என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "affected"
- 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் பணிகள் நிறுத்தம்
- மழை நின்ற பின் பணி தொடர விவசாயிகள் எதிர்பார்ப்பு
கரூர்,
கரூர் மாவட்டத்தில்பரவலாக சாரல் மழை பெய்ததால் நெல் அறுவடை பணி பாதிக்கப் பட்டது. கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் மாயனூர், திருக்காம்புலியூர், மகா தானபுரம், லாலாப்பேட்டை, நந்தன் கோட்டை, வல்லம், வீரவள்ளி ஆகிய இடங்களில், 100க்கும் மேற்பட்ட ஏக் கரில் நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நேற்று காலை முதல் அப்பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வயல் களில் நெற்கதிர் இயந்திரம், டிராக்டர் கொண்டு அறுவடை செய்யும் பணி பாதிக்கப்பட்டது. மழை நின்று வெயில் அடித்தால் மீண்டும் அறுவடை பணி தொடங்கும் என விவசாயிகள் கூறினர்
- குப்பை மேலாண்மைக்கு பெரும் சவாலாக இருப்பது பிளாஸ்டிக் பைகள் தான்.
- கழிவுநீர் கால்வாய்கள், நிலத்தடி நீர் என அனைத்தும் பாதிக்கப்படுகிறது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டியில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு நாளை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் வசிக்கும் 15 ஆயிரம் குடும்பங்களுக்கு பாலம் தொண்டு நிறுவனம் மூலம் துணிப்பை வழங்கும் விதமாக 'துணிப்பை தூக்க துணிவோம்' என்ற விழிப்புணர்வு இயக்கம் நகராட்சி வளாகத்தில் தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் அப்துல் ஹரிஸ் தலைமை தாங்கினார். பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய துணிப்பையை வெளியிட்டு பேசுகையில்:-
தற்போது சுற்றுச்சூழலு க்கும், குப்பை மேலாண்மைக்கும் பெரும் சவாலாக இருப்பது பிளாஸ்டிக் பைகள் தான், இதனால் நீர்நிலைகள், வடிகால், கழிவுநீர் கால்வாய்கள், நிலத்தடி நீர் என அனைத்தும் பாதிக்கப்படுகிறது.
இதன் பயன்பாட்டை தவிர்க்கவும், துணிப்பை பயன்பாட்டை அதிகப்படுத்தவும், தமிழக அரசு மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை கொண்டு வந்துள்ளது. எனவே, சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் துணிப்பை பயன்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- இரவு நேரத்தில் குளிர் மிக அதிகமாக இருப்பதால் வெப்பநிலை சரிந்து 68 டிகிரிக்கும் கீழ் பதிவாகிறது.
- சாலைகளில் 30 அடி தூரத்துக்கு முன்பாக வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருக்கிறது.
திருப்பூர் :
கடந்த வருடங்களை காட்டிலும் தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு பருவ மழையானது காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் புயலால் சராசரி அளவை காட்டிலும் சற்று கூடுதலாக மழை பொழிவு பதிவாகியுள்ளது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக குளிரான கால நிலை நிலவி வருகிறது. பகலில் வெப்பநிலை உயர்ந்து காணப்படும் நிலையில், மாலை 6 மணி அளவில் மிகவும் குளிரான காலநிலை நிலவுகிறது. இதனால் இரவில் இரு சக்கர வாகனத்தில் பயணிப்பது சிரமமாக உள்ளது. மேலும் இரவு நேரத்தில் குளிர் மிக அதிகமாக இருப்பதால் வெப்பநிலை சரிந்து 68 டிகிரிக்கும் கீழ் பதிவாகிறது.
மாவட்டத்தில் பல்லடம் பொங்கலூர், காங்கேயம், குண்டடம், தாராபுரம், மூலனூர், அவிநாசி, ஊத்துக்குளி உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக பனிப்பொழிவு அதிக அளவில் உள்ளதால், குளிர் மிகவும் கடுமையாக உள்ளது. தொடர் பனிப்பொழிவு காரணமாக பொதுமக்கள் பலருக்கும் சளி, தலைவலி உள்ளிட்ட உடல் நல கோளாறுகளும் ஏற்படுவதால் மருத்துவமனைகளில் சளி தொந்தரவால் நோயாளிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. குழந்தைகளும் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளனர்.
