம்மேளனத்திடம் மன்னிபு கேட்டுள்ளார். #Maradona #FIFA2018
    கால்பந்து ஜாம்பவான் மரடோனா (அர்ஜென்டினா) உலககோப்பை கால்பந்து போட்டியின் போது அர்ஜென்டினா விளையாடிய ஆட்டத்தை நேரில் பார்த்தபோது அடிக்கடி உணர்ச்சி வசப்பட்டனார்.

    நைஜீரியாவுக்கு எதிரான போட்டியில் அர்ஜென்டினா வெற்றி பெற்றபோது ஆபாச சைகை காட்டினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே நாக்-அவுட் சுற்றில் இங்கிலாந்து- கொலம்பியா அணிகள் மோதிய ஆட்டத்தை மரடோனா விமர்சனம் செய்தார். இதில் இங்கிலாந்து பெனால்டி ஷூட்டில் 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் இங்கிலாந்து வெற்றியை திருடிவிட்டது என்றும் நடுவர் ஜிஜெர் நடவடிக்கை ஒரு தலைபட்சமாக இருப்பதாகவும் கூறினார். இதையடுத்து மரடோனாவுக்கு சர்வதேச கால் பந்து சம்மேளனம் (பிபா) கடும் கண்டனம் தெரிவித்தது.



    இந்த நிலையில் மரடோனா தான் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். நான் சொன்ன கருத்து ஏற்று கொள்ள முடியாதது என்பதை ஒத்துக் கொள்கிறேன். இதற்காக சர்வதேச கால்பந்து சம்மேளனத்திடம் மன்னிப்பு கேட்கிறேன். நடுவர்களின் பணியை நான் மிகவும் மதிக்கிறேன். நடுவர்களாக செயல்படுவது என்பது சாதாரணமான வேலை அல்ல என்று கூறியுள்ளார். #Maradona #FIFA2018
    ரஷியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ‘சி’ பிரிவில் நேற்று நடந்த லீக் போட்டியில் நைஜீரியாவை 2-1 என வீழ்த்திய அர்ஜெண்டினா அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது. #NGAARG #WorldCup2018 #FIFA2018

    மாஸ்கோ:

    உலகக்கோப்பை கால்பந்து தொடர் போட்டிகள் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நான்கு லீக் போட்டிகள் நடைபெற்றது. முதல் லீக் ஆட்டத்தில் பெரு, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. டென்மார்க், பிரான்ஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது லீக் போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து மூன்றாவது லீக் ‘டி’ பிரிவில் இடம்பிடித்துள்ள அர்ஜெண்டினா, நைஜீரியா அணிகள் பலப்பரீட்சை செய்தன.

    இரு அணிகளும் இந்த போட்டியில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்துடன் களமிறங்கின. அர்ஜெண்டினா அணியின் கேப்டன் மெஸ்சி முதல் இரண்டு லீக் போட்டிகளில் ஒரு கோல் கூட அடிக்காமல் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். இதனால் இந்த போட்டியில் அவர் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருந்தது.

    இப்போட்டி தொடங்கியதில் இருந்தே அர்ஜெண்டினா வீரர்கள் பந்தை முடிந்த அளவு தங்கள் வசமே வைத்திருந்தனர். 14-வது நிமிடத்தில் 
    அர்ஜெண்டினா அணிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் மெஸ்சி சிறப்பான முறையில் ஒரு கோல் அடித்தார். இதனால் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். 



    அதன்பின், முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. இதனால் அர்ஜெண்டினா 1-0 என முன்னிலை வகித்தது.

    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் நைஜீரியா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் நைஜீரியா வீரர் விக்டர் மோசஸ் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது. 



    அதன்பின் 87-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் மார்கஸ் ரோஜோ கோல் அடித்தார். இதனால் அர்ஜெண்டினா அணி 2-1 என முன்னிலை பெற்றது.



