search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ambulance"

    • செந்துறையில் மருத்துவமனைக்கு செல்ல வழி இல்லாததால் சாலையிலேயே ஆம்புலன்ஸ் நிறுத்தும் அவலம் ஏற்பட்டது
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறையில் வட்டார தலைமை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு செந்துறை காவல் நிலையத்திலிருந்து 200 மீட்டர் தூரத்திற்கு உள்ளே செல்ல வேண்டும். அதே போன்று இந்த மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் டீக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்கள் உள்ளன. இதனால் மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சாலை பகுதியிலேயே நிறுத்தப்பட்டு இருக்கிறது.

    தலைமை மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டு இருந்தபோதிலும் இந்த மருத்துவமனைக்கு வரும் அனைத்து நோயாளிகளும் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் பணியில் இருக்கும் செவிலியர்களால் அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் அடிக்கடி இந்த மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் வந்து செல்கின்றன. இருப்பினும் சாலைகளில் ஆம்புலன்ஸ்களுக்கு இடையூறாக இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து நிறுத்தப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் ஆம்புலன்ஸ் செல்ல வழி இல்லாததால் ஓட்டுனர் வேலு ஆம்புலன்ஸை சாலையிலேயே நிறுத்திவிட்டு மருத்துவமனைக்கு சென்றார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனவே உடனடியாக இந்த மருத்துவமனையில் போதிய மருத்துவர்களை நியமித்து 24 மணி நேரமும் மருத்துவமனை இயங்க நடவடிக்கை எடுப்பதோடு 108 ஆம்புலன்ஸ் செல்லும் பாதையில் இடையூறு இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும்.
    • சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஆய்வு குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இருந்து தௌசாவுக்கு ஆம்புலன்ஸில் மூட்டை மூட்டைகளாக காலணிகளை வைத்து ஏற்றிச் செல்லும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதை அடுத்து, தௌசா அரசு மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து, தௌசா அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் ஷிவ்ராம் மீனா கூறியதாவது:-

    ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். அதே நேரத்தில் இதுதொடர்பாக விசாரிக்க ஆய்வு குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. குழு அதன் அறிக்கையை சமர்ப்பித்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்.

    தேவைப்பட்டால், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும். இது ஒரு பயங்கரமான விஷயம். ஆம்புலன்ஸில் காலணிகளை ஏற்றிச் சென்ற சம்பவம் இன்று காலை என் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2 மணி நேரத்திற்கு மேல் ஆம்புலன்ஸ் கேட்டு கெஞ்சி கதறி அழுதார்.
    • இறந்து போன குழந்தையை பைக்கில் எடுத்துச் செல்வதைக் கண்டவர்கள் மிகுந்த மன வேதனை அடைந்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அல்லூரி சீதாராம ராஜ் மாவட்டம், குமடா பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் மத்திஷ்ராய ராஜு. இவரது மனைவி மகேஸ்வரி. நிறைமாத கர்ப்பிணியான மகேஸ்வரிக்கு கடந்த 2-ந் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது கணவர் மகேஸ்வரியை படேரு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்த்தார்.

    அங்கு மகேஸ்வரிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. மகேஸ்வரிக்கு ஆண் குழந்தை பிறந்ததால் அவரது கணவர் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சியில் திளைத்து இருந்தனர். ஆனால் அவர்களது மகிழ்ச்சி ஒரு நாள் கூட நிலைத்திருக்கவில்லை.

    இந்நிலையில் குழந்தைக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் குழந்தையை அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர்.

    குழந்தை நேற்று காலை 7 மணி அளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இறந்து போன குழந்தையை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தர வேண்டும் என குழந்தையின் தந்தை ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் கேட்டார். ஆனால் அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்கள் மத்திஷ்ராய ராஜு கோரிக்கையை காதில் வாங்கிக் கொள்ளாமல் அலட்சியமாக இருந்தனர்.

    சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் ஆம்புலன்ஸ் கேட்டு கெஞ்சி கதறி அழுதார். ஆனாலும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் மனம் இறங்காமல் கல் நெஞ்சம் படைத்தவர்களாக இருந்தனர்.

