search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thirumuruganpoondi"

    • திரும்பிய திசையெல்லாம் சிற்பக்கலைக் கூடங்கள்.
    • முருகப்பெருமானின் முக்கிய திருத்தலங்களில் ஒன்று.

    திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி முருகப்பெருமானின் முக்கிய திருத்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. அதே திருமுருகன்பூண்டிக்கு பெருமை சேர்க்கும் வகையில் திரும்பிய திசையெல்லாம் சிற்பக்கலைக் கூடங்கள் நிறைந்து காணப்படுகிறது.

    கலைநயமிக்க சிலைகளை கைவேலைப்பாடுகளுடன் தத்ரூபமாகவும், துல்லியமாகவும் செதுக்குவதில் தனித்தன்மையுடனும், உலக பிரசித்தி பெற்றதாகவும் விளங்குகிறது திருமுருகன்பூண்டி சிற்பக் கலைக்கூடங்கள்.

    குறிப்பாக கருங்கல்லால் செதுக்கப்படும் சாமி சிலைகள் திருமுருகன்பூண்டிக்கு இணையாக தமிழகத்தில் வேறு எங்கும் செய்ய முடியாது என்ற அளவிற்கு பெருமைக்குரிய தொழிலாகவும், சிறந்த கலையாகவும் உள்ளது. 5 தலைமுறைகளை கடந்து, 200 ஆண்டுகள் பழமையும், பாரம்பரியமிக்க தொழிலாகவும், கலைநயம், கைவேலைப்பாடு, கடினமான உடல் உழைப்பு ஆகியவைதான் சிற்பக் கலைக்கூடங்களின் சிறப்பு. திருமுருகன்பூண்டி, அவினாசி, பெரியாயிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 160 சிற்பக்கலைக் கூடங்கள் உள்ளன.

    அங்கு 600-க்கும் மேற்பட்ட சிற்பக் கலைஞர்களும், தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். அங்கு கருங்கல்லால் செதுக்கப்படும் சாமி சிலைகள், தலைவர்களின் திருஉருவச் சிலைகள், கல்வெட்டுக்கள், சாஸ்திர கற்கள் போன்றவை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்பட இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்படுவது மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    மேலும் திருமுருகன்பூண்டியில் செதுக்கப்படும் சாமி சிலைகள் தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

    நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்வே திருமுருகன்பூண்டி சிற்பக்கலை தொழில் தொடங்கி விட்டது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சிற்பங்கள் செதுக்கப்பட்டாலும், திருமுருகன்பூண்டியில் செதுக்கப்படும் சாமி சிலைகளுக்கு இணையாக அமையாது. அந்த அளவிற்கு கைவேலைப்பாடுடனும், அர்ப்பணிப்புடனும் இந்த தொழில் செய்யப்பட்டு வருகிறது.

    சிலைகள் தயாரிப்பில் எந்திரங்கள் உள்ளிட்ட நவீனங்கள் வந்து விட்டாலும், கைவேலைப்பாட்டில் கிடைக்கும் கலைநயமும், நுணுக்கமும் கிடைக்காது. தொழிலில் ஏற்ற, இறக்கங்கள் இருந்தாலும் கண்ணியம் தவறாமல் கடமையாற்றுவதே திருமுருகன்பூண்டியின் பெயர் இன்று நிலைநிற்பதற்கு காரணமாக அமைந்துள்ளது. சிற்பக்கலை தொழிலில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் பல ஆண்டுகளாக இந்த தொழிலை செய்து வருகிறார்கள். திருமுருகன்பூண்டி முழுவதும் சிற்பக் கலைக்கூடங்கள் இருந்தாலும் மாசுப் பிரச்சினை காரணமாக சிலைகளை செதுக்கும் பணிகளை குடியிருப்புகள் அல்லாத ஒதுக்குப்புறமான இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதனால் வாடிக்கையாளர்களும் சிலைகளை ஆர்டர் செய்வதற்கு ஒரு இடத்திற்கும், அதை பார்வையிடுவதற்கு ஒரு இடத்திற்கும் வரவேண்டி உள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கும் பணம் மற்றும் நேரத்தை விரயமாக்கும். எனவே 100 க்கும் மேற்பட்ட சிற்பக்கலைஞர்களின் நலன் கருதி தமிழக அரசு சிற்பக்கலைக் கூடங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் அமையும் வகையில் சிட்கோ போன்ற நிரந்தர தொழிற்பேட்டையை ஏற்படுத்தி தர வேண்டும்.

