search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயனாளி"

    • கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்
    • பல்துறை பணிவிளக்க முகாமினை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் பார்வை யிட்டார்.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட வருவாய் துறையின் சார்பில், திருவட்டார் வருவாய் கிராமத்திற்குட்பட்ட சுருள கோடு ஊராட்சிக்குட்பட்ட புனித அந்தோணியார் உயர்நி லைப்பள்ளி வளாகத்தில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடந்தது. பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் முன்னிலை வகித்தார்.

    முகாமில் 45 பயனாளி களுக்கு ரூ.9.92 லட்சம் மதிப் பிலான நலத்திட்ட உதவி களை கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    இந்த முகாமின் நோக்கம், அரசு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்ட உதவிகள் குறித்து பொது மக்கள் அறிந்து பயன்பெறு வதே ஆகும். குறிப்பாக, குடிநீர் வசதி, பட்டா வழங்குதல், பட்டா பெயர் மாற்றம் செய்தல், விதவை சான்றிதழ், முதிர்கன்னி ஓய்வூதியத்தொகை, ஆதர வற்றோர் விதவை சான்றி தழ், குடும்ப அட்டை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்வது ஆகும்.

    மேலும் குடும்ப அட்டை யின் வகை மாற்றுவதற்கான மனுக்கள் அதிகமாக வரு கிறது. மேலும் வீட்டுமனை பட்டா மனுக்களும் அதிகள வில் வருகிறது. தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். வீடு தொடர்பான மனுக்க ளுக்கு மாநகராட்சி, நக ராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் மூலம் தகுதி யான பயனாளிகளுக்கு மானியத்துடன் வீடுகள் கட்டி கொடுக்கப்படும்.

    மேலும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், மகளிர் திட்டம், முன்னோடி வங்கி ஆகிய துறைகள் சார்பாக வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அம்முகாமில் 2200-கும் அதிகமான இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் கலந்து கொண்டனர். அவர் களில் 250 நபர்களுக்கு உடனடி ஆணைகளும், 400-க்கும் மேற்பட்டவர் களுக்கு அடுத்த கட்டமாக தேர்வும் நடத்தப்படவுள்ளது. வருடத்திற்கு இரு முறை பெரிய அளவிலான வேலை வாய்ப்பு முகாம்களும், மாதந்தோறும் சிறு அளவி லான முகாம்களும் நடத்தப்படுவதோடு அரசு பணிக்க ளுக்கான பயிற்சி வகுப்பு களும் நடத்தப்பட்டு வரு கிறது.

    புதுமைப்பெண் திட்டம் தொடர்பாக அனைத்து கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி அரசு பள்ளிகளில் பயின்ற மாணவி களுக்கு வங்கி மூ லமாக ரூ.1000 வழங்க நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காலை உணவு திட்டம் தற்போது சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரு கிறது. இத்திட்டத்தில் அனைத்து துறைகளும் இணைந்து செயல்படுகிறது.

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப் பித்து விடுப்பட்ட நபர்களுக்கு தகுதி அடிப்ப டையில் உதவித்தொகை வழங்குவ தற்கான பணிகள் நடை பெற்று வருகிறது. முதலில் விண்ணப்பங்கள் வீடு வீடாக வழங்கப்பட்டு, விண்ணப்பங்களை பெற முகாம்கள் நடத்தப்பட்டது. பின்னர் தகுதியான பய னாளிகளை வீடு வீடாக ஆய்வு மேற்கொண்டு கண்டறியப்பட்டது.

    வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் தாழ் வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப் பான இடங்களில் தங்க வேண்டும், இடி மின்னல் ஏற்படும்போது பொது மக்கள் தங்கள் வீடுகளில் இருக்க வேண்டும், பொது இடங்களில் செல்லும் போது இடி மின்னல் தாக்கினால் மரத்தின் கீழோ, கட்டங்களின் கீழோ நிற்க வேண்டாம். மழைக்கா லத்தில் பொதுமக்கள் வெளியில் செல்லும் போது மின்கம்பங்கள் அருகில் செல்லமாலும் அதன் அருகில் தேங்கியிருக்கும் தண்ணீர் அருகில் செல்ல மால் கவனமாக இருக்க வேண்டும். மழைக்காலத்தில் வீடுகளில் உபயோகிக்கும் மின்சாரம் மற்றும் பழுது அடைந்த மின்சாதனங்களை தொடமால் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பொது மக்கள் அனைவரும் அரசின் நலத்திட்டங்களை பெற்று பயனடைய வேண்டும்.

    விவாசாயிகள் உங்கள் பகுதியில் உள்ள காலநிலை களை அறிந்து அதற்கேற்ற பருவகாலங்களில் பயிரிட வேண்டிய பயிர்களை பயி ரிட்டு அதிக மகசூல் பெற்று தங்கள் வாழ்வதாரத்தை உயர்த்தி கொள்ள வேண் டும். மேலும் ஊரக உள்ளாட்சி துறை சார்பில் முதல்-அமைச்சரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.49 லட்சம் மதிப்பில் சுருள கோடு-உள்ளிமலை-மேதோப்பு-பூவஞ்சந்தி சாலைப்பணி மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    முன்னதாக, சுருளகோடு புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளி வளாகத் தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், பொது சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கபட்டிருந்த பல்துறை பணிவிளக்க முகாமினை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் பார்வை யிட்டார்.

    திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் ஜாண், சமூக பாது காப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் குழந்தைசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் விமலாராணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சுப்பையா, மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர் கனக ராஜ், மாவட்ட ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, மாவட்ட கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) கீதா, துணை இயக்குநர்கள் வாணி (வேளாண்மை), ஷீலா ஜாண் (தோட்டக்கலை), திருவட்டார் வட்டாட்சியர் முருகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் விமலா (சுருளகோடு), லில்லிபாய் (பாலமோர்), ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் சுரேஷ், பிலோமினாள் மற்றும் துறை அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண் டார்கள்

    • 432 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி வீடு குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.
    • ரூ. 3.08 லட்சத்தை பயனாளிகள் பங்களிப்பு தொகையாக செலுத்த வேண்டும்.

    திருப்பூர்,அக்.24-

    தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திருப்பூா் கோட்டம் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    பல்லடம் ஒன்றியம், சுக்கம்பாளையம் ஊராட்சி கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரும்பாளி கிராமத்தில் உயா்தொழில்நுட்ப ஜவுளி பூங்கா அருகே, 8 தளங்களுடன், 432 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி வீடு குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு பயனாளிகள் தோ்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன. இதற்காக ரூ. 3.08 லட்சத்தை பயனாளிகள் பங்களிப்பு தொகையாக செலுத்த வேண்டும்.

    பயனாளிகள் திருமணமானவராகவும், நகராட்சி பகுதிக்குள் வசிப்பவராகவும், ஆண்டு வருமானம், ரூ.3 லட்சத்துக்குள்ளும் இருக்க வேண்டும். பயனாளி மற்றும் குடும்ப உறுப்பினருக்கு சொந்த வீடு, வீட்டுமனை இருக்கக் கூடாது. குடும்பத் தலைவா் மற்றும் உறுப்பினா்களின் ஆதாா் அட்டை, பயனாளியின் புகைப்படம், ரேஷன் காா்டு நகல், வாக்காளா் அடையாள அட்டை மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் நவம்பா் 10-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும், இது குறித்து தொடா்புக்கு 9626727628 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது

    • 502 பயனாளிகளுக்கு ரூ.3.42 கோடி கடன் உதவி வழங்கப்பட்டது.
    • தஞ்சாவூர் பொதுவிநியோக திட்ட துணைப்பதிவாளர் கருப்பையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு செயலர் ஜெகந்நாதன் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் ஆகியோர் தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி, நிக்கல்சன் கூட்டுறவு நகர வங்கி மற்றும் திருமலைசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகிய கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 502 பயனாளிகளுக்கு ரூ.3.42 கோடி கடன் உதவி வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் செயலாட்சியர் பெரியசாமி, தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியின் செயலாட்சியர் பழனீஸ்வரி, தஞ்சாவூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலக துணைப்பதிவாளர்/ பணியாளர் அலுவலர் அப்துல் மஜீத், பட்டுக்கோட்டை சரக துணைப்பதிவாளர் சுவாமிநாதன், தஞ்சாவூர் பொதுவிநியோக திட்ட துணைப்பதிவாளர் கருப்பையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • செப்டம்பர் 15 முதல் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும்
    • சிறப்பு முகாம் 5.8.2023 முதல் 16.08.2023 வரை நடைபெறவுள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஊராட்சி ஒன்றியம், பெரும்பாக்கம் ஊராட்சியில், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின்கீழ், 2ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் பழனி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின்கீழ், செப்டம்பர் 15 முதல் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என அறிவித்து, இவ்வாண்டிற்கு ரூ.7,000/- கோடி நிதிஒதுக்கீடு செய்துள்ளார். அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின்கீழ், தகுதியான பயனாளிகளை தேர்வு செய்திடும் பொருட்டு விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப் பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடத்திட முடிவு செய்யப்பட்டது.

    முதல் கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் 24.7.2023 முதல் 4.8.2023 வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட விண்ணப்ப பதிவு சிறப்பு முகாம் 5.8.2023 முதல் 16.08.2023 வரை நடைபெறவுள்ளது. இதில் 690 விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறும். இம்முகாமில், 2,77,236 குடும்ப அட்டைதாரர்களின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும். எனவே, குடும்பத் அட்டைதாரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன் எண்ணில் குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட விவரம் மற்றும் ஆவணங்களோடு சிறப்பு முகாமில் கலந்துகொண்டு, கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்திற்கான விண்ணப்பத்தினை பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்தார். இந்நிகழ்வில், விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர்வேல்முருகன், இல்லம் தேடிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழழகன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 27 மனுக்கள் பெறப்பட்டது.
    • மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்க ளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பேசியதா வது:-

    சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 27 மனுக்கள் பெறப்பட்டது.

    இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது .

    மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ள ப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.பின்னர் அவர், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் 12 பயனாளிகளுக்கு ரூ.1,57,500 மதிப்பில் தொகுப்பு நிதி கல்வி உதவித்தொகை, ஊனமுற்றோர் நிதி உதவி, கண் கண்ணாடி நிதி உதவி மற்றும் ஈமச் சடங்கு உதவித் தொகைக்கான காசோலை களையும் வழங்கினார்.

    இக்கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட முப்படை வீரர் வாரிய உப தலைவர் மேஜர் பாலகிருஷ்ணன், தஞ்சாவூர் மாவட்டம் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் மேஜர் சரவணன் (ஓய்வு) மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • முகாமில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 180 மனுக்கள் வரப்பெற்றன.
    • மொத்தம் ரூ. 51 லட்சத்து 11 ஆயிரத்து 407 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் 330 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே திருவேதிக்குடி கிராமத்தில் மக்கள் நோ்காணல் முகாம் நடைபெற்றது.

    இதில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி 330 பயனாளிகளுக்கு ரூ. 51 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது :-

    மக்கள் நேர்காணல் முகாமில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 180 மனுக்கள் வரப்பெற்றன.

    அவற்றை விசாரித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள தொடா்புடைய அலுவலா்களுக்கு அறிவுறு த்தப்பட்டுள்ளது .