    இதையடுத்து தனியார் ஆம்புலன்ஸை நாடிய போது அவர்கள் அதிக அளவில் பணத்தை கேட்டனர். அந்த பணத்தை கொடுக்க குழந்தையின் தந்தையால் முடியவில்லை. செய்வது அறியாமல் தவித்த குழந்தையின் தந்தை குழந்தையை பைக்கில் கொண்டு செல்ல முடிவு செய்தார். ஊரிலிருந்து நண்பர்கள் கொண்டு வந்த பைக்கின் பின்னால் மனைவி குழந்தையை வைத்துக்கொண்டு 120 கி.மீ தொலைவில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்றார்.

    இறந்து போன குழந்தையை பைக்கில் எடுத்துச் செல்வதைக் கண்டவர்கள் மிகுந்த மன வேதனை அடைந்தார். இதனை ஒரு சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க மருத்துவ துறை இயக்குனர் உத்தரவிட்டார்.

    இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • நகர் பகுதியில் தங்கு தடையின்றி செல்வதற்காக மாநகர போக்குவரத்து சாலைகளில் ‘கிரீன் காரிடார்’ அமைக்கப்பட்டது.
    • மதுரை மாநகரை 11 கி.மீ. தொலைவை ஆம்புலன்ஸ் வெறும் 7 நிமிடங்களில் கடந்து புதுக்கோட்டைக்கும், கோவைக்கும் விரைந்து சென்றது.

    மதுரை:

    மதுரையைச் சேர்ந்தவர் திருச்செல்வம் (வயது 33). இவர் கடந்த சில நாட்களுக்கு மோட்டார் சைக்கிளில் விருதுநகருக்கு சென்றபோது வாகனம் மோதியது. இதில் திருச்செல்வம் படுகாயம் அடைந்தார்.

    மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் திருச்செல்வத்துக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகனின் நிலையை பார்த்து கண்கலங்கினர்.

    மூளைச் சாவு அடைந்த திருச்செல்வத்தின் உடல் உறுப்புகளை தானம் செய்வது என்று குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதையடுத்து அதற்கான நடவடிக்கைகள் உடனே மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி கோவை மருத்துவமனையில் சந்திரமோகன் என்பவருக்கு கல்லீரலும், புதுக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புனேவை சேர்ந்த பாவுராவ் நகாடி என்பவருக்கு இதயமும் தேவைப்படுவது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் திருச்செல்வத்தின் இதயம், கல்லீரலை பத்திரமாக அகற்றி ஆம்புலன்ஸ் மூலம், சாலை மார்க்கமாக கோவை மற்றும் புதுக்கோட்டைக்கு கொண்டு செல்வது என்று முடிவு செய்யப்பட்டது.

    இதுகுறித்து மதுரை மாநகர போக்குவரத்து போலீசார் மற்றும் பிற மாவட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ஆம்புலன்ஸ் இடையூறின்றி செல்ல உடனே நடவடிக்கை எடுத்தனர்.

    போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமணி மற்றும் போலீசார் வழிகாட்டுதலில் மதுரையில் இருந்து இன்று காலை கல்லீரல், இதயத்துடன் 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் கோவை, புதுக்கோட்டைக்கு புறப்பட்டு சென்றது. அதன் முன் போலீஸ் வாகனம் சைரன் ஒலித்தபடி சென்றது.

    நகர் பகுதியில் தங்கு தடையின்றி செல்வதற்காக மாநகர போக்குவரத்து சாலைகளில் 'கிரீன் காரிடார்' அமைக்கப்பட்டது. இதன் காரணமாக மதுரை மாநகரை 11 கி.மீ. தொலைவை ஆம்புலன்ஸ் வெறும் 7 நிமிடங்களில் கடந்து புதுக்கோட்டைக்கும், கோவைக்கும் விரைந்து சென்றது. இன்று மதியம் 2 மணிக்குள் ஆம்புலன்ஸ் உரிய இடத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டது. 

    • ஆம்புலன்ஸ் டிரைவர் அரசு பேருந்தில் ஏறி விரட்டி சென்று ஆம்புலன்சை மடக்கி பிடித்தார்.
    • பாலாஜி விபத்து ஒன்றில் படுகாயம் அடைந்து மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அருகே உள்ள கருங்குழி என்ற இடத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை காற்று பிடிப்பதற்காக சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு டிரைவர் டயரை சோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென்று ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏறி அதை ஓட்டிச் சென்றார்.

    இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் டிரைவர் அரசு பேருந்தில் ஏறி விரட்டி சென்று ஆம்புலன்சை மடக்கி பிடித்தார். ஆம்புலன்சை திருடி சென்ற நபருக்கு பொது மக்கள் தர்ம அடி கொடுத்து மதுராந்தகம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம், விசாரணை செய்ததில் தனது பெயர் பாலாஜி என்கிற விக்கி என்றும் மதுராந்தகம் அருகே உள்ள திருவாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் என்றும் கூறினார். பின்னர் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.

    கடந்த 6 மாதத்திற்கு முன்பு அவர் விபத்து ஒன்றில் படுகாயம் அடைந்து மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், உடல் முழுவதும் பலத்த காய தழும்புகள் உள்ளதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    • அழகான பெண் குழந்தை பிறந்தது.
    • ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் நடந்தது.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வெத்தியார் வெட்டு கிராமத்தை சேர்ந்தவர் காயத்ரி (வயது 36). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்து சென்றனர். அப்போது பிச்சனூர் கிராமம் அருகே 108 ஆம்புலன்சிலேயே அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. 108 ஆம்புலன்ஸ் மருத்துவ நிபுணர் முத்துக்குமரன் பிரசவம் பார்த்தார். பின்னர் தாயும், சேயும் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர்.

    • அரசு மனநலக் காப்பகத்தில் 2.36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 14 அறைகளுடன் அமைக்கப்பட்டுள்ள இடைநிலை பராமரிப்பு மையத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்.
    • ஆசிரியர் கையேடு மற்றும் தேசிய வளர் இளம் பருவத்தினர் நல திட்டம்- சம சயது பயிற்றுநர் பயிற்சிக் கையேட்டினையும் வெளியிட்டார்.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ரூ.22.84 கோடி மதிப்பீட்டில் 75 அதிநவீன மருத்துவ உபகரணங்கள் கொண்ட மேம்படுத்தப்பட்ட புதிய அவசரகால ஊர்திகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சென்னை, கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மனநல காப்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடியசைத்து தொடங்கி வைத்து, அவசரகால ஊர்திகளை பார்வையிட்டு, வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

    தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், துணை மருத்துவக் கல்லூரிகளிலும் 'மனம்' என்ற பெயரில் மருத்துவ மாணவர்களின் மனநலன் காக்கும் சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டு 'மன நல நல்லாதரவு மன்றங்கள்' அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த மனநல நல்லாதரவு மன்றங்களில் மருத்துவக் கல்லூரி முதல்வர், மனநலத் துறை தலைவர் உள்ளிட்ட அனைத்து துறைத் தலைவர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு மாணவர்களின் மனநலனை மேம்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    உளவியல் ஆலோசனை தேவைப்படும் மாணவர்கள் தயக்கமின்றி, உடனடியாக மன நல மருத்துவரை தொடர்பு கொள்ளும் வகை யில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் 'மனம்' அலைபேசி உதவி எண் 14416 பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

    இன்று, 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பள்ளி மாணவர்களின் மனநலத்தை வலுப்படுத்தும் 'மனநல நல்லாதாரவு மன்றங்கள் (மனம்)" மற்றும் "நட்புடன் உங்களோடு மனநல சேவை (14416)" ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.

    இத்திட்டம் முதல் கட்டமாக அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளில் தொடங்கப்பட்டு பின்னர் அனைத்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் விரி வுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை அரசு மனநலக் காப்பகத்தில் 2.36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 14 அறைகளுடன் அமைக்கப்பட்டுள்ள இடைநிலை பராமரிப்பு மையத்தையும் அவர் திறந்து வைத்தார்.

    அனைத்து வகையான மனநல சேவைகளையும் ஓரிடத்தில் வழங்கும் வகையில், ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அரசு மனநலக் காப்பகம் தரம் உயர்த்தப்பட்டு, தமிழ்நாடு மனநலம் மற்றும் மூளை நரம்பியல் நிறுவனமாக தொடங்கப்பட உள்ளது. இங்கு மனநல சேவையுடன் கூடுதலாக நரம்பியல் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை சேவைகளும் வழங்கப்பட உள்ளது.