    அதன்பின் எந்த கோலும் அடிக்கப்படாததால் அர்ஜெண்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முன்னதாக நடந்த மற்றொரு டி பிரிவு ஆட்டத்தில் குரோசியா அணி ஐஸ்லாந்தை வீழ்த்தியது. இதனால் இந்த பிரிவில் இரண்டாவது இடத்தை பிடித்த அர்ஜெண்டினா அணி நாக்-அவுட் சுற்றுக்கு தகுதிப்பெற்றது #NGAARG #WorldCup2018 #FIFA2018
    ரஷியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ‘டி’ பிரிவில் நேற்று நடந்த லீக் போட்டியில் குரோசியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்து அணியை வீழ்த்தியது #ISLCRO #WorldCup2018 #FIFA2018

    மாஸ்கோ:

    உலகக்கோப்பை கால்பந்து தொடர் போட்டிகள் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நான்கு லீக் போட்டிகள் நடைபெற்றது. முதல் லீக் ஆட்டத்தில் பெரு, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. டென்மார்க், பிரான்ஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது லீக் போட்டி டிராவில் முடிந்தது.
     இதையடுத்து நான்காவது லீக் ‘டி’ பிரிவில் இடம்பிடித்துள்ள 
    ஐஸ்லாந்து, குரோசியா அணிகள் பலப்பரீட்சை செய்தன.

    குரோசியா அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றதால் ஏற்கனவே நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. ஐஸ்லாந்து அணி இந்த போட்டியில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்துடன் களமிறங்கியது. 

    இப்போட்டி தொடங்கியதில் இருந்தே இரு அணி வீரர்கள் தொடர்ந்து கோல் போட முயற்சித்தனர். இருப்பினும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை.



    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 53-வது நிமிடத்தில் குரோசியா வீரர் மிலான் படேல்ஜ் கோல் அடித்தார். இதனால் குரோசியா அணி 1-0 என முன்னிலை பெற்றது. அதன்பின் 76-வது நிமிடத்தில் ஐஸ்லாந்து அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதில் அந்த அணியின் கைல்பி சிகுர்ட்சன் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது. 



    அதைத்தொடர்ந்து 90-வது நிமிடத்தில் குரோசியா அணியின் இவான் பெரிசிக் கோல் அடித்தார். இதனால் குரோசியா அணி மீண்டும் முன்னிலை பெற்றது. 



    அதன்பின் எந்த அணியிம் கோலும் அடிக்காததால் குரோசியா அணி 2-1 என வெற்றி பெற்றது. இதனால் ஐஸ்லாந்து அணி தொடரைவிட்டு வெளியேறியது. #ISLCRO #WorldCup2018 #FIFA2018
    ரஷியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ‘சி’ பிரிவில் இன்று நடந்த டென்மார்க், பிரான்ஸ் இடையிலான போட்டி கோல் அடிக்காமல் டிராவில் முடிந்தது. #DENFRA #WorldCup2018 #FIFA2018

    மாஸ்கோ:

    உலகக்கோப்பை கால்பந்து தொடர் போட்டிகள் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நான்கு லீக் போட்டிகள் நடைபெறுகிறது. முதல் லீக் ஆட்டத்தில் பெரு அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இரண்டாவது லீக் போட்டியில் டென்மார்க், பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்தன.

    இப்போட்டி தொடங்கியதில் இருந்தே இரு அணி வீரர்கள் தொடர்ந்து கோல் போட முயற்சித்தனர். இருப்பினும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை.



    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டமும், முதல் பாதியை போலவே இருந்தது. இதிலும் இரு அணியினரும் கோல் அடிக்க முடியாமல் திணறினர். இறுதிவரை எந்த கோலும் அடிக்கப்படாததால் இந்த போட்டி டிராவில் முடிந்தது. இதனால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. 

    ‘சி’ பிரிவு புள்ளிப்பட்டியலில் இந்த இரு அணியும் முதல் இரண்டு இடத்தை பிடித்து நாக்-அவுட் சுற்றுக்கு தகுதிப்பெற்றன. அடுத்ததாக நடைபெற உள்ள போட்டிகளில் நைஜீரியா - அர்ஜெண்டினா, ஐஸ்லாந்து - குரோசியா அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #DENFRA #WorldCup2018 #FIFA2018
    உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பெல்ஜியம், பனாமா இடையேயான போட்டியில் இந்தியாவை சேர்ந்த ரிஷி தேஜ் என்ற 10 வயது சிறுவன் வீரர்களுடன் அதிகாரப்பூர்வ பந்தை சுமந்து சென்றான். #WorldCup2018 #FIFA2018 #Indianballboy #RishiTej

    மாஸ்கோ:

    32 அணிகள் பங்கேற்கும் 21-வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. வரும் ஜூலை 15 வரை ரஷ்யாவில் இத்தொடர் நடக்கிறது.  

