search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "affected"

    • தொடர்மழை பெய்யும் காலங்களில் இந்தப் பணிகள் முற்றிலுமாகப் பாதிக்கப்படும்.
    • அனைத்து பணிகளும் திறந்தவெளியிலேயே நடபெற்று வருகிறது

    காங்கயம் :

    காங்கயம் பகுதிகளில் அதிக அளவில் தேங்காய் உடைத்து உலர்த்தும் உலர்களங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் இயற்கையில் அமைந்த சீதோஷ்ண நிலை தேங்காய் உடைத்து உலர்த்தும் பணிக்கு ஏதுவாக உள்ளதால் அதிகளவில் களங்களை பலரும் அமைத்துள்ளனர். தேங்காய் எண்ணெய் உற்பத்தியில் கிரஷிங் பணிக்கு முன்பு வரை அனைத்து பணிகளும் திறந்தவெளியிலேயே நடைபெற்று வருகிறது.

    தேங்காய் மட்டை உரிப்பது, உடைப்பது, உலர்த்துவது ஆகிய பணிகள் திறந்த வெளியிலேயே நடைபெறுவதால் தொடர்மழை பெய்யும் காலங்களில் இந்தப் பணிகள் முற்றிலுமாகப் பாதிக்கப்படும்.

    இந்த நிலையில் காங்கயம் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு பெய்த லேசான சாரல் மழையால் தேங்காய் உடைத்து உலர்த்தும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உடைக்கப்பட்டு களங்களில் உலர்த்தப்பட்டு வரும் தேங்காய் பருப்புகளை குவியல் குவியலாக களங்களில் குவித்து வைத்து தார்ப்பாய் கொண்டு மூடி வைக்கப்பட்டது. இதனால் காங்கயம் மற்றும் சுற்றுவட்டார தேங்காய் களங்களில் தேங்காய் உடைத்து உலர்த்தும் பணிகள் பாதிக்கப்பட்டது.

    • குவாரிகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் கல், மணல் கிடைக்காமல் கட்டுமான பணிகள் பாதிப்படைந்துள்ளது.
    • கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள அடைமிதிப்பான் குளம் தனியார் கல்குவாரியில் கடந்த மாதம் நடந்த விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள கல்குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதா? விதிமீறல்கள் நடந்துள்ளனவா என்பதை அறிய மாவட்ட கலெக்டர் விஷ்ணு உத்தரவின்பேரில் 6 குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன.

    இதன் காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள குவாரிகளில் இருந்து குண்டு கற்கள், எம்.சாண்ட் உள்ளிட்டவைகளை அள்ளுவதற்கு அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கல், மணல் உள்ளிட்டவை கிடைக்காததால் வணிக நிறுவனங்கள், வீடுகள் உள்ளிட்டவற்றின் கட்டுமான பணிகள் தடைபட்டுள்ளது. இதனால் ஒப்பந்ததாரர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    கட்டுமான பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள முடியாததால் அவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. 2 மாவட்டங்களிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளதால், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து தான் கற்கள், எம்.சாண்ட் உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்யவேண்டி உள்ளது. அவ்வாறு செய்தால் மூலப்பொருட்களின் விலை உயர்ந்து விடுகிறது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    மேலும் மாநகர பகுதியில் பெரும்பாலான இடங்களில் பெண்கள் கட்டுமான தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். தற்போது பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால் அவர்களது வாழ்வாதாரம் கேள்வி குறியாகி உள்ளது.

    இந்த வேலையை நம்பி மகளிர் சுயஉதவிக்குழு, வீட்டின் அன்றாட செலவுகள், குழந்தைகளின் பள்ளி படிப்புச்செலவு உள்ளிட்டவை இருப்பதாகவும், சுமார் ஒரு மாதமாக வேலை இல்லை எனவும் அவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

    நெல்லையில் உள்ள 55 குவாரிகளிலும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் லாரிகள், பொக்லைன் ஓட்டுதல், வெடிமருந்து வைத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது தடையால் குடும்ப செலவுக்கு தவித்து வருகின்றனர்.

