search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gaza violence"

    இஸ்ரேல் எல்லையை ஒட்டியுள்ள காஸா பகுதியில் பாலஸ்தீனியர்கள் கொன்று குவிக்கப்பட்டது தொடர்பாக ஐநா சபையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடைந்தது. #UNGeneralAssemblyemergencysession #Gazaviolence

    நியூயார்க்:

    இஸ்ரேல் நாட்டின்  தலைநகரான டெல் அவிவ் நகரில் இயங்கிவந்த அமெரிக்க தலைமை தூதரகத்தை கிழக்கு ஜெருசலேம் நகருக்கு மாற்ற உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் நாட்டின் புதிய தலைநகராக கிழக்கு ஜெருசலேம் நகரை அங்கீகரிப்பதாக சமீபத்தில் அறிவித்தார்.

    இதனால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தொற்றியுள்ளது. குறிப்பாக, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே உச்சகட்ட மோதல் வெடித்துள்ளது.

    குறிப்பாக, காஸா எல்லைப்பகுதியில் இருந்து ஹமாஸ் போராளிகள் ராக்கெட்களை இஸ்ரேல் நாட்டுக்குள் வீசி தாக்குதல் நடத்துவதும் அதற்கு பதிலடி தரும் வகையில் இஸ்ரேல் விமானப் படைகள் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிகள் முகாம்களின்மீது தாக்குதல் நடத்துவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.

    இஸ்ரேல் படைகளின் துப்பாக்கிச் சூட்டில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து 129 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். குறிப்பாக, கடந்த மே மாதத்தில் மட்டும் 61 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகியுள்ளனர்.

    இந்நிலையில், காஸா எல்லையில் போராடும் பாலஸ்தீன மக்களின் உயிருக்கு பாதுகாப்பு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையின் 72-வது கூட்டம் மற்றும் இந்த ஆண்டின் சிறப்பு அவசர கூட்டம் நேற்று கூடியது. அப்போது இந்த உயிரிழப்புகளுக்கு ஹமாஸ் போராளிகள் தான் காரணம் என, இஸ்ரேல் அரசுக்கு ஆதரவாக அமெரிக்கா தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தது.

    இந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடந்தது. அப்போது தீர்மானத்துக்கு ஆதரவாக 8 நாடுகள் மட்டுமே வாக்களித்தன. அதற்கு எதிராக 120 நாடுகள் வாக்களித்தன. 45 நாடுகளின் உறுப்பினர்கள் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இதனால் இந்த தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

    மேலும், காஸா வன்முறையில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு காரணமான இஸ்ரேல் அரசுக்கு ஐநா சபை கண்டனம் தெரிவித்துள்ளது. #Gazaviolence #UNGeneralAssemblyemergencysession 

    இஸ்ரேல் - அர்ஜெண்டினா அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த பீபா கால்பந்து பயிற்சி ஆட்டம் காஸா வன்முறையில் 123 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளது. #ArgentinavsIsrael #FIFAWorldCup #WarmUpMatch #GazaViolence

    ஜெருசலேம்:

    21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி வருகிற 14-ந் தேதி ரஷியாவில் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் அணிகள் வெவ்வேறு அணிகளுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. அந்த வகையில் வருகிற 9-ம் தேதி இஸ்ரேல் - அர்ஜெண்டினா அணிகள் பயிற்சி ஆட்டத்தில் விளையாட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த போட்டி ஜெருசலேம் நகரில் நடைபெறுவதாக இருந்தது.

    இந்நிலையில், இந்த போட்டியில் அர்ஜெண்டினா அணி விளையாடுவதற்கு பாலஸ்தீன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், அப்படி அர்ஜெண்டினா அணி ஜெருசலேம் நகரில் கால்பந்து விளையாடினால் அர்ஜெண்டினா நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சியின் ஜெர்சி மற்றும் படத்திற்கு தீவைக்குமாறு பாலஸ்தீன அரசியல் தலைவர் ஒருவர் தெரிவித்தார். 

    இதையடுத்து, இஸ்ரேல் உடனான பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்வதாக அர்ஜெண்டினா அறிவித்துள்ளது.  இஸ்ரேல் - பாலஸ்தீன எல்லையான காஸா முனைப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் மற்றும் பாலஸ்தீன மக்கள் இடையே மோதல் நடந்து வருகிறது. சமீபத்தில், இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலில் 123 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #ArgentinavsIsrael #FIFAWorldCup #WarmUpMatch #GazaViolence
    காஸா வன்முறை தாக்குதலுக்கு பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மெக்ரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். #USEmbassyJerusalem #Gaza #Macron
    பாரிஸ்:

    இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தார். மேலும், டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் ஜெருசலேமுக்கு மாற்றப்படும் என்றும் உறுதியளித்தார். அவரது அறிவிப்புக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

    இதற்கிடையே, கிழக்கு ஜெருசலேம் நகரில் கட்டப்பட்டுள்ள அமெரிக்க தூதரகம் நேற்று திறக்கப்பட்டது. இதில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மகள் இவாங்கா டிரம்ப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 



    அமெரிக்க தூதரகம் திறப்பதை கண்டித்து காஸா மற்றும் மேற்குக்கரை எல்லையில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது வன்முறையாக மாறியதால், இஸ்ரேல் ராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் 37 பேர் பலியாகினர்.

    இந்நிலையில், காஸா வன்முறை தாக்குதலுக்கு பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மெக்ரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஸா வன்முறை தாக்குதலுக்கு பிரான்ஸ் தனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது. இதுதொடர்பாக முக்கிய அதிகாரிகளுடன் அடுத்த சில தினங்களில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #USEmbassyJerusalem #Gaza #Macron
    ×