    பொதுவாக ஒவ்வொரு போட்டி தொடங்கும் முன்பும் வீரர்கள் மைதானத்திற்குள் செல்லும் போது அவர்களுடன் கை கோர்த்தபடி சிறுவர்-சிறுமிகள் செல்வார்கள். அதோடு போட்டிக்கான அதிகாரப்பூர்வ பந்தை நடுவர் சுமந்து செல்வார்.

    இந்நிலையில் நேற்று நடைபெற்ற  பெல்ஜியம், பனாமா இடையேயான போட்டியில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 10 வயது சிறுவனான ரிஷி தேஜ் என்ற சிறுவன் போட்டிக்கான அதிகாரப்பூர்வ பந்தை சுமந்து சென்றான். உலகக்கோப்பை போட்டிகளில் அதிகாரப்பூர்வ பந்தை சுமந்து சென்ற முதல் இந்திய சிறுவன் என்ற பெருமையை ரிஷி தேஜ் பெற்றுள்ளார்.



    தமிழகத்தை சேர்ந்த நதானியா ஜான் என்ற 11 வயது சிறுமிக்கும் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. வரும் 22ம் தேதி பிரேசில்- கோஸ்டா ரிகா அணிகள் மோதும் போட்டியின் போது வீரர்களுடன் அதிகாரப்பூர்வ பந்தை சுமந்து செல்லும் பெருமையை தமிழகத்தை சேர்ந்த சிறுமி நதானியா ஜான் பெறவுள்ளார். #WorldCup2018 #FIFA2018 #Indianballboy #RishiTej
    உலகக்கோப்பையை வெல்லும் அணிகள் என்று கணிக்கப்பட்டுள்ள முக்கிய அணிகள் முதல் சுற்றில் வெற்றியை ருசிக்க முடியாமல் திணறியுள்ளது. #WorldCup2018
    ரஷியாவில் கடந்த வியாழக்கிழமை உலகக்கோப்பை கால்பந்து தொடர் தொடங்கியது. இந்த திருவிழா அடுத்த மாதம் 15-ந்தேதி வரை நடக்கிறது. இதில் அர்ஜென்டினா, பிரேசில், ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து உள்பட 32 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    தொடக்க ஆட்டத்தில் முன்னணி அணிகள் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கபட்டது. ஆனால் தோல்வியில் இருந்து தப்பினால் போதும் என்ற நிலைமைக்கு சில அணிகள் தள்ளப்பட்டது. ஜெர்மனி தோல்வியை எதிர்கொண்டது.



    கடந்த 15-ந்தேதி பலம்வாய்ந்த ஸ்பெயின் - போர்ச்சுக்கல் அணிகள் மோதின. இந்த ஆட்டம் 3-3 என டிராவில் முடிந்தது. 16-ந்தேதி மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா கத்துக்குட்டி அணியான ஐஸ்லாந்தை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிந்தது. மெஸ்சி தனக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை தவறவிட்டார். இதனால் டிராவை சந்தித்தது அர்ஜென்டினா.



    கோஸ்டா ரிகாவை 1-0 என செர்பியா வீழ்த்தியது. நடப்பு சாம்பியனான ஜெர்மனிக்கு மெக்சிகோ அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. மெக்சிகோ 1-0 என ஜெர்மனி வீழ்த்தி அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆட்டங்களில் ஒன்று பிரேசில் - சுவிட்சர்லாந்து அணிகள் மோதிய போட்டியாகும். இந்த போட்டியை சுவிட்சர்லாந்து அசத்தாலா 1-1 என டிரா செய்தது.
    உலக கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க வரும் வெளிநாட்டு ரசிகர்களுடன் உடலுறவு வைத்து கொள்ள வேண்டாம் என ரஷ்ய எம்பி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். #FIFAWorldCup #FIFA2018 #NoSexWithForeigners

    மாஸ்கோ:

    உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நேற்று தொடங்கின. முதல் போட்டியில் ரஷியா, சவுதி அரேபியாவை 5-0 என வீழ்த்தியது. பொதுவாக ஒலிம்பிக் உள்பட சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களில் பாலியல் தொழில் அதிக அளவில் நடக்கும். அந்த வகையில் நேற்று தொடங்கிய உலக கோப்பை கால்பந்து போட்டியை கண்டு ரசிக்க ரஷியாவிற்கு ஏராளமான வெளிநாட்டு ரசிகர்கள் வந்துள்ளனர். அவர்களை திருப்திப்படுத்த ரஷ்யாவில் உள்ள பாலியல் தொழிலாளிகள் ஆர்வத்துடன் உள்ளனர்.