    இந்த முகாமில் பல்வேறு துறைகள் சாா்பில் வீட்டு மனை பட்டாவுக்கான ஆணைகள், மாதாந்திர ஓய்வூதிய தொகைக்கான ஆணை, விவசாயப் பயன்பாட்டுப் பொருள்கள், தொழில் முனைவோா்களுக்கு காசோலை, குழுக் கடன் உள்பட மொத்தம் ரூ. 51 லட்சத்து 11 ஆயிரத்து 407 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் 330 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக அவர் வருவாய்த்துறை, வேளாண்மை , தோட்டக்கலை, சமூகம், சுகாதாரம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் துறையின் சார்பில் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து அமை க்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வை யிட்டார்.

    இந்த முகாமில் கூடுதல் ஆட்சியா் (வருவாய்) சுகபுத்ரா, தஞ்சாவூா் கோட்டாட்சியா் (பொ) பழனிவேல், தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) தவவளவன், தோட்டக்கலை த்துறை துணை இயக்குனர் கலைச்செல்வன், தாசில்தார் சக்திவேல், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் உஷா புண்ணியமூா்த்தி, தஞ்சாவூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் வைஜெயந்தி மாலா கேசவன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

    • ஒரு பயனாளிக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை கலெக்டர் வழங்கினார்.
    • பயனாளிகளுக்கு பணி தொடங்குவதற்கான நிர்வாக அனுமதி ஆணையை வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பேசியதாவது:-

    குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த மனுக்களைவிசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்க ளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்த ப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதனைத் தொடர்ந்து அவர், சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் தஞ்சாவூர் வட்டத்தை சேர்ந்த 1 பயனாளிக்கு மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கான ஆணையினையும், முதலமைச்சர் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு பணி துவங்குவதற்கான நிர்வாக அனுமதி ஆணையினையும் வழங்கினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 510 மனுக்கள் பெறப்பட்டது.
    • பயனாளிக்கு ஒருவருக்கு விலையில்லா இலவச வீட்டு மனை பட்டாவிற்கான ஆணை.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பேசியதாவது:-

    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 510 மனுக்கள் பெறப்பட்டது.

    இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவ லர்களுக்கு அறிவுறுத்த ப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதனைத் தொடர்ந்து அவர், சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் தற்காலிக இயலாமை உதவித்தொகை பெறுவ தற்கான ஆணையினை 1 நபருக்கும், தஞ்சாவூர் வட்டத்தைச் சார்ந்த 1 பயனாளிக்கு விலையில்லா இலவச வீட்டு மனை பட்டாவிற்கான ஆணை யினையும் வழங்கினார்.

    பின்னர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் "நெகிழி மாசில்லா தஞ்சாவூர் மாவட்டம்" என்ற சுற்றுச்சூழல் திட்ட செயலாக்க புத்தகத்தினை வெளியிட்டார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா (வருவாய்), ஸ்ரீகாந்த் (வளர்ச்சி), தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிக்குமார் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ரூ.2.10 லட்சம் வீதம் மொத்தம் ரூ.33.60 லட்சம் மானியத்தில் வீடு கட்டுவதற்கான ஆணையினை வழங்கினார்.
    • இந்த வீட்டில் ஒரு பல்நோக்கு அறை, ஒரு படுக்கை அறை, சமையலறை, கழிவறை மற்றும் குளியலறை ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது.

    திருப்பூர் :

    தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில்மேயர் தினேஷ்குமார் 16 பயனாளிகளுக்கு தாமாக வீடு கட்டிக் கொள்ளும் திட்டத்தின் கீழ் தலாரூ.2.10 லட்சம் வீதம் மொத்தம் ரூ.33.60 லட்சம் மானியத்தில் வீடு கட்டுவதற்கான ஆணையினை வழங்கினார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது :- தமிழ்நாடு முதலமைச்சர் வீடுகள் இல்லாத ஏழை, எளியோருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கும்திட்டத்தினை துவக்கி வைத்து அதனை செயல்படுத்த உத்தரவிட்டார்.அதன்படி திருப்பூர் மாநகராட்சியில் அனைவருக்கும் வீட்டு வசதிதிட்டத்தின் கீழ் அதன் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து 400சதுர அடிக்கு மிகாமல் புதிதாக கான்கிரீட் தளம் போட்ட வீடு கட்டிக்கொள்ள பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்விதமாக தலா ரூ. 2.10 லட்சம் வீதம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கும் வகையில் மொத்தம் ரூ.33.60 லட்சம் அதற்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