    எனவே மாவட்ட நிர்வாகங்கள் விரைந்து குவாரிகளை ஆய்வு செய்து முடிக்க வேண்டும். எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க உடனடியாக கல்குவாரிகளில் இருந்து கல், எம்.சாண்ட் உள்ளிட்டவற்றை அள்ளுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆண்டுதோறும் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யப்பட்டு வளர்க்கப்படுகிறது.
    • காற்றின் வேகம் குறைந்தால் மீண்டும் மீன் பிடி தொழில் தீவிரமடையும்.

    உடுமலை,

    உடுமலை அமராவதி அணையில் மீன் வளர்ச்சி கழகம் சார்பில் ஆண்டுதோறும் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யப்பட்டு வளர்க்கப்படுகிறது. குறிப்பாக, கட்லா, ரோகு, மிர்கால், திலேப்பியா ரக மீன்களே அணைகளில்வ ளர்ப்புக்கு தேர்வு செய்யப்படுகின்றன.வழக்கமாக கோடை காலத்தில்அணை நீர்மட்டம் குறைந்து மீன் பிடிபடுவது அதிகரிக்கும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கோடை காலத்தில் பெய்த மழை காரணமாக அணை நீர்மட்டம், குறையவில்லை.மேலும் பலத்த காற்று காரணமாக, பரிசல் இயக்க சிரமம் ஏற்படுவதுடன் விரிக்கும் வலை இழுத்து செல்லுதல் உள்ளிட்ட காரணங்களால் மீன்பிடி குறைந்துள்ளது. பருவமழை சீசன் துவங்கும் முன், காற்றின் வேகம் குறைந்தால் மீண்டும் மீன் பிடி தொழில் தீவிரமடையும் என எதிர்பார்க்கின்றனர்.

    மதுரை சித்திரை தேரோட்டத்தின்போது தேர்தலை நடத்தினால் வாக்குப்பதிவு சதவீதம் பாதிக்கும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறினார். #Vaiko #ParliamentElection
    மதுரை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாகர்கோவிலில் ராகுல் காந்தி கலந்து கொள்ளும் கூட்டணி கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க செல்கிறேன். பாராளுமன்றத் தேர்தலோடு 21 சட்டமன்ற இடைத்தேர்தல்களையும் தமிழகத்தில் நடத்த வேண்டிய கடமை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது.

    வழக்குகள் நிலுவையில் இருக்கிறபோது இடைத்தேர்தல்கள் நடந்த முன்னுதாரணம் இருக்கும்போது தமிழகத்தில் 3 சட்டமன்றங்களுக்கு இடைத்தேர்தலை நடத்துவதை தள்ளிப்போடுவது சரியல்ல.

    தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். பல லட்சம் பேர் பங்கேற்கிற சித்திரைத் திருவிழாவின்போது மதுரை பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதனால் வாக்குப்பதிவு சதவீதம் பாதிக்கும் என நான் கருதுகிறேன்.

    18-ந் தேதி தேர்தலை நடத்தாமல் வேறு தேதியில் தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.



    அகில இந்திய அளவில் பி.ஜே.பி. கூட்டணி மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். பொள்ளாச்சி சம்பவம் குலை நடுங்க வைக்கிறது. அந்தக் குற்றத்தை செய்த கயவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் கூண்டில் நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

    இந்தக் கயவர்கள் பின்னணியில் யார் இருந்தாலும், அவர்களைக் காப்பாற்ற யார் முனைந்து இருந்தாலும், அவர்களும் கண்டறியப்பட்டு, அவர்களும் சட்டத்தின் பிடியில் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

    எடியூரப்பா பாராளுமன்றத் தேர்தலில் 22 தொகுதிகள் கர்நாடகாவில் வெற்றி பெற்றாலே, சட்டசபையையே மாற்றி அமைப்போம் என்பது போன்ற தவறான கருத்துக்களை அவ்வப்போது பேசி வருகிறார்.

    அது மட்டுமா? சரிந்து கொண்டு இருந்த பி.ஜே.பி.யின் செல்வாக்கு புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு வானுயர உயர்ந்து கொண்டு இருக்கிறது என்று அதனை வைத்து வாக்கு வங்கியை உயர்த்தலாம் என்று சொன்ன கருத்தும் அவர் கருத்தா? அல்லது பிரதமர் நரேந்திர மோடியின் கருத்தைப் பிரதிபலிக்கிறாரா? என்று தெரியவில்லை. ராணுவ வீரர்கள் அனைவரும் 120 கோடி இந்தியர்களுக்கும் சொந்தக்காரர்கள்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார். #Vaiko #ParliamentElection



    செங்கம் அருகே பிரியாணி சாப்பிட்ட வாம் தொண்டு நிறுவன விடுதியில் தங்கியிருந்த 77 மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள பொறையாறு, அரட்டவாடி ஆகிய இடங்களில் வாம் தொண்டு நிறுவனத்துக்கு சொந்தமாக மாணவர் விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இதில் 77 பள்ளி மாணவர்கள் தங்கியிருந்து படித்து வருகின்றனர்.

    இந்த மாணவர்கள் நேற்று திருவண்ணாமலை தொண்டு நிறுவனத்தில் நடந்த புத்தாக்க பயிற்சியில் பங்கேற்றனர். அங்கு வழங்கப்பட்ட பிரியாணி சாப்பிட்டு விட்டு விடுதிக்கு திரும்பினர்.

    இரவு அனைத்து மாணவர்கள் உடலில் அரிப்பு ஏற்பட்டு கொப்பளங்கள் உருவானது. இதையடுத்து அனைத்து மாணவர்களும் செங்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. உணவு ஒவ்வாமை காரணமாக மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    கொசுக்கள் மூலம் பரவும் தொற்றுநோயான டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இந்த ஆண்டில் நாடு முழுவதும் 83 பேர் உயிரிழந்ததாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. #Dengueclaimed80lives #Dengueaffected #Denguefever
    புதுடெல்லி:

    டெல்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் கொசுக்கள் மூலம் பரவும் தொற்றுநோயான டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆரம்பத்தில் இந்நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டவுடன் சிகிச்சை பெற்று பலர் குணமடந்துள்ளனர்.

    எனினும், ஆங்காங்கே சிகிச்சை பலனின்றி சில உயிரிழப்புகளும் நேர்ந்துள்ளது. தலைநகர் டெல்லியில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் வந்த 830 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட புள்ளி விபரங்களின்படி இந்த ஆண்டில் கடந்த செப்டம்பர் மாதம்வரை டெங்கு காய்ச்சலுக்கு 83 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    இதில் அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் 3,660 பேர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 35 பேர் இறந்துள்ளனர். அடுத்தபடியாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 4,667 பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 18 பேர் இறந்துள்ளனர்.  இதேபோல், சத்தீஸ்கர் மாநிலத்தில் 10 பேரும் மற்ற மாநிலங்களில் ஓரிருவரும் உயிரிழந்துள்ளனர்.

    கடந்த 2017-ம் ஆண்டில் டெங்கு காய்ச்சலால் ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 401 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 325 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #Dengueclaimed80lives #Dengueaffected  #Denguefever
    கோவை மத்திய சிறையில் அமைக்கப்பட்டுள்ள ‘ஜாமர்’ கருவியினால் அதை சுற்றி உள்ள பகுதிகளில் செல்போன் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து உள்ளனர்.
    கோவை:

    கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகள் செல்போன் பயன்படுத்துவதை தடுக்க இரண்டு ‘ஜாமர்’ கருவிகள் சில மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. டவர் பிளாக்கில் ஒன்றும், உயர் பாதுகாப்பு பிரிவில் ஒன்றுமாக இரு ‘ஜாமர்’ கருவிகள் உள்ளன. இவை தவிர மேலும் இரண்டு ‘ஜாமர்’ கருவிகள் விரைவில் அமைக்கப்பட உள்ளன.

    கோவை மத்திய சிறையில் செல்போன் பயன்படுத்துதற்கு தடைவிதிக்கப்பட்டாலும் உள்ளே இருக்கும் கைதிகள் செல்போன் பேசுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன. கைதிகளை பார்க்க வரும் பார்வையாளர்கள் அனைத்து பாதுகாப்புகளையும் மீறி செல்போன்களை மறைத்து கொண்டுவந்து கைதிகளுக்கு கொடுப்பதாக கூறப்படுகிறது. இதனால் செல்போன் செயல்பாட்டை முற்றிலும் தடுக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள முக்கிய சிறைகளில் ‘ஜாமர்’ கருவிகள் பொருத்தப்பட்டன.

