search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செந்துறையில் மருத்துவமனைக்கு செல்ல வழி இல்லாததால் சாலையிலேயே ஆம்புலன்ஸ் நிறுத்தும் அவலம்
    X

    செந்துறையில் மருத்துவமனைக்கு செல்ல வழி இல்லாததால் சாலையிலேயே ஆம்புலன்ஸ் நிறுத்தும் அவலம்

    • செந்துறையில் மருத்துவமனைக்கு செல்ல வழி இல்லாததால் சாலையிலேயே ஆம்புலன்ஸ் நிறுத்தும் அவலம் ஏற்பட்டது
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறையில் வட்டார தலைமை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு செந்துறை காவல் நிலையத்திலிருந்து 200 மீட்டர் தூரத்திற்கு உள்ளே செல்ல வேண்டும். அதே போன்று இந்த மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் டீக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்கள் உள்ளன. இதனால் மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சாலை பகுதியிலேயே நிறுத்தப்பட்டு இருக்கிறது.

    தலைமை மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டு இருந்தபோதிலும் இந்த மருத்துவமனைக்கு வரும் அனைத்து நோயாளிகளும் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் பணியில் இருக்கும் செவிலியர்களால் அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் அடிக்கடி இந்த மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் வந்து செல்கின்றன. இருப்பினும் சாலைகளில் ஆம்புலன்ஸ்களுக்கு இடையூறாக இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து நிறுத்தப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் ஆம்புலன்ஸ் செல்ல வழி இல்லாததால் ஓட்டுனர் வேலு ஆம்புலன்ஸை சாலையிலேயே நிறுத்திவிட்டு மருத்துவமனைக்கு சென்றார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனவே உடனடியாக இந்த மருத்துவமனையில் போதிய மருத்துவர்களை நியமித்து 24 மணி நேரமும் மருத்துவமனை இயங்க நடவடிக்கை எடுப்பதோடு 108 ஆம்புலன்ஸ் செல்லும் பாதையில் இடையூறு இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×