    மேலும் மத்திய அரசு சார்பில் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பது சிற்ப கலைஞர்களின் கோரிக்கையாக உள்ளது. தமிழக அரசும் கட்டிட தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கி இருப்பது போன்று சிற்பக் கலைஞர்களுக்கும் கைவினைப் பொருட்கள் துறை சார்பில் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இருந்து வருகிறது.

    திருமுருகன்பூண்டியில் செதுக்கப்படும் சாமி சிலைகள் இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி திருமுருகன் குமாரவேல் சிற்பக்கலை கூடத்தில் செதுக்கப்பட்ட மாரியம்மன், விநாயகர், முருகன் சிலைகள் மலேசிய நாட்டில் உள்ள கோவிலிலும், யானை சிலை அமெரிக்காவில் உள்ள கோவிலிலும், விநாயகர், ஆஞ்சநேயர், லட்சுமி, அய்யப்பன், 9 நவக்கிரகங்கள் உள்ளிட்ட சிலைகள் பிரான்ஸ் நாட்டில் உள்ள மாரியம்மன் கோவிலிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது உலக அளவில் பிரசித்தி பெற்றதாக அமைந்துள்ளது.

    இதே சிற்பக் கூடத்தில் 23 அடி உயரத்தில் 40 டன் எடையில் செதுக்கப்பட்ட ஆஞ்சநேயர் சிலையும், 13 அடி உயரத்தில் 60 டன் எடையில் செய்யப்பட்ட நந்தி சிலை ஆகியவை கர்நாடக மாநிலம் பெங்களூரு கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

    திருமுருகன்பூண்டி முருகன் சிற்பக்கலைக் கூடத்தில் 33 அடி உயரத்தில் செதுக்கப்பட்ட சங்கடகர சதுர்த்தி விநாயகர் சிலை தமிழகத்திலேயே உயரமான விநாயகர் சிலையாக திண்டுக்கல்லிலும், மற்றொரு சிற்பக் கலைக்கூடத்தில் செதுக்கப்பட்ட 40 அடி உயரத்திலான ஆஞ்சநேயர் சிலை தமிழகத்திலேயே உயரமான ஆஞ்சநேயர் சிலையாக திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டு, திருமுருகன்பூண்டியின் பெருமையை பறை சாற்றுவதாக அமைந்து வருகிறது.

    • தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 224 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது.
    • முதல்-அமைச்சர் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

    அனுப்பர்பாளையம் :

    திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி நக ராட்சிக்குட்பட்ட பூண்டிநகர் பகுதியில் தமிழ் நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.18 கோடியே 80 லட்சத்தில் 224 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட் டுள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். அதே நேரம் இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் கலந்து கொண்டு, அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு, பயனாளிகளுக்கு வீடுகளுக்கான ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் குமார், கவுன்சிலர் கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    இதில் துணைத்தலைவர் ராஜேஸ்வரி, கவுன்சிலர்கள் காயத்ரி, ராஜன், யுவராஜ், முருகசாமி, செல்வராஜ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுவாரிய உதவி நிர்வாக பொறியாளர் அன்பழகன் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர். முன்னதாக அடுக்குமாடி குடியிருப்பில் கட்டப்பட்டுள்ள வீடுகளை சப்-கலெக்டர் ஆய்வு செய்தார்.

    • மாணவ, மாணவிகள் சிறுதானியவகைகள், கீரைவகைகள், பழச்சாறுகள், என்று பல்வேறு விதமானஉணவு வகைகளை காட்சிப்படுத்தினர்.
    • உணவின் பயன்களையும் மற்றும் செய்முறை விளக்கத்தினையும் எடுத்துரைத்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. டிரஸ்ட் நேசனல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் "உணவுத்திருவிழா'' மிக சிறப்பாககொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் கார்த்திகேயன் விழாவைதுவக்கி வைத்தார். விழாவில் மாணவ, மாணவிகள் சிறுதானியவகைகள், கீரைவகைகள், பழச்சாறுகள், கூழ் வகைகள், கலவை சாதம், இனிப்புவகைகள் மற்றும் முளை கட்டிய பயிறு வகைகள் என்று பல்வேறு விதமானஉணவு வகைகளை சுவை மிகுந்ததாகவும், சத்துள்ளதாகவும், அழகாகவும் காட்சிப்படுத்தினர்.