அவினாசி பகுதியில் காலை 8 மணி வரை பனி மூட்டம் அதிக அளவில் சூழ்ந்து காணப்பட்டதால், சாலைகளில் வாகனங்களில் செல்வோர் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றனர். மேலும் முக்கிய சாலைகளில் 30 அடி தூரத்துக்கு முன்பாக வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருந்ததால் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.
- ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கடும் குளிர், பனியால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
- 100 பேருக்கு போர்வைகளை அவர்கள் இருக்கும் இடத்திற்கே தேடிச் சென்று வழங்கினர்.
நாகப்பட்டினம்:
உலகப் புகழ் பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தை சுற்றி ஆலய வாசல், பேருந்து நிலையம், கடைவீதி, சாலை ஓரங்களில் சுற்றி திரியும் மனநலம் பாதித்த பெண்கள், ஆண்கள் ஆதரவற்ற முதியோர்கள் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் தற்பொழுது நிலவும் கடும் குளிர், பனியால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இதனை போக்கு வகையில் வேளாங்கண்ணி உதவி கரங்கள் சேவை நிறுவனம் சார்பில் 100 பேருக்கு போர்வைகளை இரவு நேரத்தில் அவர்கள் இருக்கும் இடத்திற்கே தேடிச் சென்று வழங்கினர்.
இந்நிகழ்வில் உதவிக்–கரங்கள் நிறுவனர் ஆண்டனி ஜெயராஜ் தலைமையேற்று ஏழைகளுக்கு போர்வை அணிவித்து துவங்கி வைத்தார்.
நிர்வாகிகள் பீட்டர், ஜெயசீலன் ஆசிரியர், துரைராஜ், அந்தோணிராஜ், கருணானந்தம், விஜய் மற்றும் உதவிக்கரங்கள் சேவை தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
- இரண்டு ஓட்டு வீடுகள் பகுதி அளவு பாதிக்கப்பட்டது.
- 8 மாடுகள் மற்றும் 2 ஆடுகள் என 10 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
திருவாரூர்:
வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து திருவாரூர் மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வந்தது.
தொடர் மழையின் காரணமாக 22 குடிசை வீடுகள் பகுதிகளவிலும், ஒரு குடிசை வீடும் முழு அளவும் சேதமடைந்தது.
அதைப்போல இரண்டு ஓட்டு வீடுகள் பகுதி அளவு பாதிக்கப்பட்டது.
இதுவரை ஒட்டுமொத்தமாக 25 வீடுகள் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.
அதைப்போலவே 8 மாடுகள் மற்றும் 2 ஆடுகள் என 10 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
இந்த தகவலை திருவாரூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.
அதிர்ஷ்டவசமாக எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை.
ஆறுகளில் நீரின் போக்கைதடுக்கும் வகையில் பரவியிருந்த வெங்காயத் தாமரை செடிக ளையும் அகற்றும் பணிகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் போதுமான முன்னெச்சரிக்கை நடவடி க்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகமாவட்ட கலெக்டர் காயத்ரி கிரு ஷ்ணன் தெரிவித்துள்ளார்.
- 1 முதல் 3 வயதுள்ள கன்றுகள் மற்றும் ஒட்டு செடிகளை முட்டுக் கொடுப்பதற்கு குச்சிகளை பயன்படுத்துவது சிறந்தது.
- புதிதாக நடவு செய்த செடிகள் மற்றும் மரத்தை சாயா வண்ணம் பாதுகாத்தல் வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் கலைச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக உள்ள தோட்டக்கலை பயிர்களை பாதுகாப்பதற்கான வழிமுறை–களான தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்த தோட்டங்களில் அறுவடை மேற்கொண்டு பயிர்களை பாதுகாக்க வேண்டும். காய்கறி பயிர்களான வெண்டை, கத்தரி, கொத்தவரை, மிளகாய் மற்றும் கொடி வகை காய்கள் ஆகியவற்றுக்கு முறையாக மண் அணைப்பது மற்றும் வடிகால் வசதி ஏற்படுத்துவதன் மூலம் நீர் தேக்கத்தினால் வேர்கள் அழுவதை தவிர்க்கலாம்.
