search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cellphone service"

    • தேசிய பேரிடர் மீட்பு படை சார்பில் 34 குழுக்கள் பணியில் உள்ளனர்.
    • 311 கால்நடை உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

    சென்னையில் நாளை மாலைக்குள் தொலைத்தொடர்பு சேவைகள் முழுமையாக சீரடைந்துவிடும் என்றும் வடசென்னையில் இன்று மாலைக்குள் மின்விநியோகம் வழங்கப்படும் எனவும் தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா மேலும் கூறியதாவது:-

    வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மழை நீர் வடியத் தொடங்கிவிட்டது. மோட்டார்கள் மூலம் மழை நீர் வெளியேற்றும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்து பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    மின்சார வாரியம், காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை போன்ற அனைத்து துறை சார்ந்தவர்களும் மீட்பு, நிவாரணப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    தேசிய பேரிடர் மீட்பு படை சார்பில் 34 குழுக்கள் பணியில் உள்ளனர்.

    311 கால்நடை உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    திண்டுக்கல் அருகே பெரும்பாறையில் பகுதியில் பி.எஸ்.என்.எல். செல்சேவை டவர் பழுதடைந்துள்ளது. இதனால் 2 நாட்களாக பி.எஸ்.என்.எல். செல்சேவை இயங்கவில்லை.
    பெரும்பாறை:

    திண்டுக்கல் அருகே பெரும்பாறையில் பி.எஸ்.என்.எல். செல்போன் டவர் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பி.எஸ்.என்.எல். செல்சேவை டவர் பழுதடைந்துள்ளது. இதனால் 2 நாட்களாக பி.எஸ்.என்.எல். செல்சேவை இயங்கவில்லை.

    எனவே பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் பெரும்பாறை, கொங்கப்பட்டி, மஞ்சள்பரப்பு, புல்லாவெளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    எனவே இது சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து பழுதடைந்த பி.எஸ்.என்.எல். செல்சேவையை சரிசெய்து இயக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொடைக்கானல் கீழ்மலை பகுதியான பெரும்பாறையில் பி.எஸ்.என்.எல். செல் சேவை டவர் பழுதடைந்துள்ளது. இதனால் கடந்த 3 நாட்களாக பி.எஸ்.என்.எல். செல்சேவை இயங்கவில்லை.
    பெரும்பாறை:

    பி.எஸ்.என்.எல். செல் சேவை டவரில் இருந்து 5 பாய்ண்டு சிக்னல் கிடைக்கிறது. ஆனால் யாருக்கும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இதனால் பெரும்பாறை, கொங்கப்பட்டி, மஞ்சள்பரப்பு, புல்லாவெளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பி.எஸ்.என்.எல். செல்சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சிக்னல் இருந்தும் தொடர்பு கொள்ளமுடியவில்லை.

    எனவே இதுசம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து பழுதடைந்த பி.எஸ்.என்.எல். செல்சேவையை சரிசெய்து இயக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கோவை மத்திய சிறையில் அமைக்கப்பட்டுள்ள ‘ஜாமர்’ கருவியினால் அதை சுற்றி உள்ள பகுதிகளில் செல்போன் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து உள்ளனர்.
    கோவை:

    கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகள் செல்போன் பயன்படுத்துவதை தடுக்க இரண்டு ‘ஜாமர்’ கருவிகள் சில மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. டவர் பிளாக்கில் ஒன்றும், உயர் பாதுகாப்பு பிரிவில் ஒன்றுமாக இரு ‘ஜாமர்’ கருவிகள் உள்ளன. இவை தவிர மேலும் இரண்டு ‘ஜாமர்’ கருவிகள் விரைவில் அமைக்கப்பட உள்ளன.

    கோவை மத்திய சிறையில் செல்போன் பயன்படுத்துதற்கு தடைவிதிக்கப்பட்டாலும் உள்ளே இருக்கும் கைதிகள் செல்போன் பேசுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன. கைதிகளை பார்க்க வரும் பார்வையாளர்கள் அனைத்து பாதுகாப்புகளையும் மீறி செல்போன்களை மறைத்து கொண்டுவந்து கைதிகளுக்கு கொடுப்பதாக கூறப்படுகிறது. இதனால் செல்போன் செயல்பாட்டை முற்றிலும் தடுக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள முக்கிய சிறைகளில் ‘ஜாமர்’ கருவிகள் பொருத்தப்பட்டன.

    ஆனால் கோவை மத்திய சிறையில் பொருத்தப்பட்டுள்ள ‘ஜாமர்’ கருவிகளின் தாக்கம் எல்லையை கடந்து அருகில் உள்ள பாலசுந்தரம் சாலை உள்பட சுற்று பகுதிகளில் யாரும் செல்போன்களை பயன்படுத்த முடியாத அளவிற்கு கடுமையாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இதைதொடர்ந்து பி.எஸ்.என்.எல். செல்போன் நிறுவனத்தினர் கருவிகளின் மூலம் ‘ஜாமர்’ கருவிகளின் தாக்கத்தை ஆய்வு செய்தனர். இதில் மத்திய சிறையில் பொருத்தப்பட்டுள்ள ‘ஜாமர்’ கருவிகள் அருகில் உள்ள செல்போன் சேவைகளையும் பாதிப்பதை உறுதி செய்துள்ளனர்.

    இதுகுறித்து பி.எஸ்.என்.எல். தொழில்நுட்ப பணியாளர் ஒருவர் கூறியதாவது:-

    கோவை மத்திய சிறையில் பொருத்தப்பட்டுள்ள ‘ஜாமர்’ கருவியினால் பி.எஸ்.என்.எல். மட்டுமல்லாது மற்ற செல்போன் நிறுவனங்களின் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. சிறை அருகில் உள்ள பாலசுந்தரம் சாலை, பாரதியார் சாலை, நஞ்சப்பா சாலையில் செல்போனில் டயல் செய்தால் இணைப்பு கிடைக்கும். சில வினாடிகள் பேசிக் கொண்டிருக்கும் போதே தொடர்பு தானாக துண்டிக்கப்பட்டு விடும். அல்லது இணைப்பு கிடைத்தாலும் எதிர் தரப்பில் பேசுபவர்களின் குரல் தெளிவாக இருக்காது.இது போன்ற சேவை பாதிப்பு உள்ளது.

    இது தொடர்பாக செல்போன் பயன்படுத்துபவர்கள் ஏற்கனவே புகார் கூறினார்கள். இதுகுறித்து சிறை அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளோம். ஆனால் அவர்கள் தரப்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    ‘ஜாமர்’ கருவியின் தாக்கம் எவ்வளவு மீட்டர் சுற்றளவுக்கு இருக்கும் என்பதை மத்திய அரசு தொலை தொடர்புத் துறையினருக்கு தான் தெரியும். ‘ஜாமர்’ கருவியின் தாக்கத்தை குறைத்து சிறை வளாக அளவுக்குள் வைத்தால் இந்த கோளாறு தவிர்க்கப்படும்.இது தொடர்பாக தொலை தொடர்புத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×