    மேலும் தாங்கள் கொண்டு வந்த உணவின் பயன்களையும் மற்றும் செய்முறை விளக்கத்தினையும் எடுத்துரைத்தனர். ஒவ்வொரு மாநிலத்தில் விளையும் விளைபொருட்கள் என்னென்ன என்பதை இந்திய வரைப்படம் மூலம் விளக்கினர். விழாவில் பெற்றோர்களும் பங்கு கொண்டு மாணவர்களை உற்சாகமூட்டினர். விழாவின் நிறைவாக தாளாளர் கார்த்திகேயன், முதல்வர் பிரியாராஜா, ஒருங்கிணைப்பாளர் ஆபிதாபானு மற்றும் மேலாளர் ராமசாமி மாணவர்களையும், அவர்களை ஊக்கப்படுத்திய ஆசிரியர்களையும் பாராட்டினர்.

    • சைபர் கிரைம் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
    • சைபர் கிரைம் தடுப்பு விழிப்புணர்வு தகவல்களை மாணவர்கள் புரிந்து கொள்ளும்படி வழங்கினர்

    திருமுருகன்பூண்டி :

    திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., அறக்கட்டளை மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் சைபர் கிரைம் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினர்களாக குற்றவியல் தடுப்பு முதன்மை காவலர் சொர்ணவள்ளி, குற்றவியல் தடுப்பு காவலர் சையத் ரபிக் சிக்கந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் இன்றைய வாழ்வியல் நடைமுறைக்கு தேவையான சைபர் கிரைம் தடுப்பு விழிப்புணர்வு தகவல்களை மாணவர்கள் புரிந்து கொள்ளும்படி வழங்கினர். நிகழ்ச்சியில் முதல்வர் பிரியாராஜா, ஒருங்கிணைப்பாளர் ஆபிதாபானு, மேலாளர் ராமசாமி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 

    • வண்ண மலர்களால் அத்தப்பூ கோலம் போடப்பட்டது.
    • கேரள மங்கையர்களாக மாணவிகளின் திருவாதிரை நடனம் நடைபெற்றது.

    திருப்பூர் :

    திருப்பூர் திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. அறக்கட்டளை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி பலவிதமான வண்ண மலர்களால் அத்தப்பூ கோலம் போடப்பட்டது.

    விழாவில் மாணவர்களுக்கு பகவான் மகாவிஷ்ணு பிறந்தநாளின் சிறப்பையும், வாமனர் அவதரித்த தினமான ஓணத்தின் சிறப்பினையும் மாணவி ரேஷ்மா எடுத்துரைத்தார். கேரள மங்கையர்களாக மாணவிகளின் திருவாதிரை நடனம் நடைபெற்றது. குழந்தைகள் பலர் கேரள பாரம்பரிய உடை அணிந்து மேடையை அலங்கரித்தனர். மக்கள் செழிப்பாக வளமோடு வாழ்கிறார்களா என்பதை காண சிறப்பு தோற்றத்துடன் மகாபலி சக்கரவர்த்தியின் வருகை நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

    • 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
    • டைட்டல் பார்க் அமைப்பதற்காக பணிகளும் தொடங்கப்பட உள்ளது.

    அனுப்பர்பாளையம் :

    திருமுருகன்பூண்டி 3-வது வார்டில் குடியிருப்புகள் நடுவில் சாக்கடை கழிவுநீரை கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியலுக்கு முயற்சி செய்த பொதுமக்களிடம் நகராட்சி தலைவர் குமார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். திருப்பூர் திருமுருகன்பூண்டி நகராட்சி 3-வது வார்டுக்குட்பட்ட வி.ஜி.வி. ஸ்ரீ கார்டனில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அந்த பகுதியில் இருந்து கழிவுநீர் வெளியேறும் வகையில் சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த பகுதியில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு, பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல் அதே பகுதியில் டைட்டல் பார்க் அமைப்பதற்காக பணிகளும் தொடங்கப்பட உள்ளது.

    இதையடுத்து அந்த அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் டைட்டல் பார்க் கட்டுமான பணியின் போது வெளியேறும் கழிவுநீர் அனைத்தையும் வி.ஜி.வி. ஸ்ரீகார்டன் வழியாக செல்லும் வகையில் புதிதாக கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அணைபுதூர் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் புதிய அடுக்குமாடி குடியிருப்பு அருகே உள்ள பாறைக்குழியில் தேங்கி வருகிறது. தற்போது ஒட்டு மொத்த கழிவுநீரும் வி.ஜி.வி. ஸ்ரீகார்டன் வழியாக செல்வதால் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் என்று கூறியும், குடியிருப்புகள் வழியாக கழிவுநீரை கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வி.ஜி.வி. ஸ்ரீ கார்டன் குடியிருப்போர் சங்க தலைவர் கிறிஸ்டோபர், செயலாளர் பத்மநாபன், மத்திய அரசின் நலஉதவி பிரிவின் பா.ஜ.க. திருமுருகன்பூண்டி மண்டல் தலைவர் தரணிபதி ஆகியோர் தலைமையில் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் நேற்று சாலைமறியல் செய்வதற்காக அந்த பகுதியில் திரண்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த திருமுருகன்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்த பிரச்சினை தொடர்பாக நகராட்சி அதிகாரிகளிடம் பேசி தீர்வு காணலாம் என்றும், மறியலில் ஈடுபட வேண்டாம் என்றும் கூறினார். இதனால் மறியல் முயற்சியை பொதுமக்கள் கைவிட்டனர். மேலும் உடடினயாக அங்கு சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து நகராட்சி தலைவர் குமார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது குடியிருப்புகள் மத்தியில் சாக்கடை கால்வாய் அமைத்து கழிவுநீரை கொண்டு சென்றால் சுகாதார சீர்கேடு ஏற்படும் , பாதாள சாக்கடை அமைத்து அதன் வழியாக கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு நகராட்சி தலைவர் குமார், சாக்கடை கால்வாயை விரிவுப்படுத்தி கழிவுநீர் எளிதாக செல்லும் வகையிலும், கால்வாயின் மேற்பகுதியை முற்றிலுமாக மூடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார். பின்னர் கால்வாயை அகலப்படுத்துவதற்காக அளவெடுக்கும் பணியும் நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • 9-வது அவதாரமான கிருஷ்ண அவதாரமாக பிறந்த நன்னாளை கோகுலாஷ்டமியாக கொண்டாடுகிறோம்.
    • கீதாசாரத்தை பற்றி மாணவர்கள் காட்சிகளாக கண் முன்னே நிறுத்தினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. டிரஸ்ட் நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கோகுலாஷ்டமி விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் பிரியாராஜா குத்து விளக்கேற்றினார். இறைவழிபாட்டுடன் விழா தொடங்கியது.

    புன்னகையே அன்பின் சின்னம், அன்பு மாறாமல் வாழும் வாழ்வை இறைவன் அருள வேண்டும். திருமாலின் 9-வது அவதாரமான கிருஷ்ண அவதாரமாக பிறந்த நன்னாளை கோகுலாஷ்டமியாக கொண்டாடுகிறோம் என ஆசிரியர்கள் விளக்கம் அளித்தனர். நூற்றுக்கணக்கான மாணவர்களின் கிருஷ்ணர், ராதைகளின் அணிவகுப்பு அரங்கத்தை அலங்கரித்தது. கிருஷ்ணரை பற்றிய உரை, பாடல் மற்றும் கிருஷ்ணரின் பிறப்பும், அதனால் நமக்கு கிடைத்த கீதாசாரத்ைத பற்றியும் மாணவர்கள் காட்சிகளாக கண் முன்னே நிறுத்தினர். விழாவின் நிறைவாக ஒருங்கிணைப்பாளர் அபிதாபானு நன்றி கூறினார். 

    ×