    400 சதுர அடிக்கு மிகாமல் கட்டப்படும் இந்த வீட்டில் ஒருபல்நோக்கு அறை, ஒரு படுக்கை அறை, சமையலறை, கழிவறை மற்றும் குளியலறை ஆகிய வசதிகளுடன் இந்த வீடு அமைக்கப்பட உள்ளது.இவர்களுக்கு வழங்கப்படும் அரசு மானியமான ரூ.2.10 லட்சம்நான்கு கட்டங்களாக வங்கியில் வரவு வைக்கப்படும். அதன்படி, கட்டிடஅடித்தளம் அமைத்த பின் ரூ. 50,000, கட்டிட லிண்டல் அமைக்கப்பட்ட பின் ரூ. 50,000, கான்கிரீட் தளம் அமைக்கப்பட்ட பின் ரூ. 50,000, மேலும் வீட்டின் முழு பணிகளும் முடிவடைந்த பின்னர் ரூ.60,000 வழங்கப்படும்.

    எனவே தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க இந்த திட்டத்தின் கீழ் பயனடையும் பயனாளிகள்முறையாக 12 மாதங்களுக்குள் கட்டிட வேலைகளை முடித்து சிறப்பாக வாழ வாழ்த்துகிறேன் என்றார். அப்போது திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன்குமார் கிரியப்பனவர் மற்றும் பலர் உடனிருந்தனர்.  

    • 53 பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்.
    • 44 ஊராட்சிகளிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

    திருவாரூர்:

    இந்திய குடியரசின் 74-வது தினத்தை முன்னிட்டு கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றுதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஒன்றிய குழு தலைவர் உமாபிரியா தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

    நிகழ்ச்சியில் இரு பெண் குழந்தைகள் பாது காப்பு திட்டத்தின் கீழ் 53 பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் நலத்திட்ட உதவிகளை பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    மேலும் ஒன்றியக்குழுத் தலைவர் உமாபிரியா தலைமையில் பெண்கள் பாதுகாப்பு குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலச்சந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சத்தியே ந்திரன், நாகூரான், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஸ்வநாதன் மற்றும் முத்துக்குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஒன்றியத்திற்குட்பட்ட 44 ஊராட்சிகளிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு கிராமசபை கூட்டங்களும் நடைபெற்றது.

    • பல்வேறு கோரிக்கைகள் குறித்த 192 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.
    • சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 192 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.

    பொதுமக்களிடம் இருந்து மனுக்களை விசாரித்து பெற்றுக்கொண்ட கலெக்டர் அதனை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தர விட்டார். அதனைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பயனாளிக்கு ஊன்று கோலினை வழங்கினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலசந்திரன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் புவனா உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 224 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது.
    • முதல்-அமைச்சர் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

    அனுப்பர்பாளையம் :

    திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி நக ராட்சிக்குட்பட்ட பூண்டிநகர் பகுதியில் தமிழ் நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.18 கோடியே 80 லட்சத்தில் 224 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட் டுள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். அதே நேரம் இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் கலந்து கொண்டு, அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு, பயனாளிகளுக்கு வீடுகளுக்கான ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் குமார், கவுன்சிலர் கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    இதில் துணைத்தலைவர் ராஜேஸ்வரி, கவுன்சிலர்கள் காயத்ரி, ராஜன், யுவராஜ், முருகசாமி, செல்வராஜ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுவாரிய உதவி நிர்வாக பொறியாளர் அன்பழகன் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர். முன்னதாக அடுக்குமாடி குடியிருப்பில் கட்டப்பட்டுள்ள வீடுகளை சப்-கலெக்டர் ஆய்வு செய்தார்.

    ×