    இந்நிலையில் ரஷ்யா எம்.பி டமாரா பிலெட்னியோவா அந்நாட்டு பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், உலக கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க வரும் வெளிநாட்டவர்களுடன், ரஷ்ய பெண்கள் யாரும் உடலுறவு வைத்துக் கொள்ளக் கூடாது என கடுமையாக எச்சரித்துள்ளார். 



    கடந்த 1980ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியின் போது, அந்த போட்டியை காண வந்த வெளிநாட்டு பார்வையாளர்களுடன் ரஷ்ய பெண்கள் பலர் உடலுறவு வைத்துக் கொண்டதால் பல பெண்களுக்கு ஆப்பிரிக்கா, அமெரிக்கா உள்பட பல நாடுகளின் கலப்பில் ஏராளமான குழந்தைகள் பிறந்தன என்பதாலே ரஷ்ய எம்பி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார் என கூறப்படுகிறது. #FIFAWorldCup #FIFA2018 #NoSexWithForeigners
    உலக கோப்பை கால்பந்து தொடரில் முதல் லீக் போட்டியில் ரஷியா அணி 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தியது. #FIFA2018 #RUSVSAU #FIFAWorldCup2018

    மாஸ்கோ:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலகக்கோப்பை கால்பந்து தொடர் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. கடைசியாக 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடந்த உலக கோப்பை போட்டியில் ஜெர்மனி அணி வாகை சூடியது.

    இந்த நிலையில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் இன்றிரவு 8.30 மணிக்கு தொடங்கியது. இதில் ரஷியா - சவுதி அரேபியா பலப்பரீட்சை நடத்தின.

    முன்னதாக இரவு 8 மணிக்கு கோலாகலமான தொடக்க விழாவுடன் உலகக் கோப்பை தொடர் தொடங்கியது. இங்கிலாந்தின் பிரபல பாப் பாடகர் ராப்பி வில்லியம்ஸ் இசை விருந்து அளித்தார். அப்போது பிரேசில் முன்னாள் வீரர் ரொனால்டோ பந்தை உதைத்து போட்டியை தொடங்கி வைத்தார். அதன்பின் ஜிம்னாஸ்டிக்ஸ் கலைஞர்களின் சாகசமும் நடைபெற்றது.



    இந்த போட்டியை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சவுதி அரேபியா இளவரசர் மொகமது பின் சல்மான், பீபா அமைப்பின் தலைவர் ஜியான்னி இன்பாண்டினோ ஆகியோர் கண்டுகளித்தனர். இப்போட்டி தொடங்கிய 12-வது நிமிடத்தில் ரஷியா அணியின் கசின்ஸ்கீ கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து 43-வது நிமிடத்தில் டென்னிஸ் செரிஷேவ் இரண்டாவது கோல் அடித்தார். இதனால் முதல்பாதி நேர ஆட்டத்தில் ரஷியா அணி 2-0 என முன்னிலை பெற்றது.

    தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 71-வது நிமிடத்தில் ரஷியா அணியின் டிசியூபா கோல் அடித்தார். இறுதிநேர ஆட்டத்தில் ரஷியாவின் டென்னிஸ் செரிஷேவ் தனது இரண்டாவது கோலை அடித்தார். அதன்பின் ரஷியாவில் கோலோவின் மேற்கொண்டு ஒரு கோல் அடித்தார். சவுதி அரேபியா அணியினர் இறுதிவரை முயன்றும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இறுதியில் ரஷியா அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 3 புள்ளிகளை தட்டிச்சென்றது. 


    ரஷியா வீரர் டென்னிஸ் செரிஷேவ்


    இந்த போட்டியில் ரஷியா அணி வெல்லும் என ‘அசிலிஷ்’ என்ற பூனை ஏற்கனவே கணித்தது. தற்போது அந்த பூனையின் ஆருடம் பலித்துவிட்டது. நாளை நடைபெறும் லீக் போட்டிகளில் எகிப்து - உருகுவே, மொராக்கோ - ஈரான், போர்ட்டுகல் - ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #FIFA2018 #RUSVSAU #FifaWorldCup2018
    ரஷிய உலகக் கோப்பை கால்பந்து தொடர் பிரபல பாப் பாடகர் ராப்பி வில்லியம்ஸின் பாடலுடன் கோலாகல கலைநிகழ்ச்சியுடன் தொடங்கியது. #FIFA2018 #worldCup
    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலகக்கோப்பை கால்பந்து தொடர் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. கடைசியாக 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடந்த உலக கோப்பை போட்டியில் ஜெர்மனி அணி வாகை சூடியது.