    மாநிலத்தின் எந்தப் பகுதியிலிருந்தும் மனநல ஆலோசனை பெற, தொலை மருத்துவத்திற்கான மின்னணு மையம் உருவாக்கப்படும். இந்த ஒப்புயர்வு மையத்தில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள், மனநல உளவியல் மாணவர்கள் மற்றும் செவிலிய மாணவர்கள் மனநலப் பயிற்சி பெறும் வசதிகள் ஏற்படுத்தப்படும். மனநலம் மற்றும் நரம்பியல் ஒப்புயர்வு மையத்திற்கு 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கட்டிடத்தின் முப்பரிமாண வரைபடத்தை முதலமைச்சர் வெளியிட்டார். ஆசிரியர் கையேடு மற்றும் தேசிய வளர் இளம் பருவத்தினர் நல திட்டம் சம சயது பயிற்றுநர் பயிற்சிக் கையேட்டினையும் வெளியிட்டார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ரகுபதி, மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, எம்.எல்.ஏ.க்கள் வெற்றியழகன், தாயகம் கவி, மேயர் பிரியா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கடையநல்லூர் காவா அறக்கட்டளை சார்பில் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதிய ஆம்புலன்ஸ் அனைத்து சமுதாய மக்களுக்காக அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • அறக்கட்டளை தலைவர் ரஹ்மத்துல்லாஹ் தலைமை தாங்கினார். அறக்கட்டளை நிர்வாகிகள் சம்சுதீன், என்ஜினியர் ஹூசைன், யாகூப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் காவா அறக்கட்டளை சார்பில் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதிய ஆம்புலன்ஸ் அனைத்து சமுதாய மக்களுக்காக அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அறக்கட்டளை தலைவர் ரஹ்மத்துல்லாஹ் தலைமை தாங்கினார். அறக்கட்டளை நிர்வாகிகள் சம்சுதீன், என்ஜினியர் ஹூசைன், யாகூப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளைச் செயலாளர் ஜாபர் சாதிக் வரவேற்று பேசினார்.

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாபன், கடையநல்லூர் நகர் மன்ற தலைவர் மூப்பன் ஹபிபுர் ரஹ்மான், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அனிதா பாலின், கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, முன்னாள் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லத்துரை ஆகியோர் கலந்து கொண்டு கொடி அசைத்து மக்கள் பயன்பாட்டிற்காக ஆம்புலன்சை தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட அவைத் தலைவர் சுந்தர மகாலிங்கம், மாவட்ட பொருளாளர் முகமது செரீப், நகர செயலாளர் அப்பாஸ், முஸ்லிம் லீக் நகர தலைவர் செய்யது மசூது, சிராஜ் மில்லத் அறக்கட்டளை கோயா, முன்னாள் நகரச் செயலாளர் முகமது அலி, நகர அவைத் தலைவர் முருகையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்பகுதி மக்களுக்காக நவீன வசதி கொண்ட ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது
    • செங்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜேஷ்கண்ணா ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்து அர்ப்பணிக்கப்பட்ட ஆம்புலன்சின் சிறப்பை விளக்கி கூறினார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை மேலபஜார் வாகைமரத்திடல் காந்திசிலை முன்பு செங்கோட்டை எம்.எம்.எம். டிரஸ்டின் நிறுவனர் கல்வியாளர் ரசப்காசியார் என்ற சம்சத் சார்பாக செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்பகுதி மக்களுக்காக நவீன வசதி கொண்ட ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது. டிரஸ்டின் நிர்வாக இயக்குனர் ரியாஸ் சாகுல்ஹமீது தலைமை தாங்கினார். நிர்வாக குழு உறுப்பினர்கள் நாகூர்மீரான் முகமதுஆரிப், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகக்குழு உறுப்பினா் சித்திக் வரவேற்று பேசினார். செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் சேக் முகையதீன் தொகுத்து வழங்கினார். இதில் செங்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜேஷ்கண்ணா ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்து அர்ப்பணிக்கப்பட்ட ஆம்புலன்சின் சிறப்பை விளக்கி கூறினார். டிரஸ்டின் துணை நிர்வாக இயக்குனா் லிங்கராஜ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை டிரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

    • ரூ. 24 லட்சம் மதிப்பீட்டில் ஆம்புலன்சை கருணை நோக்கத்துடன் பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
    • பாரத ஸ்டேட் வங்கி பொது மேலாளர் (சென்னை வட்டாரம்) கோவிந்த் நாராயண் கோயல் நேரில் வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செஞ்சிலுவை சங்கம் பயன்பாட்டிற்காக ஆம்புலன்சை செஞ்சிலுவை சங்கம் தலைவரும் மாவட்ட கலெக்டருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம், தஞ்சாவூர் பாரத் ஸ்டேட் வங்கியின் சமூக கூட்டாண்மை சார்பில் பாரத ஸ்டேட் வங்கி பொது மேலாளர் (சென்னை வட்டாரம்) கோவிந்த் நாராயண் கோயல் நேரில் வழங்கினார்.இது குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது:-