    ஆனால் கோவை மத்திய சிறையில் பொருத்தப்பட்டுள்ள ‘ஜாமர்’ கருவிகளின் தாக்கம் எல்லையை கடந்து அருகில் உள்ள பாலசுந்தரம் சாலை உள்பட சுற்று பகுதிகளில் யாரும் செல்போன்களை பயன்படுத்த முடியாத அளவிற்கு கடுமையாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இதைதொடர்ந்து பி.எஸ்.என்.எல். செல்போன் நிறுவனத்தினர் கருவிகளின் மூலம் ‘ஜாமர்’ கருவிகளின் தாக்கத்தை ஆய்வு செய்தனர். இதில் மத்திய சிறையில் பொருத்தப்பட்டுள்ள ‘ஜாமர்’ கருவிகள் அருகில் உள்ள செல்போன் சேவைகளையும் பாதிப்பதை உறுதி செய்துள்ளனர்.

    இதுகுறித்து பி.எஸ்.என்.எல். தொழில்நுட்ப பணியாளர் ஒருவர் கூறியதாவது:-

    கோவை மத்திய சிறையில் பொருத்தப்பட்டுள்ள ‘ஜாமர்’ கருவியினால் பி.எஸ்.என்.எல். மட்டுமல்லாது மற்ற செல்போன் நிறுவனங்களின் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. சிறை அருகில் உள்ள பாலசுந்தரம் சாலை, பாரதியார் சாலை, நஞ்சப்பா சாலையில் செல்போனில் டயல் செய்தால் இணைப்பு கிடைக்கும். சில வினாடிகள் பேசிக் கொண்டிருக்கும் போதே தொடர்பு தானாக துண்டிக்கப்பட்டு விடும். அல்லது இணைப்பு கிடைத்தாலும் எதிர் தரப்பில் பேசுபவர்களின் குரல் தெளிவாக இருக்காது.இது போன்ற சேவை பாதிப்பு உள்ளது.

    இது தொடர்பாக செல்போன் பயன்படுத்துபவர்கள் ஏற்கனவே புகார் கூறினார்கள். இதுகுறித்து சிறை அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளோம். ஆனால் அவர்கள் தரப்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    ‘ஜாமர்’ கருவியின் தாக்கம் எவ்வளவு மீட்டர் சுற்றளவுக்கு இருக்கும் என்பதை மத்திய அரசு தொலை தொடர்புத் துறையினருக்கு தான் தெரியும். ‘ஜாமர்’ கருவியின் தாக்கத்தை குறைத்து சிறை வளாக அளவுக்குள் வைத்தால் இந்த கோளாறு தவிர்க்கப்படும்.இது தொடர்பாக தொலை தொடர்புத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    தர்மபுரி மாவட்டத்தில் எய்ட்ஸ் நோய் பாதிப்பு இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் மலர்விழி பேசினார்.
    தர்மபுரி:

    எய்ட்ஸ் நோய் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இந்த நோயால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் சர்வதேச எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு தினம் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சீனிவாசராஜ் முன்னிலை வகித்தார்.

    மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை இணை இயக்குனர் ஆஷாபிரடரிக், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் சுரபி, மாவட்ட திட்ட மேலாளர் பிருந்தா, டாக்டர் ராஜ்குமார் ஆகியோர் எய்ட்ஸ் தடுப்பு குறித்தும், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் விளக்கி பேசினார்கள். இந்த நிகழ்ச்சியில் எச்.ஐ.வி. நோய்தொற்று மற்றும் எய்ட்ஸ் நோய் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் துண்டு பிரசுரங்களை கலெக்டர் மலர்விழி பொதுமக்களுக்கு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் எய்ட்ஸ் நோய் பாதிப்பு இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை புறக்கணிக்காமல் அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை அளிக்க வேண்டும். இதற்காக அரசு ஆஸ்பத்திரிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள், உயர்தர சிகிச்சைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எய்ட்ஸ் நோயால் இறப்பில்லாத நிலையை இந்த மாவட்டத்தில் உருவாக்க வேண்டும் என்று கூறினார்.

    இதைத்தொடர்ந்து எய்ட்ஸ் நோய் தடுப்பு குறித்து கலெக்டர் தலைமையில் டாக்டர்கள், மருத்துவத்துறை அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர் விழிப்புணர்வு பதாகைகளில் கையெழுத்திட்டனர். எய்ட்ஸ்நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு நிகழ்ச்சியில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. 
    ×