    இந்த நிலையில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் இன்றிரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் ரஷியா - சவுதி அரேபியா பலப்பரீட்சை நடத்துகின்றன.



    முன்னதாக இரவு 8 மணிக்கு கோலாகலமான தொடக்க விழாவுடன் உலகக் கோப்பை தொடர் தொடங்கியது. இங்கிலாந்தின் பிரபல பாப் பாடகர் ராப்பி வில்லியம்ஸ் இசை விருந்து அளித்தார். அப்போது பிரேசில் முன்னாள் வீரர் ரொனால்டோ பந்தை உதைத்து போட்டியை தொடங்கி வைத்தார். அதன்பின் ஜிம்னாஸ்டிக்ஸ் கலைஞர்களின் சாகசமும் நடைபெற்றது.
    ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவன நேரலை டிவி செயலிகளில் 2018 உலக கோப்பை கால்பந்து போட்டிகளை இலவசமாக லைவ் ஸ்டிரீமிங் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவன நேரலை டிவி செயலிகள் - ஜியோ டிவி ஆப் மற்றும் ஏர்டெல் டிவி செயலிகளில் உலக கோப்பை கால்பந்து போட்டிகளை இலவசமாக நேரலையில் ஸ்ட்ரீம் செய்ய முடியும் என அறிவித்துள்ளன.

    ரஷ்யாவில் நடைபெற இருக்கும் 2018 உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ஜூன் 14-ம் தேதி துவங்கி ஜூலை 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் சேவைகளை பயன்படுத்துவோர் இலவசமாக பார்த்து ரசிக்க முடியும். கூடுதலாக இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளிடையே நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரையும் இலவசமாக பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஏர்டெல் டிவி செயலியில் உலக கோப்பை 2018 கால்பந்து போட்டிகளை வாடிக்கையாளர்கள் வெவ்வேறு உள்ளூர் மொழிகளில் பார்த்து ரசிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் போட்டி அட்டவணை விவரங்களும் வங்கப்படுகிறது. போட்டி மட்டுமின்றி, இதர சுவாரஸ்ய வீடியோக்களையும் செயலியில் பார்த்து ரசிக்க முடியும். இலவச சேவைகளை பெற பயனர்கள் தங்களின் ஏர்டெல் டிவி செயலியை அப்டேட் செய்ய வேண்டும்.


    கோப்பு படம்

    இதேபோன்று ஜியோ டிவி செயலியிலும் பிரீமியம் ஸ்போர்ட் தரவுகளை இலவசமாக பார்த்து ரசிக்கும் வசதி வழங்கப்படுகிறது. ஏற்கனவே குறிப்பிடப்பட்டதை போன்று உலக கோப்பை கால்பந்து போட்டிகள் மட்டுமின்றி இந்தியா ஆஃப்கானிஸ்தான் அணிகள் விளையாடும் டெஸ்ட் கிரிகெட் போட்டிகளையும் இலவசமாக பார்த்து ரசிக்க முடியும். 

    ஜியோ டிவி செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை பத்து கோடிகளை கடந்து இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஏர்டெல் டிவி செயலியை சுமார் ஐந்து கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் ஏர்டெல் டிவி ஆப் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை இலவசமாக பயன்படுத்த முடியும் என ஏர்டெல் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    உலகக் கோப்பையில் வீடியோ அசிஸ்டன்ட் ரெஃப்ரீஸ் துள்ளியமாக இருக்காது என பிஃபா நடுவருக்கான தலைவர் எச்சரித்துள்ளார். #WorldCup2018
    உலகின் மிகப்பெரிய விளையாட்டாக கால்பந்து போட்டி விளங்கி வருகிறது. இதன் தலைமையான பிஃபாவின் கீழ் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்பினராக உள்ளது. எந்தவித இடையூறும் இல்லாமல் 90 நிமிடங்கள் போட்டி விறுவிறுப்பாகச் செல்லும். முக்கியமான போட்டிகளில் மைதான நடுவர்களின் தீர்ப்பு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

    குறிப்பாக பெனால்டி வாய்ப்பின்போது நடுவர்களின் முடிவு மிகமிக முக்கியமானது. அதேபோல் வீரர்களை தடுத்து கீழே விழச் செய்யும்போது மஞ்சள் அட்டை, சிகப்பு அட்டை வழங்கும்போது நடுவர்கள் முடிவு பாதிப்பை ஏற்படுத்தும்.