    ஏழை மக்களுக்கு பயன்பட வேண்டும் என்ற உயரிய சிந்தனையில் தஞ்சாவூர் இந்தியன் செஞ்சிலுவை சங்கத்துக்கு தஞ்சாவூர் பாரத் ஸ்டேட் வங்கி சமூக கூட்டாண்மை பொறுப்பு நிதி மூலமாக ரூ. 24 லட்சம் மதிப்பீட்டில் ஆம்புலன்சை கருணை நோக்கத்துடன் பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா , ஸ்ரீகாந்த் , பாரத ஸ்டேட் வங்கி துணைப் பொது மேலாளர் நவீன் குமார், உதவி பொது மேலாளர் ஆல்வின் மார்டின் ஜோசப் ஆல்பர்ட், செஞ்சிலுவை சங்கத் தலைவர் ராஜமாணிக்கம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கடலூர் செல்லும் வழியில் அவர் பிரசவ வலியால் துடித்தார்.

    கடலூ ர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருேக முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர்மணி()இவரதுமனைவி ஐஸ்வர்யா (வயது. 23), இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

    இன்றுஅதிகாலை அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதுஉடனே108ஆம்புலன்ஸ்க்குபோன் செய்தனர். 108 ஆம்புலன்ஸ் பைலட் திரிசங்கு, மருத்துவ உதவியாளர் ஆனந்தி ஆகியோ ர்விரைந்து சென்றுஐஸ்வர்யாவை கடலூர் அரசு மருத்து வமனைக்கு அழைத்து ச்சென்றனர்.

    கடலூ ர்செல்லும்வழியில் அவர்பிரசவ வலி யால் துடித்தார்.சிறிது நேரத்தில் ஓடும் ஆம்புலன்ஸில் ஐஸ்வர்யாவுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.தாயும் சேயும்கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை க்காகசேர்க்கப்பட்டனர். அங்கு அவர்கள் நலமாக உள்ளனர் 

    • 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான ஓட்டு னர்கள் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர்கள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வருகிற 3-ந் தேதி நாமக்கல் கவின் கிஷோர் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. 
    • மாத ஊதியம் ரூ.15,235 மொத்த ஊதியமாக வழங்கப்படும். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு 10 நாட்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படும்.

    நாமக்கல்:

    108 ஆம்புலன்ஸ் சேவைக்கான ஓட்டு னர்கள் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர்கள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வருகிற 3-ந் தேதி நாமக்கல் கவின் கிஷோர் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. 

    ஓட்டுனர்களுக்கான அடிப்படை தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். ஆண், பெண் கலந்து கொள்ளலாம். உயரம் 162.5 சென்டிமீட்டர் இருக்க வேண்டும். வயது 24 முதல் 35 மிகாமல் இருக்க வேண்டும். இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஓராண்டும் நிறைவு பெற்று இருக்க வேண்டும்.

    ஓட்டுனர்களுக்கான தேர்வு முறை எழுத்துத் தேர்வு, தொழில்நுட்பத் தேர்வு, மனிதவளத் துறை நேர்காணல், கண்பார்வை, மருத்துவம் சம்பந்தப்பட்ட தேர்வு சாலை விதிகளுக்கான தேர்வுகள் நடைபெறும். மாத ஊதியம் ரூ.15,235 மொத்த ஊதியமாக வழங்கப்படும். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு 10 நாட்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படும்.

    மருத்துவ உதவியாளர்க ளுக்கான தகுதி பி.எஸ்.சி.நர்சிங் அல்லது ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி. 12 -ம்வகுப்பிற்கு பிறகு 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும் லைப் சயின்ஸ் பட்டதாரி பிரிவில் பிஎஸ்சி ஜூவாலஜி, பாட்டனி, கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி இவைகளில் ஏதேனும் ஒன்று முடித்தி ருக்க வேண்டும். இவர்க ளுக்கு ஊதியம் ரூ.15 435 வழங்கப்படும்.

    வேலைவாய்ப்பு முகாமுக்கு வரும் விண்ணப்ப

    தாரர்கள் அசல் சான்றி தழ்களை அனைத்தையும் நேரில் கொண்டு வர வேண்டும் என நாமக்கல் 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ×