என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பாரத ஸ்டேட் வங்கி சார்பில் செஞ்சிலுவை சங்கத்துக்கு ஆம்புலன்ஸ்
- ரூ. 24 லட்சம் மதிப்பீட்டில் ஆம்புலன்சை கருணை நோக்கத்துடன் பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
- பாரத ஸ்டேட் வங்கி பொது மேலாளர் (சென்னை வட்டாரம்) கோவிந்த் நாராயண் கோயல் நேரில் வழங்கினார்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செஞ்சிலுவை சங்கம் பயன்பாட்டிற்காக ஆம்புலன்சை செஞ்சிலுவை சங்கம் தலைவரும் மாவட்ட கலெக்டருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம், தஞ்சாவூர் பாரத் ஸ்டேட் வங்கியின் சமூக கூட்டாண்மை சார்பில் பாரத ஸ்டேட் வங்கி பொது மேலாளர் (சென்னை வட்டாரம்) கோவிந்த் நாராயண் கோயல் நேரில் வழங்கினார்.இது குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது:-
ஏழை மக்களுக்கு பயன்பட வேண்டும் என்ற உயரிய சிந்தனையில் தஞ்சாவூர் இந்தியன் செஞ்சிலுவை சங்கத்துக்கு தஞ்சாவூர் பாரத் ஸ்டேட் வங்கி சமூக கூட்டாண்மை பொறுப்பு நிதி மூலமாக ரூ. 24 லட்சம் மதிப்பீட்டில் ஆம்புலன்சை கருணை நோக்கத்துடன் பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா , ஸ்ரீகாந்த் , பாரத ஸ்டேட் வங்கி துணைப் பொது மேலாளர் நவீன் குமார், உதவி பொது மேலாளர் ஆல்வின் மார்டின் ஜோசப் ஆல்பர்ட், செஞ்சிலுவை சங்கத் தலைவர் ராஜமாணிக்கம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்