    இதனால் தொழில்நுட்பம் வாய்ந்த வீடியோ அசிஸ்டன்ட் ரெஃப்ரீஸ் (VAR - Video Assistant Referees) முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தமுறைப்படி மைதான நடுவர் டிவி நடுவர்களிடம் கேட்டு உறுதிப்படுத்த முடியும். இந்த முறையால் போட்டியின் விறுவிறுப்பு குறைந்து விடும் என்று பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

    இருந்தாலும் சில லீக்கில் இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை தொடங்கும் உலகக் கோப்பையிலும் விஏஆர் அறிமுகமாகிறது. இந்த முறை துள்ளியமாக இருக்காது என்று பிஃபாவிற்கான நடுவர்களின் தலைவர் எச்சரித்துள்ளார்.



    இதுகுறித்து நடுவர்களின் தலைவர் கூறுகையில் ‘‘நாங்கள் இந்த தொழில்நுட்பத்திற்கு தயாராகிவிட்டதால், நாம் இதை உலகக் கோப்பையில் பார்க்க போகிறோம். ஆனால் இது துள்ளியமாக இருக்கும் என்று நினைக்கவில்லை.

    நாம் நம்பமுடியாத வகையில் சிறப்பான இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், தொழில்நுட்பத்தால் 100 சதவிகிதம் பிரச்சினையை தீர்த்திவிடும் என்று நாங்கள் நினைக்கவில்லை’’ என்றார்.
    பிபா உலகக் கோப்பையில் இந்தியா விளையாடுவது விரைவில் சாத்தியமாகும் என்று மத்திய அமைச்சர் ரத்தோர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #FIFA2018
    உலகக் கோப்பை கால்பந்து திருவிழா வரும் வியாழக்கிழமை ரஷியாவில் தொடங்குகிறது. இதில் 32 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. போட்டியை நடத்தும் ரஷியாவைத் தவிர மற்ற அணிகள் தகுதிச் சுற்றில் விளையாடி அதன்மூலம் தகுதி பெற வேண்டும்.

    இதனால் முன்னணி அணிகள் கூட சில நேரங்களில் தகுதி பெற முடியாத நிலை ஏற்படும். ஜாம்பவான் மெஸ்சி விளையாடும் அர்ஜென்டினாவிற்கே சிக்கல் ஏற்பட்டது. கடைசி போட்டியில் மெஸ்சி ஹாட்ரிக் கோல் அடிக்க தகுதி பெற்றது. இத்தாலி அணி தகுதி பெற முடியாமலே போனது.

    இந்தியா இதுவரை பிபா உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது கிடையாது. இந்நிலையில் விரைவில் இந்தியா உலகக் கோப்பையில் விளையாடும் நிலை சாத்தியமாகும் என்று இந்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரத்தோர் கூறுகையில் ‘‘கால்பந்து மீதான ஆர்வம் இந்தியாவில் வளர்ந்து வருகிறது. ஐபிஎல் போட்டியை டிவியில் பார்த்ததுபோல், ஏராளமான மக்கள் பிபா 17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை பார்த்து ரசித்தனர்.



    இந்தியா இதுவரை பிபா உலகக் கோப்பையில் விளையாடியது கிடையாது. ஆனால், நமக்கு அதற்கான ஆற்றல் இருக்கிறது. ஆற்றல் வாய்ப்புடன் இணைக்கப்பட்டால், விரைவில் உலகக் கோப்பையில் இந்தியா விளையாட ஆரம்பித்துவிடும். கால்பந்து மட்டுமல்ல எந்வொரு விளையாட்டிலும் அபாரமான ஆற்றல் நம்மிடம் உள்ளது.

    நான் சில நேரம் பிரேசிலுக்கு ஆதரவாகவும், அர்ஜென்டினாவிற்கு ஆதரவாகவும் வீரர்களின் ஆட்டத்தை பொறுத்து இருப்பேன், ஆனால், நான் எப்போதுமே இந்தியாவின் மிகப்பெரிய ரசிகன். இந்தியா பிபா உலகக் கோப்பையில் விளையாடும்போது நாம் பார்க்க வேண்டும்’’ என்றார்.
    ×