காய்கறி பயிர்களில் காய்ந்து போன இலைகளை அகற்ற வேண்டும். இலைவழி உரம் அளித்து பயிரின் ஊட்டச்சட்டி தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.
கவாத்தின் போது வெட்டப்பட்ட பகுதியில் காப்பர் ஆக்ஸி குளோரைடு 300 கிராம் 1 லிட்டர் நீரில் கலந்து பூசுவதன் மூலம் பூச்சி மற்றும் நோய் தாக்குவதை தவிர்க்கலாம். 1 முதல் 3 வயது உள்ள கன்றுகள் மற்றும் ஒட்டு செடிகளை முட்டுக் கொடுப்பதற்கு குச்சிகளை பயன்படுத்துவது சிறந்தது. மரங்களை சுற்றிலும் சுத்தப்படுத்தி நல்ல வடிகால் வசதி அமைக்க வேண்டும்.
வாழைத்தோப்பினை சுற்றி வாய்க்கால் எடுத்து மழைநீர் தேங்காமல் வெளியேற வழிகள் செய்ய வேண்டும். வாழை தார்களை முறையாக மூடி வைத்தல் வேண்டும். நிழல் வலை குடிலின் குழிதட்டில் தயார் செய்யப்பட்டுள்ள நாற்றுகள் அதிகப்படியான மழை நீரால் பாதிப்படையாமல் இருக்க நெகிழித்தாள்கள் கொண்டு நாற்றுகளை மூடி பாதுகாக்கலாம்.
காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க காற்று வீசும் எதிர் திசையில் கயிறு , கழிகள் மூலம் முட்டு கொடுத்து காற்றின் வேகத்தில் இருந்து புதிதாக நடவு செய்த செடிகள் மற்றும் மரத்தை சாயா வண்ணம் பாதுகாத்தல் வேண்டும். கனமழை அல்லது காற்றுக்கு பின் மரங்களில் பாதிப்பு இருப்பின் மரத்தை சுற்றி மண் அணைத்து மரங்களுக்கு தேவையான தொழு உரம் இடவேண்டும். பூஞ்சாணக் கொல்லிகள் மற்றும் உயிர் நோய் கட்டுப்பாட்டு காரணிகளை இட்டு நோய் பரவாமல் தடுக்க முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தொடர் கனமழையால் நெல் கொள்முதலில் ஈரப்பதம் 22 சதமாக காலதாமதமின்றி உயர்த்திட வேண்டும்.
கும்பகோணம்:
பயிர் காப்பீட்டில் தஞ்சை விவசாயிகளுக்கு இழைத்திருக்கும் அநீதியை கண்டித்தும், பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தொடர் கனமழையால் நெல் கொள்முதலில் ஈரப்பதம் 22 சதமாக காலதாமதமின்றி உயர்த்திட வலியுறுத்தியும், நெல்லுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிடக் கோரியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பனந்தாள் கடைவீதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கொளஞ்சிநாதன் தலைமை வைத்தார்.
ஒன்றிய தலைவர் செல்வம் முன்னிலை வகித்தார்.
மாவட்ட தலைவர் செந்தில்குமார், சிஐடியு துணைத் தலைவர் ஜீவபாரதி, கரும்பு விவசாய சங்க மாநில செயலாளர் காசிநாதன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
- திருமங்கலம்-விமான நிலைய சாலையில் அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்படைகின்றனர்.
- அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்சில் கொண்டு வரப்படும் நோயாளிகள் உயிரிழக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் விமான சாலையில் ரெயில் நிலையம் அருகே ரெயில்வே கேட் உள்ளது. தென் மாவட்டங்களில் இணைக்க கூடிய முக்கிய பகுதியாக விளங்கும் திருமங்கலம் ரெயில் பாதையில் நான் ஒன்றுக்கு 75-க்கும் மேற்பட்ட ரெயில்கள் கடந்து செல்கின்றன.
இதனால் ரெயில்வே கேட் குறைந்தது 10 நிமிடம் முதல் அரை மணி நேரம் வரை மூடப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர்.
திருமங்கலம் நகராட்சிக்குட்பட்ட காமராஜர்புரம், விடத்த க்குளம், விருச்சங்குளம், ஆலங்குளம், வளைய ப்பட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ரெயில்வே கேட் மூடப்படுவதால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
எனவே இப்பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என 20 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த அதிமுக ஆட்சியில் ரெயில்வே மேம்பாலம் கட்ட அரசாணை வெளியிடப்பட்டு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பூமிபூஜையை நடத்தினார்.
