search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதித்த"

    • தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • தொடர் கனமழையால் நெல் கொள்முதலில் ஈரப்பதம் 22 சதமாக காலதாமதமின்றி உயர்த்திட வேண்டும்.

    கும்பகோணம்:

    பயிர் காப்பீட்டில் தஞ்சை விவசாயிகளுக்கு இழைத்திருக்கும் அநீதியை கண்டித்தும், பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தொடர் கனமழையால் நெல் கொள்முதலில் ஈரப்பதம் 22 சதமாக காலதாமதமின்றி உயர்த்திட வலியுறுத்தியும், நெல்லுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிடக் கோரியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திருப்பனந்தாள் கடைவீதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கொளஞ்சிநாதன் தலைமை வைத்தார்.

    ஒன்றிய தலைவர் செல்வம் முன்னிலை வகித்தார்.

    மாவட்ட தலைவர் செந்தில்குமார், சிஐடியு துணைத் தலைவர் ஜீவபாரதி, கரும்பு விவசாய சங்க மாநில செயலாளர் காசிநாதன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

    இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஜுர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தின் அருகே ஒரு யானை உடல்நலம் பாதித்து படுத்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
    • இதையடுத்து கால்நடை மருத்துவ குழு மூலம் யானைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை, போன்ற ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்நிலையில் ஜுர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தின் அருகே ஒரு யானை உடல்நலம் பாதித்து படுத்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது யானைக்கு உணவு அளித்தனர். ஆனால் யானை உணவு ஏதும் எடுக்காமல் படுத்துகிடந்தது.

    இதையடுத்து கால்நடை மருத்துவ குழு மூலம் யானைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×