ஆனால் தற்போது வரை மேம்பாலம் கட்டுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இந்த நிலையில் நேற்று 7 மணி வரையில் ரெயில்வே கேட் மூடப்பட்டது. அப்போது விருதுநகரில் இருந்து 70 வயது மூதாட்டியை உடல்நலக்குறைவு காரணமாக ஆம்புலன்ஸ் மூலம் மதுரைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் 20 நிமிடத்திற்கு மேலாக காத்துகிடந்தது. இதனால் மூதாட்டி பரிதவிப்புக்குள்ளானார்.
தொடர்ந்து 3 ரெயில்கள் சென்ற பின் ரெயில்வே கேட் திறக்கப்பட்டது. அதன்பின் ஆம்புலன்ஸ் அங்கிருந்து சென்றது.
இதுபோன்று அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுவதால் அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்சில் கொண்டு வரப்படும் நோயாளிகள் உயிரிழக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளதாகவும் எனவே ெரயில்வே மேம்பாலம் விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ெரயில்வே மேம்பாலத்தை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
- பழங்கள் செயற்கை முறையில் கார்பைடுகல் வைத்தும், சாயம் ஸ்பிரே செய்தும் பழுக்க வைக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
- பொதுமக்கள் வித்தியாசம் தெரியாமல் வாங்கி சென்று பயன்படுத்துவதால் உடல்பாதிப்பும், பண விரயமும் ஏற்படுகிறது.
சீர்காழி:
சீர்காழியில் பெரும்பா லான கடைகளில்செயற்கை முறையில் பழங்கள் பழுக்க வை க்கபடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டு கின்றனர்.இதனை உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு செய்திட வலியுறு த்தப்பட்டுள்ளது.
சீர்காழியில்மாம்பழம், வாழைப்பழம் உள்ளிட்ட பழங்கள் செயற்கை முறை யில் கார்பைடுகல் வைத்தும், சாயம் ஸ்பிரே செய்தும் பழுக்கவைக்கப்படுவதாக நீண்ட நாட்களாகபொது மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த வகை பழங்களைவாங்கி சாப்பிடும்போது உடல்உ பாதை, வயிற்றுபோக்கு, வயிற்றுவலி, செரிமான பிரச்சனை போன்றபிரச்ச னைகள் வரும்என மருத்துவ ர்கள்தெரிவிக்கி ன்றனர்.
குழந்தைகளுக்கு பழங்கள் கொடுக்கும் போது செயற்கைமுறையில் பழுக்கவைத்த பழங்களால் பெரும் பாதிப்பு வயிற்றுபோக்கு ஏற்படுகிறது. இயற்கையான முறையில் பழுத்தபழங்கள், செயற்கை முறையில் பழுக்கவைத்த பழங்கள் எவை, எவை என பொதுமக்கள் வித்தியாசம் தெரியாமல் வாங்கி சென்று பயன்படுத்துவதால் உடல்பாதிப்பும், பணவி ரயமும்ஏற்படுகிறது. செயற்கைமுறையில் பழங்கள் பழுக்கவைக்க ப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டிய உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதனை பொருட்படுத்துவதில்லை.இதனால் பொதுமக்கள்தான் பாதிப்புக்குள்ளாகின்றனர்.ஆகையால் சீர்காழி பகுதியில் செயற்கை முறையில் பழங்கள் பழுக்கவைத்து விற்பனை செய்யும் கடை உரிமை யாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- உடன்குடி வட்டார பகுதியில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து காற்று அதிகமாகவே வீசுகிறது.
- பதனீர் குறைவாக கிடைப்பதால் கருப்பட்டி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
உடன்குடி:
உடன்குடி வட்டார பகுதியில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து காற்று அதிகமாகவே வீசுகிறது. திடீரென நண்பகல் 2 மணிக்கு மேல் சூறாவளி போல காற்று வீசுகிறது. சில நாள் காலையிலிருந்து மாலை வரை காற்று வீசுகிறது.
இதனால் பனை மரத்தில் தினசரி 2 முறைஏறி இறங்கி பதநீர் தரும் பாலையை சீவிவரும் தொழிலாளர்கள் பதநீர் கலசத்திற்குள்விழாமல் அங்கும் இங்கும் அசைந்து வீணாகி விடுகிறது.
இதனால் பதனீர் குறைவாக கிடைப்பதால் கருப்பட்டி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்று உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
இதைப் போல குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் தரும் முருங்கை விவசாயத்தில் முருங்கைப்பூவை காற்று உதிர்த்து விடுகிறது.
மேலும் முருங்கை மரங்கள் காற்றில் அங்கும் இங்குமாக அசைந்து முறிந்து விடுகிறது. இதனால் முருங்கை விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
- ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சியின் தலைவர் செந்தில்குமார் தலைமையில் மாவட்ட பொதுச்செயலாளர் சிவகாமி மகேஸ்வரன் நிர்வாகிகளுடன் வந்து மனு கொடுத்தார்.
- கருமுட்டை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய பாதுகாப்பும், அவரின் மறுவாழ்வுக்கு உதவ தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈரோடு:
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சியின் தலைவர் செந்தில்குமார் தலைமையில் மாவட்ட பொதுச்செயலாளர் சிவகாமி மகேஸ்வரன் நிர்வாகிகளுடன் வந்து மனு கொடுத்தார்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமிக்கு சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்தது தொடர்பாக சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, பெண் புரோக்கர், போலி ஆதார் ஆவணங்களை தயாரித்தவர் என 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க நாங்கள் வலியுறுத்தி இருந்தோம்.
இந்நிலையில் பாதிக்க ப்பட்ட சிறுமி தற்கொலை முயற்சி மேற்கொண்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்கிற செய்தியை கேட்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்து ள்ளோம். எனவே பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய பாதுகாப்பும், அவரின் மறுவாழ்வுக்கு உதவ தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது போன்ற சம்பவங்கள் வேறு எங்கும் நடக்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த கருமுட்டை தொடர்பாக போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மேலும் கருமுட்டை தான செயல்முறைக்கு என புதிய விதிமுறைகளை இயற்ற வேண்டும். ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்ட விதிமுறைகளை தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகள் கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.
அப்போது கரூர் மாவட்ட பார்வையாளர் சிவசுப்பிரமணியம், பொதுச்செயலாளர்கள் எஸ். எம்.செந்தில், ஈஸ்வரமூர்த்தி, வேதா னந்தம், வக்கீல் அணி ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட தலைவர்கள் சின்னத்துரை, குணசேகரன், பட்டியல் அணி மாநில செயலாளர் அய்யாசாமி,
தொழில் பிரிவு மாவட்ட தலைவர் கார்த்திக், செயலாளர் பாலமுரளி, சக்தி சுப்பிரமணி, செல்வமணி, இந்திரகுமார், ஊடகப்பிரிவு தலைவர் அண்ணாதுரை, அமைப்புசாரா தொழிலாளர்கள் பிரிவு தலைவர் ஏ.ஜே.சரவணன், துணைத் தலைவர் ரவீந்திரன் உள்பட பா.ஜனதா கட்சி பிரிவு நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி இதுவரை இல்லாத அளவாக மேலும் ஒரே நாளில் 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- பொதுமக்கள் முறையாக முக கவசம் அணிந்து வர வேண்டும் என சுகாதாரத்துறையினர் வலியுறுத்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த 3 வாரத்திற்கும் மேலாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி இதுவரை இல்லாத அளவாக மேலும் ஒரே நாளில் 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 795 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் சிகிச்சையில் இருந்த 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 993 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தற்போது மாவட்ட–த்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 23 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் 119 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் தற்போது தினசரி பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.
இதையடுத்து மாவட்ட சுகாதார துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். எனினும் பொதுமக்கள் இன்னமும் அலட்சியமாக முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் சென்று வருகின்றனர். பொதுமக்கள் முறையாக முக கவசம் அணிந்து வர வேண்டும் என சுகாதாரத்துறையினர் வலியுறுத்துள்ளனர்.
இதேபோல் மாவட்ட–த்தில் தினசரி மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா பரிசோதனை எண்ணி–க்கை–யை மேலும் அதிகப்படுத்தி தடுப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்